Announcement

Collapse
No announcement yet.

Salladai - Going to satsan will make you pure- Spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Salladai - Going to satsan will make you pure- Spiritual story

    Salladai - Going to satsan will make you pure- Spiritual story
    🏻 _ஒருவர் தினமும் கோவிலுக்கு உபன்யாசம் கேட்பதற்காகச் சென்று வந்து கொண்டிருந்தார்_.
    _*அதனால் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆகவும் ஆனது*_.
    _அப்படி ஒரு இரவு அவர் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது வெறுப்பாகிப் போன அவரது மனைவி_,
    _*"அப்படி என்ன தான் உபன்யாசத்துலே கொட்டிக் கிடக்கு"*_......???
    _"ஒரு நாளை போல இவ்வளவு லேட் ஆக வீட்டுக்கு திரும்பி வரேங்களே"_.
    _*"டெயிலி அங்க போயிட்டு வாறீங்களே, உங்களுக்கு என்ன புரிந்தது சொல்லுங்க" என்று கேட்டார்*_.
    அதற்கு அந்த மனிதர்.
    " _எனக்கு ஒன்றுமே புரியவில்லை_.
    _ஆனா, போயிட்டு கேட்டு வருவது நன்றாகவே இருக்கு" என்றார்_.
    கோபமடைந்த மனைவி,
    _*"முதல்ல வீட்டில இருக்கிற சல்லடையில் கொஞ்சம் தண்ணீர் வீட்டுக் கொண்டு வாங்க" என்றார்*_.
    _அவரும் சல்லடையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு முழுதும் சிந்தியபடியே வந்தார்_.
    _*மனைவியிடம் வந்த போது தண்ணீர் இல்லாமல் வெறும் சல்லடை மட்டுமே இருந்தது*_.
    _மனைவி," தினமும் லேட்டா வரீங்க. கேட்டா_
    _உபன்யாசத்துக்குப் போனேன் எங்கறீங்க"_......
    _*"என்ன சொன்னாங்கன்னு கேட்டா"*_.....
    _"ஒன்னும் தெரியல்லேன்னு சொல்லறீங்க"_.
    _*"நீங்க உபன்யாசம் கேட்கப்போற லட்சணம் இதோ இந்த சல்லடையில் ஊத்தின தண்ணீ மாதிரித் தான்"*_..
    _"எதுக்கும் பிரயோஜனம் கிடையாது", என்று கொட்டித் தீர்த்தாள்_.
    _*அதுக்கு அந்த மனிதர் சொன்ன பதில் தான் கதையின் நீதியாக அமைய போகிறது*_...
    _"நீ சொல்லறது சரிதான்"_
    _*"சல்லடையில் தண்ணீ வேணா நிரப்ப முடியாம போகலாம்"*_.
    _"ஆனா, அழுக்கா இருந்த சல்லடை இப்போ பாரு.. நல்லா சுத்தமாயிடுச்சு"_.
    _*"அதுபோல, உபன்யாசத்தில சொல்ற விஷயம் வேணா எனக்குப் புரியாமலிருக்கலாம்"*_.
    _"ஆனா, என்னோட மனசில இருக்கிற அழுக்கையெல்லாம் படிப் படியாக அது அகற்றுவதை என்னால் நன்கு உணர முடிகிறது", ன்னு சொன்னார்"_.
    *புரிதலை விட தெளிதலே எப்பவும் முக்கியம்*
Working...
X