Announcement

Collapse
No announcement yet.

Navarathiri Slokam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Navarathiri Slokam

    Navarathiri Slokam


    நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய ஸ்லோகம் சொல்லலாம்


    கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
    ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
    துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
    மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!


    பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

    Source: nainathivu -நலம்-தரும்-நவராத்திரி-வி/

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X