Announcement

Collapse
No announcement yet.

Narasimhar - Poem in tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Narasimhar - Poem in tamil

    Narasimhar - Poem in tamil
    Courtesy:Smt.Padma Gopal
    (நமக்கானான் நரசிம்மன்..)


    தானே, தன்னைத் தான்−
    தூணிலே பிறப்பித்தான்;
    ஊனுறை உயிர் நடுங்க−
    உயர்ந்தவனெனக் காண்பித்தான்!


    எத்தனையோ வடிவெடுத்து−
    எல்லாமாய் வ்யாபித்தான்;
    அத்தனையும் அவனென்றே−
    அறிந்தோரை, அனுக்ரஹித்தான்!


    சினமென்னும் அரிதாரம்−
    சிறியோர்க்காய் தானேற்றான்;
    தினம் அவனைத் துதிப்போர்க்கு−
    தித்திப்பாய், தனைக் கொடுத்தான்!


    வரமெல்லாம் தருமுள்ளம்−
    நரசிம்மம் ஆனதிங்கே;
    கரம் கூப்பித் தொழுவோம் நாம்;
    பரன் பரிவான் நமக்காங்கே!


    பயமில்லை இனி நமக்கே;
    ஜெயம் உண்டே, அவனிருக்க!
    நயந்தேத்தி அடிபணிவோம்;
    ஐயன் அருளுக்கு, ஆட்படுவோம்!
Working...
X