Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 5 adhyaya 16,17 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 16/17


    அத்தியாயம் 16
    பூகோள வர்ணனை
    சூரியன் மேரு மலையைச் சுற்றி வரும்போது ப்ரியவ்ரதர் தன் தேரில் சூரியனுடன் சுற்றி வந்தாராம். அந்தத் தேரின் சக்கரம் ஏற்படுத்திய பள்ளங்களே ஏழு சமுத்திரங்கள் ஆயின என்றும் அதனால் பிரிக்கப்பட்ட பூமியே ஜம்புத்வீபம் முதலிய ஏழு கண்டங்கள் ஆயின என்றும் முதல் அத்தியாயத்தில் கூறப்பட்டது பற்றி சுகரிடம் விரிவாக விளக்கும்படி பரீக்ஷித் வேண்ட அவர் அதைக் கூறலுற்றார்.


    ஜம்புத்வீபம் என்பது தற்போதைய ஆசியா. இது தாமரை இலை வடிவில் உள்ளது. இதில் ஒன்பது வர்ஷங்கள் உள்ளன. இதன் மத்திய பாகத்தில் உள்ளது இலாவருத வர்ஷம்(இமயம், திபெத்) இதன் மத்தியில் தங்க மயமான மேரு மலை உள்ளது. இது பூமியாகிய தாமரையின் நடுப்பாகம் ஆகும்.


    இலாவ்ருதத்தின் வடக்கில் நீல, ஸ்வேத, ஸ்ருங்கவான் மலைகள் உள்ளன. இவை முறையே ரம்யக, (ரஷ்யா, சைபீரியா) ஹிரண்மய , (மஞ்சூரியா) குரு (மங்கோலியா) வர்ஷங்களுக்கு எல்லையாக உள்ளன.
    தெற்கில் நிஷத , ஹேமகூட , ஹிமாலய பர்வதங்கள் உள்ளன. இவை முறையே ஹரிவர்ஷம்(அரேபியா), கிம்புருஷ வர்ஷம்(இமயத்தாழ்வாரம்), பாரத வர்ஷம் ( இந்தியா) இவைகளுக்கு எல்லையாக உள்ளன. கிழக்கில் மால்யவான் , மேற்கில் கந்தமாதனம் என்ற பர்வதங்கள் முறையே கேதுமாலம் ( பாரசீகம், துருக்கி), பத்ராச்வம் (சைனா) என்ற வர்ஷங்களுக்கு எல்லையாக உள்ளன.


    அத்தியாயம் 17
    பகவான் த்ரிவிக்ரமனாக உலகை அளக்கையில் அவருடைய பாதத்தில் இருந்து பெருகிய பகவத்பாதீ எனப்படும் கங்கையின் நீர் ஆயிரம் யுகங்களுக்குப்பின் விஷ்ணுபதத்தில் விழுந்து அதில் உள்ள த்ருவமண்டலத்தில் விழுந்து சப்தரிஷி மண்டலம் வழியே பெருகி தேவலோகத்தையும் சந்திர மண்டலத்தையும் நனைத்துப் பிறகு மேருமலையின் மேல் விழுகிறது.


    அங்கே ஸீதா, அலக்நந்தா, சக்ஷு, பத்ரா என நான்காகப் பிரிந்து வெவேறு மலைகளின் வழியாக ஓடி கடலில் கலக்கிறது. ஸீதா கந்தமாதன பர்வதத்தின் வழியே பத்ராஸ்வ வர்ஷத்தில் (சீனா) ஓடி கிழக்கே கடலை அடைகிறது. சக்ஷு மால்யவான் பர்வதத்தின் வழியே கேதுமால வர்ஷத்தில் ஓடி (பாரசீகம் , துருக்கி) மேற்கே கடலில் கலக்கிறது. பத்ரா ஸ்ருங்கவான் மலையின் வழியே உத்தர குரு ( வடக்கு மங்கோலியா ) சென்று வடக்கே கடலில் கலக்கிறது.அலக்நந்தா ஹேமகூட பர்வதத்தின் வழியே பாரத வர்ஷத்தில் ஓடி தெற்கே கடலில் கலக்கிறது. இதைத்தவிர கணக்கற்ற நதிகள் மேருவில் இருந்து விழுந்து மற்ற வர்ஷங்களில் பாய்கின்றன.


    இவற்றுள் பாரத வர்ஷம் கர்ம பூமி எனப்படுகிறது. இதில்தான் புண்ணியம் பாபம் இரண்டும் கர்மங்களின் மூலம் சம்பாதிக்கப்படுகின்றன. இந்த ஒன்பது வர்ஷங்களில் பகவான் தமது மூர்த்தி பேதங்களால் பிரசன்னமாக இருந்து அருள் பாலிக்கிறார் .


    இலாவ்ருதத்தில் பரமசிவன் ஒருவரே புருஷர். இரண்டாவது புருஷன் எவனும் அங்கே பிரவேசித்தால் பார்வதியின் சாபத்தால் பெண்ணாகிவிடுவான் என்று கூறப்படுகிறது., இங்கு பகவான் நாராயணன் ஸங்கர்ஷண ரூபத்தில் ஆராதிக்கப்படுகிறார்.
    மற்ற வர்ஷங்களின் அதி தேவதா ஸ்வரூபம் பற்றிய விவரம் அடுத்து காணப்படுகிறது.




    Srimad Bhagavatam skanda 5 adhyaya 18,19 in tamil




    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 18/19


    அத்தியாயம் 18/19
    பத்ராஸ்வ வர்ஷத்தில், தரும பிரஜாபதியின் புத்திரனான பத்ரச்ரவஸ் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியை சமாதியோகத்தால் சாக்ஷாத்கரித்து ஆராதிக்கிறார்.
    ஹரிவர்ஷத்தில் பகவான் நரஹரி ரூபத்தில் ப்ரஹ்லாதனால் ஆராதிக்கப்படுகிறார்.


    கேதுமால வர்ஷத்தில் லக்ஷ்மீ தேவி காமதேவ ரூபத்தில் உள்ள பகவானை ஆராதிக்கிறாள்.
    ரம்யக வர்ஷத்தில் பகவான் மத்ஸ்ய ரூபத்தில் வைவஸ்வத மனுவால்ஆராதிக்கப்படுகிறார்.


    ஹிரண்மய வர்ஷத்தில் கூர்ம வடிவில் பகவான் வாசம் செய்கிறார். அவரை பித்ருதேவதைகளின் பதியான அர்யமாஉபாஸிக்கிறார்.


    உத்தரகுரு வர்ஷத்தில் பகவான் இருப்பது வராஹ ரூபத்தில் யக்ஞபுருஷராக இருக்கிறார். அவர் அங்கு பூமிதேவியால் ஆராதிக்கப்படுகிறார்.


    கிம்புருஷ வர்ஷத்தில் ஸ்ரீராமராக ஹனுமானால் உபாஸிக்கப்படுகிறார் .


    பாரத வர்ஷத்தில் பகவான் நர நாராயணராக கல்பத்தின் முடிவு வரை தருமம் ,ஞானம் , வைராக்கியம், ஐஸ்வர்யம், சாந்தி,அடக்கம் இவற்றை வளர்த்து ஆத்மச்வரூபத்தை அடைவிக்கும் தவத்தை செய்கிறார்.
    இங்கு நாரத மகரிஷி வர்ணாச்ரம தர்மங்களுடன் கூடிய பாரத மக்களுடன் பகவானை பரமபக்தியுடன் வழிபடுகிறார். சாங்க்யத்தையும் யோகத்தையும் பகவானின் பெருமையையும் விளக்கும் பாஞ்ச ராத்ர ஆகமத்தை பகவானாலேயே உபதேசிக்கப்பெற்று ஸாவர்ண மனுவிற்கு உபதேசிக்கப்போகிறார் ,.


    பாரத வர்ஷத்தின் பெருமை விளக்கப்படுகிறது. பாரத வர்ஷத்தில் பிறந்தவர்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. விண்ணுலகம் (புண்யகர்மாவினால்) மண்ணுலகம் ( மறுபிறவி) அல்லது நரகம் ( பாப கர்மாவினால்) . இதன் வழியே சென்று சத்சங்கத்தின் மூலம் பாபங்களும் புண்ணியங்களும் தீர்ந்து முக்தியை அடைகின்றனர்.'


    தேவர்கள் இதன் பெருமையை பினவருமாறு உரைக்கின்றனர்.
    பாரத வர்ஷம் கர்ம பூமியாதலால் பகவத் பக்தியின் மூலம் முக்தி கிடைக்கிறது. யாக யக்ஞங்கள் மூலம் சுவர்க்க பதவி அடைந்து என்னபயன்? பாரத வர்ஷத்தில் பிறந்து மனித ஆயுள் குறைவானதாக இருந்தாலும் அதன் மூலம் பிறவிப்பிணியை தொலைக்க முடிகிறதே!


    பகவத் கதைகள் என்ற நதிகள் எங்கு பாயவில்லையோ, பக்தர்கள் எங்கு இல்லையோ , எங்கு பகவதாராதனங்களும் உத்சவங்களும் இல்லையோ அந்த இடம் தேவலோகமானாலும் விலக்கத் தகுந்ததே.


    ஹரிஸ்மரணையுடன் கூடிய
    பிறவி கிடைக்குமாகில் சுவர்க்க வாசம் கூட ஒரு பொருட்டில்லை. இந்த வர்ஷத்தில் ஹரியானவர் தம்மைப் பூஜிப்பவர்க்கு விசேஷ மங்களத்தை அருளுகிறார்.
Working...
X