Announcement

Collapse
No announcement yet.

VIVAAHAM-9.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • VIVAAHAM-9.

    நலங்கு;-
    மதியம் மூன்று மணிக்கு மேல் ராகு காலம், யமகண்டம் இல்லாத நேரமாக பார்த்து நலங்கு நடை பெற வேண்டும்.மஞ்சளும், சுண்ணாம்பும்
    கலந்த கலவையில் சிறிது நீர் பிசைந்து கால்களில் இடுவதே நலங்கு எனப்படும்.


    இது போல் மணமக்கள் இருவரும் இட்டுக்கொண்டு, சில விளையாட்டுகளை செய்யும் நிகழ்வு இது. மணமகளுக்கு அவளது நாத்தனார்
    தலை பின்னி பூ வைத்து, விளையாடல் புடவையை உடுத்த செய்து, மணமகள் மணமகனை நலங்கிற்கு வரும்படி அழைக்க
    வேண்டும். பெண் வீட்டினர் பிள்ளை வீட்டினரை இதில் கலந்து கொள்ள அழைக்க வேண்டும். இதற்கு கிழக்கு, மேற்காக மணமக்கள் உட்கார
    கோலம் போட்டு அதன் மீது பாயை முழுவதுமாக விரித்து மணமக்களை எதிரும், புதிருமாக உட்கார வைக்க வேண்டும்.


    அருகில் ஒவ்வொரு கிண்ணத்திலும் கொஞ்சம் அரிசியும், பருப்பும்,உப்பு, சந்தனம், குங்குமம். மஞ்சள் பொடி, நலங்கு கலவை, குடுமி எடுத்த
    மஞ்சள் தடவிய தேங்காய், 12 சுட்ட அப்பளங்கள். வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பம், முகம் பார்க்கும் கண்ணாடி;சீப்பு, ஆகியவற்றை தயாராக
    வைத்துக்கொள்ள வேண்டும். யாராவது ஒரு வயது முதிர்ந்து அனுபவமிகுந்த பெண்டிர் இதை செய், அதை செய் என்று சொல்லி கொடுப்பார்கள்.


    இந்த நேரத்தில் பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என மாறி மாறி நலங்கு பாட்டு பாடுவார்கள்.


    பெண் தனது கணவனுக்கு தாம்பூலம் கொடுக்கும் போது பெண் பாட்டு பாடியே ஆக வேண்டும். இது போல் பிள்ளயும் பாடுவான்.
    மணபெண் நின்ற படியும், மணமகன் அமர்ந்த படியும் இருக்க , முதலில் மணப்பெண் தனது கணவனது கழுத்திலும், இரு கைகளிலும், நெற்றி யிலும், சந்தனமிட்டு, நெற்றியில் குங்குமம்
    இட்டு பின்னர் அவனது வலது காலை நீட்டும் படி சொல்லி, அவன் மறுக்க அவளே காலை பிடித்து இழுத்து நலங்கிட வேண்டும் .

    இவை எல்லாம் அந்த காலத்தில் எட்டு வயது சிறுமிக்கும், பத்து வயது சிறுவனுக்கும் கற்று கொடுக்கும் பாடம்.
    தற்காலத்திற்கு இவை தேவை இல்லை. மணமக்கள் இருவரும் பேசி பழக வாய்ப்புகள் உள்ளவையாக அமைந்தவை.


    இதன் பின்னர் பெண் மணமகனுக்கு தலை யை சீப்பினால் வாரி விட்டு, கண்ணாடியை முதலில் திருப்பி காண்பித்து பிறகு சரியாக காண்பிக்க செய்யும் வேடிக்கைகள் அதிகம் இருக்கும்.
    இப்போது பெண்ணிடம் சிறிது அரிசியும், பிள்ளையிடம் சிறிது பருப்பும் கொடுத்து பெண்ணை நான் அரிசி தருகிறேன் பருப்பு தாருங்கள் என்று பிள்ளையிடம் கேட்க சொல்வார்கள்.


    அவ்வாறே பெண் கேட்டு, தனது கையிலுள்ள அரிசியில் பாதியை இடது கையில் வைத்து கொண்டு, மீதியை அவனிடம் கொடுத்து பருப்பு வாங்கி இரண்டையும் கலந்து கொண்டு,


    வலது கையிலும், இடது கையிலும் பாதி பாதி வைத்து கொன்டு, கைகளை மூடிய வண்ணமாக வலது கையால் இடது பக்கத்திலிருந்து வலமாகவும்,,
    இடது கையால் வலப்பக்கமிருந்து இடமாகவும், மூன்று முறை மணமகனின் தலையை சுற்றி, அவனது பின் பக்கத்தில் போட்டு விட வேண்டும்.



    இப்போது இரண்டாவது முறையாக பெண் பருப்பை அவனிடம் கொடுத்து பருப்பு தருகிறேன் அரிசி தாருங்கள் என கேட்டு வாங்கி முன் மாதிரியே தலை சுற்றி போட வேண்டும்.
    மணமகளிடம் உப்பை கொடுத்து உப்பை தருகிறேன் பருப்பு கொடுங்கள் என்று வாயால் மட்டும் கேட்க சொல்வார்கள். ஆனால் கொடுக்க மாட்டார்கள்.
    இவற்றை கொண்டு நான் சமைத்து போடுகிறேன்.


    என்று மணமகள் கூறுவதாக அமைகிறது. இதன் பிறகு அப்பளத்தை சுற்றுவாள். உளுந்தினால் செய்ய பட்ட இரு சுட்ட அப்பளங்களை இரு கைகளிலும் வைத்து கொண்டு,பிரதக்ஷிணமாக
    வலது கையாலும், அப்பிரதக்ஷிணமாக இடது கையாலும் சுற்றி இரு அப்பளங்களையும் நொறுக்கி உடைத்து மணமகனின் பின் பக்கம் போட வேண்டும்.


    இம்மாதிரி மூன்று முறை செய்ய வேண்டும். உடல் பலத்திற்கு அவசியமானது உளுந்து. இதனால் செய்ய பட்ட அப்பளங்களை சுடுவது
    போல் வாழ்வில் பல இன்னல்கள் ஏற்பட்டாலும்,இந்த அப்பளங்களை நொறுக்குவது போல் தகர்த்து உடல் பலத்துடனும் ,மன
    பலத்துடனும் நாம் இருப்போம்.என்பதை எடுத்து காட்டுகிறது.


    மணமகள் தன் இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். தற்பொது மணமகனின் முறையாகும். மணமகள் செய்த மாதிரியே செய்ய வேன்டியது. உட்கார்ந்த படியே.


    இதன் பின்னர் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் போட்டி வைப்பார்கள். குடுமி எடுத்து மஞ்சள் தடவி வைத்த தேங்காயை மணமக்கள் அதை உருட்டி விட்டு விளையாட வேண்டும்.
    உறவினர் ஒருவர் ஒன்று, இரண்டு, மூன்று என்று சொல்லும் போது யார் முதலில் தேங்காயை பிடிக்கிறார்களோ, அவரே முதலில் விளையா ட்டை துவக்க வேண்டும்.


    பெண் தேங்காயை இரு கைகளாலும் பிடித்து கொள்ளலாம். ஆனால் ஆண் ஒரு கையை மட்டுமே உபயோகபடுத்தலாம்.யார் முதலில்
    தேங்காயை பிடிக்கிறார்களோ, அவர் அந்த தேங்காயை இருவருக்கும் நடுவில் பாயில் அழுத்தி பிடித்திருக்க மற்றவர் அதை விடுவித்து
    எடுக்க வேண்டும். இவ்வாறு எடுப்பவர் பெண்ணானால் இரு கைகளால் எடுக்கலாம். ஆண் ஆனால் ஒரு கையை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.


    இவ்வாறாக ஒவ்வொருவரும் ஒரு முறை செய்ய வேண்டும்.


    இதன் பின்னர் இரண்டு வெற்றிலையை நான் காக மடித்து, அதில் ஒருவர் கையில் கெட்டியாக பிடித்து கொண்டு பாயின் மேல் நடுவில்
    வைத்திருக்க மற்றவர் விள்ளாமல் முழுவதுமாக கை பற்ற வேண்டும். இம்மாதிரி ஆளுக்கு ஒரு முறை செய்யலாம்.
    மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கவும், பழகவும், குணங்களை தெரிந்து கொள்ளவும் உதவும்.


    பிறகு மணப்பெண் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு பழம் வைத்து கொன்டு பத்தியம் என்ற பாடலை பாடி தனது கணவனிடம் கொடுக்க வேண்டும்.
    இந்த பாடல் தனது கணவனை புகழ்ந்து பாடுவதாகவும் தன்னை காத்து ரக்ஷிக்கும்படி கேட்பதாக இருக்கும்.


    மணபெண்ணுக்கு இந்த பாடல் தெரியாவிட்டால் ஏதோ ஒரு பாட்டு பாட வேண்டும். பாட்டு பாடிய பிறகு தான் தாம்பூல தட்டை மணமகன் வாங்குவான். பிறகு மணமகன் முறை பத்தியம் பாட வேண்டும்.


    தாம்பூலத்தை கணவனிடம் கொடுத்த பின் மனைவியானவள் கணவனுக்கு நமஸ்காரம் செய்து விட்டு அவனது வலது பக்கத்தில் அமர வேண்டும்.


    பிள்ளை வீட்டிலிருந்து ஒருவரும், பெண் வீட்டிலிருந்து ஒருவரும் மணமக்களுக்கு ஆரத்தி எடுக்க வேண்டும்.
    ஒரு சிலர் பச்சை வழிப்பது என்று கண் த்ருஷ்டி படாமல் இருப்பதற்காக செய்கிறார்கள்.ஒரு கிண்ணத்தில் நல்ல எண்ணெய் விட்டு


    குங்குமத்தை போட்டு நன்றாக கலந்து, இந்த கலவையை தம்பதிகளது முதுகு, இரு தோள்பட்டைகள், கழுத்து, கன்னங்களில் லேசாக
    தடவுவது வழக்கம். குறைந்தது ஐந்து பேர். ஒற்றை படையில் இருக்க வேண்டும்.இதை முதலில் மணமக்களின் தாய், அத்தை, மாமி, சகோதரி, மன்னி என ஐவர் தடவுவர்.


    பூ ஊஞ்சல் என்ற தொரு நிகழ்ச்சியும் முன் காலத்தில் உண்டு. ஊஞ்சல் முழுவதும் பூ சுற்றி அலங்காரம் செய்து, மணமக்களை அதில் உட்கார
    வைத்து எல்லோரும் பாடி மகிழ்வார்கள். தொடுத்த பூ பந்தை சுருட்டி கட்டி அதை ஒருவர் வீச மற்றவர் பிடிக்க என செய்து களிப்பார்கள்.


    இப்போது வரவேற்பு என்று வைத்து இசை நிகழ்ச்சி நடத்தி, மணமக்களை நுழை வாயிலில் அமர வைத்து கொண்டாடுகிறார்கள்.
    பிறகு இரவு எல்லோரும் சாப்பிடலாம். சாந்தி முஹூர்த்தம் இரவு என்றால் தம்பதிகள் மோர் சாப்பிட கூடாது. பால் சாதம் தான் சாப்பிட வேண்டும்.நல்ல நேரம் பார்த்து தம்பதிகளை உள்ளே அனுப்ப வேண்டும்.


    சாந்தி முஹூர்த்தம்.


    அந்த காலத்தில் திருமணம் முடிந்த சில தினங்க் களுக்கு பிறகு நல்ல ஏற்ற சிறந்த நாளாக பார்த்து பிள்ளை வீட்டுக்காரர்கள். பிள்ளை வீட்டில்
    நெருங்கிய சில உறவு காரர்களை வைத்து க்கொண்டு, காலையில் உதக சாந்தி செய்ய துவங்குவது வழக்கம்.


    இதை நல்ல முஹுர்த்தத்தில் செய்வதால்,நல்ல அறிவும், நல்ல செயல்பாடு உள்ளதும் நல்ல எண்ணங்களை கொண்ட ஆண் குழந்தை பிறக்கும் என நம்ப படுகிறது.


    அன்று காலை தம்பதிகள் இருவரும், காலயில் ஸ்நானம் செய்து, நெற்றிக்கு இட்டு கொண்டு, மடிசார், பஞ்ச கச்சம் கட்டி கொண்டு,ஸ்வாமிக்கு
    விளக்கு ஏற்றி,, இருவரும் ஸ்வாமிக்கும், வீட்டில் உள்ள பெரியோர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டு, மணையில் அமர்ந்து, வழக்கம் போல்


    ப்ராஹ்மணர்களை வணங்கி, தக்ஷிணை, தாம்பூலம் கையில் வைத்து கொண்டு, அனுக்ஞை வாங்கி,விக்னேஸ்வர பூஜை செய்து, ஸங்கல்பம்
    செய்து கொண்டு, கீழே தரையில், கோலம் போட்டு, அதன் மேல், கோதுமை பரப்பி, அதன் மேல் அரிசி பரப்பி, அதன் மேல் தர்பத்தால்
    தாமரை பூ போட்டு, அதன் மேல் பித்தளை குடம் வைக்க வேண்டும். ( கலசம் என்று இப்போது இதற்கு பெயர்.)


    இந்த கலசத்தை நூல் சுற்றி, மந்திரம் சொல்லி ஜலம் விட வேண்டும், மாவிலை, கூர்ச்சம், தேங்காய் வைக்க வேண்டும். கலசத்திற்குள்
    பச்சை கற்பூரம், ஏலக்காய், பொடி செய்து போட வேண்டும். கலச துண்டு சாற்ற வேண்டும்.


    கர்மாவை கெடுக்கும் ராக்ஷஸர்களை கூர்ச்சம் அழிக்கும். மாவிலை தளிர்கள் எல்லா வித தோஷங்களையும் போக்கும்.


    சிவனிடமிருந்து கிடைத்த முக்கண் தேங்காய், பாபத்தையும், பீடையையும் போக்கும். இப்பொருள் உள்ள மந்திரங்களே இங்கு சொல்ல படுகிறது.
    கலசத்தில் வருணனை ஆவாஹனம் செய்து. மகா விஷ்ணூவையும் ஆவாஹனம் செய்ய வேண்டும். ருது சாந்தி ஜப கர்மாவில் தாங்களை


    ருத் விக்காக ,எனக்காக வேலை செய்பவராக வரிக்கிறேன். என்று கூறி பிராமணர்களை வரிக்க வேண்டும். அவர்கள் கலசத்தின் அருகில் அமர்ந்து


    108 முறை விஷ்ணு காயத்ரீ,வேதானி ஆபோ, ஹிரண்ய; பவமான, ருத்ர, வருண, ப்ருஹ்ம துர்கா, ஸ்ரீ ஸூக்தம் புருஷ ஸூக்தம், போன்ரவைகளை சொல்லி, பஞ்ச சாந்தி, ரிசாம் ப்ராசி;என்ற மஹா மந்திரங்களையும் ஜபிப்பார்.


    நமோ ப்ருஹ்மணே என்பதை மூன்று முறை ஜபித்து, பின் நைவேத்யம் செய்ய வேண்டும். வருணனையும், மஹா விஷ்ணுவையும் யதா


    ஸ்தானம் செய்து விட்டு,மந்திர தீர்த்தத்தால் தம்பதிகளை ப்ரோக்ஷிக்க வேண்டும். இந்த கலச தீர்த்தத்தால் கணவன் மனைவிக்கு அபிஷேகம்
    செய்ய வேண்டும். அக்னியில் ஹோமம் செய்யனும். இப்போது, ஏற்கனவே ஓதி இடப்பட்ட பிறந்த அகத்து புடவையை பெண் உடுத்தி வர
    வேண்டும்.பெண் வீட்டினர் ஒரு ஜோடி பருப்பு தேங்காய் கொண்டு வந்து வைக்க வேண்டும்.


    அன்னத்தை பலாச இலையில் வைத்து காயத்ரி மந்திரம் சொல்லி, ஹோமம் செய்ய வேண்டும்.சவித்ரே இதம் நமம. என்று சொல்லி சூரிய பகவானை குறித்து செய்ய படுகிறது.
    இவ்வாறு ஹோமங்கள் அனைத்தும் செய்த பிறகு அந்தந்த தேவதையை குறித்து ந மம என்று சொல்ல வேண்டும்.


    பிறகு சமித்து, அன்னம், ஆஜ்யம், ஆகியவற்றால் 108 முறை ஹோமம் செய்ய வேண்டும். இதன் பின்னர் ஜயாதி ஹோமம் செய்து அக்னியை உபஸ்த்தானம் செய்ய வேண்டும்.
    ஹோமம் துவங்கும் முன்பாக, கர்மாக்களை கவனிக்க ப்ருஹ்மா வாக ஒருவரை வரித்து,உபஸ்தானம் செய்வதற்கு முன்பாக அவருக்கு ப்ருஹ்ம தக்ஷிணை அளித்து, ஜப
    ஹோமம் செய்தவர்களுக்கும் தக்ஷிணை அளிக்க வேண்டும். இதன் பின்னர், ஆசீர்வாதம், ஆரத்தி.


    மாலையில் ஒளபாஸனம் செய்த பிறகு, குறித்த லக்னத்தில் விக்னேஸ்வர பூஜைசெய்து, கர்ப்பா தான மந்திர ஜபம் செய்ய வேண்டும்.
    இப்போது இந்த மந்திரங்களை விவாஹத்தின் போதே கூறி விடுவதும் உண்டு. இட வசதியும்,
    அவரவர் ஸெளகரியங்களையும் உத்தேசித்து திரு மண மண்டபத்திலேயே ,விவாஹ தன்றே, இரவு இதை ஏற்பாடு செய்கிறார்கள்.
    மந்திரங்களுக்கான விளக்கம்.;-
    நாம் பலசாலிகளாக இருந்து,நீண்ட காலம் நீடித்து இருக்கும் தேஜஸ் உள்ளவர்களான குழந்தைகளை உண்டு பண்ணுவோம்.
    அரணியிலிருந்து கடைந்த அக்னியை போல ஸத் புத்ரன் உண்டாகட்டும்.குழந்தை ஊன மில்லாத,எந்த தோஷமும் இல்லாமல் முழுமை
    யானதாக பிறக்கட்டும்.என்றெல்லாம் கூறுவதாக அமைகிறது. மறு நாள் காலை நாந்தி சிராத்தம் செய்து இந்த நிகழ்ச்சி நிறைவு பெறும்.


    சாந்தி முஹூர்த்த தினத்தன்று இரவு, மணமக்களது சயன அறையை, நன்கு சுத்தம் செய்து மாக்கோலங்கள் போட்டு, கிழக்கு பக்கம் பார்த்த வண்ணம் சுவாமி படங்கள், நிலை கண்ணாடி, இயற்கை காட்சி படங்கள், குழந்தை படம், வைத்து, பித்தலை குத்து விளக்கு,பூசுற்றி
    சந்தனம், குங்குமம் இட்டு,எண்ணெய் திரி போட்டு, சிறிதாக ஏற்றி வைக்க வேண்டும்.


    இரண்டு ஜமக்காளங்களை அறையில் விரித்து, அல்லது இரண்டு கட்டில்கள் போட்டு, புதிதாக வாங்கி வைக்க பட்டிருக்கும் இரண்டு மெத்தை கள், நான்கு தலை காணிகள், யாவும் உறை இல்லாது பிறித்து வைக்க வேண்டும்.


    படுக்கையின் அடியில் பிள்ளை வீட்டார் ஏதாவது பணம் வைக்க வேண்டும். பக்கத்திலே ஒரு சொம்பில் சக்கரை போட்ட பால் வைக்க வேண்டும்.
    ஒரு சொம்பில் ஜலம் குடிக்க ஒரு டம்ப்ளர் உடன் வைக்க வேண்டும். ஒரு தட்டில் எல்லா விதமான பழங்கள்,, இன்னொரு தட்டில் இனிப்பு, கார வகை
    பக்ஷணங்கள், ஒரு பாத்திரத்தில் திரட்டி பாலும் வைக்க வேண்டும். சுவாமி இடத்தில் ஒரு ஜோடி பருப்பு தேங்காயும் வைக்க வேண்டும்.


    நிறைய புஷ்ப தோரணங்கள், வாசனை திரவியங்கள்,பூக்கள், நல்ல மணம்,கமழும் ஊதுபத்திகள், பன்னீர் முதலியன அங்கு இருக்க வேண்டும்.


    வயதான சுமங்கலிகள், இதை வந்து பார்த்து ஆசி வழங்க வேண்டும் என்பர். முன்பே குறிப்பிட்ட நல்ல முஹூர்த்த நேரத்தில், தம்பதிகளை உள்ளே அனுப்ப வேண்டும்.
    அறைக்குள் வரும்போது, மணமகன் பட்டு வேட்டி உடுத்தி வர வேண்டும். மணப்பெண்ணையும் நங்கு அலங்கரித்து, புத்தாடை உடுத்தி வர வேண்டும்.


    சுவாமிக்கும், பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்த பின் மணபெண் சுமங்கலிகள் அனைவருக்கும் தாம்பூலம், பழம், புஷ்பம், சந்தனம், குங்குமம் கொடுக்க வேண்டும்.


    அறையில் மணமக்கள் இருவருக்கும் மாற்றுடை வைத்திருக்க வேண்டும்.
    அதி காலையில் மணமகள் முன்பாக எழுந்திந்து,வீடாயிருந்தால் வாசல் தெளித்து கோலம் போட்டு,ஸ்நானம் செய்ய வேண்டும்.


    காலையில் மணபெண்ணின் சகோதரியே அந்த அறையில் வந்து மெத்தைகளை சுருட்டி வைக்க வேண்டும்.அங்கே வைக்க பட்டிருக்கும் பணம் அவளையே சேரும்.
    படுக்கைக்கு அடியில் எந்த பக்கம் பணம் வைத்திருக்கிறார்கள் என பார்த்து அந்த இடத்தில் தலை வைத்து படுக்க வேண்டும்.
    ஒரு சிலர் முதல் இரவுக்கு பழைய தலைகாணிகள், பழைய மெத்தைகள் தான் உபயோகி கிறார்கள்.


    பாலிகை கரைத்தல்.:-
    தான்யங்களை பாலிகையில் விதைத்து, ஐந்து நாட்கள் காலையிலும், மாலையிலும் தண்ணீர் ஊற்றி, முளை வந்தவுடன், மகிழ்ந்து அதில் தே
    வதைகளின் சக்திகளை விரதத்தின் போது பூஜித்து, எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்து வைக்கும், திசை பாலகர்களை நான் நமஸ்கரி
    க்கிறேன்.அவர்கள் நான் செய்யும் கர்மாவை, சுபமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் செய்ய வேண்டும். என்று பிரார்த்தனை செய்து கொண்டு


    ஐந்து அல்லது ஏழாம் நாள் ஓடும் ஆற்றில் பகல் வேளையில் விடுவது வழக்கம். ஆனால் தற்கால த்தில் ஒரு பெரிய அடுக்கில் நீரை வைத்து
    அதிலேயே அந்த பாலிகையை கரைக்கிறார்கள்.
    திருமண தினத்தின் மறு நாள் காலை ராகு காலம், யமகண்டம் இல்லாத நேரத்தில் பாலிகைகள் யாவற்றையும் மண்டபத்தின்
    மேடையில் கிழக்கு பக்கமாக வைத்து , மணபெண்ணின் தாயார், தாம்பூலம்,பழம், தேங்காய் ஆகியவற்றை நைவேத்யம் செய்து,
    கற்பூரம் காட்ட வேண்டும். அதன் பின்னர் நடுவில் ஒரு பெரிய பித்தளை அடுக்கில் நிறைய ஜலம் வைத்து, பக்கத்தில் பாலிகைகளை கொண்டு வந்து வைத்து,


    முதலில் ஒரு கன்னிகை பெண் அப்பாலிகை களில் ஒன்றை எடுத்து, அடுக்கு நீரில்,லேசாக அமிழ செய்து நடு துவாரத்திலுள்ள மண்ணை
    அழுத்தி நீரில் கரைக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பெண்டிராக பெண் வீட்டார், பிள்ளை வீட்டார் என எல்லா பாலிகைகளையும் நீரில் கரைத்து வைக்க வேண்டும்.


    கரைக்க பட்ட பாலிகைகளை நன்றாக அலம்பி நான்கு பக்கமும் சந்தனம், குங்குமம் இட்டு வைக்க வேண்டும்.
    பாலிகைகள் கரைக்கபட்ட நீரை நடுவில் வைத்து, அதை பிரதக்ஷிணமாக சுற்றிய வண்ணம்
    மணப்பெண்ணையும் சேர்த்து கொண்டு பெண்டிர்கள் அனைவரும் ஆடி, பாடி கும்மி அடிப்பார்கள்.


    அந்த பாலிகை கரைத்த நீரை கால் படாத இடத்தில், செடியிலோ, குளத்திலோ, நதியிலோ கொட்ட வேண்டும். பாலிகைகளை ஒரு கயிற்றில்
    கட்டி ஆண் வீட்டார், பெண் வீட்டார், அவர்கள் அந்த காலத்தில் தனி தனியே சுவற்றில் மாட்டி வைத்திருப்பார்கள்.
    சம்பந்தி மரியாதை:-
    விவாஹத்திற்கு மறு நாள் காலையில் மண்டபத்தில்
    உள்ளவர்களுக்கு காபி தர வேண்டும். காலை பத்து மணிக்குள் சமையல் செய்து அங்குள்ளவ ர்களுக்கு சாப்பாடு போட வேண்டும்.
    பாலிகை கரைத்த பிறகு , பிள்ளை வீட்டு சம்பந்திகள் அனைவரையும் உட்கார வைத்து, அவர்களுக்கு பறிமார இருக்கும் இலையின்
    அடியில் மாக்கோலம் போட்டு, நுனி இலைகளாக போட்டு, எல்லோரையும் தம்பதி ஸமேதராக உட்கார வைத்து விருந்தளிக்க வேண்டும்.
    நன்கு உபசரித்து வெற்றிலை, பாக்கு ,சுண்ணாம்பு கொடுத்து உபசரிக்கவும்.
    பின்னர் ராகு காலம் யம கண்டம் இல்லாத நேரத்தில், ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் போட்டு நீர் விட்டு கரைத்து கொண்டு பிள்ளை
    வீட்டார் பெண் வீட்டார்க்கும், பெண் வீட்டார் பிள்ளை வீட்டார்க்கும், அவர்கள் அணிந்திருக்கும் வேஷ்டியின்/ புடவையின் நுனியில் சிறிது
    நனைக்க வேண்டும். இந்த சமயத்தில் மேள வாத்தியம் வாசிக்க வேண்டும். இதை தான் சம்பந்தம் கலப்பது என்கிறோம்.
    முற்காலத்தில் ஹோலி பண்டிகை மாதிரி கலர் நீரை ஒருவர் மீது ஒருவர் வாரி இறைப்பதும் உண்டு.
    இருவீட்டினரும் கலந்து சண்டை, சச்சரவு எதுவுமில்லாமல்,ஒருமித்து உறவோடு இருக்க வேண்டும் என்பதை எடுத்து காட்டவே இந்த சம்பிரதாயம்.


    துணியில் உள்ள மஞ்சள் கரை நீங்காது இருப்பது போல அவர்களது மனதிலும் சம்பந்தி என்று உறவு மறவாது இருக்க வேண்டும்.
    பிள்ளை வீட்டவர்களை பெண் வீட்டினர் நாற்காலியில் வரிசையாக அமர சொல்லி, மட்டை தேங்காய், தாம்பூலம், பழம்,புஷ்பம்,
    சந்தனம், குங்குமம் கொடுத்து, பரிசு பொருட்கள், பெண்களுக்கு ரவிக்கை துணி வைத்து ஒரு பையில் போட்டு எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
    பிறகு பிள்ளை வீட்டினர் இதே மாதிரி பெண் வீட்டினர் அனைவருக்கும் , உட்கார வைத்து தாம்பூல பை அங்கு அப்போதுள்ள எல்லோ
    ருக்கும் கொடுக்கவும். பெண்ணும் பிள்ளை வீட்டாருடன் இப்போது கிளம்பி செல்ல வேண்டும் ஆதலால், பெண்ணிற்கு தேவையான உடைகள்
    யாவற்றையும் ஒரு பெட்டியில் எடுத்து வைத்து பெண்ணை கொண்டு விடுவதற்காக , யாராவது நெருங்கிய உறவினர், உடன் சென்று கொண்டு விட்டு விட்டு திரும்பலாம்.
    இப்போது இரண்டு கட்டு சாத கூடைகள் தயார் செய்து வைத்திருப்பர் கேடரர். பிள்ளை வீட்டினர் உபயோகத்திற்கும் பெண் வீட்டினர் உபயோகத்தி
    ற்கும்,தனி தனி யாக வைக்க வேண்டும். கட்டு சாத கூடையில் மிளகாய் பொடி, நல்லெண்ணய் தடவிய இட்லி, புளியஞ்சாதம், தொட்டுகொள்ள
    வடகமும், தயிர் சாதம் தொட்டுக்கொள்ள ஊறுகாய். மோர் மிளகாய், புளி காய்ச்சல், முதலியன வைத்திருப்பர். அவரவர் எடுத்து
    சாப்பிடும் படி, அளவாக 4 இட்லி, புளி சாதம், தயிர் சாதம் என கட்டி ஒரு ப்ளாஸ்டிக் பையில் தண்ணீர் பாட்டில், எடுத்து சாப்பிட ப்ளாஷ்டிக்
    ஸ்பூன், போட்டு கொடுத்தால் அவரவர் ஆளுக்கு தேவையானதை எடுத்து செல்வர். பெண் வீட்டு கட்டு சாத கூடையை பெண் வீட்டினர் தம்மிடையே வைத்து கொள்ளலாம்.


    இத்துடன் வாழை இலை, வாழைக்காய், பூஷனி பரங்கி என காய்கள், அரிசி, பருப்பு, தாம்பூல பைகள்,எல்லா பருப்பு தேங்காய் களும் முழுவதுமாக அனுப்பி வைக்க வேண்டும்.
    (கல்யாணத்தில் பருப்பு தேங்காயை உடைத்து தருவது கிடையாது.).கூட்டோடு அதை எடுத்து சென்று, பிறகு யாராவது வரும்போது கூட்டை
    திரும்ப கொடுக்க வேண்டும். இத்துடன் அவர்களுக்கு சீருக்கு என வைத்த உடைகள், பக்ஷணங்கள், பட்டு பாய், இதர பொருட்களையும்
    அவர்கள் எடுத்து செல்ல பிள்ளை வீட்டுகாரர் களுக்கு பெண் வீட்டினர் உதவ வேண்டும்.


    பெண் வீட்டின் பழைய மாப்பிள்ளைகளுக்கும் பொட்டு கடலை பருப்பு தேங்காய் , மற்றும் பக்ஷணங்கள் கொடுப்பார்கள்.


    திருமண மண்டபம் காலி செய்து கொடுக்க வேண்டிய நேரத்திற்கு தகுந்தாற்போல் ராகு காலம், யம கண்டம் இல்லாத நேரத்தில் பிள்ளை வீட்டினர் செல்வதற்கு வேன் வசதி செய்து கொடுத்து , அவர்கள் வேனில் ஏறும் போது மேள வாத்தியத்துடன் அனுப்ப வேண்டும்.


    திருமண கேடரர் க்கு பிள்ளை வீட்டினர், தாம்பூலம், பழம்,புஷ்பம் ,பணம் வைத்து கொடுக்க வேண்டும். திருமண மண்டப
    வேலையாட்களுக்கும், மேளக்காரர், புஷ்ப அலங்காரம், செய்தவர், எல்லோருக்கும் பிள்ளை வீட்டார் பணம் கொடுக்க வேண்டும்.
    கேடெரர் பிள்ளை வீட்டினர், பெண் வீட்டினர் எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து, ஒரு வெள்ளை பூசணிகாயில் கற்பூரம் வைத்து ஏற்றி
    எல்லோரையும் திருஷ்டி சுற்றி வாசலில் போட்டு உடைக்க வேண்டும். ஒரு தேங்காயும் த்ருஷ்டி சுற்றி போட்டு உடைப்பர். பிறகு எல்லோரையும் வண்டியில் ஏற்றி அனுப்ப வேண்டும்.
    சுபம்.
    கர்பத்தை கலைக்காதே.ஒரு மரம் நல்ல பழம் அளிக்க .வேண்டுமானால் நல்ல விதை, நல்ல நிலம் நல்ல காலம் நல்ல உரம். பூச்சி கொல்லிகள் , தண்ணீர் வெய்யல் தேவை..


    ஆறறிவு படைத்த மனிதனை பிறபிக்க எவ்வளவு நியமம் வேன்டும்
    .
    நற்புத்ரன் உண்டாகி , அவனும் அவன் பெற்றோரும் நன்மை பெற சில விதிகளை ஸாஸ்த்ரம் கூறுகிறது.
    முதல் ஸம்ஸ்காரம் நன்றாக இருந்தால் தான் மற்றவை நன்றாக இருக்கும் .தர்ம நூல் கூறும் தர்ம விதிகளை முதலில் கவனிப்போம்.


    ஸ்த்ரீகள் ருதுவான தினம் முதல் 16 நாட்களுக்குள் தான் கர்ப்பம் தரிப்பார்கள். . 2,4,6,போன்ற இரட்டை படை எண்ணாணால் ஆண் குழந்தையும், 1,3,5, போன்ற ஒற்றை படை எண்ணாணால் பெண் குழந்தையும் உண்டாகும்.


    இந்த பதிணாறு நாட்களிலும் முதல் நாலு தினங்கள்: அமாவாசை; பெள:ர்ணமி; ஷஷ்டி; அஷ்டமி. ஏகாதசி,:: த்வாதசி, சதுர்தசி:, மாத பிறப்பு:, ஜன்ம நக்*ஷத்திரமாகிய நாட்களில் ஸ்த்ரீ புருஷ ஸங்கமம் கூடாது,,


    ரஜஸ் வலையான முதல் நாள் சன்டாளி; இரன்டாம் நாள் ப்ருஹ்மஹத்தி செய்தவள்;. மூண்றாம் நாள் வண்ணாத்தி எனப்படுவார்கள் அதாவது அந்த மாதிரி உள்ளவர்களின் தோஷ ஸாம்யம் என்பது கருத்து.
    . நான்காம் நாள் உண்டாகும் ஸிசு அல்பாயுஸ் ஆகும். 5 ல் புத்ரீ; 6ல் மத்யமமான புத்ரன்; ,


    9ல் நல்ல புத்ரீ; 10ல் நல் புத்ரன்;
    11ல் அதர்மம் செய்யும் பெண்; 12ல் சிறந்த புத்ரன்; 13ல் வ்யபீசாரியான பெண்; 14ல் தர்மஞ்யனும் ஆத்ம ஞ்யானியுமான புத்ரன்; 15ல் நல்ல இடத்தில் வாழ்க்கை படும் பெண்; 16ல் ஸகல நற்குண முள்ள புத்ரன். இப்படி முறையே ஜனிப்பார்கள்.


    புருஷனின் வீர்யம் அதிகமானால் ஆணும், ஸ்த்ரீயின் ஷக்தி அதிகமானால் பெண்ணும் பிறக்கும். இரண்டும் சமமானால் நபும்ஸகம் பிறக்கும்.


    மூன்று நாட்கள் நியமத்துடன் இருந்,தால் பிறக்கும் குழந்தைகள் க்*ஷேமத்துடன் இருக்கும்.இது ப்ரஜா ஸம்ரக்*ஷணத்திற்காக ஏற்பட்ட வ்ரதம்.


    திங்கள், புதன் வியாழன், வெள்ளிக் கிழமைகளில்,ரோஹிணி உத்திரம். உத்திராடம், உத்ரட்டாதி ,ஹஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், ரேவதி, ஆகிய நக்*ஷத்திரங்களில்


    , ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுஸு, கும்பம், மீனம், ஆகிய லக்னங்களில்,கூடுவது நல்ல சிசு உதிக்க ஏற்றது.


    தம்பதிகள் இருவரும் மனம் ஒருமித்து தார்மீக நன் மகப்பேறு பெற இறைவனை வேண்டி சேர்வது நல்லது.


    சுவாசம் வலது மூக்கு வழியாக செல்ல வெண்டும்.. ருது காலத்தில் அவச்யம் ஒரு முறை கர்பாதானம் செய்ய வேண்டும்.
    இல்லாவிட்டால் சிசுவை கொண்ற பாபம் உண்டாகும். பித்ருக்களின் கடன் தீர்ப்பதற்கு ஒரு புதல்வன் அவஸ்யம் வேண்டும். அது வரை ருது சங்கமம் அவஸ்யம். பிறகு நிர்பந்தமில்லை.


    பூரண கர்ப்பிணி, இஷ்டம் இல்லாதவள்,வியாதி உள்ளவள் .விறிந்த கேசமுள்ளவள்., பசி உள்ளவள். அதிகமாக புசித்தவள்,ஆகிய ஸ்த்ரீகளிடம் சேர கூடாது,


    ஸ்த்ரீகள், ப்ரஸவம் வரை புருஷ ஸங்கமம் வேண்டும் என இந்திரனிடம் வரம் கேட்டிருப்பதால், அவர்கள் கோரினால் ருது காலம் இல்லாத போதும்
    அதாவது 16 நாட்கள் சென்ற பின்பும் சங்கமம் செய்வது பாபமல்ல. பகலிலும், இரு ஸந்த்யா காலங்களிலும் இரவு பதினோரு மணிக்கு மேலும் ஸ்த்ரீ சங்கமம் கூடாது. அஸுர குணமுள்ள குழந்தை பிறக்கும்.


    சங்கம காலத்தில் இருவரும் கண்களை மூடக்கூடாது. கோபம், துக்கம் இல்லா.மல் சந்தோஷத்துடன் இருக்க வேண்டும்.


    இந்த விதிகளை அனுசரித்தவர் கிருஹஸ்தராயினும் ப்ருஹ்மசரியத்தை கைகொண்டவராவர். இதில் தவறு செய்தால் அது நமக்கும் பிறக்கும் சிசுவிற்கும் தீமை செய்தது ஆகும்.
    இதில் சாஸ்த்ரம் புகுந்து போகத்திற்கும் குறைவின்றி , அதை கட்டுப்படுத்தி முடிவில் மோக்*ஷத்திற்கும் வழி காட்டுகிறது.






    அரணியை கடைந்து அக்னி எடுப்பது போலாம் இது என்கிறது வேதம்.


    16 நாட்களுக்கு பிறகு சங்கமம் ருது வாகும் வறை செய்து கொள்ளலாம். குழந்தை உண்டாகாது. கர்ப்பம் அழிக்க வேண்டிய வேலையே இருக்காது.


    பஞ்சாங்கம் பார்த்து பத்து மாதம் கழித்து பிறக்கும் குழந்தைக்கு கிரகம் அஸ்தங்கதம் (மெளட்யம்), நீசம் இல்லாமலுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


    இம்மாதிரி பார்த்து உடலுறவு கொள்ள வேண்டும். தாய் மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இவைகளை கற்று கொடுக்க வேண்டும். ,
Working...
X