Announcement

Collapse
No announcement yet.

ஹயக்ரீவஸ்தோத்ரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஹயக்ரீவஸ்தோத்ரம்

    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்லோகம் 2


    2.ஸ்வதஸ்ஸித்தம் சுத்தஸ்படிக மணிபூப்ரருத்பிரதிபடம்
    ஸுதாசத்க்ரீசீபி: த்யுதிபி: அவதாதத்ரிபுவனம்
    அனந்தை: த்ரய்யந்தை: அனுவிஹித ஹேஷா ஹலஹலம்
    ஹதாசேஷாவத்யம் ஹயவதனம் ஈடீமஹீ மஹ:


    ஹயக்ரீவர் ஸ்வத:ஸித்த:, அதாவது தானாகவே தோன்றியவர். எல்லா அவதாரங்களும் அப்படியே.


    பிறவி எடுத்ததாக நாம் கருதும் அவதாரங்களும் அவன் மாயையால் அப்படித் தோன்றுகின்றன. பகவானுக்கு கர்பவாசம் என்பது இல்லை.


    புருஷ ஸுக்தம் கூறுகிறது, 'அஜாயமானோ பஹுதா விஜாயதே,' பிறவியே இல்லாதவன் பலவாகத் தோன்றுகிறான். கீதையில் கண்ணன் கூறுகிறான், 'ப்ரக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்மமாயயா,' (ப.கீ. 4-3). பிரகிருதியை கைக்கொண்டு என்னுடைய மாயையால் என்னை நானே தோற்றுவிக்கிறேன்.


    ஹயக்ரீவர் சுத்தஸ்படிகபூப்ருத் பிரதிபட என்று வர்ணிக்கப்படுகிறார் . பூப்ருத் என்றால் மலை. பிரதிபட என்றால் போட்டியிடுபவரைக் குறிக்கும். சுத்தஸ்படிகத்தினால் ஆன மலைக்கு போட்டியாக இருப்பவர்.


    ஸுதா என்றால் அமுதம். ஸுதாஸத்ரீசீ என்றால் அமுதத்துடன் கூடிய, த்யுதிபி: , ஒளியால், அவதாத திருபுவனம் , மூன்று உலகமும் வெண்மையாக அதாவது தூய்மையாக பிரகாசிக்கிறது. அவர் அருள் அமுதம் போல் நிறைந்து உலகைத்தூய்மை ஆக்குகிறது.


    அனந்தை: த்ரய்யந்தை: அனுவிஹித ஹேஷா ஹலஹலம்- குதிரை முகம் கொண்ட அவருடைய ஹலஹல என்ற ஹேஷா, கனைப்பு சப்தம், த்ரய்யந்தை: , உபநிஷத்துக்களால் ( த்ரயி என்றால் வேதம் அவற்றின் அந்தம் வேதாந்தம் அதாவது உபநிஷத்) அனுவிஹித , பின்பற்றப்படுகிறது.


    ஹயக்ரீவரின் மூச்சுக்காற்றில் இருந்து பிறந்தவை வேதங்களாகும். அதனால் அவரிடம் இருந்து வரும் சப்தமே வேத கோஷம்.


    ஹத அசேஷ அவத்யம் , அவர் பக்தர்களின் குறைபாடுகளை நீக்கிவிடுகிறார் .அப்பேர்ப்பட்ட மஹ:, ஒளிஸ்வரூபமான, ஹயவதனம் – ஹயக்ரீவரை , ஈடீமஹி – வணங்குவோமாக.


    தேசிகரின் பதப்ரயோகங்கள் ஆச்சரியமானவை. அவருடைய ஸ்லோகங்களை கற்றாலே சம்ஸ்க்ருத ஞானம் வெகுவாக வளரும்.
Working...
X