Announcement

Collapse
No announcement yet.

Why Saraswathi Ma is depicted in White Saree ?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Why Saraswathi Ma is depicted in White Saree ?

    சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?



    மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.

    சரஸ்வதி அணிந்துள்ள புடவையின் நிறம் வெள்ளை. வானவில்லின் ஏழு வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர். மலம் என்றால் அழுக்கு. உடலிலுள்ள அழுக்கை மலம் என்கிறோம். நிர்மலம் என்றால் அழுக்கற்றது, தெளிவானது. நன்மையும் தீமையும் கலந்துஇருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது. வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும். இதனால் தான், சரஸ்வதிதேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.

    லட்சுமி, பார்வதி தேவியர் பல்வேறு வண்ணங்களில் புடவை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெண்ணிற ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் ஏன் தெரியுமா?சரஸ்வதி ஞானத்தின் சொரூபம். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே பணிவும் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் படாடோபமாய் ஆடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைப் பார்த்ததும் இருப்பவர் அனைவரும் வரவேற்று மரியாதை செய்வர். கல்வி கற்றவர்கள் மரியாதைக்கு உரியவர்கள் என்பதை உணர்த்தவே, கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.


    சரஸ்வதி காயத்திரி

    ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
    விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
    தந்நோ வாணீ ப்ரசோதயாத்

    ஓம் வாக் தேவீ ச வித்மஹே
    ஸர்வ ஸித்தீச தீமஹி
    தந்நோ வாணீ ப்ரசோதயாத்

    சரஸ்வதி தியான ஸ்லோகம்

    1. ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
    வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவதுமே ஸதா

    2. ஸரஸ்வதீம் சுக்லவாஸாம் ஸீதாம்சு ஸமவிக்ரஹாம்
    ஸ்படிகாக்ஷஸ்ரஜம் பத்மம் புஸ்தகம் ச சுகம் கரை

    3. சதுர்பிர்த்தததீம் தேவீம் சந்த்ரபிம்ப ஸமானனாம்
    வல்லபாம் அகிலார்த்தானாம் வல்லகீ வாதனப்ரியாம்

    4. பாரதீம் பாவயே தேவீம் பாஷாணாம் அதிதேவதாம்
    பாவிதாம் ஹ்ருதயே ஸத்பி பாமினீம் பரமேஷ்புன

    5. சதுர்புஜம் சந்த்ரவர்ணாம் சதுரானன வல்லபாம்
    நமாமி தேவி வாணீ த்வாம் ஆச்ரிதார்த்த பர்தாயினீம்

    6. பாஹி பாஹி ஜகத்வந்த்யே நமஸ்தே பக்தவத்ஸலே
    நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமஸ்துப்யம் நமோ நம

    7. பாசாங்குச தரா வாணீ வீணாபுஸ்தக தாரிணீ
    மம வக்த்ரே வஸேந்தித்யம் ஸந்துஷ்டா ஸர்வதா சிவா

    8. சதுர்தசஸூ வித்யாஸூ நமதே யா ஸரஸ்வதீ
    ஸாதேவி க்ருபயாயுக்தா ஜிஹ்வாஸித்திம் கரோதுமே

    9. பாஹிமாம் பாவனே தேவி ரக்ஷ ராக்ஷஸநாசினி
    அவ மாம் அம்புஜாவாஸே த்ராஹிமாம் துஹினப்ரபே

    10. தேஹி தேவி கலாதாஷ்யம் வாணி வாக்படுதாம் திச
    ஸரஸ்வதி ஸூதான் ரக்ஷ கலே பாலயமே குலம்


    Source: hindutemples-iyyappan.blogspot

    kavanurkagam.blogspot.

    This post is for Sharing Knowledge only, no intention to violate any copy rights
Working...
X