Announcement

Collapse
No announcement yet.

Tulaabhaaram before Krishna - Poem in tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Tulaabhaaram before Krishna - Poem in tamil

    Courtesy:smt.Padma Gopal
    (பரந்தாமன் மன்றம்....)
    சத்யபாமா:−
    நாலு பொட்டி நகைய வெச்சும்−
    நாரணனுக்கு சமம் ஆகலையே;
    பத்துப் பொட்டி பணத்தை வெச்சும்−
    பரந்தாமனுக்கு இணையாகலையே!


    அடுக்கடுக்காய் ஆபரணம்−
    அத்தனையும் வெச்சாச்சே;
    இடுவதற்கு ஏதுமின்றி−
    இருந்ததெல்லாம் போயாச்சே!


    கணக்கே ஒன்னும் பாக்காம, வெச்ச−
    கனகம் போறலையே;
    எனக்கே இது முடியலைனா,
    இவன் கதியுமினி என்னாகும்?


    மாயம் ஏதும் செய்யறானோ−
    மாயக்காரன் இவனாச்சே; (தலை)
    சாயமாட்டேன், இவன் முன்னே−
    சத்யபாமா நானாச்சே!


    ருக்மிணி:−


    தூணில் அன்று உதித்தாயாம்−
    துயரமெல்லாம் துடைத்தாயாம்;
    ஊனில் உயிராய் நீ பரவி−
    உயர்வையெல்லாம் கொடுத்தாயாம்;
    நானிலேனே நாதனே,
    நீயாகிப் போனேனே−
    வீணில் என்னை வாட்டாதே,
    வீழ்ந்தேன், உந்தன் சரணமே!


    இணையாக உனக்கென்னால்−
    ஒன்றைத் தர இயலுமோ?
    பிணையாக நீ நின்றால்−
    பெண்மனம்தான் பொறுக்குமோ?
    நின்னையே உள்ளில் தாங்கும்−
    நெஞ்சம் வருந்தலாகுமோ?
    விண்டு ஒரு துளவம் வைப்பேன்;
    நீயும் இங்கு பொருந்த வா!


    தீர்வு:−


    அன்பு மட்டும் நிறைந்த நெஞ்சில்−
    ஆணவம் புகுவதில்லையே;
    அருளைத் தர அண்ணலுமே−
    அங்கெழுந்தருள்வான், என்றுமே!


    கள்ளம் கசடு கொண்ட நெஞ்சை−
    கண்ணன் ஏற்பதில்லையே;
    உள்ளம் பார்த்து உயர்ந்த பலகை−
    உரைப்பது அவன் உவகையே!


    தனது எல்லாம் தந்த மனதை−
    தலைவன் கொள்வது உண்மையே;
    தன்னில் அவனை வயப்படுத்த−
    தாள் ஏற்கும் நம்மையே!
Working...
X