Announcement

Collapse
No announcement yet.

श्री शरणागति दीपिका : 24 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री शरणागति दीपिका : 24 / 59 🙏 ஸ்ரீ ஶரணாகதி தீப

    श्री शरणागति दीपिका : 24 / 59


    🙏




    ஸ்ரீ ஶரணாகதி தீபிகா


















    🙏


    எம்பெருமானே ! வழிபடுவோர் எல்லோர்க்கும் , மகிழ்ச்சியுடன் , பலன் அளிக்கிறாய் !






    🙏


    <
    🙏






    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    🙏

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त - आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    🙏


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    🙏



    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த - ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    🙏



    धी , संस्कृतान् ; विदधताम् ; इह , कर्म , भेदान् ;

    शुद्धम् , जिते , मनसि , चिन्तयताम् ; स्वम् - एकम् ; ।

    त्वत् , कर्म , सक्त , मनसाम् ; अपि , च अपरेषाम् ;

    सूते ! फलानि - अभिमतानि , भवान् , प्रसन्न : ॥


    🙏



    தீ , ஸம்ஸ்க்ருதாந் , விதததாம் - இஹ , கர்ம , பேதாந் ,

    ஶுத்தம் , ஜிதே , மநஸி , சிந்தயதாம் , ஸ்வம் - ஏகம் ; |

    த்வத் , கர்ம , ஸக்த , மநஸாம் - அபி , ச அபரேஷாம் ,

    ஸூதே ! பலாநி , அபிமதாநி , பவாந் , ப்ரஸந்ந: ||


    🙏



    इह .............. இவ்வுலகில் ;

    धी ............... நல் அறிவால் ,

    संस्कृतान् ....... பண்பட்டுள்ள ;

    भेदान् ............ பல்வகை ,

    कर्म .............. கருமங்களை ,

    विदधताम् ....... செய்கின்றவர்க்கும் ;

    जिते ............. அடக்கப்பட்ட ,

    मनसि ............ மனத்தில் ;

    शुद्धम् ............ ஸம்ஸாரபந்தம் அற்ற ,

    स्वम् ............. தான் ஆகிய ஆத்மா ,

    एकम् ............ ஒன்றையே ,

    चिन्तयताम् ...... தியானிப்பவர்களுக்கும் ;

    त्वत् .............. உன்னைப் பற்றிய ,

    कर्म .............. செயலிலேயே ,

    सक्त ............. ஈடுபட்ட ,

    मनसाम् अपि .... மனதை , உடையவர்க்கும் ;

    अपरेषाम् च ..... மற்றும் , வழிபடுபவர்களுக்கும் ;

    अभिमतानि ...... இஷ்டமான ,

    फलानि .......... பலன்களை ;

    भवान् ............ நீ ,

    प्रसन्न : .......... மகிழ்வுடன் ,

    सूते ............... அளிக்கிறாய் !


    🙏


    ஶ்ரீ உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    🙏


    * விளக்கொளி எம்பெருமானே !




    * கர்ம யோகம் , யாகம் , தானம் , தவம் முதலியனவாகப் பல வகைப்படும் .

    * இதனைச் செய்பவர்களுக்கு , ஜீவாத்மா , பரமாத்மா இவர்களைப் பற்றிய , நல்ல அறிவால் , மனம் , பண்பட்டிருக்கவேண்டும் .

    * இவ்வுலகில் , பலனை விரும்பாது , "பகவத் ஆராதனம்" என்றும் , "பகவானே செய்கிறான் " என்றும் கருதி , இந்த கர்மயோகத்தைச் செய்பவர்களுக்கு , அவர்கள் விரும்பும் பலனை , நீ மகிழ்வுடன் அளிக்கிறாய் .

    * இதனால் , ஞான யோகத்தைச் செய்யத் , தகுதியாகிய பலனையும் , பெறலாம் .

    * ஞான யோகம் என்பது , ஒருவன் , தன் மனத்தை , வெளியில் செல்ல விடாமல் , அடக்கித் , தன் ஆத்ம ஸ்வரூபத்தைச் , சரீரத்தினின்று பிரித்து , சுத்தமான நிலையில் , அதையே தியானிப்பது ஆகும் .

    * இதைச் செய்பவர்களுக்கும் , ஆத்மாவை நேரில் காணல் , முதலிய பலனைத் தந்து , அருளுகிறாய் .

    * இதனால் , பக்தி யோகத்தைச் செய்யும் தகுதியும் , உண்டாகிறது .

    * எந்தப் பலனையும் , விரும்பாது , உனக்கு ஆராதனம் என நினைத்து உன்னிடம் மனம் ஈடுபட்டு , உன் முகமலர்ச்சிக்காகவே , கோவில் அமைத்தல் , கோவிலைப் பெருக்கி , மெழுகுதல் , கோலம் இடுதல் , நந்தவனம் ஏற்படுத்தல் , தீபம் சமர்ப்பித்தல் , முதலிய கைங்கரியங்களைச் செய்கின்ற , அடியார்களுக்கு , மேன்மேலும் , பக்தியை வளர்த்து , பக்தியோகத்தைத் தலை கட்டி வைக்கிறாய் .

    * மற்றும் , பல்வகையில் வழிபடுபவர்களுக்கும் , அவரவர் விரும்பும் , பலனை கொடுத்து , அருள்கிறாய் !







    🙏




Working...
X