Announcement

Collapse
No announcement yet.

ஊர்வசி சாபம் உபகாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஊர்வசி சாபம் உபகாரம்

    ஊர்வசி சாபம் உபகாரம் இந்த பழமொழி மலையாளிகளால் அடிக்கடி உபயோகப்படுத்தப்படுகிறது இதன் அர்த்தம் என்ன? அது என்ன சாபம் எப்படி உபயோகமாகிறது தயவுசெய்து விளக்கவும்

  • #2
    Re: ஊர்வசி சாபம் உபகாரம்

    ஶ்ரீ:
    அர்ஜுனன் இந்த்ர லோகத்திற்கு போயிருந்தபோது,
    ஊர்வசி (இந்த்ரன் சொல்படி) அவனை மகிழ்விக்க நெருங்கினாள்.
    அவனோ, இந்த்ரன் எனக்குத் தந்தை, அதனால் நீர் என் மாதாவிற்குச் சமம் எனவே
    நான் உம்மை என் தாயாக வணங்குகிறேன் என்று மறுத்துவிட்டான்.
    விரகத்தில் இருந்த ஊர்வசியோ அவனை நீ பேடியாகப்போகக் கடவது என்று சபித்துவிட்டாள்.
    பின்னர் இதை அறிந்த இந்த்ரன் அந்த சாபத்தை வரமாக (உபகாரமாக) மாற்றிக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்ள,
    அவளும் உனக்கு எப்போது அவசியமோ அப்போது இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம், மேலும்,
    ஆடல் பாடல் கலைகள் அனைத்தும் உனக்கு வரப்பிரசாதமாக வழங்குகிறேன் என்று ஆசீர்வதித்தாள்.

    அஜ்ஞாதவாசத்தின்போது, அர்ஜுனன் இதைப் பயன்படுத்திக்கொண்டு விராட ராஜனின் குமாரிக்கு
    பேடியாக இருந்து ஆடல் பாடல் கலைகளை சொல்லிக்கொடுத்ததுடன், ஒரு வருட காலம் மறைந்து
    வாழவும் இந்த சாபத்தை வரமாக பயன்படுத்திக்கொண்டான்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: ஊர்வசி சாபம் உபகாரம்

      மிஹவும் நன்றி சார் முதலிலேய இதைப்பற்றி கேள்வி பட்டிருந்தாலும் தாங்கள் கூறும்போதுதான் ஞாபகம் வருகிறது

      Comment

      Working...
      X