Announcement

Collapse
No announcement yet.

Srimad ramayana Dhyana slokas with meanings in tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Srimad ramayana Dhyana slokas with meanings in tamil

    Srimad ramayana Dhyana slokas with meanings in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ராமாயண த்யான ஸ்லோகங்கள்


    1. சுக்லாம்பரதரம் – வெள்ளை வஸ்திரம் தரித்தவரும்
    விஷ்ணும் – எங்கும் நிறைந்தவரும்
    சசிவர்ணம் –சந்திரனின் நிறம் உடையவரும்
    ப்ரசன்னவதனம் – எப்போதும் சிரித்த முகமானவருமான விநாயகரை சர்வவிக்நோபசாந்தயே- எல்லா இடையூறுகளும் ஒழிய
    த்யாயேத்- த்யானிக்க வேண்டும்.


    2. வாகீசாத்யா:- பிரம்மா முதலிய
    ஸுமனஸ: தூய சிந்தையுடைய வர்கள் ( தேவர்கள்)
    ஸர்வார்த்தானாம்- எல்லா விதமான செய்கைகளின்
    உபக்ரமே- ஆரம்பத்தில்
    யம் நத்வா- யாரை வணங்கி
    க்ருதக்ருத்யா: ஸ்யு: - கார்ய சித்தியை அடைகிறார்களோ
    தம் கஜானனம் – அந்த கணபதியை
    நமாமி-வணங்குகிறேன்


    3. சதுர்பி: தோர்பி: யுக்தா- நான்கு கரங்கள் கொண்டவளும்
    ஸ்படிக மணிமயீம் அக்ஷமாலாம் – ஸ்படிகத்தினால் ஆன பீஜமாலையையும்
    ஹஸ்தேன ஏகேன –ஒரு கரத்தினால்
    த்தானா- தரித்து
    பத்மம் ஸிதம் அபி – மற்றொரு கரத்தினால் வெண் தாமரையும்
    சுகம் புஸ்தகம் ச அபரேண- மற்றும் இரு கரங்களில் கிளியையும் புஸ்தகத்தையும் தரித்து
    குந்தேந்து சங்கஸ்படிக மணி நிபா- மல்லிகை, சங்கு,ஸ்படிகம் இவைகளை ஒத்த
    பாஸா- ஒளியினால்
    பாஸமானா- பிரகாசிப்பவளும்
    அஸமானா- தன்னிகரில்லாதவளும் ஆன
    ஸா வாக்தேவதா – அந்த வாக்தேவதையான
    இயம் - இவள் ( சரஸ்வதி) வதனே – என் நாவில்
    ஸர்வதா- எப்போதும்
    ஸுபிரசன்னா- அருள் பாலிப்பவளாக
    நிவஸது- வஸிக்கட்டும்.


    4.ராமராமேதி –ராமா ராமா என்று
    மதுராக்ஷரம்- மதுரமான நாமத்தை
    கவிதாசாகாம் – கவிதை என்னும் கிளையில்
    ஆருஹ்ய- ஏறி
    மதுரம் – இனிமையாக
    கூஜந்தம்- கூவுகின்ற
    வால்மீகி கோகிலம்- வால்மீகி என்ற குயலை
    வந்தே – வணங்குகிறேன்.


    5. முனிஸிம்ஹஸ்ய -முனிவர்களில் சிம்ஹம் போன்ற
    கவிதாவனசாரிண- கவிதை என்ற காட்டில் சஞ்சரிக்கும்
    வால்மீகே: - வால்மீகியின்
    ராமகதாநாதம் - ராமகதை என்கிற கர்ஜனையை
    ஸ்ருன்வன்- கேட்டு
    கோ – எவர்தான்
    பராம் கதிம்- மேலான கதியை
    ந யாதி- அடைய மாட்டார்!


    6. ய: - எவர்
    ஸததம்-எப்போதும்
    ராமசரிதாம்ருத ஸாகரம்- ராமசரிதமாகிய அமுதக் கடலை
    பிபன் – குடித்தும்
    அத்ருப்த: -திருப்தி இல்லாமலிருக்கிறாரோ
    தம் முனிம் –அந்த வால்மீகி முனிவரை
    வந்தே – நமஸ்கரிக்கிறேன்.


    7.கோஷ்பதீக்ருதவாராசிம்-கடல் எவருக்கு குளம்படி ஜாலம் போல் ஆயிற்றோ
    மசகீக்ருதராக்ஷசம் – ராக்ஷசர்கள் எவருக்கு கொசு போன்று ஆயினரோ
    ராமாயண மஹாமாலாரத்னம் – எவர் ராமாயணம் என்னும் மகத்தான ஹாரத்திற்கு பதக்கமாகிற ரத்தினம் போல் உள்ளவரோ
    தம் அணிலாத்மாஜம் – அந்த ஹனுமானை
    வந்தே – வணங்குகிறேன்


    8. அஞ்சனாநந்தனம்- அஞ்சனையின் புத்திரனும்
    வீரம்- வீரனும்
    ஜானகி சோக நாசனம் – சீதையின் துக்கத்தைப் போக்கினவனும்
    அக்ஷஹந்தாரம் – அக்ஷ குமாரனை வதைத்தவனும்
    லங்காபயம்கரம்- இலங்கைக்கு அச்சத்தை விளைவித்தவனும் ஆன
    கபீசம்- ஹனுமானை
    வந்தே – வணங்குகிறேன்


    9. ஸிந்தோ: - சமுத்திரத்தின்
    ஸலிலம் – நீரை
    ஸலீலம் – விளியாட்டாகக்
    உல்லங்க்ய- தாண்டி
    ய: -எவன்
    ஜனகாத்மஜாயா: - சீதையினுடைய
    சோக வஹ்னிம்- சோகமாகிற நெருப்பை
    ஆதாய – எடுத்து
    தேனைவ- அதனாலேயே
    லங்காம் – இலங்கையை
    ததாஹா – கொளுத்தினானோ
    தம் ஆஞ்சநேயம்- அந்த ஆஞ்சநேயனை
    நமாமி- நமஸ்கரிக்கிறேன்


    1௦.அதிபாடலானனம் – மிகவும் சிவந்த முகமும்
    காஞ்சனாத்ரி – தங்கமயமான மேருமலையைப் போல்
    கமனீய விக்ரஹம்- அழகிய உருவத்தையும் உடைய
    பாரிஜாததருமூல வாஸினம் – பாரிஜாத மரத்தின் கீழ் வசிக்கும்
    பவமான நந்தனம் –வாயுபுத்திரன் ஆகிய
    ஆஞ்சநேயம் - - ஹனுமானை
    பாவயாமி- தியானிக்கிறேன்


    11. யத்ர யத்ர – எங்கெல்லாம்
    ரகுநாதகீர்த்த்னம்- ராமன் புகழ் பாடப்படுகிறதோ
    தத்ர தத்ர- அங்கெல்லாம்
    க்ருதமஸ்தகாஞ்சலிம் – தலை மேல் கைகூப்பி
    பாஷ்பவாரிபரிபூர்ணலோசனம் – கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக நிற்கும்
    ராக்ஷஸாந்தகம் – ராக்ஷசர்களின் எமனான
    மாருதிம் – மாருதியை
    நமத – வணங்குவீர்.


    12. மனோஜவம் – மனம் போல் துரிதமானவரும்
    மாருததுல்ய வேகம் – வாயு வேகம் கொண்டவரும்
    ஜிதேந்த்ரியம் – இந்த்ரியங்களை அடக்கினவரும்
    புத்திமதாம் வரிஷ்டம்-புத்திமான்களுள் சிறந்தவரும்
    வாதாத்மஜம் – வாயுவின் புத்திரனும்
    வானர யூத முக்யம்- வானர சேனையின் முக்கியமானவரும் ஆன
    ஸ்ரீராமதூதம் – ராம் தூதனான ஹனுமானுக்கு
    சிரஸா நமாமி – தலை வணங்குகிறேன்.


    13.புத்தி: - அறிவு
    பலம் – பலம்
    யச: - புகழ்
    தைர்யம் – தைரியம்
    நிர்பயத்வம் – அச்சமின்மை
    அரோகதா- ஆரோக்கியம்
    அஜாட்யம் – சோம்பலின்மை
    வாக்படுத்வம் – வாக்கு வன்மை இவை
    ஹனுமத் ஸ்மரணாத்- ஹனுமனை நினைக்க
    பவேத் – ஏற்படும்.


    14.ய: -எவனொருவன்
    அஹரஹ:- தினம் தினம்
    கர்ணாஞ்சலி சம்புடை: -செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால்
    வால்மீகே: - வால்மீகியினுடைய
    வதநாரவிந்த கலிதம் – வாக்கிலிருந்து ( கிளியின் வாயிலிருந்து விழுவதைப்போல்)
    ராமாயணாக்யம் மது – ராமாயணம் என்னும் தேனை
    ஸம்யக் – நன்றாக
    ஆத்ராத் – ஆவலுடன்
    பிபதி – பருகுகிறானோ
    ஸ: புமான் – அந்த மனிதன்
    ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: - பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால்
    அத்யந்த ஸோபத்ரவம்- மிகவும் தொல்லை கொடுக்கும்
    ஸம்ஸாரம் – சம்சாரத்தை
    விஹாய – நீத்து
    சாஸ்வதம்- நிரந்தரமான
    விஷ்ணோ: பதம் –விஷ்ணுவின் பதத்திற்கு
    கச்சதி- செல்கிறான்.


    15. உபகத ஸமாஸ ஸந்தி யோகம் – சரியான பதப்பிரிவு, பதச்சேர்க்கை இவைகளுடன் கூடியதும்
    ஸமமதுரோபநதார்த்த வாக்ய பந்தம் – மதுரமான பொருட்செறிவுடன் கூடிய வாககியங்களை உடையதும்
    முநிப்ரணீதம்- வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட
    ரகுவர சரிதம்- ராமாயணத்தை
    நிசாமயத்வம் – அனுபவியுங்கள்


    16. வால்மீகி கிரி ஸம்பூதா – வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி
    ராமஸாகர காமிநீ- ராமன் என்ற கடலை நோக்கிச் செல்லும்
    ராமாயணமஹாநதீ- ராமாயணம் என்னும் மகாநதியானது
    புவனம் – உலகத்தை
    புனாது-தூய்மையாக்குமாக .


    17. ஸ்லோக ஸார ஸமாகீர்ணம்- ச்லோகங்களாகிற சாரம் நிரம்பியதும்( சாரம் என்றால் உப்பு என்றும் பொருள்)
    ஸர்ககல்லோல ஸம்குலம் – ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும்
    காண்டக்ராஹ மஹாமீனம் - காண்டங்கள் என்கிற முதலைகள் சுறாமீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன
    ராமாயணார்ணவம் – ராமாயணம் என்னும் கடலை
    வந்தே – வணங்குகிறேன்


    18. வேத வேத்யே- வேதங்களினால் அறியப்படுபவனான
    பரே பும்ஸி- பரம புருஷன்
    தசரதாத்மஜே – தசரதர் மகனாக
    ஜாதே – ஜனித்தபோது
    வேதா:- வேதங்கள்
    ப்ராசேதஸாத் – வால்மீகியிடம் இருந்து
    ஸாக்ஷாத் ராமாயணகதா- ராமாயணத்தின் வடிவமாக
    ஆஸீத்- ஆயின.


    19. வைதேஹீஸஹிதம் – சீதையுடன் கூட
    ஸுரத்ருமதலே – கல்பக வனத்தில்
    ஹைமே- தங்க மயமான
    மஹாமண்டபே- மண்டபத்தில்
    மணிமயே- ரத்தினங்கள் பதித்த
    புஷ்பகமாஸனே - புஷ்பக விமானத்தின்
    மத்யே – நடுவில்
    வீராஸனே – வீராசனத்தில்
    ஸுஸ்திதம்- நன்கு அமர்ந்து இருப்பவரும்
    அக்ரே – முன்னால்
    பிரபஞ்சனஸுதே- ஹனுமனுடனும்
    முநிப்ய: - முனிவர்களுக்கு
    தத்வம்- தத்துவத்தை
    வாசயதி – கூறி
    வ்யாக்யாந்தம்- விளக்குபவரும்
    பரதாதிபி: - பரதன் முதலியவர்களால்
    பரிவ்ருதம் – சூழப்பட்டவரும் ஆன
    ச்யாமளம்- நீலநிறம் கொண்ட
    ராமம் – ராமனைத்
    பஜே – தொழுகிறேன்


    2௦. வாமே – இடதுபக்கத்தில்
    பூமிஸுதா- சீதையுடனும்
    புரஸ்ச – முன்னால்
    ஹனுமான்- ஹனுமனுடனும்
    பஸ்சாத்- பின்னால்
    ஸுமித்ரா ஸுத: - லக்ஷ்மணனுடனும்
    சத்ருக்நோ பரதஸ்ச –சத்ருக்னன் பரதன் இவர்கள்
    பார்ச்வதளயோ: - இரு பக்கத்திலும் இருக்க
    வாய்வாதி கோணேஷு ச - அஷ்ட திக்குகளிலும்
    ஸுக்ரீவஸ்ச விபீஷணஸ்ச யுவராட் தாராஸுதொ ஜாம்பவான்- சுக்ரீவன், விபீஷணன், கிஷ்கிந்தை யுவராஜனான தாரையின் மைந்தன் அங்கதன், ஜாம்பவான்
    மத்யே – இவர்கள் மத்தியில் நீல ஸரோஜ கோமள ருசிம் – நீல நிறத்து தாமரைபோல அழகிய உருவத்துடன் விளங்கும்
    ச்யாமளம் –சியாமளனான
    ராமம்- ராமனை
    பஜே- துதிக்கிறேன்


    21. ஸலக்ஷ்மணாய – லக்ஷ்மணனுடன் கூடிய
    ராமாய – ராமனுக்கு
    நமோஸ்து- நமஸ்காரம்
    தேவ்யை ஜனகாத்மஜாயை- ஜனகரின் புத்திரியான சீதாதேவிக்கு
    நமோஸ்து- நமஸ்காரம்
    ருத்ரேந்த்ர யமாநிலேப்ய: - ருத்ரன், யமன், வாயு இவர்களுக்கு
    நமோஸ்து- நமஸ்காரம்
    சந்த்ரார்க மருத்கணேப்ய: - சந்திரன் சூரியன். மருத்கணங்கள் இவர்களுக்கு
    நமோஸ்து- நமஸ்காரம்


    22. ஸர்வாரிஷ்ட நிவாரகம்- அனைத்து கஷ்டங்களையும் போக்குகின்றவரும்
    சுபகரம்- நன்மை செய்பவரும்
    பிங்காக்ஷம்- மஞ்சள் நிறமான கண்களை உடையவரும்
    அக்ஷாபஹம்- அக்ஷகுமாரனை வாதம் செய்தவரும்
    ஸீதான்வேஷணதத்பரம்- சீதையைத் தேடுவதில் நாட்டம் உடையவரும்
    கபிவரம்- சிறந்த வானரரும்
    கோடீந்து சூர்யப்ரபம்- கோடி சூர்யன் சந்திரன் இவர்களின் ஒளி பொருந்தியவரும்
    லங்காத்வீபபயம்கரம் – இலங்கைக்கு பயத்தை உண்டாக்கினவரும்
    ஸகலதம் – அனைத்தும் கொடுப்பவரும்
    ஸுக்ரீவஸம்மாநிதம் – சுக்ரீவனால் கொண்டாடப்பட்டவரும்
    தேவேந்த்ராதி ஸமஸ்த தேவ வினுதம் – தேவேந்திரன் முதலிய எல்லா தேவர்களாலும் துதிக்கப்பட்டவரும் ஆன
    காகுத்ஸ்த தூதம் பஜே- ராமதூதனை தியானிக்கிறேன்
Working...
X