Announcement

Collapse
No announcement yet.

kojakari viratham.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • kojakari viratham.

    கோஜாகரி விரதம் -விவரம்.

    ஆங்கில மாதம்-செப்டம்பர்-அக்டோபர்.
    தமிழ் காலண்டர் மாதம்= புரட்டாசி;(ஸெளரமானம்)
    தமிழ் சாந்திரமான மாதம்= ஆசுவயுஜம்.

    மலையாளம்-------------=கன்னி மாதம்.
    தெலுங்கு-ஆந்திரா=ஆசுவயுஜம் மாதம்.
    கன்னடா- -------------=ஆசுவினா மாதம்


    வட இந்தியா-ஹிந்தி காலண்டர்= ஆசுவினம் மாதம்.
    பெங்காலி காலண்டர்=ஆசின் மாதம்.
    நேபாலி காலண்டர்= அஷோஜ் மாதம்


    மராத்தி காலண்டர்= ஆசுவின் மாதம்.
    குஜராத்தி காலண்டர்=அஸோஜ் மாதம். என்ற பெயர்கள் உள்ளன.


    பெங்கால், பீஹார், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், குஜராத், மஹா ராஷ்டிரா, கிழக்கு இந்தியா பகுதிகளில் இந்த கோஜாகரி விரதம் 13-10 2019 பெளர்ணமி அன்று கொண்டாடுகிறார்கள்.


    அவர்களுக்கு இது மழைகாலம் முடிந்து நெல், கோதுமை, மற்ற தானியுங்கள் அறுவடை முடிந்து முதன்முதல் கடவுளுக்கு படைக்கிறார்கள். நாம் தை மாதத்தில் பொங்கல் கொண்டாடுவது போல். இன்றே அவர்களும் மாட்டு பொங்கலும் குக்கிராமங்களில் கொண்டாடுகிறார்கள்.


    இன்று களிமண்ணால் செய்த லக்ஷ்மி பொம்மைகளிலும், லக்ஷிமி பாதம் வரையப்பட்ட ரங்கோலி டிசைன் கோலங்களிலும், பெளர்ணமி அன்று 16 உபசார லக்ஷ்மி பூஜை, இனிப்புகள் படைத்தல்; லக்ஷ்மியின் சகோதரர் ஆன சந்திரனுக்கும் இன்று பூஜை உண்டு. சந்திரனும், லக்ஷ்மியும் பாற்கடல் கடைந்த போது வெளி வந்தார்கள் என்பதால். பெளர்ணமி அன்று லக்ஷ்மி பூஜை செய்ய வேண்டும் என அவர்களது நம்பிக்கை.


    ஒரிஸ்ஸாவில் குமார் பெளர்ணமி என்று இன்று ஸ்கந்தனுக்கு பூஜை செய்கிறார்கள்.


    13-07-2019 முதல் 11-08-2019 வரை சாக விருதம். காய் ஏதும் சேர்த்துகொள்ளாமல் சாப்பிட வேண்டும். 12-08-2019 முதல் தயிர் விரதம். 09-09-2019 வரை. 10-09-2019 முதல் 09-09-2019 வரை பால் விரதம்.


    10-09-2019 முதல் 09-11-2019 வரை த்வி தள விரதம். இரு பருப்புகளாக உடையும், உளுந்து, பயறு, கடலை, துவரை, வேர் கடலை. இவைகள் இல்லாமல் சாப்பிட வேண்டும். இது தான் குடும்பிகளுக்கான சாதுர் மாஸ்ய விரதம்.


    மழை காலத்தில் காய் கிடைக்காது. பசு மாடு கர்பிணியாக இக்காலத்தில் இருக்குமாம். ஆதலால் பால் கறக்கவேண்டாம். பால் தயிர் வேண்டாம் என விட்டார்கள். தானியம் பருப்பு வகைகள் இப்போது விளைந்து வந்த புதிதில் உபயோகிக்க வேண்டாம். இது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் என இக்காலத்தில் இதுவும் வேண்டாம் என ஒதிக்கினார்கள்.தீபாவளியின் போது இப்பருப்புகள் இல்லா பக்ஷணங்கள் சாப்பிட வேண்டும்.
Working...
X