Announcement

Collapse
No announcement yet.

Hanuman's hunger -spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Hanuman's hunger -spiritual story

    #பரம பக்தனான ஆஞ்சநேயனுக்கு விருந்து செய்விக்க வேண்டுமென்று ஒரு நாள் ஸீதாபிராட்டிக்குத் தோன்றியது.
    #குழந்தாய்! இன்றைக்கு உனக்கு #என் கையால் #சமைத்துப் போடுவேன்.
    #நீ இங்கே சாப்பிடு என்றாள் ஜானகி.
    #ஹனுமானும் மிக ஆர்வத்துடன் #ஒப்புக் கொண்டார். ஸீதை தன் தோழிமார்களுடன் #பலவிதமான சாப்பாடுகள் தயார் செய்து #வைத்தாள். ஹனுமானும் ஸ்நானம் செய்துவிட்டு த்வாதச நாமம் போட்டுக் கொண்டு ராம ராம என்று #ஜபம் செய்து கொண்டே வந்து #சாப்பாட்டில்_உட்கார்ந்து கொண்டார்.


    ஸீதை தன் தோழிமார்களுடன் பரிமாறினாள். ஹனுமானோ போடப் #போட சாப்பிட்டுக் #கொண்டேயிருந்தார். ஸீதையால் #பரிமாறி #மாளவில்லை. ஸீதை சமைத்ததெல்லாம் #தீர்ந்துவிட்டது.
    ஸீதாபிரட்டிக்கு என்ன செய்வதென்றே #தெரியவில்லை. இனிமேல் பரிமாறுவதற்கு #ஒன்றுமில்லை. ஹனுமானோ போடு போடு என்கிறார். #அந்த ஸமயம் பார்த்து லக்ஷ்மணன் அங்கு #வந்தார். ஹனுமானின் பசியடங்க என்ன வழி? தெரியாத்தனமாகச் சாப்பிடக் கூப்பிட்டு விட்டேன் என்றாள் ஸீதை. அடாடா! அவருக்குப் போட்டு கட்டுக் கொள்ளுமா? இந்த சாப்பாட்டிலெல்லாம் அவருக்கு #த்ருப்தி வந்துவிடாது என்று சொல்லிவிட்டு, ஒரு துளஸீ தளத்தில் சந்தனத்தால்
    #ராம நாமத்தை எழுதி அவர் இலையில் கொண்டு #போட்டார் லக்ஷ்மணன். ஆஞ்சநேயரோ உடனே அதை #வாயில் போட்டுக் கொண்டு பெரிய #ஏப்பம் விட்டவாறே உடனே எழுந்திருந்து #போய்விட்டார்.


    (இதுவொரு ஹிந்தி கர்ணபரம்பரைக் கதை - ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அருளியது)
Working...
X