Announcement

Collapse
No announcement yet.

vivaaham-6.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • vivaaham-6.

    vivaaham-6.
    முதலில்விவாஹம்,பின்னர்ப்ரவேச ஹோமம்,ஸ்தாலிபாகம், ஒளபாஸனம்,சேஷஹோமம் என ஐந்தும் நடக்கும்.
    திருமணமேடையில் கோலம் போட்ட இடத்தில்பட்டு பாயை நான்றாக மடித்துபோட்டு, அதில்மணமக்களை கிழக்கு பக்கம்பார்த்தபடி அமர செய்ய வேண்டும்.


    இப்போதுபெண் வீட்டு புரோஹிதர்,பிள்ளைவீட்டு புரோஹிதர் என இருபுரோஹிதர் இருப்பர்.
    மனப்பெண்ணின்தாயாரும்,தப்பனாரும்இப்போது அவசியம் பெண் பக்கத்தில்இருக்க வேண்டும்.


    வைதீகருக்குதேவை படும் சில்லரை நாணயங்கள்தயாராக வைத்திருக்க வேண்டும்.
    விவாஹமந்திரங்களின் அர்த்தம் முன்கூட்டியே கேட்டு புரிந்துகொண்டு, அவசரபடாமல் கல்யாண காலத்தில்சொல்லபடு மெல்லா மந்திரங்களையும்சரியாக நன்றாக உச்சரித்து,சடங்குகளையும்,ஹோமங்களையும்



    குறிப்பட்டபடி செவ்வனே செய்வதால் புதுமண தம்பதிகளின் வாழ்வு சீரோடும்,சிறப்போடும்,
    பாசப்பிணைப்போடும்,இன்பம்நிறைந்ததாக இருக்கும் என்பதுதிண்ணம்.



    விவாஹத்தில்1, அனுக்ஞை;2.கணபதிபூஜை;


    1. வர ப்ரேக்ஷனை;4.கன்னிகா தானம்;5. கூறை புடவை அளித்தல்;6. மதுபர்கமும் கோ தானமும் 7. நுகத்தடி வைத்தலும் மாங்கல்ய தாரணமும்; 8.பாணி க்ரஹனம்

    1. ஸப்த பதி; 10. லாஜ ஹோமம். என்று வரிசை யாக நடைபெறும்.விவாஹம் என்பது நிறைவு பெறுகின்றது இந்த லாஜ ஹோமத்துடன் தான்.
      அனுக்ஞை= சம்மதம் என்று இந்த இடத்தில் அர்த்தம். தாம்பாளத்தில் தாம்பூலம், தக்ஷிணை வைத்து கையில்
      ஏந்திய வண்ணம் அஶேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணிம் யத் கிஞ்சித் தக்ஷி


    ணாமபியதோக்த தக்ஷிணாமிவ தாம்பூலஞ்சஸ்வீக்ருத்ய ஆவயோ:உத்வாஹகர்ம கர்த்தும் யோக்கிதாஸித்தி ரஸ்து இதி அனுக்ரஹான.



    என்றுகூறி தக்ஷிணை தந்து விவாஹம்செய்து கொள்வதற்கு ஏற்றயோக்கியதையை பெற்று கொள்கிறான்மணமகன்.



    ஒவித்வாங்களது ஸபையே தங்களதுதிருவடியில் ஏதோ கொஞ்சம்ஸ்வர்ண தக்ஷிணை ஸமர்பிக்கிறேன்.இதைஉயர்ந்த
    தக்ஷிணையாகதாம்பூலத்துடன் பெற்றுக்கொண்டு,எங்களுக்குவிவாஹம் செய்து கொள்வதற்குஏற்ற யோக்கியதை உண்டாகவேன்டுமென்று அனுகிரஹம்செய்யுங்கள்.


    என்பதாகும்.தக்ஷிணையைபெற்றுக்கொண்ட அந்தணர்கள்,ததாஸ்து;யோக்கியதாஸித்திரஸ்து என்று சொல்வார்கள்.
    எல்லாவித கர்மாக்களிலும் துவக்கத்தில்இதை சொல்வார்கள்.அந்தணர்கள்சொல் தேவ வாக்கா க கருத படுகிறது.
    2, விக்னேஸ்வரபூஜை:-
    மஞ்சள்பொடியால் கணபதி பிடித்துவைத்து த்யானம்,ஆவாஹனம்என்ற 16 உபசாரபூஜை கணபதிக்கு செய்துவிக்னங்கள் வராமல் காத்தருளப்ரார்திக்க வேண்டும்.



    சங்கல்பத்தில்ஸுபே ஸோபனே ----ஸ்ரீபரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்தர்ம ப்ரஜா ஸம்பத் யர்த்தம்வரான் ப்ரேஷயிஷ்யே.என்றுகூறி
    ஸங்கல்பம்செய்து பின்னர் கணபதி யதாஸ்தானம் செய்து அக்ஷதைபுஷ்பங்களை புரோஹிதர் ஆசீர்வாதம்செய்து அளிக்க



    அதைசிரசில் தரித்து கொள்ள வேண்டும்.இங்குவரனால் சொல்லப்படும் இரண்டுமந்திரங்களின் பொருள்.



    க்ருஹஸ்தாஸ்ரமத்தைஅடைந்த பின் நான் செய்ய போகும்யாகத்தில் நான் அளிக்க போகும்
    ஸோமரஸத்தை பருக போகும் இந்திரன், நாங்கள்இருவரும் திருமணம் செய்துகொள்வதை விரும்புகிறான்.என்றும்தேவர்களை



    ப்ரார்த்தித்து,தேவர்களேஎனக்காக செல்லும் இவர்களதுமார்கங்கள் நல்ல படியாகஇருக்கு மாறு செய்வீராக.அர்யமா,பகன்என இரு தேவர்களும் எங்களைநல்ல முறையில் சேர்த்து



    வைக்கட்டும்.எங்களுடையதாம்பத்யம் ஒற்றுமையுடன்கூடியதாக இருக்கும்படிநீங்கள்அருள் புரிவீர்களாகஎன்றுமாகும்.



    1. வர ப்ரேஷனை.
      பெண்ணின் தந்தை தனது மனைவி ஸமேதராக அந்தணர்களை நமஸ்கரித்து தாம்பாளத்தில் தாம்பூலம், தக்ஷிணை
      வைத்து அசேஷே ஹே பரிஷத் பவத் பாத மூலே மயா ஸமர்ப்பிதாம் இமாம் ஸெளவர்ணிம் யத் கிஞ்சித் தக்ஷிணாமபி

    யதோக்ததக்ஷிணாமிவ தாம்பூலம் சஸ்வீக்ருத்ய



    தசானாம்பூர்வேஷாம் தசானாம் பரேஷாம்ஆத் மனஸ்ச ஏக விம்சதி குலோத்தாரனத்வாரா நித்ய நிரதிசயானந்தசாஸ்வத ப்ருஹ்ம லோகா அவா
    ப்தியர்த்தம்ஸ்ரீ மஹா விஷ்ணு ப்ரீத்யர்த்தம்கன்யகா தானாக்ய மஹா தானம்கர்த்தும் யோக்யதா ஸித்திம்அனுக்ரஹாண.என்றுசொல்லி கன்யகா தானம் செய்யசம்மதம் கேட்கிறார்.



    அதாவதுதிதி வார நக்ஷத்திரங்கள்சொல்லி எனக்கு முன்னால் என்குலத்தில் பிறந்த பத்துபேரும், நானும்,எனக்குபின்னே என் குலத்தில்



    பிறக்கபோகும் பத்து பேரும்,ஆகிய21 பேரைநற்கதி அடைவிப்பதின் மூலமாகஅழிவற்றதும்.அளவற்றஆனந்தமும் உள்ளதான சாஸ்வதமான



    ப்ருஹமலோகத்தை அடைவதற்காக ,மஹாவிஷ்ணு வின் ப்ரீதியைபெறுவதற்காகவும்,
    கன்னிகாதானம்என்னும் மஹா தானத்தை செய்கிறேன்என்று ஸங்கல்பம் செய்துகொண்டு,
    விக்னேஸ்வரபூஜை செய்து கன்னிகா தானம்செய்கிறார்.மஹாவிஷ்ணுவே மாப்பிள்ளை வடிவில்வந்து தனது கன்னிகையை ஏற்பதாக
    கருதிஅவரது பாதங்களை பூஜிகின்றார்.


    விக்னேஸ்வரரையதா ஸ்தானம் செய்த பின்னர்க்ரஹ ப்ரீதி செய்ய வேண்டியதுஅவசியம். கன்யாதான காலத்தில் உண்டாகும்
    தோஷங்களைநிவர்த்திக்கும் பொருட்டுநவகிரஹ ப்ரீதிக்காக சிறிதுதக்ஷிணையை ப்ராஹ்மணர்களுக்குகொடுப்பதே க்ரஹ ப்ரீதியாகும்.
    இதன்பின்னர் மணமகனை விஷ்ணு ஸ்வரூபமாகஎண்ணி , மஹாவிஷ்ணு ஸ்வரூபஸ்ய வரஸ்ய இதம்ஆஸனம்;



    ஸகலஆராதனை:ஸ்வர்ச்சிதம்மஹா விஷ்ணூ ஸ்வரூப வர ஸ்வாகதம்;இதம்தே பாத்யம்.என்றுகூறி மணமகனுக்கு நல்வரவுகூறுவதாகவும்,அர்க்கியம்,பாத்யம்,ஆசமனீயம்
    அளித்துவரனின் கால்களை அலம்பி இருவரும்ஆசமனீயம் செய்வதாகவும்கூறப்படுகிறது.


    கால்களைஅலம்பும் போது தத் விஷ்ணோ:பரமம்பத்ஸதா பஶ்யந்தி ஸுரய:என்றவேத மந்திரத்தை உச்சரிக்கிறார்கள்.இதன்கருத்து.
    மஹாவிஷ்ணுவினுடைய உயர்ந்த பரமபதமானது உலகெல்லாம் ப்ரகாசமாகவிளங்குகிறது.அதைகுற்ற மற்ற புண்யசீலர்கள்
    ஆனபெரியவர்கள் எப்பொழுதும்பார்த்து போற்றுகின்றனர்.அத்தகையமஹா விஷ்ணுவின் பாதமாக ,வரனானஉம்மை கருதி பூஜிக்கிறேன்
    என்பதாகும்.



    இப்போதுபெண்ணின் தந்தை தனது பெண்ணைகுறிப்பிட்ட மணமகனுக்குகன்னிகாதானம் செய்வதாக கூறி, பெண்ணின்முந்தய மூன்று
    தலைமுறைபெரியவர்களின் பெயர்களையும்அவரது கோத்திரத்தையும் சொல்லி,அதேபோல்
    பிள்ளையின்முந்தய மூன்று தலை முறைபெரியவர்களின் பெயர்களையும்,அவர்களதுகோத்திரத்தையும் சொல்லி இந்ததிருமணம்



    எல்லோருக்கும்சம்மதமா என்று முஹூர்த்ததிற்கு வந்துள்ள எல்லாபந்துக்களிடமும் சம்மதம்கேட்பதாக அமைந்துள்ளது.
    எல்லோரதுசம்மதமும் கிடைத்த பிறகுதான் விவாஹம் தொடரும்.அந்தகாலத்தில்.
    1. கன்னிகாதானம்:-
      வர ப்ரேஷனை ஆனபின்னர், ( நெல் நிரம்பிய மூட்டை) நெல் கோட்டை என்பர். நெல் கோட்டை ஒன்றின் மேல் பெண்ணின் தகப்பனார் கிழக்கு முகமாக
      அமர்ந்திருக்க அவரது மடியில் மணப்பெண் அமர அவளது கைகளில் பழம் தேங்காய், தாம்பூலம், ஆகியவற்றை


      வைத்து ,பெண்ணின் தாயாரை தீர்த்தம் விட சொல்லி பிள்ளைக்கு தனது மகளை தானமாக அளிப்பார். அப்போது
      கன்யாம் கனக ஸம்பன்னாம் கனகாபரணைர் யுதாம் தாஸ்யாமி விஷ்ணவே துப்யம் ப்ருஹ்ம லோக


    ஜினீஷயாவஸ்வம்பரா:ஸர்வபூதா: ஸாக்ஷண:ஸர்வதேவதா: இமாம்கன்யாம் ப்ரதாஸ்யாமி பித்ரூனாம்தாரணாய ச கன்யே மாமாக்ரதோ
    பூயா:கன்யேமே பவ பார்ஸ்வயோ:கன்யேமே ஸர்வதோ பூயா:த்வத்தானான்மோக்ஷ மாப்னு யாம் ஹிரண்யகர்ப கர்பஸ்தம் ஹேம பீஜம்
    விபாவஸோ;அநந்தபுண்ய பலதம் அதஶ் சாந்தி ம்ப்ரயஸ்சமே.என்றுகூறி தானம் செய்கிறார்.


    இதன்பொருள்;- தங்கநகைகள் பூட்டிய எனது கன்னிகையை, ப்ருஹ்மலோகம் செல்ல வேண்டும் என்றஆசையினால் விஷ்ணு ரூபமானஉமக்கு அளிக்கிறேன்.
    உலகைதரிகின்ற ஸர்வ தேவர்களும்,ஸர்வபூதங்களும் ஸாக்ஷியாகஇருக்கட்டும்.பித்ருக்கள்நன்மை


    பெறஇந்த கன்னிகையை தானம் செய்கிறேன்.ஓகன்யே தேவி எனக்கு எதிரிலும்பக்கத்திலும் எங்கும் இரு.உன்னைதானம் செய்வதால் மோக்ஷம்அடைய வேண்டும்,குழந்தைகளை
    பெறுவதற்காகவும்,புருஷனுடன்கூட இந்த கன்னிகை இருந்துஸர்வ கர்மாக்களையும் செய்யும்பொருட்டும் தானம் செய்கிறேன்.



    தானம்செய்பவர் கிழக்கு நோக்கியும்,மணமகன்மேற்கு நோக்கியும் கன்னியின்தாய் வடக்கு


    நோக்கியும்இருக்க வேண்டும்.என்பதுகன்னிகா தான முறை.
    மேற்கண்டஸ்லோகங்கள் எல்லாம் சொல்லி, கன்னிகையின்வலது கரத்தை ஜலதாரையுடன்தாம்பூல தக்ஷிணையுடன் வரனதுகரத்தில் அளிக்க வேண்டும்.


    அப்போதுமண மகன் தேவஸ்ய த்வா ஸவிதுப்ரஸவே அசுவினோர் பாஹுப்யாம்பூஷணோ ஹஸ்தாப்யாம் ப்ரதிக்ருஹ்ணாமிஎன்ற மந்திரம் கூறி கன்னிகையைஏற்று கொள்ள வேண்டும்.
    ஸவித்ருதேவன் நமக்கு நன்மை தருவதற்காக அஸ்வினி தேவர்களுடையபாஹு `களாலும்பூஷாவினுடைய கரங்களினாலும்இதை பெற்று கொள்கிறேன்.


    சிறந்தவரானஆங்கீரஸ் உன்னை ஏற்றுக்கொள்ளட்டும். நமதுதோளிலிருந்து முழங்கை வரைஉள்ள பகுதிக்கு பாஹு என்றுபெயர்.
    அங்குஅதிஷ்டமான தேவதையாக வசிப்பவர்அசுவினி தேவர்கள்.அதற்குகீழே உள்ளது கரம் எனப்படும்.இதற்குஅதிஷ்டான தேவதை பூஷா,



    இந்தஇருவர் பெயராலும் வாங்கிஆங்கீரஸிடம் அளிக்கிறோம்.ஆகையால்இந்த பொருள் நேரிலோ,மறைமுகமாகவோபரமாத்மாவிற்கு அளிக்கபடுகிறது.
    அவ்வாறுநாம் தானம் வாங்கிய பொருளைநல்ல விதத்தில் பயன் படுத்தினால்தான் தானம்
    வாங்கியபாபம் அகலும்.ஆதலால்தானம் வாங்கிய கன்னிகையைகண்ணும் கருத்துமாக காக்கவேண்டிய கடமை அதிக மாகிறது.
    5, கூறைபுடவை அளித்தல்.
    முன்சொன்னது போல் மணமகள் தன்தந்தையின் மடி யில் அம்ர்ந்திருக்கமணமகன் ஒரு தட்டில் புடவை,ரவிக்கையைஅவளிடம் கீழ் கண்ட மந்திரம்சொல்லி கொடுப்பான்.



    பரித்வாநிர்வண கிர:இமா:பவந்துவிசுவத:வ்ருத்தாயும்அனுவ்ருத்தய:ஜுஷ்டாபவந்து ஜிஷ்டவ:



    அதாவதுஏ தேவேந்திரனே உன் அருளால்இந்த கன்னிகையை சுற்றிகட்டப்பட்ட புடவை அவளுக்குசுகத்தையும் பெருமையையும்தரட்டும்



    உம்மைவிட சிறந்த தேவர்களை நீங்கள்உபாசி க்கிறீர்கள்.ஆதலால்நாங்கள் கூறுகின்ற இந்தவாக்கும் வ்ருத்தி அடைந்துஉம்மை ஸேவிக்க
    ட்டும்.நீங்கள்இவளுக்கு பரம ஸெள பாக்கியங்களை தாருங்கள் என்பதாகும்.மணமகள்தனது மணாளனுக்கு நமஸ்காரம்செய்து விட்டு புடவையை வாங்கிகொள்ள வேண்டும்.
    மணமகனின்சகோதரியே இப்பவும் புடவைகட்டி விட செல்ல வேண்டும்.
    ஒன்பதுகஜ புடவையான அதன் உள் தலைப்பைநான்கு விறர்கடையான அகலத்தில்எட்டு முதல் பன்னிரன்டு வரைஅவரவர் உடல்



    சரீரவாகிற்க்கு தக்க வாறு கொசுவம்வைத்து கொண்டு,,இடதுகாலின் பின் பக்கத்தில்கொசுவம் வரும்படியாக புடவையைபிடித்து
    கொண்டு, மீதியுள்ளபுடவையை முன்பக்கமாக சுற்றிவலது பக்கத்தில் கொசுவியபகுதியோடு சேர்த்து இறுக்கமாக முடிச்சு போட வேண்டும்.



    இவ்வாறுசெய்த பின் வலது காலின்கீழ்பகுதி புடவை கரை பகுதியைஅந்த காலின் அடியில் குதிகாலால் அழுத்தி பிடித்துகொண்டால்
    ( புடவைகட்டி முடியும் வரை)கால்பகுதியில் புடவை தூக்கிகொள்ளாமல் தழைய இருக்கும்.
    முடிச்சுபோட்ட பகுதியின் மற்றொருபக்கத்தை
    சிறிதுமுன் பக்கமாக இடுப்பில் இடதுபக்கத்தில் சொருகி கொள்ளவேண்டும்.பின்னர்முன் பகுதியிலுள்ள புடவையைசிறிது தளர்த்திய வண்ணமாக,



    இருபார்டர்களும் சேர்த்த வண்ணம்நேராக முன் பக்கம் வயிற்றுபக்கமாக நடுவில் செருகி
    கச்சமாக,முழுபுடவையும் பின் பக்கம் கொண்டுவந்து இடுப்பில் பின் பகுதியின்நடுவில் நன்றாக அவிழாமல்செருக வேண்டும்.


    இவ்வாறுசொருகிய மேல் பகுதியின் இடதுபக்க கரையிலிருந்து புடவையின்மீதி பகுதியை மட்டும் வலதுபக்கமாக கொண்டு வந்து ,
    வயிற்றின்நடுவில் செருகி,மீதிபுடவையை இடது பக்கதிலிருந்துகொன்டு வந்து ஒரு சுற்றுசுற்றிய பின் வலது தோள் வழியாகமேலாக்காக



    போட்டு,தலைப்புபகுதியை இரண்டாக மடித்துஇடுப்பின் வலது பக்கத்தில்செருக வேண்டும்.இவ்வாறுசெய்ய சாதாரணமாக நீளம் சரியாகஇருக்கும்.
    தலைப்புகட்ட நீளம் போதாமல் போனால்உள்ளே வைத்து கொசுவிய கொசுவங்களைகுறைத்து கட்டலாம்.


    தலைப்புநீளம் அதிகம் ஆனால் தலைப்புபோடும் முன்னால் சிறிதுபுடவையை சற்று அதிக மாக செருகிசரி செய்து கொள்ளலாம்.
    புடவைமுழுவதும் கட்டிய பின்னர்,வலதுகுதி காலால் அழுத்திய பகுதியைதளர்த்தி விடலாம்.


    ஒருகாலின் பக்க கொசுவமும்,மற்றொருகாலின் பகுதியும் நன்குதழைத்து ஒன்றுடன் ஒன்று இணையாகஉள்ளதா என்று பார்த்து இழுத்துசரி செய்து கொள்ள வேண்டும்.



    உட்காரும்போது கட்டை தளர்த்தி கொள்ளவேண்டும் என்றால் ,வலதுதோள் பகுதி புடவையின்கைபக்கத்திலுள்ள பகுதியைமேலிருந்து கீழ் பக்கமாகஇழுத்த படி சரி செய்து கொள்ளலாம்.
    புடவையைகட்டிய பின் மண மகள் முன்புஅணிந்து இருந்த மாலைகள்யாவற்றையும் மறக்காமல்அணிவித்து மண மேடைக்கு அவளதுநாத்தனார் அழைத்து வர வேண்டும்.



    சிலர்மடிசார் புடவை கட்டியதும், முன்புகட்டியிருந்த ஊஞ்சல் புடவையைஒரு நாற்காலி யில் போட்டுஅதில் மணப்பெண்ணை உட்கார
    வைத்துஊஞ்சலில் சுற்றிய எரிந்துகொண்டி ருக்கும் விளக்கை ஒருதட்டில் வைத்து பெண்ணின்முன்பு மூன்று முறை சுற்றிஏற்றி இறக்கும் பழக்கத்தைசெய்வர்.
Working...
X