Announcement

Collapse
No announcement yet.

Temple bell

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Temple bell

    Temple bell
    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    🏜 *ஆலய மணி:*🔔
    கோயில்களில் மணிகளை பிணைக்கும் பழக்கம் நம்மிடம் இருந்து வருகிறது.


    இந்துக்கள் வீட்டிலும் இறை வழிபாட்டின்போது, மணி முக்கிய பங்கு வகிக்கிறது.


    இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போது, மணி அடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.


    இந்த மணியை அடித்து ஒலிக்கச் செய்யும் சடங்கு எதற்காக?


    மணி அடிப்பதால் ஏற்படும் மாற்றங்களில், அறிவியல் பூர்வமான தெளிவு கிடைக்கிறது!.

    கோயில் மணி ஏதோனும் ஒரு உலோகத்தால் செய்யப்படுவது கிடையாது.


    இம்மணிகளை உருவாக்க, ஏழு உலோகங்களின் கலவையைக் பயன்படுத்தப்படுகிறது.


    கேட்மியம் , லெட் , ஜின்க் , நிக்கல் , குரோமியம் மற்றும் மாங்கனீஸ் ஆகிய உலோகங்கள் மூலம் உருவாக்கம் பெறுகிறது.


    மணியின் தயாரிப்பில் ஒவ்வொரு உலோகத்தின் சேர்க்கை அளவின் விகிதமும் அறிவியல் சார்ந்த விகிதத்துடன் சேர்ந்து தயாரிப்பவையாகும்.


    ஆகம சாஸ்திரத்தின் படி மணிகள் பஞ்ச லோகத்திலும் தயாரிக்கப்படுகின்றன.


    இவை, தாமிரம், வெள்ளி, தங்கம், வெண்கலம் மற்றும் இரும்பு ஆகியவைகளிறால் தயாரிக்கப்படும் மணிகள் பஞ்ச பூதங்களை குறிப்பிடுகிற முறையில் கொண்டனவையாகும்.


    மனித மூளையில் வலது, இடது என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்ட ஒரே மூளையாகும்.


    இரண்டும் இரு வேறு செயலாற்றல் தன்மைகளை கொண்டது.


    ஒரே மூளையில், இரண்டு பாகங்களைக் கொண்டிருக்கும் இந்த மூளை இந்த இரண்டு பாகத்தையும் ஒன்றாக இணைக்கும் தன்மை, கோவில் மணியில் இருந்து எழும் ஒலிகளுக்குத்தான் இருக்கிறது.


    இத்தகைய விதத்தில் தான் இந்த மணி தயாரிக்கப்படுகிறது.


    இது பெரும் ஆச்சர்யம்!.


    நாம் கோயில் மணியை அடித்தவுடன், அதிலிருந்து ஒரு பலத்த அதிர்வலையுடன் கூடிய ஒலி எழும்புவதை உணர்வோம்.


    இந்த மணியின் ஓசை எதிரொலியுடன் கூடி பரவி ஆழ்ந்த, இடைவிடாத ஒலியாக கணந்து ஒலிக்கும் .


    ஒலியின் முடிவில் கேட்கும் எதிரொலிகள் நம் காதுகளில் சில வினாடிகள் வரைகூட நீடிக்கும்.


    இது மனித உடலில் சக்கரங்கள் எனப்படும் சக்தி மையங்களைச் சென்றடையும்.


    மனித உடலில் உள்ள இந்த ஏழு சக்கரங்கள் என்பது 1.மூலாதாரம், 2.சுவாதிஷ்டனா,
    3.மணிபுரம்,
    4.அனாகதம்,
    5.விசுத்தம்,
    6.ஆக்கினை,
    7.சகஸ்ராரம் போன்றவையாகும்.


    *ஓம் எனும் மந்திரம்:*
    மணியில் இருந்து வரும் ஓசையில் நாம் *ஓம்* என்ற மந்திரத்தை தெளிவாக உணர முடியும்.


    கர்பகிருகத்தில் இருக்கும் மணியை, இறைவனுக்கு தீபாராதனை காட்டும்போதும், இறைவனுக்கு அபிஷேகம் நடக்கும்போதும், நைவேத்தியம் படைக்கும் போதும், என்ற நேரங்களில் மணியை அடிப்பதுண்டு.


    ஒவ்வொரு கோயிலிலும் கர்பகிருகத்தில் உள்ள மணியை அடிப்பதற்காக ஒவ்வொரு சாஸ்திரம் பின்பற்றப்பட்டு வருகிறது.


    *கோயில் வாசலில் கட்டும் மணி:*
    பொதுவாக கோயில் வாசலில் மணியை கட்டியிருப்பதை நாம் பார்த்திருப்போம்.


    உள்ளே நுழைந்ததும், அதனை இழுத்து ஓசை எழுப்புவோம்.


    இதை, இறைவனைக்காண வந்திருப்பதை அறிவிப்பதாக எண்ணுவர் அனேகர், ஆனால் அவை அப்படியல்ல!


    கோயிலுக்குள் நுழையும் போது, நமது ஆழ் மனது பலவிதமான சிந்தனைகளைத் தாங்கியவாறு எண்ணத்தில் இருந்து கொண்டிருக்கும்.


    அந்த எண்ணத்தை விலக்கி, விழிக்க செய்வதற்காகவே இந்த ஒலியை எழுப்பச் செய்கிறோம்.


    உடலால் தூங்குபவர்களை ஓசையின் மூலம் எழுப்புவது போல், மனதையும் எழுப்பவே இந்த முறையை நிம் பின்பற்றுகிறோம்.


    இந்த ஒலியால் மனமும் உடலும் விழிப்படையும் நேரம், கோயிலில் இருந்து வரும் நறுமணமும் விளக்கின் ஒளி, மற்றும் சுகந்தமும் நம்மை மேலும் ஊக்குவித்து நம் மனதை ஒருமுகப்படுத்த இருத்தும்.


    *கோயில் மணி ஒலியின் விளைவுகள்:*
    கோயில் மணியின் ஒலியை கூர்ந்து கேட்டுப் பாருங்கள். தியானம் செய்வதை போன்ற உணர்வு எழும்.


    கோயில் மணியில் இருந்து ஒலி எழும்பும் அந்த நேரம், நம் மூளையில் உள்ள மற்ற சிந்தனை நினைவுகளை தடுக்கப்படுகின்றது.


    இதன் பின்னர் நாம், தன்னிலை இழந்த நிலைக்கு செல்ல தயாராகி விடுவோம்.


    அப்போது, மனம் விழிப்பிணர்ச்சி அடைந்து இருக்கும்.


    இந்த நிலையில் இருந்து மீண்டு வர சிறிது அவகாசம் தேவை படுவதால், அந்த நேரத்தில், கோயில் மணிகளில் இருக்கும் அதன் தண்டை இழுத்து அடிப்பதால், அதன் ஒலி பல அலைவரிசைகளை உருவாக்கி வெளியேறி ஒலிக்கும்.


    இந்த ஒலி, வளி மண்டலம் வரை பரவும். ஒலிகள் வெளிப்படும்போது அதனுடன் சேர்த்து புனிதமான கதிர்களும் பிரவாகமாகும்.


    இவை வளி மண்டலத்தில் உள்ள தீய ஆற்றல்களை அழிக்கும்.


    *வீடுகளில் மணியோசை:*
    பொதுவாக சிவனடியார்களின் வீடுகளில் பூஜையின் போது மணியோசை எழுப்பி இறைவனை வணங்குவது ஒரு வழக்கம் வைத்திருப்போம்.


    மணியோசையால் இறைவனை அழைப்பதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.


    மணியோசையின் ரீங்காரத்தால் தீய சக்திகள் வீட்டிலிருந்து நீங்கி விடும் என்பதும் ஒரு எண்ணமாகும்.


    இறைவனை வணங்கும்போது எந்த ஒரு வேறான வார்த்தைகளும், கேட்டக்கூடாத ஓசைகளும் செவிகளில் விழக் கூடாது என்பதற்காக இந்த ஒலியை எழுப்பி இறைவனை வணங்கிக் கொள்வோம்.


    நமது முன்னோர்களின் காலம் முதல் இன்றைய காலம் வரை மணியின் பயன் இருந்து வருகிறது.


    முன்னோர்கள் எல்லாவற்றையும் அர்த்தத்துடனும், மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் செய்தனர் என்பதை எண்ணும்போது, இன்றைய அறிவியல் பூர்வ வாழ்க்கையின்போது, விளங்கிக் கொண்டதை, நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.


    இதனால், அவர்களின் பழக்க வழக்கங்களை மாற்றாமல் பின்பற்ற முயற்சிப்போம். நிச்சயம் அது நமக்கு மேன்மையைத் தரும்.


    *இதன் ஒலியை இதில் கேளுங்கள்:*
    https://youtu.be/QefasGJrgiA
Working...
X