Announcement

Collapse
No announcement yet.

Hayagriva stotram in tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Hayagriva stotram in tamil

    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    வேதாந்த தேசிகரின் ஹயக்ரீவ ஸ்தோத்திரம்


    தேசிகர் பல ஸ்தோத்ரங்களை செய்து இருந்தாலும் இதுவே அவர் முதன்முதலில் செய்ததாகும். திருவஹீந்த்ரபுரத்தில் தேசிகர் கருடனிடம் இருந்து ஹயக்ரீவ மந்த்ர உபதேசம் பெற்றார். பிறகு அவர் அங்குள்ள சிறிய குன்றின்மேல் அமர்ந்து இதை ஜபம் செய்தபோது ஹயக்ரீவர் பிரத்யக்ஷமாக அப்போது தேசிகர் இந்த ஸ்தோத்திரத்தால் அவரைத் துதித்தார்.
    இப்போது இந்த ஸ்தோத்திரத்தைப் பார்க்கலாம்.


    1. ஞானாநந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதிம்
    ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே


    ஞானமாகிய ஆனந்தத்தின் உருவானவரும், நிர்மலமான ஸ்படிகம் போல் உருவம் தரித்தவரும், சகல வித்தைகளுக்கும் ஆதாரமானவருமான ஹயக்ரீவரை வணங்குவோமாக.


    ஹயக்ரீவர் அகண்டசச்சிதானந்த பிரம்ம ஸ்வரூபம்., நிர்மலமான ஸ்படிகம் நிறமற்றது. ஸ்படிகம் என்பது தூய்மையைக் குறிக்கிறது. சுத்தப்ரம்மஸ்வரூபம். ஞானானந்தமயம் என்றால் ஞானமே உருவானவர் அதனால் ஏற்படும் இன்பத்தை ஸ்படிகம் என பிரதிபலிப்பவர்.


    ஹயக்ரீவர் என்றால் குதிரை முகம் கொண்டவர் என்று பொருள். ஹயக்ரீவ வடிவத்தில் பிரம்மாவின் முன் தோன்றி வேதங்களை மறந்து துக்கித்த அவருக்கு உப்தேசம் செய்தவர்.


    பிராணிகளுள் குதிரை அறிவு மிக்கது. யுத்த காலங்களில் அதன் எஜமானன் சொர்வுர்றதை கண்டால் தானாகவே யுத்தபூமியில் இருந்து அவனை வெளிக் கொணர்ந்து விடுமாம்.
    இந்த குருபூர்ணிமா அன்று குரு உருவான ஹயக்ரீவரின் ஸ்தோத்திரத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு ஸ்லோகம் பதிவிடுகிறேன், மற்றவை என் பதிவில் தொடர்ந்து வரும்.
Working...
X