Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad bhagavatam skanda 1 adhyaya 9 in tamil - Bheeshma stuthi
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 1- அத்தியாயம் 9


    இப்போது பீஷ்மரின் ஸ்துதியைப் பார்க்கலாம்.


    இதி மதி: உபகல்பிதா வித்ருஷ்ணாபகவதி ஸாத்வதபுங்கவே விபூம்னி
    ஸ்வஸுகமுபகதே க்வசித் விஹர்த்தும் ப்ரக்ருதிமுபேயுஷி யத்பவப்ரவாஹ:


    ஸாத்வதபுங்கவே-யதுகுல திலகனான
    விபூம்னி- பரமாத்மாவான
    ஸ்வசுகம் உபகதே – தன்னில் முழுமையானவனாயினும்
    கவசித் – சில நேரங்களில்
    விஹர்த்தும் – லீலையின் பொருட்டு
    ப்ரக்ருதிம் உபேயுஷி- ப்ரக்ருதி என்னும் மாயையை கைக்கொண்டு
    யத் பவப்ரவாஹ: - இந்த சிருஷ்டியை தோற்றுவிப்பவனும் ஆன
    பகவதி-பகவானிடத்தில்
    வித்ருஷ்ணா மதி: -என் ஆசையற்ற மனம்
    இதி உபகல்பிதா – ஈடுபடட்டும்


    த்ரிபுவனகமநம் தமால வர்ணம் ரவிகரகௌரவராம்பரம் ததானே
    வபுரலககுலாவ்ருதானனாப்ஜம் விஜயஸகே மதிரஸ்து மே அனவத்யா


    த்ரிபுவனகமனம்-மூவுலகையும் கவர்பவரும்,
    தமால வர்ணம் –தமால மரம் போன்று கருநீல நிறம் கொண்டவரும்
    ரவிகரகௌரவராம்பரம்- சூரியனைப்போல் ஒளிவிடும் பீதாம்பரத்தை தரித்தவரும்
    வபுரலககுலாவ்ருதானனாப்ஜம்-சுருட்டை மயிரால் சூழப்பட்ட முகாரவிந்தத்தை உடைய உருவம் கொண்டவரும்
    விஜயஸகே- அர்ஜுனனின் நண்பரும் ஆன கிருஷ்ணரிடத்தில்
    மே மதி: என் புத்தியானது
    அனவத்யா-நிர்மலமாக
    அஸ்து- இருக்கட்டும்


    யுதி துரகரஜோவிதூம்ரவிஷ்வக் கசலுலிதஸ்ரமவார்யலம்க்ருதாஸ்யே
    மம நிசித சரை: விபித்யமானத்வசி விலஸத்கவசே அஸ்து
    கிருஷ்ண ஆத்மா


    யுதி- யுத்தத்தில்
    துரகரஜோ விதூம்ர விஷ்வக் கச- குதிரைகளின் குழம்பில் இருந்து எழுந்த தூசிநிறைந்த கேசமுடைய
    ஸ்ரமவாரி அலம்க்ருத ஆஸ்யே –வியர்வைத்துளிகள் நிரம்பிய முகத்துடன்
    மம நிசித சரை: -நான் விட்ட கூரிய அம்புகளால்
    விபித்யமானத்வசி- துளைக்கப்பட்ட சருமத்தின் மேல்
    விலசத்கவசே – ஒளிவிடும் கவசத்துடன் கூடிய
    க்ருஷ்ணே- கிருஷ்ணனிடத்தில்
    ஆத்மா அஸ்து – என் உயிர் நிலைக்கட்டும்


    ஸபதி ஸகிவசோ நிசம்ய மத்யே நிஜபரயோ: பலயோ: ரதம் நிவேச்ய
    ஸ்திதவதி பரசை(सैநிகாயுரக்ஷ்ணா ஹ்ருதவதி பார்த்தஸகே ரதிர்மமாஸ்த


    ஸகிவசோ-தோழனின் வார்த்தையைக்
    நிசம்ய- கேட்டு
    நிஜபரயோ: பலயோ:- தமது சேனைக்கும் எதிரி சேனைக்கும்
    மத்யே – நடுவில்
    ரதம் – தேரை
    ஸபதி- விரைவில்
    நிவேச்ய – நிறுத்தி
    ஸ்திதவதி – நின்று
    பரசைநிகாயு: - எதிரிப் படையில் உள்ளவர்களின் ஆயுளை
    அக்ஷ்ணா – பார்வையாலேயே
    ஹ்ருதவதி- அபகரித்த
    பார்த்த ஸகே – அர்ஜுனனின் நண்பனான பார்த்த சாரதியினிடத்தில்
    ரதி மம –எனக்கு பக்தி
    ஆஸ்த- இருக்கட்டும்


    வ்யவஹிதப்ருதனாமுகம் நிரீக்ஷ்ய ஸ்வஜனவதாத் விமுகஸ்ய
    தோஷபுத்த்யா
    குமதிம் அஹரத் ஆத்மவித்யயா யஸ்சரண ரதி: பரமஸ்ய தஸ்ய மே அஸ்து


    வ்யவஹிதப்ருதனாமுகம் – அணிவகுத்த சேனையை
    நிரீக்ஷ்ய – பார்த்து
    ஸ்வஜனவதாத் – தன் பந்துக்களைக் கொல்வது
    தோஷபுத்த்யா – பாபம் என்ற எண்ணத்தால்
    விமுகஸ்ய – போரிடுவதில் வெறுப்புற்ற அர்ஜுனனின்
    குமதிம்- அறியாமையை
    ஆத்மவித்யயா – ஆத்மஞானத்தால்
    ய: அஹரத்- எவர் அகற்றினாரோ
    பரமஸ்ய தஸ்ய- அந்த பரமாத்மாவின்
    சரணரதி: - சரணங்களில் பற்று
    மே அஸ்து-எனக்கு உண்டாகட்டும்


    ஸ்வநிகமம் அபஹாய மத்ப்ரதிக்ஞாம் ருதம் அதிகர்த்தும் அவப்லுதோ ரதஸ்ய
    த்ருதரதசரண: அப்யயாத்சலத்கு: ஹரிரிவ ஹந்தும் இபம் கதோத்தரீய:


    மத்பிரதிக்ஞாம் – கருஷ்ணனை ஆயுதம் எடுக்க வைக்கிறேன் என்ற என் பிரதிக்ஞையை
    ருதம் அதிகர்த்தும் – மெய்யாக்குவதற்காக
    ஸ்வநிகமம்- ஆயுதம் எடுக்கமாட்டேன் என்ற தன் பிரதிக்ஞையை
    அபஹாய – கைவிட்டு
    ரதஸ்ய- தேரிலிருந்து
    அவப்லுத: - கீழே குதித்து
    இபம் ஹந்தும்- ஒரு யானையைக் கொல்லவரும்
    ஹரிரிவ- சிங்கத்தைப்போன்று
    கதோத்த்ரீய: - தன் மேலாடை பறக்க
    த்ருதரதசரண: - தேர்ச்சக்கரத்தை கையில் எடுத்துக்கொண்டு
    சலத்கு: - பூமி நடுங்க
    அப்யயாத்:- விரைவாக ஓடி வந்தாரே !


    சிதவிசிக ஹதோ விசீர்ண்தம்ச: க்ஷதஜ பரிப்லுத ஆததாயின: மே
    பிரஸபம் அபிஸஸார மத்வதார்த்தம் ஸ பவது மே கதிர்மஹான் முகுந்த:


    ஆததாயின: -கொடிய எதிரி ஆகிய
    மே – என்னுடைய
    சிதவிசிகஹத: சரங்களால் அடிக்கப்பட்டு
    விசீர்ணதம்ச: - துளைக்கப்பட்ட கவசத்துடன்
    க்ஷதஜபரிப்லுத:- உதிரம் பெருக
    மத்வதார்த்தம் – என்னைக் கொல்லும் பொருட்டு
    பிரசபம் – விரைவாக
    அபிஸஸார- ஓடி வந்தாரே
    ஸ: முகுந்த: -அந்த முகுந்தன்
    மே மஹான் கதி: என் மேலான கதியாக
    பவது- ஆகட்டும்


    விஜயரதகுடும்ப ஆததோத்ரே த்ருதஹயரச்மினி தத் ஸ்ரியேக்ஷணாயே
    பகவதி ரதிரஸ்து மே முமூர்ஷோ: யமிஹ நிரீக்ஷ்ய ஹதா: கதா: ஸரூபம்


    விஜயரதகுடும்ப- அர்ஜுனனின் தேரில் வாசம் செய்யும்
    ஆததோத்ரே- சாட்டையை கையில் பிடித்துள்ள
    த்ருதஹயரச்மினி- குதிரைக்கக்டிவாளத்தை இன்னொரு கையில் பிடித்துள்ள
    தத் ஸ்ரியேக்ஷணாயே- பார்க்க அழகியவராயுள்ள
    யம்- எவரை
    இஹ- இங்கு
    நிரீக்ஷ்ய –பார்த்து
    ஹதா: உயிர் விட்டவர்கள்
    ஸரூபம் – சாரூப்ய முக்தியை
    கதா: -அடைந்தார்களோ
    பகவதி- அந்த பகவானிடத்தில்
    முமூர்ஷோ:- இறக்கும் தருவாயிலுள்ள
    மே- எனக்கு
    ரதி: அஸ்து- பக்தி இருக்கட்டும்


    லலிதகதிவிலாஸ வல்குஹாஸ ப்ரணயநிரீக்ஷண கல்பிதோருமானா:
    க்ருதமனுக்ருதவத்ய: உன்மதாந்தா: ப்ரகருதிமகமன் கில யஸ்ய கோபவத்வ:


    கோபவத்வ: - கோபியர்
    லலிதகதிவிலாஸ – அழகிய நடை
    வல்குஹாஸ – மலர்ந்த
    ப்ரணயநிரீக்ஷண சிரிப்பு- காதல் பார்வை
    கல்பிதோருமானா: - இவைகளால் ஈர்க்கப்பட்டு
    யஸ்ய – எவருடைய
    க்ருதமனுக்ருதவத்ய:-செயல்களை பின்ப்றி
    : உன்மதாந்தா: - காதல் வயப்பட்டவர்களாக
    ப்ரகருதிமகமன் கில – அவருடன் இரண்டறக் கலந்தார்களோ


    முனிகணந்ருபவர்யஸம்குலே அந்த:ஸதஸி யுதிஷ்டிரராஜசூய ஏஷாம்
    அர்ஹணம் உபபேத ஈக்ஷணீயோ மம த்ருசிகோசர ஏஷ ஆவிராத்மா


    முனிகணந்ருபவர்யஸம்குலே – முனிவர்கள் அரசர்கள் கூட்டத்தில்
    அந்த:ஸதஸி – சபையின் நடுவே
    யுதிஷ்டிரராஜசூயே – யுதிஷ்டிரரின் ராஜசூயயாகத்தின்போது
    ஏஷாம் அர்ஹணம்- அவர்கள் எல்லோருடைய பூஜையை
    உபபேத – ஏற்றுக்கொண்ட
    ஈக்ஷணீய: - தரிசனத்திற்குகந்த
    ஆவிராத்மா- ஆத்மாவின் ஆத்மாவான அவர்
    மமத்ருசிகோசர: - என் கண்முன் நிற்கிறார்


    தம் இமம் அஹம் அஜம் சரீரபாஜாம் ஹ்ருதி ஹ்ருதி
    திஷ்டிதம் ஆத்மகல்பிதானாம்
    பிரதித்ருசம் இவ நைகதாஅர்கம் ஏகம்
    ஸமதிகதோ அஸ்மி விதூதபேத மோஹ:
    .
    அஜம்- பிறவியற்றவராய்
    ஆத்மகல்பிதானாம் – தான் சிருஷ்டித்த
    சரீரபாஜாம் - சரீரம் உள்ளவர்களின்
    ஹ்ருதி ஹ்ருதி- இதயம் தோறும்
    திஷ்டிதம் – உறைந்து
    அர்கம் ஏகம் – ஒரே சூரியன்
    ப்ரதித்ருசம் – ஒவ்வொரு கண்ணிலும்
    ந ஏகதா இவ-பலவாகத் தோன்றுவது போல உள்ள
    தம் இமம் இந்த பகவானை
    அஹம்- நான்
    விதூதபேத மோஹ: - வேற்றுமை மயக்கம் நீங்கியவனாக
    ஸமதிகதோ அஸ்மி-நன்கு அடைந்தவன் ஆகிறேன்


    இவ்விதம் கூறிய பீஷ்மர் க்ருஷ்ணனிடம் தன்னை ஒடுக்கி மூச்சை நிறுத்தி பிரம்மத்தில் கலந்தார்.
Working...
X