Announcement

Collapse
No announcement yet.

Blessing M.Raja iyer- Periyavaaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Blessing M.Raja iyer- Periyavaaa

    Blessing M.Raja iyer- Periyavaaa
    பரமாச்சார்யா அனுக்ரஹம் - J.K SIVAN


    தமிழ் நாட்டில் ஒரு அரசியல் பிரமுகர் எம். ராஜா ஐயர் என்ற பிரபலம் காஞ்சி பரமாச்சாரியார் பக்தர். அவரது அனுபவத்தை அவர் மகன் சூர்யநாராயணன் நினைவு கூர்ந்து எழுதியதை படித்தேன். அதை சுருக்கி பரிமாற எண்ணம் எழுந்தது. அதுவே இது.


    ராஜா ஐயர் ஒரு பரோபகாரி. ஏழைகளுக்கு நிறைய உதவிகள் செய்தவர். வள்ளுவர் சொன்ன கிராமத்து பொது கிணறு எல்லாருக்கும் நீர் அளித்தது போல. 1974ல் மறைந்தார். அப்போது அவருக்கு ரெண்டு பெண்கள் மணமாகாமல் இருந்ததால், பொருத்தமான வரன்கள் கிடைக்காமல் மன வியாகூலம். குடும்பம் சிரமப்பட்டது. ''அப்பாவுக்கு பெரியவாளைத் தெரியுமே. போய் பாருங்களேன்'' குடும்ப நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.


    நடமாடும் தெய்வம் அப்போது கலவையில் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. 4.7.1975 சாயந்திரம் ஐயர் சூர்யநாராயணன் காது அருகே கிருதா, மீசை, சட்டையுடன் கலவை குளத்தருகே சென்றார். மனைவி சகோதரியோடு குளத்தின் அக்கரைக்கு சென்று பரமாச்சாரியார் வருகைக்கு காத்திருந்தார்.


    அவர் அருகே நெற்றியில் பெரிய விக்டோரியா ராணி கால வெள்ளி ரூபாய் மாதிரி குங்கும பொட்டு ,மஞ்சள் பூசிய முகம், வகிட்டில் குங்குமம் தொங்க தொங்க தாலி, மடிசார், மூக்குத்தி, காதில் ரெண்டுபக்கமும் பெரிய தோடு, இத்யாதி, கையில் மூங்கில் தட்டில் பழங்களோடு ஒரு வயதான சுமங்கலி மாமி காத்திருந்தாள்.


    மின்னல் மாதிரி பெரியவா மூன்று சிஷ்யர்களுடன் வந்தார். தன்னுடைய குரு சமாதியில் பிரார்த்தனை முடித்தார். அவர் பார்வை சூர்யநாராயணன் மேல் விழுந்த போது ஏதோ ஒரு அதிர்ச்சி. நடுக்கம். வார்த்தையால் விளக்க முடியவில்லை. மீண்டும் சற்று நேரத்தில் பெரியவாளின் அதே பார்வை. இதயம் வரை ஊடுருவி பார்த்தது. மெதுவாக பெரியவா சூர்யநாராயணன் அருகே நடந்து அவரைக் கடக்கும்போது து ஒரு சிஷ்யன் ''நீங்க யாருன்னு சொல்லுங்கோ ''என்று கேட்டான்.


    '' நான் ராமநாதபுரம் எம். ராஜா ஐயர் புள்ளை ' கொஞ்சம் உரக்க சூர்யநாராயணன் கத்தினது பெரியவா காதில் விழுந்தது. உள்ளே சென்ற பெரியவா சற்று நேரம் வெளியே வரவில்லை. பக்கத்தில் காத்திருந்த சுமங்கலி மாமி பொறுமை இழந்து பேசினாள்.


    சூர்யநாராயணனைப் பார்த்து '' ஏண்டாப்பா, இன்னிக்கு உன்னதமான வெள்ளிக்கிழமை. நான் பரமேஸ்வரனையே தரிசித்த பாக்யம் கிடைச்சுது. எதுக்கு நீ இந்தமாதிரி பேண்ட் சட்டை, கிருதா, மீசையோடு வந்தியோ தெரியல. அவரது தர்சனம் கிடைக்கற நேரத்தில் பெரிசா கத்தறே . இப்படி பண்ணறது நல்லதா ? பெரியவாளுக்கு தர மரியாதையா? சொல்லு ?


    சூ. நா. மனைவிக்கும் அந்த மாமி சொன்னது ஞாயம் என்று பட்டு பேசாமல் இருந்தாள். ''இவர் இப்படி கத்தியிருக்க வேண்டாம்''


    ''சரி நாம இங்கிருந்து தூர குளத்தை தாண்டி வாசல் பக்கம் போயிடுவோம்' என்று கணவனும் மனைவியும் முடிவெடுத்தார்கள். அப்படி நகரும் சமயம் உள்ளே இருந்து பேரொளி மீண்டும் வெளியே வந்தது. சூரியநாராயணன் மாமி சொன்னது ஞாபகம் வந்து சட்டென்று சட்டையை கழற்றினார். சுவர் அருகே ஓட்டினார்கள். அப்போது என்ன நடந்தது என்பதை எழுத முடியாது. அந்த அதிசயத்திற்கு அருகே இருந்தவர்கள் சாக்ஷி.


    பெரியவா கண்கள் ஐயர் சூர்யநாராய
    ணனைத் தேடின. ஜாடையில் யார் என்று கேட்டார்.


    கொஞ்சம் குரல் தாழ்த்தி '' ராஜா அய்யர் பிள்ளை, ராமநாதபுரம்''


    பெரியவா காதில் விழுந்தது. ஒரு சில நிமிஷங்கள் மௌனம். சில ஜாடைகள் செய்தார். சிஷ்யர்கள் அதை வார்த்தையில் வடித்தார்கள். பெரியவா ஜாடையாக சொன்னது ராஜா ஐயர் பற்றிய நினைவுகள்.
    சிஷ்யர்கள் விலாவாரியாக ஒரு நாற்பத்தைந்து நிமிஷம், ராஜா ஐயர் அப்போதைய ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் கரங்களில் தேசிய விருது வாங்கியது. மேல் சபையில் ராஜா அய்யர் வழங்கிய அளித்த பொது நல சேவைகள் பற்றி எல்லாம் கூறினார்கள். பெரிய கேட்டுக்கொண்டிருந்தது. அடாடா மஹா பெரியவா ஞாபக சக்திக்கு ஈடேது. சூ.நா. வுக்கு கு அப்பா பெருமையை பெரியவா மூலம் கேட்கும்போது கண்களில் நன்றிக் கண்ணீர் ஆறாக பெருகியது. குழந்தை மாதிரி தேம்பி தேம்பி அழுதார்.


    பெரியவா கேட்டார் ஜாடையாக: ''எதுக்கு இப்போ வந்தே?''


    ''ரெண்டு சகோதரிகளுக்கும் நல்ல வரன் கிடைக்கலே. கல்யாணம் தள்ளி போகிறது. கவலையாக இருக்கிறது . பெரியவா தரிசனம் பண்ணி ஆசீர்வாதம் பெற வந்தோம்.''


    பெரியவா கூட இருந்த பெரிய பெண்ணை பார்த்து ஜாடையாக ''இவளுக்கா?'' என்கிறார்.


    ''ஆமாம்''.


    பெரியகவா சிரித்துக்கொண்டே தன் கழுத்து ருத்ராக்ஷத்தை தடவி காட்டி 'கல்யாணத்துக்கு பெண்ணுக்கு நகையெல்லாம் ரெடியா ?'' என்று கேட்கிறார்.


    ''ஆமாம் பெரியவா. எல்லாம் ரெடியாக இருக்கு. பையன் தான் கிடைக்கலே ''


    பெரியவா கண்கள் மலர்ந்தன. அருகே இருந்த அந்த பெண்ணை புன்சிரிப்போடு பார்த்தார் தலை அசைத்தார். தெய்வத்தின் கைகள் ஆசிர்வாதித்தன. சாயந்திரலாம் மணி ஆறே முக்கால் ஆகிவிட்டது. வெளியே இருட்டு மயம். போக நேரமாயிற்று. எப்படி பெரியவாவிடமிருந்து உத்தரவு வாங்குவது?


    யாரோ சொன்னதால் ''பெரியவா நான் உத்தரவு வாங்கிக்கலாமா?''
    ஜாடையில் பதில் '' மட்றாஸ்லேருந்து எப்படி வந்தே?''
    ''கார்லே வந்திருக்கோம் பெரியவா ''
    அருகே சிஷ்யன் ஒருவனிடம் ''இன்னிக்கு மழையா?'' என்று ஜாடையில் கேட்க அவன் ''இல்லை'' என்கிறான்.


    சில நிமிஷ மௌனம். பிறகு சூர்யநாரா யணனிடம் ஜாடையில் ''போகும்போது ஜாக்கிரதை.'' அபய ஹஸ்தம் வாழ்த்தியது.
    கார் ரோடில் ஏறிய சில வினாடிகளில் பேய் மழை. காஞ்சிபுரம் வரவே இரவு 11மணி ஆகியது. 5.7.75 காலை ஐந்து மணிக்கு ஒருவாறு மெட்ராஸ் வந்து சேர்ந்தார்கள். செயதித்தாளில் 'காஞ்சிபுரம் இதுவரை முப்பது வருஷங்களில் காணாத பேய் மழை'' என்று கொட்டை எழுத்து.


    8.7.1975 - 1973ல் அப்பா இருந்தபோது யாரோ ஒரு S K . வைத்யநாதன் M B A வோடு ஜாதக தொடர்பு கொண்டிருந்தவர் ''ஹலோ ஹலோ என்று பம்பாய் லிருந்து கத்தி கொர கொர சத்தத்தில் பேசினார். '' இப்போ தான் என் கல்யாண விஷயமாக கொஞ்சம் மும்முரமா இறங்கி இருக்கேன் . அடுத்தமாசம் இதே தேதி 8.8.1975 மெட்ராஸ் வரேன். ஒரு சின்ன கண்டிஷன். பொண்ணு எங்கப்பா அம்மா இருக்கிற உடுமலைப்பேட்டைக்கு நீங்க அழைச்சுண்டு வந்து அவா OK சொல்லணும். இன்னொண்ணு. ஓஹோன்னு தாம் தூம் னு லாம் செலவு பண்ணவேண்டாம். சிம்பிளாக கல்யாணம் பண்ணினால் போதும். ஸ்ரீதனம் லாம் வாங்க மாட்டோம்.


    அப்புறம் என்னவா? பம்பாய்லே பொண்ணு கல்யாணமாகி சௌகர்யமாக ரெண்டு குழந்தைகளோடு இருக்கா


    சூர்யநாராயணன் சொல்வதை எத்தனை பேர் நாமும் என்றும் சொல்கிறோம்: வாழ்க்கையில் கண்கண்ட தெய்வம் என்று ஒருத்தரை சொன்னால் அது மகா பெரியவா. கோடிக்கணக்கான பக்தர்கள் அனுதினமும் அவர் கருணையில் வாழ்கிறோமே.


    ஒரு குட்டி அனுபந்தம்:


    சூரியநாராயணன் பெரிய உத்தயோகம் எல்லாம் பெரியவா அனுகிரஹத்தால் பெற்று இந்தியா திரும்பி அடையாறில் ''சங்கரம் '' என்று ஒரு வீடு கட்டி அங்கே தண்ணீர் இல்லாமல் BORE ரெண்டு தடவையும் பலன் தராமல் வருந்தி கடைசி முயற்சியாக போர் தோண்டிய அன்று பெரியவா ஜெயந்தி. விடிகாலை 4.30மணிக்கு எழுந்து ஸ்னானம் செயது பெரியவா த்யானம் .செய்தார். ஆட்கள் சப்தமாக போர் தோண்டிக்கொண்டிருக்க தண்ணீருக்கு பதிலாக புஸ் என்று காற்று தான் வந்து கொண்டிருந்தது. இதுவும் வீணா? சூர்யநாராயணன் தியானம் முடிந்து பெரியவா படத்துக்கு நமஸ்காரம் செய்து கொல்லைப்பக்கம் வந்து என்ன என்று விசாரித்த விசாரித்தபோது அவர் மனைவி ஜெட் பம்ப் வெறி பிடித்து நீரை பிரவாகமாக கக்குகிறது என்றாள்
    .
    நிறையபேர் தண்ணீர் இல்லை என்று அந்த பகுதியில் வீடுகளை விற்றுவிட்டு போன நேரம் அது. இதை பெரியவாளின் கருணை அனுக்கிரஹம் என்று சொன்னால் தப்பா? இயற்கையை மீறிய ஒரு செயல் தெய்வ அனுக்கிரஹம் தானே.
Working...
X