Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 2- அத்தியாயம் 4
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    அடுத்து பரீக்ஷித் சுகரை வினவினார்.
    1.பகவான் தன் மாயையின் சக்தியால் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்தார்?
    2. ஒருவரான பகவான் எவ்வாறு தன் லீலையால் பலவாகத் தோன்றினார்?
    3. எவ்வாறு பல அவதாரங்களை எடுத்தார்?


    சுகர் அதற்கு பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன் பகவானை பலவாறு
    துதித்தார்.


    நம; பரஸ்மை புருஷாய பூயசே ஸதுத்பவ ஸ்தான நிரோதலீலயா
    க்ருஹீதசக்தித்ரிதயாய தேஹினாம் அந்தர்பவாய அனுபலக்ஷ்யவர்த்மனே


    தன் லீலையால் மூன்றுவிதமான சக்தியைக்கொண்டு சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரம் இவற்றை செய்பவரும், எல்லா தேகத்தின் உள்ளும் அந்தர்யாமியாக இருப்பவரும், காண முடியாத செய்கை உடையவரும் ஆன அந்த பரம புருஷனுக்கு நமஸ்காரம்.


    பூயோ நம: ஸத்வ்ருஜினச்சிதே அஸதாம் அஸம்பவாய அகிலஸத்வமூர்த்தயே
    பும்ஸாம் புன: பாரமஹம்ஸ்ய ஆச்ரமே வ்யவஸ்திதானாம் அனும்ருக்யதாசுஷே


    நல்லோர்களின் பாபத்தை போக்குகின்றவரும், அல்லோர்களை சிக்ஷிக்கிறவரும், பல திவ்ய ரூபங்களை கொண்டவரும் , முற்றும் துறந்த முனிவருக்கு அருள் செய்பவரும் ஆனவரை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.


    யத்கீர்த்தனம் யத்ஸ்மரணம் யதீக்ஷணம் யத்வந்தனம் யத்ச்ரவணம் யதர்ஹணம்
    லோகஸ்ய ஸத்யோ விதுநோதி கல்மஷம் தஸ்மை ஸுபத்ரஸ்ரவசே நமோநம:


    யாருடைய கீர்த்தனம் , ஸ்மரணம் , தரிசனம், வந்தனம் செய்தல், ஸ்ரவணம் , பூஜை இவை உலகத்தில் உடனுக்குடனே பாபங்களை அழிக்கிறதோ அந்த பரமமங்கள கீர்த்தியுடைய பகவானுக்கு நமஸ்காரம்.


    தபஸ்வின: தானபரா: யசஸ்வின:மனஸ்வின:மந்த்ரவித: ஸுமங்களா:
    க்ஷேமம் ந விந்தந்தி வினா யதர்பணம் தஸ்மை ஸுபத்ரச்ரவசே நமோ நம:


    தபஸ்விகள், வள்ளல்கள் , கீர்த்தியுடையோர் , யோகிகள், மந்த்ரம் அறிந்தவர்கள், மங்களமான சீலத்தை உடையோர், முதலியோர் யாருக்கு கர்மங்களை அர்ப்பணிக்காமல் முக்தியடைய முடியாதோ அந்த மங்களமான கீர்த்தியுடைய பகவானுக்கு நமஸ்காரம்.


    ஸ்ரீய:பதி:யக்ஞபதி: பிரஜாபதி: தியாம் பதி: லோகபதி: தராபதி:
    பதிர்கதிஸ்சாந்தகவ்ருஷ்ணிஸாத்வதாம் ப்ரஸீததாம் மே பகவான்
    ஸதாம் பதி:


    ஸ்ரீய;பதியும், யக்ஞத்தின் பலனை கொடுப்பவரும், எல்லா உயிர்களுக்கும் அதிபரும், ஸகல லோகத்திற்கும் பூமிக்கும் அதிபரும் , அந்தக வருஷ்ணி ஸாத்வத குலங்களின் ரக்ஷகராக கிருஷ்ணாவதாரம் செய்தவரோ , நல்ல ஹ்ருதயம் படைத்தவரின் கதியும் ஆன பகவான் என்னிடத்தில் கருணை புரியட்டும்.


    யத்ங்க்ர்யனுத்யானஸமாதிதௌதயா தியானுபச்யந்திஹி தத்வம் ஆத்மன:
    வதந்தி சைதத் கவயோ யதாருசம் ஸமே முகுந்தோ பகவான் ப்ரஸீததாம்


    யாருடைய பாதத்தை தியானம் செய்வதன் மூலம் தெளிவுற்ற மதியினால் ஆத்ம ஞானத்தை அடைந்து ஞானிகள் அதை தம் திறமைக்கேற்ப உபதேசிக்கின்றார்களோ அந்த முகுந்தன் என்னிடத்தில் ப்ரீதி அடையட்டும்.


    ப்ரசோதிதா யேன புரா ஸரஸ்வதீ விதன்வதாஜஸ்ய ஸதீம்ஸ்ம்ருதிம் ஹ்ருதி
    ஸ்வலக்ஷணா ப்ராதுரபூத் கிலாஸ்யத: ஸ மே ரிஷீணாம் ரிஷப: ப்ரஸீததாம்


    எவருடைய ஆக்ஞையால் வேத ஸ்வரூபமான சரஸ்வதி பிரம்மாவினுடைய முகத்தில் ஆவிர்பவித்து ஸ்ருஷ்டி செய்யும்படி தூண்டினாளோ அந்த ரிஷிகளுக்கு ரிஷியான பகவான் எனக்கு அருளட்டும்
    .
    பூதைர்மஹத்பிர்ய இமா: புரோ விபு: நிர்மாய சேதே
    யதமூஷு பூருஷ:
    புங்க்தே குணான் ஷோடசஷோடசாத்மக: ஸோஅலங்க்ருஷீஷ்ட
    பகவான் வசாம்ஸி மே


    பஞ்சபூதங்களால் ஆன இந்த உலகத்தை நிர்மாணித்து அதனுள் புகுந்து அந்தர்யாமியாய் பதினாறு குணங்களையும் செயல்களையும் நிர்வஹிக்கும் அந்த பகவான் என் வாக்கில் எழுந்தருளட்டும்.


    ( பஞ்ச பூதங்கள் பஞ்ச கர்மேந்த்ரியங்கள் பஞ்ச ஞானேந்த்ரியங்கள் , அந்த;கரணம் ஆக பதினாறு. அவைகளின் குணங்கள் , செயல்கள்.)


    நமஸ்தஸ்மை பகவதே வாஸுதேவாய வேதசே
    பபுர் ஞானமயம் சௌம்யா யன்முகாம்புருஹாஸவம்


    எவர் முகத்தாமரையிலிரிந்து பெருகிய அம்ருதத்தை பக்தர்கள் பருகினார்களோ அந்த வேத வியாசரை நமஸ்கரிக்கிறேன்.,


    இவ்வாறு துதி செய்த பின்னர் சுகர் மன்னரிடம் கூறினார்.


    ஹரியானவர் தனக்கு எதை நேரில் உபதேசித்தாரோ அதை ஸ்வாயம்புவான பிரம்மா தன்னை நாடி வந்து வினவிய நாரதருக்கு உபதேசித்தார்.


    அடுத்து .பகவான் தன் மாயையின் சக்தியால் எவ்வாறு இந்த பிரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்தார்? என்ற பரீட்சித்தின் கேள்விக்கு பதில் கூறப்படுகிறது.
Working...
X