Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 18 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 18 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

    ��


    श्री भूस्तुति : 18 / 33


    ��


    ஸ்ரீ பூஸ்துதி :


    ��





    தாயே ! பகவான் தோளில் அமர்ந்து , நீ , ஆட்சி ,புரிகிறாய் !


    ��





    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    ��


    अन्योन्य , संबलन , जृम्भित , तूर्य , घोषै: ;

    संवर्त , सिन्धु , सलिलै: , विहित - अभिषेका ।

    एक - आतपत्रयसि ! विश्वम् - इदम् ; गुणै: , स्वै: ;

    अध्यास्य ; भर्तु: , अधिक - उन्नतम् - अंस , पीठम् ॥



    ��




    அந்யோந்ய , ஸம்பலந , ஜ்ரும்பித , தூர்ய , கோஷை: ;

    ஸம்வர்த்த , ஸிந்து , ஸலிலை: , விஹித - அபிஷேகா |

    ஏக - ஆதபத்ரயஸி ! விஶ்வம் - இதம் ; குணை: , ஸ்வை: ;

    அத்யாஸ்ய ; பர்த்து: அதிக - உந்நதம் -அம்ஸ , பீடம்||



    ��



    अन्योन्य ....... ஒன்றுக்கொன்று ,

    संबलन ........ மோதிக்கொள்வதால் ;

    जृम्भित ........ அதிகமாய் , எழுந்த ,

    तूर्य ............. வாத்யங்களின் ,

    घोषै: ........... ஒலியை உடைய ;

    संवर्त ........... பிரளய காலக் ,

    सिन्धु ........... கடல் ,

    सलिलै: ........ நீரால் ;

    अभिषेका ...... பட்டாபிஷேகம் ,

    विहित .......... செய்யப்பட்டு ;

    भर्तु: ............ கணவனான , வராஹப் பெருமானுடைய ,

    अधिक ......... மிகவும் ,

    उन्नत ........... உயரந்த ,

    अम्स ........... தோள் ஆகிய ;

    पीठम् .......... ஸிம்ஹாஸனத்தில் ,

    अध्यास्य ...... அமர்ந்து ;

    स्वै: ............ தன்னுடைய ,

    गुणै: .......... குணங்களால் ;

    इदम् .......... இந்த ,

    विश्वम् ....... உலகத்தை ;

    एक ........... ஒற்றைக்

    आतपत्रयसि...குடையின் கீழ் , ஆளுகிறாய் !


    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை :


    * பூமிப் பிராட்டியே !


    * உலகில் , ஒரு பேரரசனுக்கு , முடி சூட்டு விழாவின் போது ,
    . பல்வகை வாத்யங்கள் , முழங்க ;
    . கடல் நீரால் , அவனை , நீராட்டி ;
    . ஓரு சிங்காதனத்தில் , அமரச்செய்து ;
    . பட்டாபிஷேகம் , செய்வதும் ;
    . அதன் , பின் ; தன் நற்குனங்களால் , அவ்வரசன் ; மக்களை , மகிழ்வித்துக் கொண்டு
    . உலகை , ஒற்றைக் குடையின் கீழ் , ஆள்வதும் , உலக முறை .

    * நீ , இவ்வுலகுக்கே , சக்ரவர்த்தினியாக , முடி சூடி , நிற்கிறாய் .

    * உன் முடி சூட்டு விழாவிற்குக் , கடலின் அலைகள் தான் வாத்தியங்கள். கடல்களும் , கடல்களின் அலைகளும் , ஒன்றோடு , ஒன்று , மோதிக் கொள்வதால் , உண்டாகும் ஒலிகள் , வாத்தியங்களின் , முழக்கங்கள் ,ஆகின்றன.

    * பிரளய காலத்துக் கடல் நீர் முழுவதும் , உன் திருமஞ்சனத்திற்குப் பயன்பட்டன.

    * உன் நாயகனான , வராஹப் பெருமானது , மிக உயரமான தோளே , உனக்கு , ஏற்ற ,சிங்காதனம் ஆகியது . அதில் , ஏறி , அமர்கிறாய்.

    * உனக்குத் துணையாக , உன் திருக்குணங்களே , ஆகின்றன. அவற்றைக் கொண்டு , உலகை மகிழ்வித்து , உன் ஆணைக்கு அடங்கி , ஒற்றை வெண்குடை நிழலில் , ஆட்சி , புரிகிறாய் .



    ��



Working...
X