Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    278. கார்ச்சார்
    278திருவேற்காடு
    தாத்தாத்தன தானன தானன
    தாத்தாத்தன தானன தானன
    தாத்தாத்தன தானன தானன தனதான
    கார்ச்சார்குழ லார்விழி யாரயி
    லார்ப்பால்மொழி யாரிடை நூலெழு
    வார்ச்சாரிள நீர்முலை மாதர்கள் மயலாலே
    காழ்க்காதல தாமன மேமிக
    வார்க்காமுக னாயுறு சாதக
    மாப்பாதக னாமடி யேனைநி னருளாலே
    பார்ப்பாயலை யோவடி யாரொடு
    சேர்ப்பாயலை யோவுன தாரருள்
    கூர்ப்பாயலை யோவுமை யாள்தரு குமரேசா
    பார்ப்பாவல ரோதுசொ லால்முது
    நீர்ப்பாரினில் மீறிய கீரரை
    யார்ப்பாயுன தாமரு ளாலர்சொ லருள்வாயே
    வார்ப்பேரரு ளேபொழி காரண
    நேர்ப்பாவச காரண மாமத
    ஏற்பாடிக ளேயழி வேயுற அறைகோப
    வாக்காசிவ மாமத மேமிக
    வூக்காதிப யோகம தேயுறு
    மாத்தாசிவ பாலகு காவடி யர்கள்வாழ்வே
    வேற்காடவல் வேடர்கள் மாமக
    ளார்க்கார்வநன் மாமகி ணாதிரு
    வேற்காடுறை வேதபு ரீசுரர் தருசேயே
    வேட்டார்மக வான்மக ளானவ
    ளேட்டார்திரு மாமண வாபொனி
    னாட்டார்பெரு வாழ்வென வேவரு பெருமாளே



    பதம் பிரித்தல்

    கார் சார் குழலார் விழி ஆர் அயிலார்
    பால் மொழியார் இடை நூல் எழுவார்
    சார் இள நீர் முலை மாதர்கள் மயலாலே
    கார்ச் சார் குழலார் - மேகத்தை ஒத்த கூந்தலை உடையவர்கள் ஆர் அயிலார் விழியார் - கூரிய வேல் போன்ற கண்களை உடையவர்கள் பால் மொழியார் - பால் போல் இனிய சொற்களை உடையவர்கள் இடை நூல் எழுவார் - இடையானது நூல் போல நுண்ணிதாக உடையவர்கள் சார் இள நீர் முலை மாதர்கள் - பொருந்திய இள நீரைப் போன்ற கொங்கை உடையவர்களாகிய விலை மாதர்கள் மீதுள்ள மயலாலே - மயக்கத்தாலே


    காழ் காதலது ஆம் மனமே மிக
    வார் காமுகனாய் உறு சாதக
    மா பாதகனாம் அடியேனை நின் அருளாலே


    காழ் - திண்ணயதான காதலது ஆம் - அன்பு பூண்டுள்ளதான மனமே - மனமே மிக ஆர்க் காமுகனாய் உறு - மிக்க காமப் பித்தனாக இருக்கின்ற சாதக(ன்) - சாதகத்தை உடையவனும் மா பாதகனாம் அடியேனை - மிகவும் பெரிய பாதகச் செயல்களைப் புரிபவனுமாகிய அடியேனை நின் அருளாலே - உன்னுடைய திருவருள் கொண்டு


    பார்ப்பாய் அலையோ அடியாரொடு
    சேர்ப்பாய் அலையோ உனது ஆர் அருள்
    கூர்ப்பாய் அலையோ உமையாள் தரு குமரேசா


    பார்ப்பாய் அலையோ - பார்க்க மாட்டாயோ? அடியாரொடு சேர்ப்பாய் அலையோ - உனது அடியார்களோடு சேர்க்க மாட்டாயோ? உனது - உன்னுடைய ஆர் அருள் - நிரம்பிய அருளை கூர்ப்பாய் அலையோ - நிரம்பத் தர மாட்டாயோ? உமையாள் தரு குமரேசா - உமா தேவி பெற்ற குமரேசனே


    பார் பாவலர் ஓது சொ(ல்)லால் முது
    நீர் பாரினில் மீறிய கீரரை
    ஆர்ப்பாய் உனது ஆம் அருளால் ஒர் சொல் அருள்வாயே


    பார் பாவலர் - பூமியில் உள்ள புலவர்கள் ஓது சொலால் - ஓதும் புகழ்ச் சொற்களால் முது நீர் பாரினில் - பழைய நீர் சூழ்ந்த இவ்வுலகில் மீறிய - மேம்பட்டு விளங்குபவராகிய கீரரை - நக்கீரரை ஆர்ப்பாய் - மகிழ்ந்fது ஏற்பவனே உனது ஆம் அருளால் - உன்னுடைய திருவருளைப் பாலித்து ஒர்
    சொல் அருள்வாயே - ஒப்பற்ற ஒரு உபதேசச் சொல்லை எனக்கு உபதேசித்து அருளுக


    வார் பேர் அருளே பொழி காரண
    நேர் பாவ ச காரணமா(ம்) மத
    ஏற்பாடிகள் அழிவே உற அறை கோப


    வார் - (உலகத்துக்கு) நீடிய பேர் அருளே - பேர் அருளையே பொழி காரண - பொழிந்த மூல காரணனே நேர் - நேரிட்டு எதிர்த்த பாவ சகாரணமாம் - பாவத்துக்குத் துணைக் காரணமாகிய மா மத ஏற்பாடிகளே - பெரிய (சமண) மதத்தை ஏற்பாடு செய்த (சமண மதக் குருக்கள்) அழிவே உற - (எண்ணாயிரவர்) அழிபட அறை கோப - (தேவாரப் பாடல்களைச்) சொன்ன கோபம் கொண்ட




    வாக்கா சிவ மா மதமே மிக
    ஊக்கு அதிப யோகமதே உறும்
    மாத்தா சிவ பால குகா அடியர்கள் வாழ்வே


    வாக்கா - திருவாக்கை உடையவனே சிவ மா மதமே - சிறந்த சிவ மதமே மிக ஊக்கு அதிப - பெருகும்படி முயற்சிகளைச் செய்த தலைவனே யோகமதே உறு மாத்தா - யோக நிலையில் இருக்கும் பெரியவனே சிவ பால குகா - சிவனது குமரனே குகனே அடியர்கள் வாழ்வே - அடியார்களின் செல்வமே


    வேல் காட வல் வேடர்கள் மா மகளார்க்கு
    ஆர்வ நன் மா மகிணா திரு
    வேற்காடு உறை வேத புரீசுரர் தரு சேயே


    வேல் காட - வேல் ஏந்திக் காட்டில் வசிக்கும் வேடர்கள் மா மகளார்க்கு ஆர்வ - வேடர்களின் சிறந்த பெண்ணாகிய வள்ளியின் பால் அன்பு பூண்ட நன் மா மகிணா - நல்ல அழகிய கணவனே திரு வேற்காடு உறை - திருவேற்காட்டில் வீற்றிருக்கும் வேத புரீசுரர் - வேத புரீசுரர் தரு செயே - பெற்ற குழந்தையே


    வேட்டார் மகவான் மகளானவள்
    ஏடு ஆர் திரு மா மணவா பொ(ன்)னின்
    நாட்டர் பெரு வாழ்வு எனவே வரு பெருமாளே


    வேட்டார் - வேள்வி நிரம்பிய மகவான் மகளானவள் - யாகபதியாகிய இந்திரனுடைய மகளான தேவசேனையின் ஏடு ஆர் - மேன்மை நிறைந்த திரு மா மணவா - சிறந்த அழகிய மணவாளனே பொ(ன்)னி நாட்டார் - பொன்னுலகத்தினரான தேவர்களுடைய பெரு வாழ்வு எனவே வரும் - பெருமாளே செல்வம் என வருகின்ற பெருமாளே - பெருமாளே



    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்

    பார் பாவலர்........மீறிய கீரரை ஆர்ப்பாய்```
    கார்முகி என்ற பூதத்தினால் நக்கீரரும் அவருடன் 999 புலவர்களும் சிறைவைக்கப்பட்டனர். அவர்கள் பூத்த்தினால் உண்ணப்பட்டிருப்பார்கள். நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடி முருகனை துதித்தார். முருகனால் அவர்களால் காப்பாற்றப் பட்டனர்.


    நேர் பாவ ச காரணமா(ம்) மத ஏற்பாடிகள் அழிவே
    சம்பந்த பெருமானல் சமணர்கள் கழுவேற்றப் பட்டதை நினைவு கூறுகிறார். பாடல் 233 ஊனத்தசை அடிகுறிப்பில் இந்த நிகழ்சிப்பற்றி கொடுக்கப்பட்டுள்ளது


    1பார்ப்பாவல ரோதுசொலால்முது நீர்ப்பாரினில் மீறிய கீரரை
    பொய்யற்ற கீரன் முதலாம் புலவோர் புகழ்ந்த ஐயற் கெனது சிறு சொல்லும் ஒப்பாகும் --- கந்த புராணம்
    2 யோகமத தேயுறு மாத்தா
    முருகவேளுக்கு யோகா சாரிய மூர்த்தி என்று ஒரு பெயர்
    யோகத் தாறுப தேசத் தேசிக
    வூமைத் தேவர்கள் தம்பிரானே --- திருப்புகழ், சேமக்கோமள
    மால்பிரமன் அறியாத
    மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை --- சுந்தரர் தேவாரம்
    குழகனே கோலவில்லீ கூத்தனே மாத்து ஆய் உள்ள
    அழகனே என்று ஆலவாயில் அப்பனே அருள் செயாயே
    --- திருநாவுக்கரசர் தேவாரம்
    3 வேதபுரீசுரர் தரு சேயே
    திருவேற்காட்டுக்கு வேத புரி என்று பெயர
    பூதம் பாடப் புறங்காட்டுஇடை ஆடி
    வேதவித்தகன் வேற்காடு --- சம்பந்தர் தேவாரம்
Working...
X