Announcement

Collapse
No announcement yet.

சந்திர க்ரஹனம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சந்திர க்ரஹனம்

    சந்திர க்ரஹனம் செவ்வாய் கிழமை அன்று வருகிறது. தர்ப்பணம் எப்பொழுது செய்ய வேண்டும் . மாத பிறப்பு தர்ப்பணம் எப்பொழுது செய்ய வேண்டும்.
    RAMANATHAN

  • #2
    Re: சந்திர க்ரஹனம்

    சந்த்ர க்ரஹணம்
    சந்த்ர க்ரஹணம் - ஆரம்பம் - 16ம் தேதி பின்னிரவு அதாவது 17ம் தேதி ஆரம்பத்தில் 1.32
    மத்திய காலம் 17ம் தேதி 3 மணி 1 நிமிடம்
    முடிவு காலம் 17ம் தேதி 4 மணி 30 நிமிடம்

    --------
    தர்ப்பணம் - மத்திம காலத்திற்குப் பிறகு முடிவு காலத்திற்குள்ளாகப் பண்ணவேண்டும்.

    -------------------------
    தக்ஷிணாயன புண்யகாலம்
    சென்னை நேரப்படி 17ம் தேதி காலை 11.34க்கு ஆடி மாதம் பிற்கிறது
    அதனால் அதற்கு முன்னதாக தர்பணம் செய்து முடித்துவிடவேண்டும்.
    குறிப்பு:- தக்ஷிணாயன புண்யகாலம் மாதம் பிறந்தபிறகு புண்யகாலம் இல்லை.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: சந்திர க்ரஹனம்

      16/07/2019 சந்த்ர க்ரஹண புண்யகால தர்ப்பணம்


      அதாவது ஆனி 31 ( 16.7.2019 ) செவ்வாய் அன்று நள்ளிரவுக்கு பிறகு ஆரம்பமாகும் உத்திராடம் நக்ஷத்திரத்தில் சம்பவிக்கிறது


      அன்று பின்னிரவுக்கு மேல் 03.00 மணிக்கு மத்தியமம் .


      க்ரஹண புண்யகால தர்ப்பணம் அதிகாலை 03.00 மணிக்கு மேல் ஸ்நானம் செய்து பிறகு செய்ய வேண்டும்.


      காலை 04.28 மணிக்கு மோக்ஷம் , க்ரஹணம் விட்டவுடன் மீண்டும் ஒரு முறை சுத்த ஸ்நானம் செய்யவும்.


      பூராடம், உத்திராடம், ச்ரவணம் க்ருத்திகை, உத்திரம் நக்ஷத்திரக் காரர்கள் பரிஹாரம் செய்து கொள்ளவும்.


      கர்ப்ப ஸ்திரீகள் க்ரஹண காலத்தில் சந்த்ரனை பார்க்க வேண்டாம் .


      க்ரஹண தர்ப்பணம் முடித்து ஸ்நானம் செய்த பின் மாதப் பிறப்பு தர்ப்பணம் செய்யும் முன்பு அதற்கென ஒருமுறை மீண்டும் ஸ்நானம் செய்த பின்பே தக்ஷிணாயன புண்யகால தர்ப்பணம் பண்ண வேண்டும்.


      ஆடி 01ம் தேதி ( 17/07/2019 ) புதன் அன்று 6.00 மணிக்கு சூர்ய உதயம் .
      அன்று முற்பகல் 11.38 மணிக்கு தான் கடக ரவி சங்க்ரமணம்.


      எனவே சூர்ய உதயம் ஆனவுடன் வழக்கம் போல அனுஷ்டான ஸ்நானம் செய்து பகல் 11.30 மணிக்குள் உத்தராயணம் இருக்கும் போதே ஆடி மாத பிறப்பு தக்ஷிணாயண புண்யகால தர்ப்பணம் செய்ய வேண்டும்.


      ஒரே நாளில் இரு தர்ப்பணமா என்று பலருக்கு சந்தேகம். இரண்டு தர்ப்பணங்களும் அவச்யம் செய்யவேணும்.


      ராம்... ராம்... ��


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment

      Working...
      X