Announcement

Collapse
No announcement yet.

श्री शरणागति दीपिका : 22 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री शरणागति दीपिका : 22 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீப

    🙏



    श्री शरणागति दीपिका : 22 / 59


    🙏




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா













    🙏


    விளக்கொளி எம்பெருமானே ! மஹான்கள் , உன்னை , தியானித்து , த்ருப்தி அடைவதே இல்லை !








    🙏





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏




    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    🙏







    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    🙏



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    🙏




    पद्म - अभिराम - वदन - ईक्षण , पाणि , पादम् ;


    दिव्य - आयुध - आभरण - माल्य , विलेपनम् , त्वाम् ; |

    योगेन , नाथ ! शुभम् - आश्रयम् - आत्मवन्त: ,

    सालम्बनेन , परिचिन्त्य , न यान्ति ! तृप्तिम् ॥


    🙏




    பத்ம - அபிராம - வதந - ஈக்ஷண , பாணி , பாதம் ;

    திவ்ய - ஆயுத - ஆபரண- மால்ய , விலேபநம், த்வாம் ; |

    யோகேந , நாத ! சுபம் - ஆஶ்ரயம் - ஆத்மவந்த:

    ஸாலம்பநேந , பரிசிந்த்ய , ந யாந்தி ! த்ருப்திம் ||


    🙏




    नाथ .......... ஸ்வாமி !

    आत्मवन्त: ... தூய மனம் படைத்தவர்கள் ,

    पद्म ........... தாமரை போல் ,

    अभिराम ..... அழகிய ,

    वदन .......... திரு முகத்தையும் ,

    ईक्षण ........ திருக் கண்களையும் ,

    पाणि ......... திருக் கைகளையும் ,

    पादम् ......... திரு அடிகளையும் உடையவனும் ;

    दिव्य ......... சிறந்த ,

    आयुध ........ திரு ஆயுதங்கள் ,

    आभरण ...... திரு ஆபரணங்கள் ,

    माल्य ......... திரு மாலைகள் ,

    विलेपनम् ..... சந்தனம் இவற்றை , அணிந்தவனும் ;

    शुभम् ......... பாபத்தைப் போக்குபவனும் ;

    आश्रयम् ...... சிந்திக்க எளியவனும் ஆன ;

    त्वाम् .......... உன்னை ,

    सालम्बनेन .... உன் திருமேனியைப் பற்றிய ,

    योगेन .......... தியானத்தால் ,

    परिचिन्त्य ..... நன்கு , சிந்தித்து ,

    तृप्तिम् ......... போதும என்ற எண்ணத்தை ;

    न यान्ति ....... அடைவது இல்லை !


    🙏

    ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :




    * விளக்கொளி எம்பெருமானே !

    * மனத்தூய்மை பெற்ற , ஸாதுக்கள் , திருமேனியைப் பற்றிய , தியானத்தைக் கொள்கின்றனர் .

    * இந்த தியான யோகம் , 'ஸாலம்பந யோகம்' என வழங்கப்படும்.

    * உன் திருமுகம் , திருக்கண்கள் , திருக்கைகள் , திருவடிகள் அனைத்தும் , தாமரைபோல் , விளங்குகின்றன .

    * நீ , திருவாழி , திருச்சங்கு , முதலிய திரு ஆயுதங்களையும் , கிரீடம் முதலிய , திரு ஆபரணங்களையும் , வனமாலை முதலிய , திரு மாலைகளையும் , சந்தனம் முதலிய , வாஸநா திரவியங்களையும் , அணிந்துள்ளாய் .

    * உன் திருமேனியை , ஸேவித்தால் , பாபங்கள் ஒழிந்து போகும்.

    * உன் திருமேனி , எளிதாய் தியானத்திற்கு இலக்கு ஆகிறது .

    * இதை , மஹான்கள் , இடைவிடாது , தியானிக்கின்றனர் .

    * அவர்களுக்கு , போதும் என்ற எண்ணமே உண்டாகாமல் , மேன்மேலும் அனுபவிக்கவே , வேட்கை உண்டாகிறது.







    🙏



    🙏







    Last edited by sridharv1946; 24-10-18, 10:30.
Working...
X