Announcement

Collapse
No announcement yet.

Sri Vedanta Desigan

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sri Vedanta Desigan



    ஸ்ரீவேதாந்ததேசிகன் !

    காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் , அனந்தசூரி - தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர் !..

    குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர் ...

    அன்றிரவு , இருவரும் சத்திரத்தில் தங்கியிருந்த போது , திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார் !
    திடுக்கிட்டு கண் விழித்த அவர் , ...தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக்கொண்டிருந்த அக்கணம் ........

    திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு !....

    பூஜை மணியை காணாததால் ஆளுக்கொரு பக்கமாய் , அனைவரும் பதட்டத்துடன் தேடிக்கொண்டிருக்க .....

    அப்போது அசரீரியாய் ஒரு குரல் !
    '' அந்த மணியை யாரும் தேட வேண்டாம் !....ஆம் ...புரட்டாசி , சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக , வேங்கடநாதன் என்கிற பெயரில் ...துப்புல் அனந்தசூரி - தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார் !....அவர் பேச்சு மணி மணியாய் இருக்கும் !''
    அசரீரி வாக்கு படி பிறந்த அக்குழந்தையே ஸ்ரீவேதாந்ததேசிகன் !
    திருமலை பெருமான் சந்நிதியில் இருந்த கைமணியே ,'
    மணியான குழந்தையாக ' அவதரித்ததால் , திருமலையில் இன்றும் பூஜை , தீபாராதனை நேரங்களில் கூட மணி அடிப்பது இல்லை என்றும் ,
    மாயவன் சன்னிதியிலும் மணி இல்லை என்று கூறப்படுகிறது ...
    ..
    Source: /forum.smtamilnovels

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X