Announcement

Collapse
No announcement yet.

Lalit sahasranama

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Lalit sahasranama

    Lalit sahasranama
    ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் J.K. SIVAN


    2 திருமீயச்சூர் லலிதாம்பா
    திருவாரூர் நன்னிலம் தாலுக்கா சென்றால் பேரளம் என்பது எல்லோருக்கும் தெரிந்த பெயர். அதற்கு மேற்கே ஒன்றரை கி.மீ. தூரத்தில் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது திருமீயச்சூர். அங்கே தான் அற்புதமான ஸ்ரீ லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி சிவ ஆலயம் உள்ளது. சிவனுக்கு சகல புவனேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. செம்பியன் மா தேவி புனருத்தாரணம் செய்த கற்றளி கோவில்களில் இதுவும் ஒன்று. ஐந்து நிலை கம்பீரமான ராஜகோபுரம். ஐந்தடி உயரத்தில் நேரே நிற்பது போல் ஸ்ரீ சக்ரத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறாள் ஸ்ரீ லலிதாம்பா. வலது காலை மடக்கி ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நேர்த்தி எழுத்தில் சொல்லமுடியாது. இடது கால் சுகாசன நிலையில் காண்கிறது. மனோன்மணி ஸ்வரூப அம்பாள். சாந்தநாயகி.


    காஸ்யப ரிஷிக்கு ரெண்டு மனைவிகள். வினதை கருடன் தாயார். கர்த்ரு நாக மாதா. ஏதோ ஒரு போட்டி அவர்களுக்குள் அதில் வினதை ஏமாற்றப்பட்டு கர்த்தருவின் அடிமையாகிறாள். விஸ்தாரமாக எனது ஐந்தாம் வேதம் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.


    அந்த இருவருக்குமே புத்ரபாக்யத்திற்காக வந்த ஊர் திருமீயச்சூர். சூரியன் பாப விமோசனத்துக்கு வழிபட்ட ஸ்தலம்.


    இந்த ஆலயத்தின் சிற்ப நேர்த்திக்கு ஒரு உதாரணம் ஒரு அழகான சிலை. சிவன் பார்வதியின் கன்னத்தை ஏந்தி கோபமாக இருப்பவளை சமாதானப் படுத்துவது போல் ஒரு சிற்பம். இன்றைக்கும் அந்த சிலையை ஒரு கோணத்தில் பார்த்தால் கோபமாக இருப்பதும் மற்றொரு கோணத்தில் இருந்து பார்த்தால் வெட்கத்தோடு நாணுவது தெரியும். எப்படி ஒரு முகத்தில் இரு உணர்ச்சிகளை சிற்பி வடித்தான்? இதல்லவோ உலக அதிசயம். எங்கோ ஒரு முஸ்லீம் ராஜா தனது பல மனைவிகளில் ஒருவள் இறந்தபிறகு எழுப்பிய பளிங்கு கல்லறை நினைவிடமா???


    அகஸ்தியர் இங்கே லலிதா நவரத்தினமாலை பாடி லலிதாவை போற்றியிருக்கிறார். சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற சிவஸ்தலம்.


    இங்கு சண்டீஸ்வரர்க்கு நான்கு சிரங்கள் .நவகிரஹ சந்நிதி கிடையாது. பன்னிரண்டு ல் ராசிக்கு பன்னிரண்டு நாகங்கள்.கர்த்ரு வழிபட்ட இடமல்லவா.


    லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பாகம்பிரியாத ஆதி பரம்பொருள். சிவசக்தி. அவளை ஆயிரம் பெயர்களில் போற்றுவது தான் லலிதா சஹஸ்ரநாமம். பாராயணம் செய்தவர்கள் பெறும் பலனை பட்டியல் போட முடியாது. சகல தோஷ நிவாரணி. லலிதாவை வேண்டினால் சகல தெய்வங்களையும் வழிபட்ட பலன். சிவனுக்கே சகல புவன ஈஸ்வரன் என்றுதானே இங்கே பெயர். இனி மகா சக்திவாய்ந்த ஸ்ரீ லலிதாவின் ஆயிர நாமங்களை அறிவோம்:


    ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்


    ஸ்ரீ ,மஹா திரிபுரசுந்தரி, உனது ஸ்ரீ லலிதா யந்த்ரம் எனும் சக்ரமஹிமை தியானம் செய்பவர்களுக்கு உலகறிந்த உண்மை ஆதி சங்கரர் சௌந்தர்ய லஹரியில் எல்லையில்லாமல் இதை விவரிக்கிறார்.


    லலிதா த்ரிசதி எனும் முன்னூறு நாமங்களும் ,லலிதா சஹஸ்ரநாமம் எனும் ஆயிர நாமங்களை ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு எடுத்துச் சொல்வது போல் அமைந்தவை.


    सिन्दूरारुण विग्रहां त्रिनयनां माणिक्यमौलि स्फुरत्
    तारा नायक शेखरां स्मितमुखी मापीन वक्षोरुहाम् ।वक्षोरुहाम्
    पाणिभ्यामलिपूर्ण रत्न चषकं रक्तोत्पलं बिभ्रतीं
    सौम्यां रत्न घटस्थ रक्तचरणां ध्यायेत् परामम्बिकाम् ध्यायेत् ॥परामम्बिकाम्


    Sindhuraruna vigraham trinayanam manikya mouli spurath
    Thara Nayaga sekaram smitha mukhi mapina vakshoruham,
    Panibhayam alipoorna ratna chashakam rakthothpalam vibhrathim,
    Soumyam ratna gatastha raktha charanam, dhyayeth paramambikam.


    ஸிந்தூராருணவிக்ரஹாம்
    த்ரிநயனாம் மாணிக்யமௌலிஸ்புரத்
    தாராநாயக ஷேகராம்
    ஸ்மிதமுகீமாபீனவக்ஷோருஹாம் |
    பாணிப்யா மலிபூர்ணரத்னசஷகம்
    ரக்தோத்பலம் பிப்ரதீம்
    ஸௌம்யாம் ரத்னகடஸ்த ரக்தசரணாம்
    த்யாயேத் பராமம்பிகாம் ||


    தேவர்கள் பண்டாசுரனின் கொடுமைகளால் அவதியுற்று பார்வதியை வேண்டுகிறார்கள். அவள் அக்னியில் உதயமாகி அணிமா ,மஹிமா முதலான சக்திகள் உருவம் பெற்று, ப்ராஹ்மி,கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, மஹேந்திரி ,சாமுண்டி, மஹாலக்ஷ்மி என பலவாகிறாள். தேவர்கள் குறை தவிர்க்கிறாள். பண்டாசுரன் பாசுபதாஸ்திரத்தால் வதம் செய்யப்படுகிறான் என்கிறது புராணம்.


    ''யோகிகள், முனிவர்கள் ரிஷிகள் ஏன் காவி வஸ்திரம் அணிகிறார்கள்? அது ஸ்ரீ லலிதாம்பிகையின் மேனியின் நிறம். சர்வ சக்தி வாய்ந்ததல்லவா? சிவனோடு ஐக்யமானவள் முக்கண்ணியாக காட்சியளிப்பதில் என்ன ஆச்சர்யம்? நவரத்ன மகுடம் தரித்தவள். பிறைச்சந்திரன் சூடியவள். சிவை அல்லவா? சதாகாலமும் அனைத்து உள்ளங்களையும் காந்தமென கவரும் புன்னகை முகத்தாள் . பெண்மையின் இலக்கணம். சிவந்த மலர்களை ஏந்திய கரமுடையாள் . சாந்த ஸ்வரூபி; கருணைக்கடல். சிவந்த பாதங்களை நவரத்ன பீடத்தில் இருத்தி தரிசனம் தருபவள். ஸ்ரீ லலிதா உனக்கு நமஸ்காரம் தேவி.


    Arunam Karuna Tarangitaksim Dhrta Pasankusa Puspa banacapam
    Animadibhiravrtam Mayukhairahamityeva Vibhavaye bhavanim


    அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம்
    த்ருதபாஷாங்குஷ புஷ்பபாணசாபாம் |
    அணிமாதிபி ராவ்ருதாம் மயூகை:
    அஹமித்யேவ விபாவயே பவாநீம் ||


    உன்னை நினைக்கையில் அம்பா பவாநீ , உன் உருவம் உதய சூரியனின் தக தக வென ஜொலிக்கும் பொன்வண்ணமாக அல்லவோ தோன்றுகிறது. கண்களா கருணை நிறைந்த கடலா? காருண்ய சாகரம் இதுதானா? அட உன் வில் உன்னைப்போல் கரும்பால் ஆன 'இனிய' தண்டனை வழங்கும் ஆயுதமா? மலர்கள் தான் கூரான அம்புகளா? பாச அங்குசம் தரித்தவளே . புண்ய புருஷர்கள் பக்தர்களாக புடை சூழ அருள்பவளே ''எல்லாம் நான் '' என்பது நீ தானோ?
Working...
X