Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री शरणागति दीपिका : 01 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री शरणागति दीपिका : 01 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீ


    ��



    श्री शरणागति दीपिका : 01 / 59


    ��




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    ��


    மடைப்பள்ளி ஸம்ப்ரதாயமே , இந்த ஸ்தோத்ரம் !








    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��
    i

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , நம:

    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||








    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் முன்னுரை :



    * சரணாகதி என்னும் , பிரபத்தியைப் பற்றிய , அம்சங்களை நன்கு வெளியிடும் தீபமாக இருப்பது பற்றி இதற்கு இப்பெயர் வந்தது . இந்த திருநாமமும் ஸ்ரீ தேசிகன் தானே விட்டது .

    * இது 59 சுலோகங்கள் கொண்டது .

    * இந்த ஸ்தோத்திரம் , ஸ்ரீ தேசிகன் திரு அவதரித்த தலம் ஆகிய , திருத்தண்காவில் , கோவில் கொண்டு , எழுந்தருளியிருக்கும் , எம்பெருமானுக்கு விளக்கொளி எம்பெருமானைப் பற்றியதாகும் .

    * வடமொழியில் 'தீபப் பிரகாசர்' என்று நாமும் வழங்கும் .

    * இத்தலத்திற்கு அருகில் , வேகவதி என்னும் ஆறு ஓடுகிறது .

    * இத்தலத்தில் , 'லட்சுமி ஸரஸ் ' எனும் பொய்கை உள்ளது . இப் பொய்கையிலிருந்து , பெரியபிராட்டி தோன்றி , விளக்கொளி எம்பெருமானை , அடைந்ததாக புராணம் கூறும் .

    * இந்த ஸ்தோத்திரம் , ஸ்ரீபாஷ்யகாரருடைய அந்தரங்க கைங்கர்ய பரராய் , இருந்து , அவரிடமிருந்து , ஸர்வ அர்த்தங்களையும் பெற்ற , மடப்பள்ளி ஆச்சான் ஸம்பிரதாயமே , இந்நூல் அவதரித்ததாக , பேசிக்கொண்டே தொடங்குகிறது .

    * இதில் :

    . பிராட்டியின் அவதாரம்

    . எம்பெருமானுக்கு , எல்லோரிடமிருந்து ,மேம்பாடு .

    . அவனுடைய , ஆறு குணங்களின் , முக்கியத்தன்மை .

    . ஆசாரிய பரம்பரையில் , அவனது முதன்மை .

    . அவனே ஸர்வ வித பந்துவாக நிற்றல் .

    . அவனுடைய அவதார ரகசியம் .

    . ஸௌசீல்ய குணம் .

    . பக்தி யோக முறை .

    . ப்ரபத்தியின் பெருமை .

    . அதன் ஐந்து அங்கங்கள் .

    . உத்தர கைங்கரியம் .

    . இருவகை ஆராதனை முறை .

    . பாகவத கைங்கர்யம் .

    . சரீரத்திலிருந்து , ஜீவன் வெளியேறும் முறை .

    . அர்ச்சிராதி மார்க்கம் .

    . முத்தியில் எம்பெருமானுக்கு சமமாதல் .

    . இம்மைப் போகத்தில், உள்ள ஏழு வகை குற்றங்கள் .

    . முதலிய அவசியமான பல விஷயங்களை விளக்குகிறார்

    * மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை , அருளுமாறு , எம்பெருமானை பிரார்த்திக்கிறார் .

    * இந்நூல் , உலகில் உள்ள , அஞ்ஞான இருள் எல்லாம் , ஒழிக்க வல்லது , எனக்கூறி , தலைக் கட்டுகிறார் நம் , ஆச்சாரிய ஸார்வபௌமன்


    पद्मा , पते: , स्तुति , पदेन , विपच्यमानम् ,

    पश्यन्तु - इह , प्रपदन , प्रवणा , महान्त: ।

    मत् - बाक्य , संवलितम् - अपि - अजहत् , स्वभावम् ,

    मान्यम् , यति - ईश्वर , महानस , संप्रदायम् ॥



    பத்மா , பதே: , ஸ்துதி , பதேந , விபச்யமாநம் ,

    பஶ்யந்து ! இஹ , ப்ரபதந , ப்ரவணா , மஹாந்த: |

    மத் - வாக்ய , ஸம்வாலிதம் - அபி - அஜஹத் , ஸ்வபாவம் ,

    மாந்யம் , யதி - ஈஶ்வர , மஹாநஸ , ஸம்ப்ரதாயம் ||



    प्रपदन ........... சரணாகதியில் ,

    प्रवणा ........... ஈடுபட்டவர்களான ,

    महान्त: .......... பெரியோர்கள் ,

    पद्मा ............. பிராட்டிக்கு ,

    पते: .............. நாயகனான , எம்பெருமானுடைய ;

    स्तुति पदेन ...... இந்த ஸ்தோத்ரமாக ,

    विपच्यमानम् .... வடிவு கொண்ட ,

    मत् ............... என்னுடைய ,

    वाक्य ............ வாக்யங்களோடு ;

    संवलितम् ....... கலந்திருந்த ,

    अपि ............. போதிலும் ;

    स्वभावम् ........ தன் பெருமையை ,

    अजहत् .......... கை விடாமல் ;

    मान्यम् ........... மதிப்புக்கு உரியவரான ,

    यति ईश्वर ..... ஶ்ரீ பாஷ்யகாரருடைய ,

    महानस .......... திரு மடைப்பள்ளி வழியாய் வந்த ,

    संप्रदायम् ........ ஸம்ப்ரதாயத்தை ,

    इह ............... இந்த நூலில்

    पश्यन्तु .......... உற்று நோக்கட்டும் !




    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :







    * ஸ்ரீபாஷ்யகாரரிடத்தில் , திருமறைப்பள்ளி கைங்கரியம் செய்து கொண்டே , அவரிடம் , ஸகலமான அர்த்தங்களையும் , கேட்டு , விஷய ஞானம் பெற்றவர் , மடைப்பள்ளி ஆச்சான் என்னும் ஆச்சாரியர் .

    * ஆசார்ய பரம்பரையில் , இவர் ஸ்ரீபாஷ்யகாரருக்கு , அடுத்த ஆச்சாரியார் .

    * இவருக்குப் , ப்ரணதார்த்திஹரர் எனும் திருநாமம் உண்டு

    * இவருக்குப் பிறகு , கடாம்பி ராமானுஜாச்சாரியார் , கடாம்பி , ரங்கராஜாசாரியார் , கடாம்பி அப்புள்ளார் ...இப்படி ஆசார்ய பரம்பரை வருகிறது .

    * ஆகவே , மடைப்பள்ளி ஆச்சான் , வழியாய் வருவது பற்றி , இந்த ஸம்பிரதாயமே , மடைப்பள்ளி ஸம்பிரதாயம் என்று , கூறப்படுகிறது .

    இந்த ஸம்பரதாயத்தில் , சரணாகதியே , மோக்ஷத்திற்குச் , சிறந்த உபாயமாக , கொள்ளப் பட்டு , பஎல்லா ஆச்சார்யர்களாலும் , அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது .

    * இந்த ஸம்ப்ரதாயத்தின் , முக்கியமான அம்சங்கள் எல்லாம் , இந்த ஸ்தோத்திரத்தில் அமைந்திருப்பதால் , மடைப்பள்ளி ஸம்பரதாயமே , இந்த நூலாக வடிவம் கொண்டது என்று கூறுதல் பொருந்தும் .

    * இந்நூல் சிறியனான , அடியேனுடைய வாக்கியங்களைக் , கலந்து இயற்றப் பெற்றிருப்பினும் , மடைப்பள்ளி ஸம்பிரதாயத்தையே , இந்நூல் அடக்கிக் கொண்டிருப்பதால் , சிறிதும் பெருமை குறையவில்லை .

    * இவ்வுலகில் , ப்ரபத்தியில் , மிக்க நம்பிக்கையோடு , ஈடுபட்டுள்ள பெரியவர்கள் , இந்த ஸ்தோத்ரத்தின் வாயிலாக வெளியாகும் , உயர்ந்த மடைப்பள்ளி ஸம்பிரதாயத்தின் , ஸாரமான , சரணாகதி முறையைக் கண்டு மகிழ்வார்களாக !





Working...
X