Announcement

Collapse
No announcement yet.

How to know GOD has seen me-Mukkur

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • How to know GOD has seen me-Mukkur

    How to know GOD has seen me-Mukkur
    🙏 *முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் ஸ்வாமி*
    வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும்.
    வேதம் சொன்னால் புரியாது;
    *புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம். வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது*.
    அதர்வண வேதம் சொல்கிறது ---
    *இங்கிருந்து ஒருவர் கோவிலுக்குப் போய் பகவானைச் சேவிக்கிறார். பகவான் இவரைப் பார்த்தாரா என்று எப்படி தெரிந்து கொள்வது*?
    பகவான் இவரை அனுக்ரஹித்தானா என்பதற்கு வேதம் ஒரு அளவுகோல் சொல்கிறது.


    *ஓரிடத்தில் வேத பாராயணம் நடக்கிறது*.
    *வேத சப்தத்தைக்​கேட்டு அங்கே போய் அவர் உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டு கேட்கிறார்*.


    வேதம் சொல்கிறது--- எப்போது வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு வேத பாராயணத்தைக் கேட்கிறாறோ அப்போது பகவான் அவரைப் பார்த்து விட்டான் என அர்த்தம்.


    பகவான் பார்த்தான் என்பதற்கு அளவுகோல் எது?


    வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுதல்.


    *வேதத்தைக் கேட்க ஒருத்தருக்குப் பிடிக்கவில்லை என்றால் இன்னும் பகவானின் கடாக்ஷம் அவனுக்கு கிடைக்கவில்லை என்று அர்த்தம்*.


    பகவானிடத்தில் த்வேஷம் இருந்தால் கூட அவன் பொறுத்துக்​கொள்வான். வேதத்தின் மீது த்வேஷம் இருந்தால் ஒத்துக் கொள்ள மாட்டான்.


    *நாம் வேதத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்*.


    *ந்ருஸிம்ஹ அவதாரத்தின் முன்பு பகவான் சொன்னான் 'யதா வேதேஷூ' என்று எவன் வேகத்தை நிந்திக்கிறானோ அவன் சீக்கிரம் நாசத்தை அடைவான் என்றான்*.


    அர்த்தம் தெரியா விட்டாலும் வேதத்தைக் கேட்க வேண்டும். கேட்க வேண்டும் என்ற அபிப்பிராயம் நமக்கு வேண்டும்.


    *அர்த்தமே தெரியா விட்டாலும் பரவாயில்லை. இது எப்படி சரியாகும் என்று​கேள்வி*.


    வேத மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாமல்​ஒருவர் ஹோமம் பண்ணுகிறார். அப்போது பலன் சித்திக்குமா என்றால் சித்திக்கும் என்கிறது வேதம்


    *ப்ரம்மச்சாரி உபநயனத்தின் போது பிக்ஷாடணம் --பிச்சை எடுக்கக் கற்றுக் கொள்கிறான். அதற்கு அவனுக்குச் சொல்லிக் கொடுக்கப் படுகிறது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் 'பவதி பிஷாந்தேஹி' என்கிறான்*


    இவனுக்கு சமஸ்கிருத பாடம் ஆரம்பிக்கவில்லை. ராம சப்தம் கூட தெரியாது. 'தாங்கள் பிச்சை இடுங்கள்' என்ற அர்த்தமும் தெரியாது.


    ஆனால் அதை சொல்லக் கற்றுக் கொண்டுள்ளான். அவனுக்கு என்ன தெரியும்..?


    *'பவதி பிஷாந்தேஹி'என்று கூக்குரலிட்டால் பாத்திரம் நிறையும். வீட்டுக் கதவைத் திறந்து வந்து அந்த வீட்டுப் பெண்மணி பாத்திரத்தில் அரிசியை இடுகிறாள். பாத்திரம் நிறைகிறது*.


    ப்ரம்மச்சாரி அர்த்தம் தெரியாமல் சொல்கிறான். ஆனாலும் பாத்திரம் எப்படி நிறைகிறது என்றால், இவனுக்குத் தெரியாமல் போனாலும் வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியும்.


    *அது போல், வேத மந்திரத்திற்கு நமக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும்* *தேவதைகளுக்குத் தெரியுமாதலினால் அவர்கள் ஓடி வந்து நாம் கொடுப்பதை ஸ்வீகரித்து நம்முடைய அபீஷ்டத்தை பூர்த்தி பண்ணுவார்கள்*..
Working...
X