Announcement

Collapse
No announcement yet.

ASTROLOGY-contd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ASTROLOGY-contd.

    .ராசி, அம்ச கட்டங்களில் கிரஹங்கள் அமைக்க:-உதாரண ஜாதகம்.


    இது யாருடைய ஜாதகமும் இல்லை. உதாரணதிற்காக குறிக்க பட்டது.
    தாது வருடம் பங்குனி மாதம் 27ந்தேதிக்கு சரியான 09-04-1997. புதன் கிழமை சுக்கில பக்ஷம் துதியை திதி 13-15. பரணி நக்ஷத்திரம் 42-52. இரவு 07-15 மணிக்கு சென்னையில் பென் குழந்தை சுப ஜனனம்.


    பங்குனி மாதம் 27 ம் தேதி.சூரிய உதயம் வாசன் பஞ்சாங்கம் படி 6.03.சென்னையில்.
    குழந்தை ஜனனம் இரவு 7-15 மணி.சூரிய உதயத்திலிருந்து எவ்வளவு நேரத்தில் குழந்தை பிறந்தது.என்று பார்க்க வேண்டும்.அந்த நேரத்தை கண்டறிய பகல் 12 மணிக்குள் என்றால் பிறந்த நேரத்திலிருந்து சூரியோதய நேரத்தை அப்படியே கழித்துக்கொள்ளலாம்.பகல் 12 மணிக்கு மேல் ஆனதால் 12+7.15=19-15. -6-03=13.12 அன்று சூரிய உதயத்திலிருந்து 13 மணி 12 நிமிஷத்தில் குழந்தை பிறந்துள்ளது.


    மற்றொரு குழந்தை இரவு 2 மணி 20 நிமிஷத்திற்கு பிறந்து இருந்தால் எப்படி கணக்கிட வேண்டும்.
    ஒரு நாளின் மொத்த மணி 24. 24.00+2.20=26.20.சூரிய உதய நேரம்=6.03.குழந்தை பிறந்த நேரம்=26-20-6.03=20.17.


    சில பஞ்சாங்கங்களில் சென்னை சூரிய உதயம் பங்குனி 21ம் தேதி 6-06 என்று இருக்கும். சித்திரை 1ம் தேதி சூரிய உதயம் சென்னையில் 6-01 என்று இருக்கும். மற்ற ஊர்களுக்கும் வரிசையாக கொடுத்து இருப்பார்கள். உதாரண ஜாதக குழந்தை பிறந்தது பங்குனி 27,


    ஆதலால் இன்று சூரிய உதயம்= பத்து நாட்களில் சூரிய உதயம் 5 நிமிடம் குறைந்துள்ளது
    பங்குனி 21 டு 26 =6 நாட்களில் 3 நிமிடம் குறைத்து உதய நேரம் 27ம் தேதியன்று 6-03 என்று கொண்டு வர வேண்டும்.


    ராசி இருப்பு தசா புக்தி காண நாழிகை முறையே அனுசரிக்கபடுகிறது. அதனால் 13 மணி 12 நிமிஷத்தை நாழிகை ஆக்கி கொள்ள வேண்டும். 24 மணி க்கு 60 நாழிகை;


    12 மணிக்கு 30 நாழிகை+1 மணிக்கு 2.30 நாழிகை+ 12 நிமிடத்திற்கு 0.30 நாழிகை=30.00+2.30+0.30=33 நாழிகை. சூரிய உதயத்திலிருந்து குழந்தை 33 நாழிகையில் பிறந்துள்ளது. 24 நிமிஷம் ஒரு நாழிகை; 60 வினாடி ஒரு நாழிகை.


    அன்று துதியை திதி 13.15 வரைக்கும் அதாவது பகல் 11 மணி 21 நிமிடம் வரை தான் உளது
    உதாரண ஜாதக ஜனன நேரம் இரவு 7.15 மணி. ஆதலால் த்ருதியை திதியில் பிறந்துள்ளது.


    நக்ஷத்திரம் பாதம் அறிதல்:- பங்குனி மாதம் 27 ம் தேதி பரணி நக்ஷத்திரம் நாழிகை 42.52 வரையிலுள்ளது. =அது இரவு 11 மணி 12 நிமிடம் வரை உள்ளது. குழந்தை 7 மணி 15 நிமிடத்திற்கு பிறந்து விட்டது. ஆதலால் பரணி நக்ஷத்திரம் என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம். பரணி நக்ஷதிரத்தின் பரம நாழிகை கணக்கிட வேண்டும்.


    பங்குனி மாதம்26ம் தேதி பஞ்சாங்கத்தில் அசுவினி நக்ஷத்திரம் 46.12 என்று உள்ளது. ஆதலால் முதல் நாள் 46.12 நாழிகைக்கு மேல் பரணி நக்ஷத்திரம் ஆரம்பம். ஓரு நாளுக்கு 60 நாழிகை. ஆதலால் 60.00-46.12= 13.48 நாழிகை பரணி உள்ளது.


    குழந்தை பிறந்த புதன் கிழமை அன்று பரணி நக்ஷத்திரம் 42.52 வரை உள்ளது. ஆதலால் 42.52+13.48=56.40. ஆதலால் பரணி நக்ஷத்திரம் பரம நாழிகை= மொத்த நாழிகை 56.40.

    இந்த நக்ஷத்திரத்தில் முன்னால் சென்று விட்ட 13.48+குழந்தை ஜனனமான 33.00ம் கூட்ட 46.48 நாழிகை என்று வரும். பரணி நக்ஷத்திரம் மொத்த நாழிகை 56.40. இதில் சென்று விட்ட நாழிகை 46.48. ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள். பரம நாழிகை56.40/ 4=14.10. ஆக ஒரு பாதத்திற்கு 14.10 நாழிகை; இரண்டாம் பாதம் 14.10 நாழிகை; 3ம் பாதம் 14.10 நாழிகை மொத்தம் 42.30. குழந்தை ஜனனமான நாழிகை 46.48. ஆதலால் பரணி நக்ஷத் திரம் நான்காம் பாதம் என்று அறிய வேண்டும்.



    அடுத்தது யோகம் அறிதல்:- பங்குனி மாதம் 27ம் தேதி புதன் கிழமை ஆரம்பத்தில் விஷ்கம்ப யோகம். 4.47 முடிய. பிறகு ப்ரீதி யோகம் 58.05 வரை உள்ளது. புதன் கிழமை குழந்தை ஜனனம் 33 நாழிகையில். ஆதலால் ப்ரீதி யோகம் என்று எடுத்துகொள்ள வேண்டும்.


    கரணம் அறிதல்:- புதன் கிழமை அன்று கெளலவ கரணம் 13.19 நாழிகை வரை உள்ளது. அதற்கு மேல் தைதுல கரணம்.இந்த தைதுல கரனம் மறு நாள் காலை 8.42 நாழிகை வரை உள்ளது. ஆதலால் குழந்தை ஜனனம் 33 நாழிகை ஆனதால் தைதுல கரணம் என்று எடுத்து கொள்ள வேண்டும்.


    பெளர்ணமிக்கு மறு ப்ரதமை முதல் அமாவாசை முடிய தேய் பிறை=க்ருஷ்ண பக்ஷம்.
    அமாவாசைக்கு மறு ப்ரதமை முதல் பெளர்ணமி முடிய வளர்பிறை=சுக்ல பக்ஷம்.


    இப்போது லக்னம் கண்டறிய வேண்டும்.

    பூ மண்டலதிலிருந்து பார்க்கும் போது கீழ் வானம் எந்த ராசியில் பூமியை சந்திப்பதாக தோற்றமளிகிறதோ அது தான் லக்னம். ஒவ்வொரு நாளும் பூமி நான்கு நிமிடங்களுக்கு ஒரு பாகை வீதம் சுழன்று கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 360 பாகைகள் சுழள்கிறது. இவ்வாறு சுழன்று வரும் போது குழந்தை ஜனனம் ஆகும் போது கீழ் வானத்தில் எந்த ராசி


    உதயமாகிறதோ அதையே ஜனன லக்னம் அல்லது உதய லக்னம் என்று சொல்கிறோம்.இந்த அடிபடையில் தான் பிறந்த லக்னத்தை கணக்கிட்டு அறிய வேன்டும். சூரிய உதயத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ராசிக்கு உறிய இராசிமான சங்கியை மாறு பட்டிருக்கும்.


    மேல் நாடுகளில் சூரியனின் சலனத்தை அடிபடையாக கொண்டு பலன் அறிகிறார்கள். இது சாயன முறையாகும். இதில் அயனாம்சம் சேர்த்து கணிக்க பட்டிருக்கும்.
    இந்தியாவிலும் கீழை நாடுகளிலும் சந்திரனின் சலனத்தை அடிப்படையாக கொண்டு நிராயன முறையில் அயனாம்சம் இல்லாமல் கணிக்க படுகிறது.


    ஒவ்வொரு நாளும் கீழ் வானத்தில் லக்னம் தோன்றும் நேரம் சம சீராக இருக்காது. வான மண்டலம் நீள் வட்டமாக அமைந்து இருப்பதாலும் , பூமியின் மேற்பரப்பில் பூமத்ய ரேகையிலிருந்து ஒவ்வொரு அக்ஷாம்சத்திற்கும் சரிவு ஏற்பட்டிருப்பதாலும் ஒவ்வொரு ராசியும் தோன்றும் நேரம் வேறு பட்டிருக்கும்.


    அதனால் ஒவ்வொரு ராசிக்கும் ராசிமான சங்கியை மாறுபடும். பிறந்த ஊர் எதுவோ அந்த ஊரின் அக்ஷாம்சத்திற்கு ஏற்ப ராசிமான சங்கியை மாறுபடும்.ஜாதகம் கணிக்க இருப்பவர் பிறந்த ஊரின் அக்ஷாம்சத்திற்கு ஏற்றதான சங்கியை எடுத்துகொள்ள வேண்டும்.


    60 நாழிகை=24 மணி நேரம்= 12 ராசிகள். ஒவ்வொரு நாளிலும் சூரிய உதயத்திலிருந்து இந்த ராசிமான சங்கியை கணக்கிட்டு வர 12 ராசிகளின் கால அளவு தெரியும். ஒவ்வொரு மாதமும் சூரியன் இருக்கும் ராசியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

    கார்த்திகை மாதத்தில் சூரியன் வ்ருச்சிக ராசியில் சஞ்சரிப்பான்.அன்று முதல் ராசி விருச்சிகம் ஆகும்.ஆரம்ப லக்னம் விருச்சிகம் ஆகும். ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் ராசிமான சங்கியையின் முழு கால அளவு இருக்கும். அது ஒவ்வொரு நாளும் சூரிய உதய காலத்தில் 9 வினாடிகள் = 4 நிமிடங்கள் வீதம் குறைந்து கொண்டே வரும்.பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு நாளும் ராசி இருப்பு என்ற காலத்தில் கீழ் கொடுக்க பட்டிருக்கும்.


    இதன் அடிபடையில் அன்றைய தினம் அந்த ராசியின் இருப்பையே உதய லக்னமாக கொண்டு அடுத்த ராசி மான சங்கியை கூட்டி குழந்தை ஜனனமான நேரத்தில் எந்த ராசி வருகிறதோ அதையே ராசி கட்டத்தில் ஜன்ம லக்னமாக குறிக்க வேன்டும்.


    குழந்தை பிறந்தது சென்னையில். சென்னையின் அக்ஷாம்சம் 13* .சென்னையை சுற்றி சுமார் 120 கிலோ மீட்டருள்ள ஊர்களுக்கும் இதுவே பொருந்தும். 13* அக்ஷாம்சத்திற்குரிய ராசிமான சங்கியை பஞ்சாங்க உதவி கொண்டு கணக்கிட வேண்டும்.


    வடக்கு (உத்திர) அக்ஷாம்சத்திற்குரிய ராசிமான சங்கியை ஒவ்வொரு டிகிரிக்கும் ஒவ்வொரு ராசிக்கும் ராசி மானம் குறிக்க பட்டிருக்கும். நாம் நிராயண முறையில் உள்ளதை எடுத்து க்கொள்ள வேண்டும்.


    இந்த ராசிமான சங்கியை ஒவ்வொரு மாதத்திலும் ஆரம்பத்திற்குடையது. பங்குனி மாதம் 27ம் தேதிக்கு நேராக பஞ்சாங்கத்தின் ராசி இருப்பு என்ற தலைப்பின் கீழ் உதய லக்ன முடிவு அல்லது மீன இருப்பு என்று கொடுத்திருக்கிறார்கள். இதில் மீனம் 0.38 என்று இருப்பதை காணலாம்.


    மீன லக்ன ஆட்சி0.38+மேஷ லக்ன ஆக்ஷி4.29 நாழிகை/வினாடி; ரிஷபம் 5.04;மிதுனம்5.27;கடகம் 5.22;சிம்மம்5.08; கன்னி 5.04; மொத்தம்31.12;துலாம் 5.16 மொத்தம் 36.28; குழந்தை பிறந்தது 33 நாழிகை. ஆதலால் துலாம் லக்னம் என தீர்மான மாகிறது.


    இந்த துலா லக்னத்தில் எத்தனாவது பாகை கலையில் லக்னம் வருகிறது என்று பார்க்க வேண்டும்.
    கன்னி வரைக்குமான நாழிகை,வினாடி 31.12; துலாம் வரைக்குமான நாழிகை 36.28. குழந்தை ஜனனமானது 33 நாழிகை; அப்படியானால் துலாம் இருப்பு 3.28; துலாம் ராசிமான சங்கியை 5.16; இதில் துலாம் ராசிக்கான இருப்பு 3.28; அப்படியானால் துலாமில் சென்றது 1.48;


    ஒவ்வொரு ராசியும் 30 பாகை கொன்டது. துலா ராசிக்கு 30 பாகையை கடக்க ஆகும் நேரம் 5 நாழிகை 16 வினாடி. 30 பாகை கடக்க 5.16 நாழிகை;1.48 நாழிகைக்கு எத்தனை பாகை
    கடந்திருக்கும். 5 x 60=300+16 வினாடி=316 வினாடிகள்.1.48 நாழிகை=60+48=108 வினாடிகள்.


    ஒரு ராசி 30பாகை இதை கலைகள் ஆக்கவேண்டும். 30x 60=1800 கலைகள். 316 வினாடிகளில் 1800 கலைகள் கடக்கும்108 வினாடிகளில் எத்தனை பாகை கடந்திருக்கும்.
    108/316 1800. =108 x 1800=194400/316=ஈவு 615 கலைகள் மீதி 160. விகலைகள்.


    இந்த ஈவு 615 கலைகளை பாகை யாக்க 615/60=10 பாகை 15 கலை; துலாம் ராசியின் ஆரம்ப பாகை 180.00 கடந்தது 10.15 மொத்தம் 190.15. இது தான் லக்ன ஸ்புடம். இந்த லக்ன ஸ்புடம் செய்வதில் நூலுக்கு நூல் வேறுபாடு உள்ளது. இது எளிய முறையாக இருக்கிறது.


    30 பாகை=ஒரு ராசி; 60 கலை ஒரு பாகை;60 விகலை=ஒரு கலை;60 உபவிகலை=ஒரு விகலை.
    திருக்கணித பஞ்சாங்கத்தின் துணையுடன் நிராயனப்படி கணிக்க படுவது தான் எல்லா ஊருக்கும் பொருந்துவதாக இருக்கும்.பஞ்சாங்கத்தில் குறிக்க பட்டிருக்கும் கிரக பாத சாரங்களை கொன்டு இராசி கட்டத்தில் கிரஹங்களை குறித்து விடலாம்.
    ஆனால் வாசன் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஒன்றாவது வாக்கியத்தை பயன்படுத்தி குறிப்பது தான் துல்லியமாக இருகிறது.

    உதாரண ஜாதகபடி பங்குனி மாதம் 27ம் தேதி நிலையை ஒன்றாவது வாக்கியத்தின் படி அறிவோம். நிராயனப்படி. சூரியன் பாகை355 கலை 30.; சந்திரன் 16.17;செவ்வாய் 145.20;
    புதன் 14.02; குரு 292.42. சுக்கிரன் 357.08; சனி 347.42; ராகு 154.11; கேது 334.11; ராஹுவுக்கு கூறப்பட்டதுடன் 180*யை கூட்டி கொன்டதே கேதுவிற்கு உரியதாகும்.


    பங்குனி மாதம் காலை 6.03 மணிக்குண்டான நிராயண பாகையாகும். ஆனால் குழந்தை பிறந்தது அன்று 33 நாழிகையில். அந்த நேரத்தில் இருந்த ஸ்தானத்தை அறிவதே ஸ்புடம் செய்வதாகும்.


    அதற்கு பங்குனி மாதம் 27ம் தேதிக்கும் 26ம் தேதிக்கும் உள்ள வேறுபாட்டை அறிய அந்தந்த கிரஹம் ஒரு நாளில் கடக்கும் தூரத்தை அறிய வேண்டும். இதையே தின கதி என்பர்.ஒவ்வொரு கிரஹத்தின் சஞ்சார நேரம் மாறுபாடு உள்ளதால் தின கதியில் ஒவ்வொரு




    கிரஹத்திற்க்கும் வித்தியாசம் உள்ளது.27ம் தேதிப்படி சூரியனின் பாகை கலை 355.30. 26ம் தேதி 354.31. தினகதி 0.59. சந்திரனுக்கு 16.17-1.53=14.24.
    செவ்வாய்;-145.20-145.35=0.15 வக்கிர கதி; புதன்:-14.02-13.20=0.42; குரு:-293.02-292.32=0.30;


    சுக்கிரன்:-357.08-355.54=1.14; சனி 347.42-347.34=0.08; ராகு:-154.11-154.14=0.03.கேது:-334.11-
    334.14=0.03.


    சூரியன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் ஆகிறது.
    சந்திரன் ஒரு ராசியை கடக்க 2.25 நாட்கள் ஆகிறது.
    செவ்வாய் ஒரு ராசியை கடக்க 1.5 மாதங்கள் ஆகிறது.


    புதன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் ஆகும்.
    குரு ஒரு ராசியை கடக்க ஒரு வருடம் ஆகும்.
    சுக்கிரன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் ஆகிறது.


    சனி ஒரு ராசியை கடக்க 2.5 ஆன்டுகள் ஆகிறது.
    ராகு, கேது இருவருக்கும் ஒரு ராசியை கடக்க 1.25 ஆண்டுகள் ஆகும்.


    ராகு கேது அப்பிரதக்ஷிணமாக சுற்றுவதால் அவர்களின் பாகை முந்தய நாளுக்கு
    பிந்தைய நாள்குறைந்து கொண்டே வரும்.

    செவ்வாய்க்கு முந்தைய நாளை விட பிந்தைய நாள் குறைந்து காணப்படுகிறது.
    இதற்கு காரணம் செவ்வாய் வக்ர கதியில் உள்ளது.
    இனி ஒவ்வொரு கிரஹத்தின் ஸ்புடத்தை பார்ப்போம். உதாரண ஜாதகப்படி ஜாதகர் பிறந்தது இரவு 7.15 மணிக்கு. அன்று சூர்ய உதய நேரம் மணி 6.03. சூரிய உதயத்திற்கு பின் ஜனன நேரம் வரைக்குமான நேரம் என்ன என்பதை அறிய வேண்டும்.


    இரவு 19.15-6.03=13 மணி 12 நிமிடம்.இதை அடிப்படையாக கொண்டு தான் கிரஹ ஸ்புடம் செய்ய வேண்டும்.


    சூரியனுக்கு ஸ்புடம்;- சூரியனின் தின கதி 59 கலை. அதாவது 24 மணி நேரத்தில் சூரியன் 59 கலை சஞ்சரிக்கிறான். 13 மணி 12 நிமிடத்திற்கு எவ்வளவு தூரம் சஞ்சரிப்பான் என்பதை கணக்கிட வேண்டும்.59 X13.12=778.48/24=32.27.=32 கலை 27 விகலை.இதில் 27 விகலையை விட்டு விட்டு 27ம் தேதி கண்டுள்ள 355.30 உடன் கூட்ட வேன்டும்.355.30+0.32=356.02. இதுவே சூரியனின் ஸ்புடம்.


    சந்திரனின் ஸ்புடம்:- சந்திரனின் தின கதி 14.24. இதை கலையாக மாற்ற வேன்டும். 14X 60=840+24=864 கலைகள். 13.12X 864=11404.48. இதில் 48 விகலையை விட்டு விடலாம்.
    11404/24=475 கலை 5 விகலை. 475 கலைகளை பாகை கலைகளாக்க 475/60=7 பாகை 55 கலையாகிறது. சந்திரனின் 27ம் தேதிப்படி 16.17+7.55=24.12. சந்திரனின் ஸ்புடம்=24.12.


    செவ்வாய்க்கு ஸ்புடம்:- செவ்வாயின் தின கதி 15 கலை. 13.12X 15=198.00/24=8.15. இதில் விகலை 30க்கும் குறைவாக இருப்பதால் 8 கலையை மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்.
    செவ்வாய் வக்ர கதியில் இருப்பதால் கழிக்க வேண்டும்.145.20-0.8=145.12. செவ்வாயின் ஸ்புடம்=145.12.


    புதனின் ஸ்புடம்:- புதனின் தின கதி 42 கலை.13.12X 42=554.24 554.24/24=23.6. 14.02+0.23=14.25. புதனின் ஸ்புடம் 14.25.


    குருவின் ஸ்புடம்:- குருவின் தின கதி 30 கலை. 13.12 X30=396.00/24=16.30. 292.42+0.16=292.58 குருவின் ஸ்புடம் 292.58.


    சுக்கிரனின் ஸ்புடம்:- சுக்கிரனின் தின கதி 1.14 =74 கலைகள். 13.12X 74= 976.48/24=
    40.48 இதில் விகலை 48 ஆக வருவதால் 30க்கு மேல் வருவதை 1 கலையாக கொள்ளலாம். 30 க்கு கீழ் வந்தால் விட்டு விடலாம்.357.08+0.41=357.49.சுக்கிரனின் ஸ்புடம் 357.49.

    சனியின் ஸ்புடம்:- சனியின் தின கதி 8 கலை. 13.12X 8=105.36/24=4.24. 347.42+0.04=347.46.
    சனியின் ஸ்புடம் 347.46.


    ராகுவின் ஸ்புடம்:- ராகுவின் தின கதி 3 கலை. 13.12 X 3=39.36/24=1.39 விகலை 30கு மேல் வருவதால் 1+1= 2 கலை எனலாம்.இதை ராஹுவின் பாகையிலிருந்து கழிக்க 154.11-0.02=154.09 ராகுவின் ஸ்புடம்=154.09.


    கேதுவின் ஸ்புடம்:- 154.11+180.00=334.11-0.02=334.09. கேதுவின் ஸ்புடம்=334.09.


    செவ்வாய் மார்கழி மாதம் 2ம் தேதி=17-12-1996 அன்று கன்னியில் ப்ரவேசமானது. அன்று 149.55 பாகையிலிருந்து படிபடியாக உயர்ந்து தை மாதம் 24ம் தேதி வரை 162.14 பாகை வரை வந்தது. அதற்கு மேல் வக்ரம் ஆரம்பமாகி 162.14இல் இருந்து படி படியாக குறைந்து 145.12க்கு நாம் கணக்கிட்ட நாளுக்கு வந்துள்ளது.


    பஞ்சாங்கத்தின் முன் பக்கங்களில் கிரஹ பாத சாரங்கள் என்ற தலைப்பின் கீழ் கிரஹங்களின் சஞ்சார நிலை குறிக்க பட்டிருக்கும். அதன் படி நம் உதாரண ஜாதக பங்குனி மாதம் 27 ம் தேதி சார நிலை ஒவ்வொரு கிரஹத்திற்கும் பார்க்கவும்


    .சூரியனுக்கு பங்குனி மாதம்27ம் தேதி இல்லை எனில் அதற்கு முன் 24ம் தேதியில் உள்ளது. பிறகு 28ம் தேதி குறிக்க பட்டுள்ளது. 24ம் தேதி நிலையே 27ம் தேதிக்கும் என்று அறிய வேண்டும்.


    சூரியன் ரேவதி3ம் பாதம். மீன ராசியில் சூரியனை போட வேண்டும். சந்திரன் பரணி 4ல் மேஷ ராசியில் சந்திரனை போட வேண்டும். பஞ்சாங்கத்தில் ராசிகு பக்கத்தில் அம்சத்தில் எங்கு போட வேன்டும் என்பதையும் கொடுத்து விடுகிறார்கள். ஆதலால் கும்பம் நவாம்ச கட்டத்தில் சூரியனை போடலாம். சந்திரன் பரணி4 மேஷ ராசி விருச்சிக நவாம்சம்.


    செவ்வாய் வக்ரம் பூரம் 4ல் சிம்மம் ராசி. புதன் பரணி1ல் மேஷ ராசி; குரு திருவோணம் 4ல் மகரம்; சுக்கிரன் ரேவதி 4ல் மீனம்; சனி ரேவதி 1ல் மீனம்; ராகு உத்திரம் 3ல் கன்னி;
    கேது உத்திரட்டாதி1ல் மீனம். ராசி கட்டத்தில் இந்த கிரஹங்களை போடலாம்.


    ஜனன சமய நிர்ணயம்.:-

    வாராஹி ஹோரை , 4ம் அத்தியாயம், மூன்றாவது செய்யுளில் எப்படிபட்ட கிரஹ நிலையில் ஆண் பெண் சேர்க்கை ஏற்பட்டால் அது கர்பத்தை உண்டுபண்ணும் என விளக்க மாக உள்ளது. ஆதான சமயத்தின் அடிபடையில் ஜாதகம் கணிப்பது என்பது அனேகமாக நடவாத காரியம் என்றே சொல்லலாம். ஆதான லக்ன ஜாதகம் கணித்தால் பாலாரிஷ்டம்


    மூன்று தோஷங்கள், முக்கோபங்கள்; சாபங்கள் இவற்றை சுத்தமாக அறியலாம்.


    ஜலோதய சமயம்:-இதை தமிழில் நீர்குடம் உடையும் நேரம் என்பார்கள். பிரசவ வேதனையில் இருக்கும் பெண்மணி ஓரளவு சொல்லி விடக்கூடும். இதுவும் ஓரளவு தான் சரியாக இருக்கும்.இம்மாதிரி கணித்து பார்க்கும்போது ஆயுள் நிர்ணயம், மாதுர் பிதுர் சுகம்
    நோயற்றவாழ்வு;இவற்றை ஆதாரமாக கொண்டு சொல்லலாம் எங்கிறது சாஸ்திரம்.


    சிரோதய சமயம்:-இயற்கை பிரசவ குழந்தையை பொருத்த மட்டில் சுலபம் தான். பிரசவ அறையில் இருப்பவர்கள் இதை கண்டுபிடித்து சொல்லலாம். ஆனால் இதை சுத்தீகரணம் செய்தோமானால் சுலபமாக ஜனன சமயத்தை நிர்ணயித்து விடலாம்.

    பூப்பதன சமயம்:-பூமியில் விழுவது என்று அர்த்தம்.குழந்தையை கர்பபையிலிருந்து வெளியே எடுத்து இடும் சமயம். எல்லோரும் இந்த சமயத்தை தான் ஜனன சமயமாக கருதுகிறார்கள். குழந்தை முதன் முதலில் அழும் சப்தம். இதன் மூலம் தான் முதன் முதலில் வெளியே குழந்தை சுவாசிக்க ஆரம்பிக்கிறது.




    அறுவை சிகிட்சை
    அல்லது இதர முறைகள் மூலம் பிறக்கும் குழந்தைகளின் சிரோதய சமயம் என்ன என்பது சர்ச்சைக்குறிய விஷயம் தான்.தாயின் கர்ப்ப பையிலிருந்து சிசுவை வெளியே எடுத்து போட்டவுடன் தான் அதை ஜனித்த குழந்தை என்று சொல்கிறோம். அறுவை மூலம் தாயின் கர்ப்பபை திறக்கபட்டதும் குழந்தை பூமியின் காற்றை உட்கொள்ள ஆரம்பித்து விடும்.அதை தான் சிரோதய காலமாக எடுத்துக்கொள்ள வேன்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.


    நாள கண்டனம்:- இது சற்று தாமதமான செயலாகும்.தொப்புள் கொடியை நறுக்கி எறியும் சமய மாகும். சிலர் இது தான் உண்மையான ஜனன நேரம் என் கிறார்கள்.இதன் பிறகு தான் குழந்தைக்கு சுய உணர்வு வருகிறது என் கிறார்கள்.


    இனி ஜனன சமயத்தை சுத்தீகரணம் செய்யும் முறை யை பார்ப்போம். மாந்தி உதய நேரப்படி ஜனன கால சுத்தீகரணம், மற்றும் தத்துவா தத்துவ முறை


    மாந்தி ஒவ்வொரு நாளும் பகலிலும், இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உதயமாகிறது.
    அன்றாட சூரிய உதய நேரத்தின் மற்றும் அஹஸின் அடிபடையில் மாந்தி உதய ஸ்புட பாகை , கலை அல்லது நாழிகை, வினாடிகளில் கணிக்கிறோம்.


    மாந்தி ஸ்புடத்தை 81ல் பெருக்கி27ஆல் வகுத்து ஈவை களைந்து மீதி வருவது குழந்தையின் ஜனன நக்ஷத்திரம் அல்லது அதன் ஜன்மானுஜன்ம மாக இருந்தால் அந்த குழந்தையின் பிறந்த நேரம் சரியாக கணிக்க பட்டிருக்கிறது என்று சொல்லலாம். வித்தியாசம் வந்தால் ஒரு பாகைக்கு 10 வினாடிகள் வீதம் குறைத்தோ கூட்டியோ சரியான ஜனன நேரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.


    உதாரணம்:- ஜாதகி பிறந்த நாள் செவ்வாய் கிழமை; மிருக சீர்ஷம் நக்ஷத்திரம் அன்று குளிகை உதய நேரம் உதயாதி 18 நாழிகை ; அன்றைய பகல் அகஸ்31 நாழிகை32 வினாடிகை; மாந்தி உத்யம் காண 18ஐ 30ஆல் வகுத்து 31 நாழிகை 32 வி நாடிகளால் பெருக்க வேண்டும். எனவே மாந்தி உதயம்


    சூரிய உதயாதி 18 நாழிகை, 54 வினாடிகள் ஆகும். நக்ஷத்திர ஹோரைப்படி அதன் ஸ்புடம் 179 பாகை 23 கலையாகும். =5 ராசி 29 பாகை 23கலை. இந்த 29.23 ஐ 81ஆல் பெருக்கி 27ஆல் வகுக்க மீதி வருவது 13ஆவது நக்ஷத்திரமாகும். அதாவது ஹஸ்தம். ஜனன சமயத்துடன் பத்து வினாடி வீதம் கூட்டினால் சித்திரை வரும்.


    உத்திர காலாம்ருதத்தில் தத்துவா தத்துவ முறை கொடுக்க பட்டிருக்கிறது.பஞ்ச பூத கிரஹங்களை இவ்வாறு பாகுபடுத்தி உள்ளார்கள்.
    புதன்-பூமி பூதம்; சந்திரனும் சுக்கிரனும் ஜல பூதம்; செவ்வாய், சூரியன் நெருப்பு பூதம்; சனி வாயு பூதம்; குரு ஆகாய பூதம்.


    ஒரு முறை பஞ்ச பூத கிரஹங்களின் ஒரு சுற்று முடிவதற்கு 90 நிமிடம் அல்லது மூன்றே முக்கால் நாழிகை அதாவது 225 வினாடிகைகளாகும்.


    இதி புதனுக்கு 15 வினாடிகைகள், சந்திரன் அல்லது சுக்கிரனுக்கு 30 வினாடிகைகள்; சூரியன் அல்லது செவ்வாய்க்கு 45 வினாடிகைகள்;சனிக்கு 60 வினாடிகை; குருவிற்கு75 வினாடிகை என்று கணக்கிட பட்டிருக்கிறது.


    ஒவ்வொரு நாளும் சூர்ய உதயத்தின் போது அந்தந்த நாளின் கிரகத்தின் தத்துவம் நிலவில் இருக்கும். பிறகு வரிசை கிரமமாக மற்ற கிரகங்களின் தத்துவங்கள் நிலவில் வரும்.


    உதாரணம்:- ஞாயிற்று கிழமை அன்று சூரிய உத்யம் முதல் 45 வினாடிகள் சூரியனுடைய நெருப்பு தத்துவம்; அடுத்த 60 வினாடிகள் சனியினுடைய வாயு தத்துவம்; அதற்கடுத்த 75 வினாடிகள் குருவினுடைய ஆகாய தத்துவம்; அடுத்த 15 வினாடிகள் புதனுடைய பூமி தத்துவம் அடுத்த 30 வினாடி சுக்கிரன் அல்லது சந்திரனுடைய ஜல தத்துவம்.இதற்கு பிறகுஇப்படியே தத்துவங்கள் இதே வரிசையில் சுழன்று கொண்டே இருக்கும்.


    திங்கட் கிழமை அன்று முதல் 30 வினாடிகள் சந்திரனின் ஜல தத்துவம்; அடுத்த 45 வினாடிகள் நெருப்பு தத்துவம்; அடுத்த 60 வினாடி வாயு தத்துவம்;அடுத்த 75 வினாடி ஆகாய தத்துவம்;ங்கடைசி 15 வினாடிகல் பூமி தத்துவம் இதே வரிசையில் நாள் முழுவதும் தத்துவங்கள் வந்து கொண்டே இருக்கும்.


    செவ்வாய் கிழமை முதல் 45 வினாடி நெருப்பு தத்துவம்; அடுத்து 60 வினாடி வாயு தத்துவம்
    அடுத்த 75 வினாடி ஆகாய தத்துவம்; அடுத்த 15 வினாடி பூமி தத்துவம்; அடுத்து 30 வினாடி ஜல தத்துவம். இதே போல் ஒவ்வொரு நாட்களும் காண வேண்டும். அப்படி இருந்தால் கூட ஒவ்வொரு தத்துவத்திலும் முழு நேரத்திற்கு மனித ஜனனம் இருக்குமென்று சொல்வதற்கில்லை. எனவே இவற்றை கணக்கிட்டு கீழ் கண்ட பட்டியலை நமக்கு தந்திருக்கிறார்கள்.


    தினசரி தத்துவ ஜனன பட்டியல்.
    ஆண்;- கிழமை ஞாயிறு0-15;105-165; 180-195.
    திங்கட் கிழமை:- 30-75; 135-150.
    செவ்வாய் கிழமை:-0-30;105-165.
    புதன் கிழமை:- 45-90;165-225.
    வியாழன்:-0-30;105-165;
    வெள்ளி:- 45-75;135-180.
    சனி:-60-105;180-195;


    பெண்:-
    ஞாயிறு கிழமை:-45-90;195-210;
    திங்கள்:-0-30;75-90;
    செவ்வாய்:-45-90;195-210;
    புதன்:-0-15; 15-30; 90-120;
    வியாழன்:- 90-105;165-195;
    வெள்ளி:-0-15;75-90;
    சனி:- 0-30;135-150;165-180;


    ஜனன சமயத்தை உதயாதி நாழிகையை வினாடிகளாக்கி 225 ஆல் வகுக்கவும். ஈவை களைந்து மீதியை மேல் எழுதிய மேல் எழுதிய பட்டியல் படி சரி பார்க்கவும்.


    ஜாதகத்தில் ஜனன நாழிகை 1 நாழிகை 30 வினாடிகள்= 90 வினாடிகைகள் ஜனன கிழமை செவ்வாய். ஸ்த்ரீ ஜனனம். 45-90 . இந்த ஜாதகி பிறந்த சமயம் ஒரு நாழிகை 30 வினாடிகள் சரியான ஜனன சமயம் என்று கொள்ளலாம்.


    குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட வினாடிகைகளில் குழந்தை பிறந்தால் தத்துவம் சரியானதாகும் என்று கருதலாம். அதை வைத்து சுத்தீகரணம் செய்யலாம்.இம்முறைகளில் ஜனன சமயத்தை சுத்தீகரணம் செய்து ஜாதகம் கணித்தால் வாழ்வில் ஏற்படும் சம்பவங்கள் தவறில்லாமல் இருக்கும்.
Working...
X