Announcement

Collapse
No announcement yet.

MANIKANTESHWARAR TEMPLE

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • MANIKANTESHWARAR TEMPLE

    மணிகண்டேஸ்வரர் கோயில்.





    செந்தாமரைக்கண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கரங்களுடன் மூலவர் சந்நிதிக்கு நேர் எதிரே காட்சி தரும் தலம். திருமால், இறைவனை வழிபட்டுப் பேறு பெற்ற தலமாதலால் 'மாற்பேறு' என்னும் பெயர் பெற்றது.

    திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்கள் பெற்ற தலம்.

    தல புராண வரலாறு:

    மகாவிஷ்ணு ஒருமுறை குபன் என்ற அரசனுக்காக துதீசி முனிவருடன் போரிட்டார். அப்போது மகாவிஷ்ணுவின் சக்கரம் முனிவரின் வைர உடம்பில் பட்டு முனை மழுங்கி விட்டது. சலந்திரனை சம்ஹாரம் செய்த சக்கரம் சிவபெருமானிடம் இருப்பதைக் கேள்விப்பட்ட மஹாவிஷ்ணு அதனை பெறவேண்டி இத்தலம் வந்து அம்பிகை பூசித்த லிங்கத்தை தினந்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து வந்தார்.

    சிவபெருமான் அவரது பக்தியைப் பரிசோதிக்க வேண்டி ஒரு நாள் ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்தருளினார்.

    திருமால் ஆயிரம் பெயர்களால் இறைவனை அர்ச்சிக்கும் போது ஒரு பெயருக்கு மலர் இல்லாமையால் தனது கண்ணைப் பறித்து இறைவன் திருவடியில் சமர்ப்பித்தார். உடன் சிவபெருமான் மகிழ்ந்து மஹாவிஷ்ணுவிற்கு காட்சி கொடுத்து அவர் வேண்டியபடி சக்கரத்தைக் கொடுத்தருளினார். திருமால் வழிபட்டுச் சக்ராயுதம் பெற்ற தலமாதலின் இதற்கு 'ஹரிசக்ரபுரம் ' என்றும் பெயருண்டு. கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது.


    இதே வரலாறு திருவீழிமிழலை தலத்திற்கும் சொல்லப்படுகின்றது. இப்புராண வரலாற்றை உறுதிப்படுத்தும் வகையில் திருமாலின் உற்சவத் திருமேனி நின்ற கோலத்தில் ஒரு கையில் தாமரை மலரும் மறு கையில் "கண்"ணும் கொண்டு இருப்பதை இக்கோயிலில் காணலாம்.

    ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவபெருமானின் கண்களை மூட அதனால் உலகமே இருண்டு போயிற்று. உலக இயக்கமே தடைபட, தனது தவறை உணர்ந்த பார்வதி இப்பூவுலகம் வந்து விருத்தக்ஷீர நதிக்கரையில் மணலால் ஒரு லிங்கம் அமைத்து இறைவனை பூஜித்து தன் தவறை போக்கிக் கொண்டாள். விருத்தக்ஷீர நதி என்ற பழைய பாலாறு இத்தலத்திற்கு வடக்குத் திசையில் இப்போது உள்ளது.

    மணலால் அமைக்கப்பட்ட லிங்கம். மூலவர் தீண்டாத் திருமேனி. குவளை (கவசம்) சார்த்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவர் மணிகண்டேஸ்வரர் தீண்டாத் திருமேனி. ஆதலால் இத்தலத்திலுள்ள சிதம்பரேஸ்வரர் சந்நிதியில் தான் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    ஒருபுறம் வல்லபை விநாயகர் பத்துக்கரங்களுடன் காட்சி தருகின்றார். இது அபூர்வ அமைப்பாகும். மறுபுறம் சண்முகர் உள்ளார். நடுவில் மூலவரைப் பார்த்தவாறு மகாவிஷ்ணு கூப்பிய கரங்களுடன் காட்சி தருகின்றார்.
    மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.

    திருஞானசம்பந்தர் அருளிய இரண்டு திருப்பதிகங்களும், திருநாவுக்கரசர் அருளிய நான்கு திருப்பதிகங்களும் ஆக ஆறு தேவாரப் பதிகங்கள் இத்தலத்திற்கு உரியன. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டதாக சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் குறிப்பிடுகிறார். ஆனால் அவர் அருளிய திருப்பதிகம் கிடைக்கவில்லை.

    இக்கோயில் காஞ்சிப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

    அமைவிடம்:-
    காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி இத்தலத்திற்கு பேருந்து உள்ளது. அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் உள்ளது. இந்நிலையத்திலிருந்து 5-கி.மீ. உள்ளே சென்றால் இத்தலத்தை அடையலாம்.
    * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
    இக்கோயிலுக்கு அருகில் உள்ள கோயில்கள்:-
    1. காஞ்சிபுரம் - வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
    2. காஞ்சிபுரம் - பிரமபுரீஸ்வரர் திருக்கோயில்
    வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.
    3. காஞ்சிபுரம் – புண்ணியகோடீஸ்வரர் திருக்கோயில்
    வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து 1/2 கி.மீ தொலைவில் உள்ளது.
    4. காஞ்சிபுரம் - சாந்தாலீஸ்வரர் திருக்கோயில்
    புண்ணியகோடீஸ்வரர் கோயிலிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் உள்ளது.
    5. காஞ்சிபுரம் – மணிகண்டீசுவரர் திருக்கோயில்
    சாந்தாலீஸ்வரர் கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
    6. காஞ்சிபுரம் – முத்தீஸ்வரர் திருக்கோயில்
    மணிகண்டீசுவரர் கோயிலிலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது.
    7. காஞ்சிபுரம் – வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோயில்
    முத்தீஸ்வரர் கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
    8. காஞ்சிபுரம் - கச்சபேஸ்வரர் திருக்கோயில்
    வழக்கறுத்தீஸ்வரர் கோயிலிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
    * * * * *
    II. காஞ்சிபுரம் to திருப்பனங்காடு
    1.. அய்யங்கார் குளம் - ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில்
    காஞ்சிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
    2. திருப்பனங்காடு - தாளபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    அய்யங்கார் குளத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது.
    * * * * *
    III. காஞ்சிபுரம் to செய்யார் (திருவோத்தூர்)
    1. திருமாகறல் - திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    காஞ்சீபுரத்திலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது.
    2. குரங்கணில்முட்டம் - வாலீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    திருமாகறத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.
    3. மாமண்டூர் - குகை கோயில்
    குரங்கணில்முட்டத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.
    4. செய்யார் (திருவோத்தூர்) - வேதபுரீஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப்பாடல் பெற்ற தலம்)
    மாமண்டூரிலிருந்து 22 கி.மீ தொலைவில் உள்ளது.
    * * * * *
    IV. காஞ்சிபுரம் to பஞ்சுப்பேட்டை
    1. திருக்காலிமேடு - சத்தியநாதசுவாமி திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது
    2. பிள்ளையார்பாளையம் (திருக்கச்சி மேற்றளி) - திருமேற்றளிநாதர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    திருக்காலி மேட்டிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
    3. பிள்ளையார்பாளையம் (கச்சி அநேகதங்காபதம்) - அநேகதங்காபதேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    திருமேற்றளிநாதர் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
    4. பிள்ளையார்பாளையம் – கைலாசநாதர் திருக்கோயில்
    அநேகதங்கா பதேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.
    5. காஞ்சிபுரம் – ஜ்வரஹரேசுவரர் திருக்கோயில்
    ஏகாம்பரநாதர் சந்நிதி தெருவில் இக்கோயில் உள்ளது.
    கைலாசநாதர் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
    6. காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    ஜ்வரஹரேசுவரர் கோயிலிருந்து 600 மீ தொலைவில் உள்ளது.
    7. பஞ்சுப்பேட்டை (ஓணகாந்தன்தளி) - ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில்
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    அரக்கோணம் பேருந்து சாலையில் உள்ளது.
    ஏகாம்பரநாதர் கோயிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது.
    * * * * *
    V. காஞ்சிபுரம் to கோவிந்தவாடி
    1. தாமல் - வராஹீஸ்வரர் திருக்கோயில்
    சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 75 கி.மீ., தொலைவில், இடது பக்கம்
    மெயின் ரோட்டிலிருந்து மிக அருகில் உள்ளது., காஞ்சிபுரம், பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 15 கி.மீ
    தூரத்தில் உள்ளது.
    2. திருப்புட்குழி - விஜயராகவப்பெருமாள் திருக்கோயில்
    (திவ்ய தேசம்)
    தாமலில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது.
    3. கூரம் - ஆதி கேசவப் பெருமாள் திருக்கோயில்
    திருப்புட்குழியிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ளது.
    4. கூரம் - வித்ய வனித பல்லவ பரமேஸ்வரர் திருக்கோயில்
    ஆதி கேசவப் பெருமாள் திருக்கோயிலிருந்து 250 மீ தொலைவில் உள்ளது.
    5. திருமாற்பேறு - மணிகண்டீஸ்வரர் திருக்கோயில் * * * * * (பதிவில் காணும் கோயில்)
    (தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்)
    கூரத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
    6. கோவிந்தவாடி - தட்சிணாமூர்த்தி திருக்கோயில்
    திருமாற்பேறிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது.
    * * * * *
    * திருக்கோயில்களின் குளங்களை சீரமைப்பதால், மழைநீர் சேகரிப்புக்கு குளங்கள் பெருமளவு உதவியாக இருக்கும்.
    இந்த குளங்கள் பண்டைய காலம் முதலே நிலத்தடிநீர் நிலையை மேம்படுத்த உதவிகரமாக இயங்கி வந்துள்ளன.
    நம் தமிழ்நாட்டின் பழமையான திருக்கோயில்களை பாதுகாப்போம்.
    கோயில் குளங்களை தூர்வாரி சீரமைப்போம்.
    shivatemples.

    FB

    Google Search

    This post is for sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X