Announcement

Collapse
No announcement yet.

Kudambai sidhar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kudambai sidhar

    குதம்பாய், சொல்கிறேன் கேள். -- J.K. SIVAN
    இன்று கொஞ்சம் குதம்பை சித்தரின் ரெண்டு அடி எளிய வார்த்தைகளை பாடுவோமா.
    ஒரு அருமையான சித்தர் அவர். அர்த்தமே தேவை இல்லை தான். எனினும் ஒரு வரி கூட இணைத்திருக்கிறேன். ​


    தேடிய செம்பொன்னும் செத்தபோ துன்னோடு
    நாடி வருவதுண்டோ? குதம்பாய்
    நாடி வருவதுண்டோ?102


    ​(அகட விகட சாமர்த்தியம் செய்து சேர்த்தாயே அந்த செல்வம் கடைசியில் உன்னோடு வந்ததா? எங்கே)​


    போம்போது தேடும் பொருளில் அணுவேனும்
    சாம்போது தான்வருமோ? குதம்பாய்
    சாம்போது தான்வருமோ?103


    ​ (நீயே சாம்பல், நீ அலைந்து தேடியத்து ஒரு துளியாவது உன்னோடு........?)​


    காசினிமுற்றாயுன் கைவச மாயினும்
    தூசேனும் பின்வருமோ? குதம்பாய்
    தூசேனும் பின்வருமோ?104


    ​(உலகமே ஜெயித்த அலெக்சாண்டர் கூட கையை விரித்து ஒன்றுமில்லை என்று தானே சொல்லி போனான்? ஒரு தூசு கூட ஒட்டிக்கொண்டு வராது )​


    உற்றார் உறவின ஊரார் பிறந்தவர்
    பெற்றார்துணை யாவரோ? குதம்பாய்
    பெற்றார்துணை யாவரோ?105
    ​(இவ்வளவு பெரிய கும்பல் உன் சொந்தம் உன்னோடு இருந்ததே, அதெல்லாம் எங்கே?)​


    மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்குப்
    பொய்ப்பணி ஏதுக்கடி? குதம்பாய்
    பொய்ப்பணி ஏதுக்கடி?106


    ​(எது சாஸ்வதம், எதை உண்மையாக நம்பவேண்டும் என தெரியாமல் வாழ்வில் நாடியது எல்லாம் பொய் , வீண். அது எதற்கு?)​


    விண்ணாசை தன்னை விரும்பாத மக்கட்கு
    மண்ணாசை ஏதுக்கடி? குதம்பாய்
    மண்ணாசை ஏதுக்கடி?107
    (​இறைவனை தேடாமல் இரையை தேடி, சொத்து சேர்த்து என்ன பயன்?)​


    சேனைகள் பூந்தேர் திரண்ட மனுத்திரள்
    யானையும் நில்லாதடி! குதம்பாய்
    யானையும் நில்லாதடி!108
    ​(நாலு வித சேனைகள் நிறைய கொண்ட ராஜாவும் கூட பட்டத்து யானை இல்லாமல் நாலு பேர் தூக்க தனியாக தான் போகவேண்டும்)​


    செங்கோல் செலுத்திய செல்வமும் ஓர்காலம்
    தங்காது அழியுமடி! குதம்பாய்
    தங்காது அழியுமடி!


    ​(விரிந்த சாம்ராஜ்யத்துக்கே ராஜா தான், அது நிலையானதா, சாஸ்வதமானதா, பிரியாததா?)​


    நல்வினை தீவினை நாடிப் புரிந்தோர்பால்
    செல்வன் நிச்சயமே குதம்பாய்
    செல்வன நிச்சயமே.111
    ​(இப்போது கேள். நல்லது தீயது அறிந்து, நல்லோர் பின் சென்றவன் செய்த நல்வினை தான் அவன் கூட செல்லும் )


    செய்தவம் செய்கொலை செய்தர்மம் தன்னொடும்
    எய்த வருவனவே குதம்பாய்
    எய்த வருவனவே.112


    ​(ஒருவன் செய்த தவம், அவன் செய்த பாபங்கள், அவன்செய்த தர்மம் இவற்றின் பலன் மட்டுமே அவனோடு செல்பவை) ​


    முத்தி அளித்திடு மூர்த்தியைப் போற்றிசெய
    பத்தியும் பின்வருமே குதம்பாய்
    பத்தியும் பின்வருமே.113


    (​அடியே பெண்ணே குதம்பா, அந்த கிருஷ்ணனை பக்தியோடு வழிபடு, முக்தி கிடைக்கும்.)​
Working...
X