Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 3 J.K. SIVAN

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 3 J.K. SIVAN

    ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் 3 J.K. SIVAN


    இந்த பகுதியுடன் அம்பாள் ஸ்ரீ லலிதாம்பிகையின் தியான ஸ்லோகங்கள் நிறைவு பெரும். இனி அவளது ஆயிர நாமங்களை ருசிக்கப்போகிறோம்.


    ध्यायेत् पद्मासनस्थां विकसितवदनां पद्मपत्रायताक्षीं
    हेमाभां पीतवस्त्रां करकलितलसद्धेमपद्मां वराङ्गीम् ।
    सर्वालङ्कार युक्तां सतत मभयदां भक्तनम्रां भवानीं
    श्रीविद्यां शान्त मूर्तिं सकल सुरनुतां सर्व सम्पत्प्रदात्रीम् ॥


    Dyayeth padmasanastham vikasitha vadanam padma pathrayathakshim,
    Hemabham peethavasthram karakalitha-lasadhema padmam varangim,
    Sarvalangara yuktham sathatham abhayadam bhaktha namram bhavanim.
    Srividyam santhamuthim sakala suranutham sarva sampat pradhatrim.


    த்யாயேத் பத்மாஸநஸ்தாம் விகஸித
    வதநாம் பத்ம பத்ராயதாக்ஷீம்
    ஹேமாபாம் பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம
    பத்மாம் வராங்கீம் |
    ஸர்வாலங்கார - யுக்தாம் ஸததமபய
    தாம் பக்தநம்ராம் பவாநீம்
    ஸ்ரீ வித்யாம் சாந்தமூர்த்திம்
    ஸகலஸுரநுதாம் ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||


    அம்மா ஸ்புடம் போட்ட பொன் போல ஜொலிக்கும் ஸ்ரீ வித்யாவாகிய, லலிதாம்பிகே, சிவந்த உடை உடுத்த, அமைதி தவழும் புன்னகை பூத்த திவ்ய முகத்தாளே , தாமரை ஆசனத்தில் அமர்ந்த மாதா, தாமரை போல் மலர்ந்த உருண்ட கருணை விழி கொண்ட ஜகன்மாதா, தங்கத்தாமரை கரத்திலேந்தியவளே, பக்தர் விரும்புவதெல்லாம் அருளும் பவானி, சகல லோக ரக்ஷகி, பக்தர்களை கனிவோடு காப்பவளே, சர்வ தேவாதி தேவர்களும் தொழும் தாயே, தயாளு, செல்வங்களை வளங்களை வாரி வழங்கும் உன்னை மனதார பிரார்த்திக்கிறேன், தியானிக்கிறேன்.


    सकुङ्कुम विलेपनामलिकचुम्बि कस्तूरिकां
    समन्द हसितेक्षणां सशर चाप पाशाङ्कुशाम् ।पाशाङ्कुशाम्
    अशेषजन मोहिनीं अरुण माल्य भूषाम्बरां
    जपाकुसुम भासुरां जपविधौ स्मरे दम्बिकाम् ॥दम्बिकाम्


    Sakumkumalepana –malikachumbi-Kasthurikam,
    Samanda hasithekshanam sashra chapa pasangusam,
    Asesha jana mohinim –maruna malya bhoosham bara,
    Japa-kusuma-basuram japa vidhou smarathembikam.


    ஸகுங்குமவிலேபநா - மளிகசும்பி - கஸ்தூரிகாம்
    ஸமந்த - ஹஸிதேக்ஷணாம்
    ஸசரசாப பாஸாங்குஸாம் |
    அசேஷஜநமோஹிநீ - மருணமால்ய பூஷாம்பராம்
    ஜபாகுஸும - பாஸுராம்
    ஜபவிதௌ ஸ்மரேதம்பிகாம் ||


    நாம் யாரை விடாமல் தொழவேண்டும் தெரியுமா? யார் தனது தேகத்தில் குங்குமத்தை குழைத்து பூசியிருப்பவளோ, வண்டுகள் சுற்றி வாசம் பெரும் கஸ்தூரியை கமகமவென தரித்திருப்பவளோ, எல்லாவற்றையும் மிஞ்சும் காந்த புன்னகை கொண்டவளோ, கரும்பு வில்லை, மலரம்புகளையும், பாசாங்குசமும் ஏந்தியவளோ, சகல ஜீவன்களையும் கவர்ந்தவளோ, செம்மலர்மாலை அணிந்தவளோ, ஈடிணையற்ற ஆபரணதாரியோ, செவ்விதழ் மலரை ஒத்த நிறத்தவளோ,அம்மா, லலிதாம்பிகே உன்னை சரணடைந்து அருள் வேண்டி பிரார்த்திக்கிறேன்.
Working...
X