Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    295. கலைமேவு
    295மதுரை
    தனதான தானத் தனதான
    கலைமேவு ஞானப் பிரகாசக்
    கடலாடி ஆசைக் கடலேறிப்
    பலமாய வாதிற் பிறழாதே
    பதிஞான வாழ்வைத் தருவாயே
    மலைமேவு மாயக் குறமாதின்
    மனமேவு வாலக் குமரேசா
    சிலைவேட சேவற் கொடியோனே
    திருவாணி கூடற் பெருமாளே



    பதம் பிரித்தல்

    கலை மேவு ஞான பிரகாச
    கடல் ஆடி ஆசை கடல் ஏறி


    கலை மேவும் - கலைகள் எல்லாவற்றையும் தன்னுள் அடங்கியுள்ள ஞானப் பிரகாச - ஞான ஒளியான கடல் ஆடி - கடலிடையே திளைத்துக் குளித்து கடல் ஏறி - (மூவாசை என்னும்) கடலைக் கடந்து


    பலம் ஆய வாதில் பிறழாதே
    பதி ஞான வாழ்வை தருவாயே
    பலம் ஆய - வலிமை வாய்ந்த வாதில் - (சமய) வாதங்களில் பிறழாதே - மாறுபட்டுக் கிடக்காமல் பதி ஞான வாழ்வை - இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வை தருவாயே - தந்து அருளுக




    மலை மேவு மாய குறமாதின்
    மனம் மேவு வால குமரேசா
    மலை மேவு - (வள்ளி) மலையில் வாழ்கின்ற மாயக் குற மாதின் - ஆச்சரியத் தோற்றத்தைக் கொண்ட குறப் பெண்ணாகிய வள்ளியின் மனம் மேவு - மனத்தில் வீற்றிருக்கும் வால - இளமையான குமரேசா - குமரேசனே


    சிலை வேட சேவல் கொடியோனே
    திருவாணி கூடல் பெருமாளே


    சிலை - (பொய்யா மொழிப் புலவர் பொருட்டு) வில்லேந்திய வேட - வேடனாய் விளங்கியவரே சேவல் கொடியோனே - சேவற் கொடியைக் கொண்டவரே திருவாணி கூடல் பெருமாளே - இலக்குமியும் சரஸ்வதியும் விளங்கும் கூடல் (மதுரை) நகர்ப் பெருமாளே

    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்
    அ சிலை வேட
    அயிலவ சமுடன் ததிதிரி தருகவி
    யாளப் புயங்கொண் டருள்வோனே --- திருப்புகழ், கடகடகருவிகள்,
    பொய்யாமொழிப் புலவர் சிவனையே பாடும் வழக்கத்தினர் முருகனைப் பாடுக என்றால் கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ என்று ஆணவத்துடன் இருந்தார் முருகவேள் இவர் தனிமையாகப் போகும்போது வேடனாய் வழிமறித்துத் தன் பெயர் முட்டை என்று சொல்லி என் பெயரை வைத்துப் பாடினால் உன்னை விடுவேன் என வெருட்டினார் புலவர் பின் வரும் அகப் பொருள் கொண்ட பாடலைப் பாடினார்
    பொன்போலுங் கள்ளிப் பொறிபறக்குக் கானலிலே
    என்பேதை செல்லற் கியைந்தனளே - மின்போலு
    மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போய்
    கானவேல் முட்டைக்குங் காடு
    கள்ளி தீப்பட்டு பொறி பறக்குமாயின் வேல் முள் சாம்பராகப் போயிருக்குமே, அது எவ்வாறு தைக்கும்? நீ பாடிய பாட்டில் பொருள் குற்றம் உள்ளது என்று முருகவேள் எள்ளி நகையாடினார்
    விழுந்த துளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
    எழுந்து சுடர்சுடு மென்றுஞ் - செழுங்கொண்டல்
    பெய்யாத கானகத்துப் பெய்வேளையும் போயினளே
    பொய்யா மொழிபகைஞர் போல் கோழிக் குஞ்சைப் பாடமாட்டேன் என்றாயே இப்போது முட்டையையும் பாடி விட்டாயே என்று கூறி புலவரை ஆட்கொண்டார்
    ஆ மாயக் குறமாதின் மனம் மேவு
    வனசர் கொம்பி னைத்தேடி யொருவேட
    வடிவு கொண்டு பித்தாகி யுருகி வெந்த றக்கானில்
    மறவர் குன்றி னிற்போன பெருமாளே --- திருப்புகழ் களவுகொண்டு
Working...
X