Announcement

Collapse
No announcement yet.

Lakshmikaram - Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Lakshmikaram - Periyavaa

    Lakshmikaram - Periyavaa
    பேசும் தெய்வம் J.K. SIVAN


    இதல்லவோ லக்ஷ்மீகரம்!


    ''தாத்தா, ''லக்ஷ்மீகரம், லக்ஷ்மீகரம்'' என்று சொல்கிறார்களே அது என்ன? என்றார் பரசுராமன். அவருக்கு எதிலும் கொஞ்சம் சந்தேகம் உண்டு. அடிக்கடி கேட்டதையே கூட திரும்ப திரும்ப கேட்டு புரிந்தால் போல் தலையை ஆட்டுவார். ரெண்டுநாள் கழித்து அதையே மறுபடியும் கேட்பவர்.


    எத்தனை தடவை தான் சொன்னால் என்ன குறைந்து போய்விடும். பெரியவா சொன்னதையே நாமும் இன்னொருதரம் நினைவு கூற இதனால் முடிகிறதே என்று நினைத்தேன். எவ்வளவு அழகாக பெரியவா சொல்கிறார். படியுங்கள் .


    ''பழைய காலத்தில் நமது முன்னோர்கள், பகவானை ஆராதிப்பதை, ஒரு நித்ய கடமையாக கொண்டிருந்தார்கள். அது சாஸ்திரம் சொல்வது போல நடக்கும் விஷயம். இறைவனை வழிபடாத நாளெல்லாம், வணங்காத நாள் எல்லாம் வீணான நாள் என்று அவர்கள் நம்பினார்கள்.


    அதனால், காலையிலோ மாலையிலோ இதற்கென்று, சிறிது நேரம் ஒதுக்கி,இறைவனை வழிபட்டால், சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும். ஆனால், பூஜைசெய்வதற்கென்று, சில விதிமுறைகள் உண்டு.


    பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும்வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்டவேண்டும். இதில், உங்களுக்கு சவுகரிய குறை ஏற்பட்டு, சிலவற்றை பூஜையில் வைக்க முடியா விட்டால், ''அட்சதாம் சமர்ப்பயாமி'' என்று சொல்லி விட்டால்போதும்.


    ஒரு கிரஹஸ்தர் வாத்தியாரை வைத்துக்கொண்டு இப்படித்தான் பூஜை செய்தார். பூஜா திரவியங்கள் எல்லாம் சரியாக வாங்கி வைக்கவில்லை. வாத்தியாரும் நிலைமையை புரிந்துகொண்டு அப்படி பூஜை செய்த போது, இல்லாத பொருளுக்கெல்லாம், அதன்பெயரைச் சொல்லி, ''அட்சதாம் சமர்ப்பயாமி'' (அதற்கு பதிலாக இதோ அக்ஷதை) என்று சொல்லச் சொல்லி கிரஹஸ்தரும் பூஜையை முடித்து விட்டார்.


    பூஜை செய்பவர் சாஸ்திரம் தெரிந்து அதன் படி சம்பிரதாயமாக பூஜை எல்லாம் நடத்திக்கொடுக்கும் சாஸ்திரிகளுக்கு தட்சிணை கொடுக்க வேண்டும்.


    க்ரஹஸ்தரோ பணம் கொஞ்சம் கணக்கு பார்ப்பவர். இழுத்துப் பிடிப்பவர். சாஸ்த்ரிகள் தான் எதாவது இல்லை என்றால் கொஞ்சம் அக்ஷதையை எடுத்து அதற்கு பதிலாக அக்ஷதாம் சமர்ப்பயாமி என்று சொல்லலாமே என்று கற்றுக்கொடுத்ததால் கடைசியில் ஸாஸ்திரிகள், அதாவது வாத்தியாருக்கு தக்ஷிணை கொடுக்கும் சமயத்தில் பூஜை முடிந்ததும், தட்சிணார்த்தம் அட்சதாம் சமர்ப்பயாமி என்றுசொல்லி, தட்சணைக்கு பதிலாக, அட்சதையை நீட்டினாராம். பூஜை செய்து வைத்த வாத்யார் கதி கலங்கிப் போய் ''என்ன இது? தட்சணை எங்கே?''. என்றார்


    '' அதுதான் எல்லாவற்றுக்கும் பதிலாக, அட்சதையே போதும் என்றீர்களே...பிடியுங்கள் தட்சிணைக்குப் பதிலாக அட்சதையை''... என்றார் க்ரஹஸ்தர் . குதிரைக்கு குர்ரம் என்றால் யானைக்கு யர்ரம் என்று சொல்கிற விஷயம்.


    பூஜையின் போது, தூபம், தீபம், விபூதி, கண்ணாடி, குடை, சாமரம், விசிறி இவைகளை சமர்ப்பணம் செய்வது வழக்கம். ஒவ்வொரு பொருளிலும் ஒரு தேவதை இருக்கிறது:


    தூபத்தில் அக்னிதேவன்,
    தீபத்தில் சிவன்,
    விபூதியில் மகேஸ்வரன்,
    கண்ணாடியில் சூரியன்,
    குடையில் சந்திரன்,
    சாமரத்தில் மகாலட்சுமி,
    விசிறியில் வாயுதேவன்.


    அதனால், இந்த உபசாரங்களோடு பூஜை செய்ய வேண்டும். நைவேத்யத்தின் போது முத்திரை காட்டுவது, துர்தேவதைகளை விரட்டி விடும். எல்லாருமே, மகாலட்சுமி நம்வீட்டுக்கு வர வேண்டும், என்று தான் எல்லோரும் விரும்புவார்கள். சிலர், மகாலட்சுமி படம் பேட்ட காலண்டரை வாங்கி வந்து, பூஜை அறை அல்லது ஹாலில் மாட்டி திருப்திப்படுவர்.விடியற்காலையில் எழுந்ததும் மகாலட்சுமியை தரிசனம் செய்தால் நல்லது என்பதற்காக, சிலர், படுக்கை அறையிலும் மாட்டி வைப்பர்.


    இல்லத்தரசியானவள், காலையில் எழுந்து பல் விளக்கி, குளித்து, நெற்றிக்கிட்டு,தலையை கோதி, வாசல் பெருக்கி, கோலமிட்டு, வீட்டுக்குள் வந்து சுவாமி படத்துக்குமுன் விளக்கேற்றி, நமஸ்காரம் செய்து, முடிந்தால் இரண்டு பூவை போட்டு, அதற்குபின் தான், காபி விஷயத்தை கவனிக்க வேண்டும். (இது ஆறுமணிக்கு முன் எழுபவர்களுக்கு மட்டும். நாரிமணிகள் 9 மணிக்கு எழுபவர்கள் அலாரம் வைத்துக் கொள்ளலாம். அதை மண்டையில் தட்டிவிட்டு மேலும் தூங்குபவர்கள் இந்த பாராவை படிக்கவேண்டாம்.)


    அத்துடன், வீட்டில், வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி,பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒருபிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்குட்டிக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். வீட்டில் ஆச்சார அனுஷ்டானங்கள் இருந்தாலே, மகாலட்சுமி வாசம் செய்வாள். மனசு வைத்தால்,இதையெல்லாம் செய்யலாம்.


    மகா பெரியவா சொல்லும் இந்த சிஸ்டம் .கைடன்ஸ், பின் பற்றி அனைவரும் சுபிக்ஷமாக, லக்ஷிமிகரமாக வாழ விழைகிறேன்.


    அது மகா பெரியவா வார்த்தைக்கு நாம் கொடுக்கும் மரியாதை. நமது நலனுக்காக. நம் சந்ததி நலனுக்காக.
Working...
X