Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad bhagavatam skanda 1 adhyaya 8 in tamil - Kunti stuthi
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    குந்திஸ்துதி ஸ்ரீமத்பாகவதம்- ஸ்கந்தம் 1 அத்தியாயம் 8
    குந்தி ஸ்துதி
    நமஸ்யே புருஷம் து ஆத்யம் ஈஸ்வரம் ப்ரக்ருதே:பரம்
    அலக்ஷ்யம் ஸர்வ பூதானாம் அந்தர்பஹி: அவஸ்திதம்
    ஆத்யம் புருஷம்- ஆதிபுருஷனான
    ப்ரக்ருதே: பரம்- ப்ரக்ருதிக்கு அப்பாற்பட்ட
    ஈஸ்வரம் – இறைவனான,
    சர்வபூதானாம் – எல்லா உயிர்களுக்கும்
    அந்தர்பஹி: உள்ளும் புறமும்
    அவஸ்திதம்- நிறைந்திருப்பவனாய்
    அலக்ஷ்யம் – ஆனால் அவைகளால் அறியப்பப்டாதவனான் உன்னை நமஸ்யே – வணங்குகிறேன்


    மாயாஜவனிகாச்சன்னம் அக்ஞா அதோக்ஷஜம் அவ்யயம்
    ந லக்ஷ்யஸே மூடத்ருசா நடோ நாட்யதரோ யதா
    அக்ஞா மாயாஜவநிகாச்சன்னம் – அறியாமை என்ற மாயத் திரையினால் மறைக்கப்பட்டு
    அதோக்ஷஜம் –இந்த்ரியங்களால் அறியப்படாதவன்
    அவ்யயம்- மாறுபாடற்றவன் நீ.
    யதா- எவ்வாறு
    நாட்ட: - ஒரு நடிகன்
    நாட்யதர: நாடகத்தின் வேஷம் போடுகிறானோ அதுபோல் உள்ள நீ
    மூடத்ருசா- மூடர்களின் பார்வையில்
    ந லக்ஷ்யஸே- காணப்படுவதில்லை


    ததா பரமஹம்ஸானாம் முநீனாம் அமலாத்மனாம்
    பக்தியோகவிதானார்த்தம் கதம் பச்யாமஹே ஸ்த்ரிய:


    அமலாத்மனாம் – பரிசுத்த இதயம் உள்ள
    முநீனாம் – முனிவர்களுக்கும்
    பரமஹம்சானாம் -முற்றும் துறந்தவர்களுக்கும்
    பக்தியோகவிதானார்த்தம்- அவர் மனதில் பக்தியை தோற்றுவிப்பதற்காக
    ததா- அவ்வாறே நீ மறைந்துள்ளாய் அப்படியிருக்க
    கதம் – எவ்வாறு
    ஸ்த்ரிய: ஸ்திரீகளாகிய நாங்கள்
    பச்யாமஹே– உன்னைக் காண்பது?


    கிருஷ்ணாய வாஸுதேவாய தேவகீனந்தனாய ச
    நந்தகோபகுமாராய கோவிந்தாய நமோ நம:
    கிருஷ்ணனுக்கு வாசுதேவனுக்கு தேவகி நந்தனனுக்கு நந்தகோபனின் குமாரனுக்கு கோவிந்தனுக்கு நமஸ்காரம்.


    நம: பங்கஜநாபாய நம: பங்கஜ மாலினே
    நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே
    தாமரையை உந்தியில் உடையோனுக்கு , தாமரை மாலை அணிந்தோனுக்கு, தாமரைக்கண்ணனுக்கு , தாமரைப் பாதம் உடையோனுக்கு நமஸ்காரம்


    யதா ஹ்ருஷீகேச கலேன தேவகீ
    கம்ஸேன ருத்தா அதிசிரம் சுசார்பிதா
    விமோசிதா அஹம் ச ஸஹாத்மஜா விபோ
    த்வயைவ நாதேன முஹு: விபத்கணாத்
    ஹ்ருஷீகேச – ரிஷிகேசா
    விபோ- பிரபோ
    யதா- எவ்வாறு
    தேவகீ- தேவகி
    கலேன கம்சேன – துஷ்டனான கம்சனால்
    ருத்தா – சிறைப்படுத்தப்பட்டு
    சுசார்பிதா – துக்கமுற்று விமோசிதா- விடுவிக்கப்பட்டாளோ அதேபோல
    அஹம் ச – நானும்
    ஸஹாத்மஜா- என் பிள்ளைகளுடன்
    த்வயாஏவ நாதேன- எங்கள் ரக்ஷகனான உன்னால்
    முஹு_ அடிக்கடி
    விபத்கணாத் – ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப்பட்டோம்.


    விஷாத் மஹாக்னே: புருஷாத தர்சனாத்
    அஸத் ஸபாயா; வனவாஸக்ருச்ரத:
    ம்ருதே ம்ருதே அநேக மஹாரதாஸ்த்ரத:
    த்ரௌண்யஸ்த்ராத் ச அஸ்மா ஹரே அபிரக்ஷிதா:
    விஷாத் – விஷத்தில் இருந்தும் ( பீமனுக்கு துரியோதனன் விஷம் கொடுத்தது)
    மஹாக்னே: பெரிய நெருப்பில் இருந்தும் ( அரக்கு மாளிகை)
    புருஷாததர்சநாத் – ராக்ஷசர்களிடம் இருந்து ( ஹிடும்பன் பகாசுரன் முதலியவர்கள்)
    அஸத்சபாயா: - தீயவர்களின் கூட்டத்தில் இருந்து ( சூதாட்டம் வசஸ்த்ராபஹரணம் முதலியவை )
    வனவாஸ க்ருச்ரத: - வனவாசத்தின் கஷ்டங்களில் இருந்து ( அக்ஷயபாத்ரம் , துர்வாசர் முதலியவை)
    ம்ருதே ம்ருதே – யுத்தங்களில்
    அநேக மகாரதாஸ்தரத: - பெரும் யுத்தவீரர்களின் அஸ்திரங்களில் இருந்து
    த்ரௌண்யஸ்த்ராத்-இப்போது அச்வத்தாமாவின் ப்ரம்மாஸ்திரத்தில் இருந்து
    அஸ்மா- நாங்கள்
    ஹரே – ஹரியே உன்னால் அபிரக்ஷிதா: - காப்பாற்றப்பட்டோம்.


    விபத: ஸந்து ந: சச்வத் தத்ர தத்ர ஜகத்குரோ
    பவத:தர்சனம் யத் ஸ்யாத் அபுனர்பவதர்சனம்
    விபத: - ஆபத்துகள்
    சாஸ்வத: - எப்போதும்
    ந: எங்களுக்கு
    ஸந்து – ஏற்படட்டும்
    ஜகத்குரோ- ஜகத்குருவே
    தத்ர தத்ர – அப்போதெல்லாம்
    தவ தர்சனம் – உன்னைக் காண்பது என்பது
    யத் ஸ்யாத் – இருக்குமேயானால்.


    ஜன்மைச்வர்யஸ்ருதஸ்ரீபி: ஏதமான: மத; புமான்
    நைவ அர்ஹதி அபிதாதும் வை த்வாம் அகிஞ்சனகோசரம்


    ஜன்மைச்வர்யஸ்ருதஸ்ரீபி: -பிறப்பு செல்வம் பதவி புகழ் இவைகளால்
    ஏதமான: மதம் புமான் - மதம் கொண்ட மனம் படைத்த மனிதன்
    அகிஞ்சனகோசரம் – பக்தியத் தவிர வேறு ஒன்றும் இல்லதவரால் அறியப்படும்
    த்வாம் – உன்னை
    அபிதாதும் – உன் பெயர் சொல்லக்கூட
    ந அர்ஹதி – அருகதை அற்றவன்




    நமோ அகிஞ்சனவித்தாய நிவ்ருத்த குணவ்ருத்தயே
    ஆத்மாராமாய சாந்தாய கைவல்யபதயே நம:


    அகிஞ்சனவித்தாய – பக்தியைத்தவிர ஒன்றுமே இல்லாதவர்களின் செல்வமாக உள்ளவனும்
    நிவ்ருத்த குணவ்ருத்தயே –மூன்று குணங்களின் செய்கைக்கு அப்பாற்பட்டவனும் ஆன உனக்கு
    நம: நமஸ்காரம்
    ஆத்மாராமாய –ஆத்மானந்தனும்
    சாந்தாய – சாந்தமானவனும்
    கைவல்யபதயே – மோக்ஷகாரகனும் ஆன உனக்கு
    நம: - நமஸ்காரம்.


    மன்யே த்வாம் காலம் ஈசானம் அனாதிநிதனம் விபும்
    ஸமம் சரந்தம் சர்வத்ர பூதானாம் யன்மித: கலி:
    த்வாம்- உன்னை
    ஈசானம்- ஈசனாகவும்
    அனாதிநிதனம் – ஆதி அந்தம் இல்லாதவனாகவும்
    சர்வத்ர – எங்கும்
    ஸமம்-ஒரேமாதிரி
    சரந்தம்- சஞ்சரிப்பவனாகவும்
    பூதானாம்- உயிர்களுடைய
    யன்மித: கலி- இடையில் பேதத்தை உண்டுபண்ணும்
    காலம்- காலமாகவும்
    மன்யே –எண்ணுகிறேன்.
    காலமானது பேதத்தை உண்டுபண்ணி முடிவில் அழிக்கிறது. ( மகாபாரத யுத்தமே உதாரணம்) அதுவும் உன் செயலே என்கிறாள்.


    ந வேத கஸ்சித் பகவன் சிகீர்ஷிதம்
    தவ ஈஹமானஸ்ய ந்ருணான் விடம்பனம்
    ந யஸ்ய கஸ்சித் தயிதோSஸ்தி கர்ஹிசித்
    த்வேஷ்யஸ்ச யஸ்மின் விஷமா மதி: ந்ருணாம்


    பகவன்- பகவானே
    கஸ்சித்- எவருமே
    தவ- உன்னுடைய
    ஈஹமானஸ்ய- ஆசைகளுடன் கூடிய
    ந்ருணாம்- மனிதர்களை
    விடம்பனம் – போலவே நடிக்கும்
    சிகீர்ஷிதம் – செயல்களை
    ந வேத-அறியவில்லை அதாவது
    யஸ்ய – எவருக்கு
    கஸ்சித்- யாருமே
    தயித: - வேண்டப்பட்டவரோ
    கர்ஹிசித்- வேறு எவரும்
    த்வேஷ்ய: ச – எதிரிகளோ
    ந அஸ்தி - இல்லையோ.
    யஸ்மின்- எவரிடத்தில்
    ந்ருணாம்- மனிதர்களிடம்
    விஷமாமதி: பாரபட்சம் (இல்லையோ ) என்பதை அறிந்துகொண்டவர் யாரும் இல்லை.


    ஜன்ம கர்ம ச விச்வாத்மன் அஜஸ்ய அகர்து: ஆத்மன:
    திர்யக் ந்ரு ரிஷிஷு யாதஸ்ஸு தத் அத்யந்த விடம்பனம்


    விச்வாத்மன் – பிரபஞ்சத்தின் ஆத்மாவானவரே
    அஜஸ்ய-பிறப்பு இல்லாத
    அகர்த்து: - செயல் என்பதே இல்லாத
    ஆத்மன: ஆத்மாவான உனக்கு
    திர்யக், ந்ரு , ரிஷிஷு , யாதஸ்ஸு- மிருகம் மனிதன் ரிஷி நீர் வாழ் இனம் இப்படி ( பல அவதாரங்கள்)
    ஜனம் கர்ம – பிறப்பும் செயலும் சொல்லப்படுகிறதோ
    தத்- அது
    அத்யந்த விடம்பனம் – மிகவும் முரண்பட்டு இருக்கிறது.


    கோப்யாததே த்வயி க்ருதாகஸி தாம தாவத்
    யா தே தசாஸ்ருகலிலாஞ்சனஸம்ப்ரமாக்ஷம்
    வக்த்ரம் நிநீய பயபாவனயா ஸ்திதஸ்ய


    ஸா மாம் விமோஹயதி பீரபி யத்பிபேதி
    த்வயி- நீ
    க்ருதாகஸி- தயிர்பானையை உடைத்து விஷமம் செய்த போது
    கோபீ- யசோதை
    தாம் – உன்னைக் கட்டுவதற்காக கயிறை
    ஆததே – எடுத்து வந்த போது
    அச்ருகலிலாஞ்சனஸம்ப்ரமாக்ஷம்-கண்களில் இட்ட மை கரைந்திட கண்ணீருடன்
    வக்த்ரம் நிநீய- முகம் குனிந்துகொண்டு
    பயபாவனயா ஸ்திதஸ்ய- பயமுற்றவன் போல் நின்று
    யா தே தசா ஸா- எந்த நிலையில் நின்றாயோ அது
    மாம் –என்னை
    விமோஹயதி- ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஏன் என்றால்
    பீ:அபி யத் பிபேதி- உன்னிடம் பயம் அல்லவா பயப்படும்?


    கேசித் ஆஹு: அஜம் ஜாதம் புண்யச்லோகஸ்ய கீர்த்தயே
    யதோ: ப்ரியஸ்ய அன்வவாயே மலயஸ்ய இவ சந்தனம்


    புண்யச்லோகஸ்ய – புண்ணியம் செய்தவனும்
    ப்ரியஸ்ய – ப்ரியமானவனும் ஆனா
    யதோ: யதுவின்
    கீர்த்தயே – புகழ் ஒங்க
    அன்வவாயே – அவனுடைய குலத்தில்
    சந்தனம்- சந்தனம்
    மலயஸ்ய இவ - மலைய பர்வதத்தில் தோன்றினது போல
    அஜ: - பிறவி இல்லாத நீ
    ஜாதம் – தோன்றினாய் என்று
    கேசித் – சிலர்
    ஆஹு:- கூறுகின்றனர்.


    அபரே வசுதேவஸ்ய தேவக்யாம் யாசித: அப்யகாத்
    அஜ: த்வம் அஸ்ய க்ஷேமாய வதாய ச ஸுரத்விஷாம்
    அபரே- இன்னும் சிலர் கூறுகின்றனர்
    வசுதேவஸ்ய – வசுதேவருடையவும்
    'தேவக்யாம் – தேவகியுடையவும்
    யாசித: - வேண்டப்பட்டு'
    அஜ: த்வம் – பிறவி இல்லாத நீ'
    அஸ்ய க்ஷேமாய – அவர் க்ஷேமத்திற்காக
    ஸுரத்விஷாம் – அசுரர்களுடைய
    வதாய ச – வதத்திற்காகவும் அவதரித்தாய் என்று.


    பாராவதாரணாய அன்யே புவ: நாவ இவோததௌ
    ஸீதன்த்யா பூரிபாரேண ஜாதோ ஹ்யாத்மபுவார்தித:


    அன்யே- வேறு சிலர்
    உததௌ- சமுத்திரத்தில்
    நாவ இவ – படகு போல
    பூரிபாரேண- மிகுந்த பாரத்தால்
    ஸீதந்த்யா: - சிரமப்படுகிற
    புவ: -பூமியின்
    பாராவதரணாய- பாரத்தைக் குறைப்பதற்காக
    ஆத்மபுவா – பிரம்மாவால்
    அர்தித: -ப்ரார்த்திக்கப்பட்டு
    ஜாத: - அவதாரம் செய்தாய் என்று கூறுகின்றனர்.


    பவே அஸ்மின் க்லிச்யமானானாம் அவித்யாகாமகர்மபி:
    ச்ரவண ஸ்மாரணார்ஹாணி கரிஷ்யன் இதி கேசன
    கேசன – இன்னும் சிலர்
    அஸ்மின் பவே – இந்த சம்சாரத்தில்
    அவித்யாகாம கர்மபி: - அறியாமையினால் ஆசைவசப்பட்டு செய்யும் செயல்களால்
    க்லிச்யமாநானாம் – கஷ்டப்படுகிறவர்களுக்கு
    ச்ரவண ஸ்மாரணார்ஹாணி-ஸ்ரவணம் நாமஸ்மரணம் இவைகளை
    கரிஷ்யன் இதி - காட்டிக்கொடுக்கவே அவதாரம் செய்தாய் என்று கூறுகின்றனர்.


    ஸ்ருண்வந்தி காயந்தி க்ருணந்தி அபீக்ஷ்ணச;
    ஸ்மரந்தி நந்தந்தி தவேஹிதம் ஜனா:
    த ஏவ பச்யந்தி அசிரேண தாவகம்
    பவப்ரவாஹோபரமம் பதாம்புஜம்
    ஜனா: - மக்களில் யார் யார்
    ஸ்ருண்வந்தி – உன்னைப்பற்றி கேட்கிறார்களோ
    காயந்தி- உன்னைப் பாடுகிறார்களோ
    க்ருணந்தி அபீக்ஷ்ணச;-எப்போதும் உன் புகழ் பரப்புகிறார்களோ
    தவேஹிதம் ஸ்மரந்தி – உன் செயல்களை நினினைத்து
    நந்தந்தி – மகிழ்வடைகிறார்களோ
    தே ஏவ – அவர்கள் தான்
    அசிரேண- விரைவில்
    பவப்ரவாஹோபரமம் – சம்சாரமாகிற பிரவாகத்தை தடுக்கும்
    தாவகம் பதாம்புஜம் – உன்னுடைய பத கமலத்தை
    பச்யந்தி- பார்க்கிறார்கள்.


    அப்யத்ய ந:த்வம் ஸ்வக்ருதேஹித ப்ரபோ
    ஜிஹாஸஸி ஸ்வித் ஸுஹ்ருதோ அனுஜீவின:
    ஏஷாம் ந சான்யத் பவத: பதாம்புஜாத்
    பராயணம் ராஜஸு யோஜிதாம்ஹஸாம்
    பிரபோ- பிரபுவே
    த்வம் – நீ
    அத்ய – இப்போது
    ந:: எங்களுக்காக
    ஸ்வக்ருத ஈஹித – நீ தானகவே முன்வந்து செய்ததை எல்லாம்
    ஜிஹாஸஸி ஸ்வித் – விட்டு விட்டு செல்லப் போகிறாயா?
    ஸுஹ்ருத: - நண்பர்களான
    அனுஜீவின: உன்னையே நம்பியுள்ள
    ஏஷாம் – இவர்களுக்கு
    யோஜிதாம்ஹசாம் – விரோத மனப்பான்மையில் உள்ள
    ராஜஸு- அரசர்கள் மத்தியில்
    பவத: பதாம்புஜாத் – உன் சரண கமலங்களைத்தவிர
    ந ச அன்யத் பராயணம் – வேறு கதி இல்லை


    கே வயம் நாமரூபாப்யாம் யதுபி: ஸஹ பாண்டவா:
    பவதோ அதர்சனம் யர்ஹி ஹ்ருஷீகாணாம் இவ ஈசிது:


    பவத: அதர்சனம் யர்ஹி-உன்னுடைய தரிசனம் இல்லையேல்
    யதுபி: ஸஹ பாண்டவா: -யாதவர்களும் பாண்டவர்களாகிய
    வயம் – நாங்களும்
    கே? – யார்?
    ஹ்ருஷீகாணாம்- இந்த்ரியங்களுடைய நிலைமை
    ஈசிது: இவ- செயல்படவைக்கும் ஆத்மாவின் இன்மை போல செயலற்று விடுவோம்.


    நேயம் சோபிஷ்யதே தத்ர யதா இதாநீம் கதாதர
    த்வத்பதை: அங்கிதா பாதி ஸ்வலக்ஷணவிலக்ஷிதை:


    கதாதர- கிருஷ்ணா
    இயம் – இந்த பிரதேசம்
    இதாநீம் – இப்போது
    த்வத் பதை: உன் பாதங்களால்
    அங்கிதா பாதி - அடையாளம் செய்யப்பட்டு பிரகாசிக்கிறது
    யதா- எப்போது
    தத்ர – அங்கு
    ஸ்வலக்ஷண விலக்ஷிதை: பாதி- உன் அடையாளம் இல்லாமல் போகிறதோ
    ந சோபிஷ்யதே – அப்போது அது அழகை இழந்து விடும்.


    இமே ஜனபதா: ஸ்வ்ருத்தா: ஸுபக்வௌஷதிவீருத:
    வனாத்ரிநத்யுதன்வந்த: ஹ்யேதந்தே தவ வீக்ஷிதை:


    இமே ஜனபதா: - இந்த பிரதேசங்கள்
    ஸ்வ்ருத்தா: - செழிப்புடன்
    ஸுபக்வௌஷதிவீருத: - நன்கு வளர்ந்த மூலிகைகள் தான்யங்கள் இவையுடனும்
    வன அத்ரி நதி உதன்வந்த: ஹி- வனங்கள் மலைகள் நதிகள் கடல்கள் இவையுடனும்
    ஏதந்தே –வளர்ந்துள்ளன.


    அத விச்வேச விச்வாத்மன் விச்வமூர்த்தே ஸ்வகேஷு மே
    ஸ்நேஹபாசம் இமம் ச்சிந்தி த்ருடம் பாண்டுஷு வ்ருஷ்ணிஷு
    அத – இப்போது
    விச்வேச –உலகநாயகனாயும்
    விச்வாத்மன்- உலகத்தின் ஆத்மாவாகவும்
    விச்வமூர்த்தே – உலக வடிவாகவும் உள்ளவனே
    பாந்துஷு – பாண்டுகுலத்திலும்
    வ்ருஷ்ணிஷு – வ்ருஷ்ணிகுலத்திலும்
    ஸ்வகேஷு – உறவினர்களிடம் உள்ள
    த்ருடம்- த்ருடமான
    இமம் ஸ்நேஹபாசம் மே- இந்த என் பந்த பாசத்தை
    ச்சிந்தி-அறுப்பாயாக.


    த்வயி மே அனன்யவிஷயா மதி: மதுபதே அஸக்ருத்
    ரதிம் உத்வஹதாதத்தா கங்கைவ ஓகம் உதன்வதி


    உதன்வதி- கடலை நோக்கி
    கங்கா ஓகம் இவ – கங்கையின் பிரவாகம் போல்
    மே மதி: - என் புத்தியானது
    அனந்யவிஷயா- வேறு எதிலும் நாட்டமில்லாமல்
    அஸக்ருத்- - எப்போதும்
    ரதிம் – அன்புப்பெருக்கை
    த்வயி- உன்னிடத்தில்
    உத்வஹதாதத்தா- கொண்டு சேர்க்கட்டும்


    ஸ்ரீக்ருஷ்ண க்ருஷ்ணஸக வ்ருஷ்ணிரிஷப
    அவனித்ருக்ராஜன்யவம்ச தஹன அனபவர்க்கவீர்ய
    கோவிந்த கோத்விஜசஸுரார்த்திஹராவதார
    யோகீஸ்வர அகிலகுரோ பகவன் நமஸ்தே


    ஸ்ரீக்ருஷ்ண – ஸ்ரீ கிருஷ்ணா
    க்ருஷ்ணஸக- அர்ஜுனனின் நண்பனே
    வ்ருஷ்ணிரிஷப –யாதவகுல ஸ்ரேஷ்ட
    அவனித்ருக்ராஜன்யவம்சதஹன- உலகை வஞ்சிக்கும் அரசர் கூட்டமாகிய மூங்கில் புதருக்கு காட்டுதீ போன்றவனே
    அனபவர்க்கவீர்ய – அளவில்லாத வீர்யம் உடையவனே
    கோவிந்த- கோவிந்த
    கோத்விஜசஸுரார்த்திஹராவதார – பசுக்கள் அந்தணர்கள் தேவர்கள் இவர்களின் துன்பத்தை துடைக்க அவதாரம் செய்தவனே
    யோகீஸ்வர- யோகீச்வரா
    அகிலகுரோ – ஜகத்குருவே
    பகவன்- பகவானே
    நமஸ்தே – உமக்கு நமஸ்காரம்
Working...
X