Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री वरदराज पंचाशत् 14 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री वरदराज पंचाशत् 14 / 51 🙏 ஸ்ரீ வரதராஜ பஞ்

    🙏


    श्री वरदराज पंचाशत् 14 / 51











    🙏


    ஸ்ரீ வரதராஜ பஞ்சாஶத்


    🙏


    வரதா ! நீயே , வேதத்துக்கு , எல்லாமாக இருக்கிறாய் !




    🙏





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏



    🙏




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏









    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:












    🙏

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||



    🙏


    त्राता - (आ)पदि ; स्थिति , पदम् ; भरणम् ; प्ररोह: ;

    छाया ; करीश ! सरसानि , फलानि च ; त्वम् ।

    शाखा , गत ; त्रिदश , बृन्द , शकुन्तकानाम् ;

    किम् , नाम , न - असि ? महताम् , निगम , द्रूमाणाम् ॥



    🙏


    த்ராதா - (ஆ)பதி ; ஸ்த்திதி , பதம் ; பரணம் ; ப்ரரோஹ: ;

    சாயா ; கரீஶ ! , ஸரஸாநி , பலாநி ச ; த்வம் |

    சாகா , கத ; திரிதஶ , ப்ருந்த , ஶகுந்தகாநாம் ;

    கிம் , நாம , ந - அஸி ? மஹதாம் , நிகம , த்ருமாணாம் ||


    🙏


    करीश ............ அத்தி கிரிப் பெருமானே !

    त्वम् ............... நீ ,

    शाखा गत ........ (வேத பாகங்கள் எனும்) கிளைகளை , அடைந்துள்ளதும் ;

    त्रिदश बृन्द ....... தேவர் கூட்டம் ஆகிய ,

    शकुन्तकानाम् ... பறவைகளை , உடையதும் , ஆன ;

    महताम् ........... பெரிய ,

    निगम ............. வேதங்கள் ஆகிய ,

    द्रूमाणाम् .......... மரங்களுக்கு ;

    आपदि ............ ஆபத்துக்குக் காலத்தில் ,

    त्राता .............. காப்பவன் ஆகவும் ;

    स्थिति पदम् ...... வேர் ஊன்றும் , இடமாகவும் ;

    भरणम् ............ போஷிக்கும் , பொருள் ஆகவும் ;

    प्ररोह: ............. விழுது , ஆகவும் ;

    छाया .............. நிழல் , ஆகவும் ;

    सरसानि .......... இனிமையான ,

    फलानि च ........ பழங்கள் ஆகவும் (இருக்கிறாய்) ;

    किम् नाम ......... எதுவாகத்தான் ,

    न असि ............ இல்லை ?

    🙏


    ஶ்ரீ உப.வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை

    🙏


    * பேரருளாளப் பெருமானே !

    * வேதங்கள் எல்லை அற்றவை. அவற்றை , மிகப் பெரிய மரங்கள் எனக் கொள்ளலாம்.

    * வேதத்தில் உள்ள , தைத்தரீயம் , வாஜஸநேயம் , கௌதுமம் , ஜைமிநீயம் என்று , இப்படி உள்ள பிரிவுகளே , அவ் வேத மரத்தின் கிளைகள் ஆகும்.

    * அந்தந்த பாகங்களில் , ஓரொரு பலனைத் தருபவராகக் கூறப்பட்டுள்ள , தேவர்களின் கூட்டமே , அந்தக் கிளைகளில் உள்ள பறவைக் கூட்டம் ஆகும்.

    * இத்தகைய , வேத மரங்களுக்கு , அசுரர்கள் எனும் , புயற்காற்றால் , கேடு வரும்போது , அவ்வாபத்திலிருந்து , அவற்றை மீட்டு , நீயே , காப்பவன் ஆகிறாய்.

    * ஸகல வேதங்களும் , உன்னையே , முக்கியமாகக் கூறுவதால் , மரங்கள் , வேர்ஊன்றி , நிற்கும், இடம் ஆகிய , பூமி போல் , நீ , ஆதாரம் ஆகிறாய் .

    * மரங்களுக்கு , ஜலம் முதலியன , விட்டு , வளர்க்க வேண்டும். நீ வேதங்கள் , உரு மாறி விடாமல் , அவற்றின் , ஸ்வரம் முதலியன , முறைப்படி , நடக்குமாறு , அதற்கு , உரிய , சாஸத்ரங்களைத் , தோற்றுவிப்பதால் , வேத மரங்களை , வளர்க்கும் , போஷகன்ஆகிறாய்.

    * மரத்தின் விழுது , மரத்தில் இருந்தே , தோன்றித் , தரையிலும் புகுந்து , மரத்தைப் பாதுகாக்கும். நீயும் , வேதங்களை மூலமாகக் கொண்டு , தோன்றிய , ஸ்ம்ருதி , புராணம் முதலியவற்றை , உலகுக்கு , வெளிப்படுத்தி , அவற்றின் உதவியால் , வேதத்துக்குத் தவறான கருத்துகள் , வெளியாக இடம் இன்றி , தாங்கி நிற்பதால் , வேத மரங்களுக்கு , விழுது ஆகிறாய்.

    * மரத்தின் நிழல் , வெயிலில் வாடி , வருபவருக்குத் , தாபத்தைப் போக்கும். அவ்வாறே , ஸம்ஸார தாபத்தால் , அல்லல் உற்றவன் , வேதத்தைத், தழுவி , நடந்தால் அவனது , ஸம்ஸார தாபத்தைப் போக்கும் , நிழலாக , நீ , ஆகின்றாய். ஆகவே , நீயே , வேத நிழல்.

    * மரங்கள் , இனிய கனியைத் தருவன. வேதங்கள் காட்டிய வழியைக் கைப்பற்றி , உன்னைச் சரணம் அடைந்தவனுக்கு , நீ , மிக்க சுவை உடைய , தெவிட்டாத இன்பம் தரும் , தீங்கனிகளாக , விளங்குகிறாய் .

    * உலகத்தில் , மரத்தைக் காப்பவன் ஒருவன் ; இருக்கும் இடம் , ஒன்று ; போஷிப்பவன் ஒருவன் ; விழுது , நிழல் , பழம் ஆகியவை , வெவ்வேறாக இருக்கக் காண்கிறோம். நீயோ , விசித்ரமான முறையில் , வேத மரங்களுக்கு , காப்பவன் , வேரூன்றும் இடம் , போஷிக்கும் பொருள் , விழுது , நிழல் , இனிய பழம் இவை எல்லாமாகவும் , விளங்குகிறாய்.

    * இன்னும் , இந்த வேத மரத்தைச் சார்ந்த , எந்த வஸ்துவாகத் தான் , நீ இருக்கவில்லை ? ஸகல வஸ்துவாகவும் , திகழ்கிறாய் !




    🙏




    Last edited by sridharv1946; 24-07-18, 10:18.
Working...
X