Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam


    அத்தியாயம் 2-
    புராணங்களை கூறுபவர் சூதபௌராணிகர் எனப்படுவர். வியாசரின் சீடரான ரோமஹர்ஷணரின் புத்திரர் உக்ரஸ்ரவஸ் இங்கு பாகவத புராணத்தைக் கூறுகிறார். முதலில் குருவையும் பிறகு பகவானையும் வந்தனம் செய்து ஆரம்பிக்கிறார்
    யம் ப்ரவ்ரஜந்தம் அனுபேதம் அபேதக்ருத்யம்
    த்வைபாயனோ விரஹகாதர ஆஜூஹாவ
    புத்ரேதி தன்மயதயா தரவோ அபிநேது:
    தம் சர்வபூதஹ்ருதயம் முனிம் ஆனதோ அஸ்மி


    ப்ரவ்ரஜந்தம் – முற்றும் துறந்தவராய்
    அனுபேதம் – துணை இன்றி
    அபேதக்ருத்யம் – செயல்களைத் துறந்து சென்ற
    யம்- எந்த சுகரை
    த்வைபாயன:- வியாசர்
    விரஹகாதர: மகனின் பிரிவினால் வருந்தி
    புத்ர இதி – மகனே என்று
    ஆஜூஹாவ – கூப்பிட்ட போது
    தன்மயதயா- அவர் பிரம்ம ஞானியாக பிரபஞ்சத்துடன் ஒன்றாக கலந்துவிட்டதால்
    தரவ: -மரங்கள் எல்லாம்
    அபிநேது: - வியாசருக்கு பதில் குரல் கொடுத்ததோ ( சுகர் பேசவில்லை)
    தம் –அப்படிப்பட்ட
    சர்வபூதஹ்ருதயம் – எல்லா ஜீவராசிகளுக்கும் உள்ளம் ஆகி நின்ற
    முனிம் – சுக முனிவரை
    மானதோ அஸ்மி- வணங்குகிறேன்


    வியாசர் பாகவதத்தை இயற்றினாலும் அதை முதலில் கூறியது சுகப்ரம்மரிஷிதான். அதனால் அவரை சரணம் அடைந்து இந்தப் புராணத்தை சொல்கிறேன் என்கிறார்.


    ய: ஸ்வானுபாவம் அகிலஸ்ருதிசாரம் ஏகம்
    அத்யாத்மதீபம் அதி திதீர்ஷதாம் தமோ அந்தம்
    ஸம்ஸாரிணாம் கருணயா ஆஹ புராணகுஹ்யம்
    தம் வ்யாசசூனும்உபயாமி குரும் முனீனாம்


    ய: - எவர்
    ஸ்வானுபாவம் – ஆத்மானுபவத்தை அளிப்பதாகவும்
    அகிலஸ்ருதிசாரம்- வேதங்களின் சாரமாகவும்
    ஏகம் – ஒப்பற்றதும்
    அத்யாத்மதீபம் – ஆத்மஞானத்தைக் காட்டும் தீபம் போன்றதும்
    தமோ அந்தம் –அக்ஞான இருளை
    அதிதீர்ஷதாம் – கடக்க ஆவல் கொண்ட
    ஸம்ஸாரிணாம்-சம்சார பந்தத்தில் அகப்பட்டு இருப்போர்க்கு
    கருணயா- கருணையுடன்
    புராணகுஹ்யம் –இந்த அரிய புராணத்தை
    ஆஹ- உபதேசித்தாரோ
    தம் வ்யாச சூனும்- அந்த வ்யாசபுத்திரரான
    குரும் முனிம்- சுகமுனிவரை
    உபயாமி- சரணம் அடைகிறேன்


    நாராயணம் நமஸ்க்ருத்ய நரம் சைவ நரோத்தமம்
    தேவீம் ஸரஸ்வதீம் வ்யாஸம் ததோ ஜயம் உதீரயேத்


    ஜயம்- ஜெயம் என்ற இந்தப் புராணத்தை
    நாராயணம்- நாராயணனையும்
    நரோத்தமம் – புருஷ ஸ்ரேஷ்டனான
    நரம் – நரனையும் (நர நாராயண வந்தனம்)
    தேவீம் ஸரஸ்வதீம் – சரஸ்வதி தேவியையும்
    வ்யாசம் – வியாசரையும்
    நமஸ்க்ருத்ய –வணங்கி
    தத: -பிறகு
    உதீரயேத் – கூற வேண்டும்.


    சாதாரணமாக மகாபாரதமே ஜயம் எனப்படும். ஜய என்ற எழுத்துக்கள் கடபயாதி சாங்க்யையின் படி 18 என்ற எண்ணைக் குறிக்கும்.மகாபாரதம் பதினெட்டு பர்வங்களைக் கொண்டது. பாரதப்போர் நடந்தது பதினெட்டு நாள். மகாபாரதத்தின் ஹ்ருதயம் எனக்கூறப்படும் பகவத்கீதை பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது. இதனால் ஜயம் என்று சொல்லப்படுகிறது.


    பாகவதம் 18௦௦௦ ஸ்லோகங்கள் கொண்டது. கிருஷ்ண மந்திரம் பதினெட்டு அக்ஷரங்களைக் கொண்டது., பாகவதத்தை ஜயaம் என்று குறிப்பிட்டதற்கு இன்னொரு காரணம், இதனால் சம்சாரமானது வெல்லப்பட்டதாகிறது, 'ஜயதி அனேன ஸம்ஸாரம் இதி ஜய:






    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1அத்தியாயம் 2 தொடர்ச்சி


    சூதர் , எல்லா சாஸ்திரங்களுக்கும் சாரமானது எது என்ற முதல் கேள்விக்கு பதிலுரைக்கிறார்


    ஸ வை பும்ஸாம் பரோ தர்ம: யாத: பக்தி: அதோக்ஷஜே
    அஹைதுக்யப்ரதிஹதா யயா ஆத்மா ஸம்ப்ரசஸீததி( பாக. 2.6)


    மனிதர்களுக்கு மேலான தர்மம் பகவானிடத்தில் பக்தியே . அஹைதுகம் , எதையும் எதிர்பார்க்காத , அப்ரதிஹதம், எல்லா இடையூறையும் நீக்குவதான பக்தியினால் ஆத்மா தெளிவடைகிறது.


    வாசுதேவரிடத்தில் பக்தி ஏற்படுமானால் அது விரைவில் வைராக்யத்தையும் ஞானத்தையும் உண்டாக்கும்.


    எந்த தர்மம் நன்கு அனுஷ்டிக்கபப்ட்டதாயினும் பகவத் கதைகளில் ஆர்வம் உண்டாகவில்லையேல் அது வீண் ஸ்ரமமே ஆகும்.


    நான்கு புருஷார்த்தங்களில் தர்மம் என்பது மோக்ஷத்தின் பொருட்டே அனுஷ்டிக்கப்பட வேண்டும், காமத்திற்காக அல்ல. அதாவது பலனைக் குறித்து செய்யப்படும் தர்ம காரியங்கள் மோக்ஷத்திற்கு விலக்கானவை.


    அதேபோல அர்த்தம் (பொருள் ஈட்டுவது) என்னும் புருஷார்த்தம் தர்மத்தின் பொருட்டே இருக்கவேண்டும். காமத்தின் பொருட்டல்ல.
    அப்படி என்றால் காமம் என்ற புருஷார்த்தம் எதைக் குறிகிறது என்ற கேள்வி எழும். அதற்கு சூதர் விடை கூறுகிறார்.


    தஸ்மாத் ஐகேன மனஸா பகவான் ஸாத்வதாம் பதி:
    ச்ரோதவ்ய: கீர்த்திதவ்ய;ச த்யேய:பூஜ்ய: ச நித்யதா
    வேறு எந்த ஆசைகளும் இன்றி ஒருமனப்பட்ட எண்ணத்துடன் பக்தர்களின் பதியான பகவானை ச்ரவணம் , கீர்த்தனம் , தியானம் பூஜை இவைகளால் ஆராதிக்க வேண்டும்.


    ஆகவே எல்லா தர்மங்களும் பகவத் ப்ரீதிக்காகவே செய்யப்படவேண்டும் .


    பகவத்கதைகளில் ஆர்வம் எப்படி உண்டாகும்?
    புனிதமான இடங்களுக்குச் செல்வதால் மகான்களின் தரிசனம் கிட்டும். அவர்களின் உபதேசங்களையும் ப்ரவசனங்களையும் கேட்பதால் பகவத் கதைகளில் ஆர்வமும் பகவானிடத்தில் பக்தியும் உண்டாகும். தன் கதையைக் கேட்பவர்களின் இதயத்தில் பகவான புகுந்து அங்கு உள்ள கேட்ட வாசனையைப் போக்கி விடுகிறான்.


    பித்யதே ஹ்ருதயக்ரந்தி: ச்சித்யந்தே ஸர்வ ஸம்சயா:
    க்ஷீயந்தே அஸ்ய கர்மாணி த்ருஷ்ட ஏவ ஆத்மனி ஈச்வரே (பாக. 2.21)


    'பித்யதே ஹ்ருதயக்ரந்தி: ச்சித்யந்தே ஸர்வ ஸம்சயா:
    க்ஷீயந்தே அஸ்ய கர்மாணி தஸ்மின் த்ருஷ்டே பராவரே ,' என்பது உபநிஷத் வாக்கியம்..
    இதன் பொருள், பகவானை மனதில் கண்டுவிட்டால் இருதயத்தில் உள்ள முடிச்சுக்கள் அவிழ்கின்றன . எல்லா சந்தேகங்களும் போய் விடுகின்றன. எல்லா கர்மங்களும் நசித்து விடுகின்றன.,


    இதயத்தில் முடிச்சு என்பது இறைவனைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாமல் நம்மைத் தடுக்கும் கர்ம வாசனைகள். அதனால் பல சந்தேகங்கள்,(இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பது உள்பட) எழுகின்றன. அந்த இறைவனே நம் உள்ளத்தில் குடிகொண்டுவிட்டால் நம் கர்மங்களே நசித்துவிடுகின்றன,பிறகு ஏது சந்தேகமும் இடையூறுகளும்?


    அடுத்து அவதாரங்களைப்பற்றி கூறுகிறார் .
Working...
X