Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம் 2. அத்தியாயம் 7
    அத்தியாயம் 7
    இந்த அத்தியாயத்தில் பிரம்மா பாகவதத்தை சுருக்கமாகக் கூறி பகவானின் அவதாரங்களைப் பற்றி கூறுகிறார்.
    1. வராஹாவதாரம்
    ஹிரண்யாக்ஷன் சமுத்திரத்தில் மறைத்த பூமியை வெளிக்கொணர்ந்து அவனை வதைத்தது வராஹாவதாரம். வராஹன் யக்ஞபுருஷன் என்று அறிகிறோம். இது வராஹாவதாரத்தைப் பற்றிய அத்தியாயத்தில் விரிவாக சொல்லப்படுகிறது.
    2.சுஜன்யர்
    ருசி பிரஜாபதிக்கும் ஆகூதிக்கும் ஜனித்த அவதாரம். தக்ஷிணாவை மணந்து சுயாமர் என்ற இரு தேவரை புதல்வராக பெற்றார். மூவுலகங்களின் துன்பங்களை நீக்கியதால் ஹரி என்றும் பெயர் கொண்டார். ஆர்த்திம்(கஷ்டங்களை) ஹரதி (போக்குவதால்) இதி ஹரி:
    .3கபிலர்
    கர்தம பிரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் பிறந்தவர் கபிலர்.
    இந்த அவதாரம் பாகவதத்தில் விரிவாக பின்னர் கூறப்பட்டுள்ளது.
    4.தத்தாத்ரேயர் –புத்திரபாக்கியத்தை வேண்டிய அத்ரி முனிவருக்கு தன்னையே புத்திரனாக தந்ததால் தத்தாத்ரேயன் என்ற பெயர். தத்த: ஸ: ஆத்ரேய: -தன்னையே அத்ரியின் புதல்வனாக(ஆத்ரேயனாக) ஆக்கிக்கொண்டவன்
    5.குமாரர்- பிரம்மாவின் மனதில் இருந்து இடையறாத தவத்தினால் உதித்த சனக சனந்தன சனாதன சனத்குமாரர்கள், முந்தைய கல்பத்தில் பிரளயத்தினால் நசித்த ஞானத்தை உலகிற்கு அளித்த அவதாரம்.
    6. நர நாராயணர்கள்
    தக்ஷப்ரஜாப்தியின் மகளான மூர்த்திக்கும் . தர்ம ப்ரஜாபதிக்கும் பிறந்த இரட்டையர்கள். இவர்களின் சரிதம் பாகவதத்தில் பின்னர் விவரமாக வரும்.
    7. ப்ருது.
    துஷ்ட அரசனான வேனனின் அவயவங்களில் இருந்து தோன்றி அவனை நரகத்தில் புகாமல் காப்பாற்றியவர். ஆதலால் புத்திரன் என்னும் சொல்லுக்குப் பாத்திரமானவர். பசு வடிவத்தில் ஓடிய பூமியைக் கறந்து எல்லா இயற்கைச் செல்வங்களையும் வெளிக்கொணர்ந்தவர். அதனால் பூமிக்கு ப்ருத்வி என்ற பெயர் ஏற்பட்டது. இதுவும் பின்னால் விவரமாகக் கூறப்பட்டுள்ளது.
    8.ரிஷபர் நாபிக்கு சுதேவியினிடத்தில் பிறந்தவர். உலகைத்துறந்து பரம்ஹம்ஸராக ஆனவர். விரிவான சரித்திரத்தை பாகவதத்தில் காணலாம்.
    9. ஹயக்ரீவர்
    பிரம்மா செய்த ஸத்ர யாகத்தில் தோன்றி யக்ஞஸ்வரூபமானவர். குதிரை முகம் கொண்டு தங்க மயமான சரீரத்துடன் , வேதமே சுவாசமாக,எல்லா தேவதைகளையும் தன்னுள் கொண்டவர்.ஞான்ச்வரூபம்,
    10.மத்ஸ்யாவதாரம்
    நன்கு தெரிந்த பத்து அவதாரங்களில் ஒன்று, விரிவாகப் பின்னால் காணலம்..
    11.கூர்மம்
    ஆமையாகி மாந்தர் மலையை சுமந்தவர் . மலையைக் கடையும்போது சுகமாக இருந்ததால் ஆனந்தமாக நித்திரை கொண்டவர். அம்ருதமதனம் மற்றும் கூர்மாவதாரம் பின்னர் வரும்.
    12.நரசிம்மர்
    சொல்லுக்கடங்கா இந்த அவதாரத்தைப்பற்றி விரிவாக பின்னர் கூறப்படும்.
    13.ஹரிஸம்ஜனகர்
    ஆதிமூலமே என்று அலறிய யானையைக் காக்க கருடன் மேல் வந்தவர். இதையும் பின்னர் விரிவாகக் காணலாம்.
    14.வாமனாவதாரம்
    அதிதியின் கடைசி புத்திரான வந்து மற்ற புத்திரர்களைக் காட்டிலும் வடிவிலும் மஹிமையிலும் மிக உயர்ந்து பலிக்கு அருளியவர். வாமனாவதாரம் இரு அத்தியாயங்களில் கூறப்பட்டுள்ளது .
    15. ஹம்சாதாரம்.
    ஹம்சமாக வந்து முனிவர்களுக்கு யோகம், ஞானம், ஆத்மதத்வம், பாகவத தர்மம் முதலியவைகளை உபதேசித்தவர்.
    16.தன்வந்தரி
    தீர்க்கமுடியாத் நோய்வாய்ப்பட்டவரும் இந்த நாமத்தை உச்சரித்தாலே நலம் பெறுவார். ஆயுர்வேதம் என்ற வேதப்பகுதியை அசுரர் கவர்ந்து செல்ல அதை மீட்டு உலகுக்களித்தவர் .
    17.பரசுராமர்
    ஜமதக்னியின் புதல்வராகப் பிறந்து அதர்ம வழியில் சென்ற க்ஷத்ரியர்களை 21 முறை வெறுத்தவர். பின்னர் ராமனை சந்தித்து தன் அவதார சக்தியை முடித்துக்கொண்டவர். .
    18.ராமாவதாரம்
    பரசுராம ராம அவதாரங்கள் பாக்வதத்தில் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. .
    19.கிருஷ்ணாவதாரம்.
    தன்னில் ஒருபகுதியான பலராமனுடன் வாசுதேவனாக அவதரித்தவர். இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணாவதாரத்தைப் பற்றி மட்டுமே பத்து ஸ்லோகங்கள். இதில் கிருஷ்ணாவதாரம் முழுதும் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. பாகவதத்தில் கிருஷ்ணாவதாரத்தை வர்ணிக்கும் தசம ஸ்கந்தம் மற்ற எல்லா ஸ்கந்தங்களை விட மிகப்பெரியது.
    20.வியாசர்
    வேதங்களை அறிய முடியாமல் மக்கள் அறிவுக் குறைவினாலும் ஆயுள் குறைவினாலும் ஆகியதைக் கண்டு வியாசர் உருவில் வேதங்களைப பிரித்து யாவரும் பயனடையுமாறு செய்தார்.
    21.புத்தர்
    கலியுகத்தில் வேதமார்கத்தை சரிவர பின்பற்றாமல் மாறுபட்ட வழிகளில் செல்வதைக்கண்டு அவர்கள் மனதை மாயையினால் கவர்ந்து வேதங்களை அதர்ம மார்கத்தில் உபயோகிக்காமல் செய்தவர்.
    22.கல்கி
    கலி முற்றி வேதம் அழிந்து போக கூடிய நிலையில் செய்யப்போகும் அவதாரம்.
    இந்த 23 அவதாரங்களுடன் மோகினி அவதாரமும் சேர்ந்து இருபத்து நான்காக ஸ்கந்தம் 1 அத்தியாயம் 3 இல் கூறப்பட்டுள்ளது.


    .இதைத்தவிர பகவான் , பிரம்மா, ரிஷிகள், ப்ரஜாபதிகள் மனுக்கள் இவர்கள ரூபத்தில் அவதரிக்கிறார். உண்மையில் இந்த பிரபஞ்சம் முழுதும் அவர் அவதாரங்களே. கீதையில் அவரே சொன்னது போல , "நாந்தோஸ்தி மம திவ்யானாம் விபூதீனாம், " ( ப.கீ. 1௦.40) அவர் எடுத்த ரூபங்கள் கணக்கிலடங்காது.,


    ஆயிரம் நாவு படைத்த ஆதிசேஷனாலும் அவர் மஹிமையை வர்ணிக்க இயலாது என்று கூறிய பிரம்மா இது பகவானாலேயே உபதேசிக்கப்பட்டது என்றும் கூறி நாரதரை உலகில் பக்தியை பரப்பும் பொருட்டு இந்த பாகவதத்தை விரிவுபடுத்தும்படி கூறினார்.
Working...
X