Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 12 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 12 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    ��


    श्री वरदराज पंचाशत् 12 / 51











    ��


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    ��


    வரதா ! நீயே , எல்லாவற்றிற்கும் , காரணம் !




    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��




    ��




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��





    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    ��




    ब्रह्मा - इति ; शंकर - इति ; इन्द्र - इति ; स्वराट् - इति ;

    आत्मा - इति ; सर्वम् - इति ; सर्व , चर - अचर - आत्मन् ! ।

    हस्तीश ! सर्व , वचसाम् - अवसान , सीमाम् ;

    त्वाम् ; सर्व , कारणम् ; उशन्ति ! अनपाय , वाच: ॥


    ��






    ப்ரஹ்மா - இதி ; ஶங்கர - இதி ; இந்த்ர - இதி ; ஸ்வராட் - இதி ;

    ஆத்மா - இதி ; ஸர்வம் -இதி ; ஸர்வ , சர்வ - சர - அசர - ஆத்மந் ! |

    ஹஸ்தீஶ ! ஸர்வ , வசஸாம் - அவஸாந , ஸீமாம் ;

    த்வாம் ; ஸர்வ , காரணம் ; உஶந்தி ! அநபாய , வாச: ||


    ��





    सर्व .......... ஸகலமான ,

    चर .......... அசையும் ,

    अचर ........ அசையாதவை இவற்றிற்கு ;

    आत्मन् ...... அந்தர்யாமியாக உள்ள ,

    हस्तीश ...... அத்தி கிரிப் பெருமானே !

    अनपाय ..... அழிவற்றதான ,

    वच: ......... வேத வாக்குகள்

    सर्व .......... எல்லாவற்றுக்கும் ,

    कारणम् ..... காரணமாய் உள்ள ,

    त्वाम् ......... உன்னை ;

    ब्रह्मा इति .... பிரமன் என்றும் ,

    शंकर इति ... சங்கரன் என்றும் ,

    इन्द्र इति ..... இந்திரன் என்றும் ,

    स्वराट् इति .. கர்மத்துக்கு , வசப்படாதவன் என்றும் ,

    आत्मा इति ...ஆத்மா என்றும் ,

    सर्वम् इति .... எல்லாம் என்றும் ,

    सर्व ............ எல்லாச்

    वचसाम् ....... சொற்களுக்கும் ,

    अवसान ....... முடிவான ,

    सीमाम् ........ எல்லையாய் ,

    उशन्ति ........ விரும்பிப் , பேசுகின்றன !


    ��


    ஶ்ரீ உப.வே.ஶ்ரீ .வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��




    * பேரருளாளப் பெருமானே !

    * அசையாதன , அசைவன ஆகிய பிரபஞ்சம் முழுவதையும் , நீ , சரீரமாகக் கொண்டு , அவற்றுக்கு , ஆத்மாவாக , நிற்கின்றாய் ! மேலும் , எல்லாவற்றிற்கும் , நீயே , காரணமாய் , உள்ளாய் .

    * இந்த இரண்டு அம்சங்களையும், கொண்டு , அழியாத மறைகள் , உன்னையே , பிரமன் , சங்கரன் , இந்திரன் , கர்மத்துக்கு , வசப் படாதவன் , ஆத்மா , எல்லா வஸ்துக்களும் , என்று விரும்பிப் , பேசுகின்றன.

    * உண்மையில் , இந்தச் சொற்கள் , அனைத்தும் , உன்னையே , குறிப்பிடுகின்றன. ஏனெனில் , நீதானே , எல்லாச் சொற்களுக்கும் , கடைசி எல்லை எனும் , முக்கியப் பொருள் ஆகின்றாய்.

    * உலகில், எந்தப் பொருளை , எந்தச், சொல்லால் , கூறினாலும் , அந்தச் சொற்கள் , முடிவில் , உன்னையே , கூறித் தீர வேண்டும். உதாரணமாய் , தேவதத்தன் என்ற சொல்லால் , ஒருவனைக் , குறித்தால் , அப்பெயர் , சரீரத்தைப் பற்றி வந்ததாய் , இருப்பினும் , அந்த சரீரத்தோடு கூடிய , ஜீவனைக் கூறுவதாகவே , கொள்ளப் படுகின்றது , அன்றோ ?

    * அவ்வாறே , அவனுடன் , அந்தச் சொல் நிற்காமல் , அந்த ஜீவனுக்கும் , அந்தர்யாமியான , உன்னைக் கூறி அன்றோ , முடிவு பெறுகிறது. ஆகவே , நீ தான் , கடைசி எல்லை ஆகிறாய் .


    * ஆகவே , சேதனர்களைப் பற்றிய , பிரமன் முதலிய சொற்கள் , அசேதனத்தைப் , பற்றிய குடம் முதலிய சொற்கள் ஆகிய , எல்லாச் சொற்களும் , அவற்றுக்கு , உயிராய் , அவற்றுக்குக் காரணமாய் , விளங்கும் , உன்னை , முடிவு எல்லையாக , வைத்துக் , கூறியே , நிற்பன என்று மறைகள் , பறை சாற்றுகின்றன.




    ��




    Last edited by sridharv1946; 22-07-18, 10:36.
Working...
X