Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.

    02/10/2020
    முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவ தர்ப்பணம் முறையை மேலும் தொடர்கிறார்.
    நாம் நம்முடைய பித்ருக்களை உத்தேசித்து ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தான ஒவ்வொரு தர்ப்பணமாக பார்த்துக்கொண்டு வருகிறோம். அதிலே மாச பிறப்பிற்கும் மற்றும் யுகாதி புண்ணிய காலத்திற்கும் உள்ள சம்பந்தத்தை தெரிந்து கொண்டோம்.


    மேலும் சங்கரமண சிராத்தம் என்று மாச பிறப்பு அன்று நாம் செய்யக்கூடிய தான தர்ப்பணத்திற்கு பெயர். பஞ்சாங்கத்தில் நாம் பார்த்தோமேயானால் ஒரு புண்ணிய காலம் போட்டிருக்கும். ஷடக்ஷிதி விஷ்ணுபதி என்று போட்டிருப்பார்கள். அன்றைய தினம் நாம் சங்கல்பத்தில் சொல்லிக் கொள்ளும் பொழுது, அன்றைய தினத்திலேயே அந்தக் காலத்தையும் அந்த தேவதையும் சேர்த்து குறிப்பதுதான் அந்த புண்ணிய காலம்.


    உதாரணத்திற்கு அம்மாவாசை எடுத்துக் கொண்டால்,அன்றைக்கு நாம் செய்யக்கூடிய தர்ப்பணத்திற்கு தர்ஸ சிராத்தம் என்று பெயர். அப்பொழுது நாம் தர்ஷ புண்ணிய காலே என்று சொல்லாமல் நர்ஸ் சிராத்தே என்று சொல்லி கொள்கிறோம். அம்மாவாசை / தர்ஸம் என்பது காலத்தைக்/தேவதையை குறிக்கின்றது பித்ருக்களை உத்தேசித்து செய்யக்கூடியதான சிராத்தம்.


    அதை நாம் பிரித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அமாவாஸ்யா சிராத்தம் என்று சொல்லாமல் அமாவாஸ்யா தர்ஸ*
    *சிராத்தம் என்று சொல்ல வேண்டும். காலத்தையும் தேவதையும் சேர்த்து குறிக்கின்றது


    அதேபோல் பௌர்ணமியை பார்த்தால், பௌர்ணமாசியா என்ற ஒரு சப்தம் இருக்கிறது மற்றும் பூர்ணிமா இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம், பூர்ணிமா என்றால் அந்த காலத்தை குறிக்கின்றது, பௌர்ணமாசியா என்றால் தேவதையைக் குறிக்கின்றது. அப்படி இதை மாற்றி புரிந்து கொள்ள வேண்டும்.


    ஆகையினால்தான், நாம் உபாகர்மா செய்கின்ற பொழுது சிராவன்யாம், பூர்ணிமா யாம் என்று சொல்கிறோம். சிராவன்யாம் பௌர்ணமாசியா என்று சொல்லக்கூடாது. பௌர்ணமாசியா என்றால் தேவதையைக் குறிக்கின்றது. பூர்ணிமா என்றால் அந்த காலத்தை குறிக்கும்.


    அதனால்தான் சிராவனத்தில் நாம் சங்கல்பம் செய்யும்போது ஸ்ராவன்யாம் பூர்ணிமா யாம் என்று சொல்கிறோம். அதேபோல்தான் அமாவாஸ்யா என்பது அந்தக் காலத்தையும் தேவதையும் சேர்த்து குறிக்கின்றது. ஆனால் தர்ஸம் என்பது அன்றைக்கு நாம் செய்யக்கூடிய பித்ரு கர்மாவை குறிக்கின்றது.


    அதே போல் தான் இந்த சித்திரை மாதத்தில் இருந்து நாம் பார்த்தோமேயானால், ஒவ்வொரு பெயர்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அன்றைக்கு நாம் செய்யக்கூடிய 12 மாத தர்ப்பணத்திற்கு சங்கரமணம ஸ்ராத்தம் என்றுதான் பெயர். அதில் மாற்றமே கிடையாது.
    அப்படி என்கின்ற பொழுது தனியாக ஒரு பெயர் சொல்லி இருப்பது அந்தக் காலத்தையும் அந்தக் காலத்தில் உள்ள தேவதையும் சேர்த்து குறிக்கின்றது அந்த பெயர் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.


    இப்பொழுது சித்திரை மாதப் பிறப்பு எடுத்துக்கொண்டால், மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலம் இருக்கின்றதே அதற்கு விஷூ என்று பெயர். மேஷ விக்ஷூ என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நாழிகை அது சொல்லப்பட்டிருக்கிறது. நாம் மாதம் பிறந்ததும் தர்ப்பணம் செய்ய வேண்டியதற்கான காலம் ஒரே காலம் தான். மாத்யானிக காலம் தாண்டி தான் தர்ப் பணத்திற்கான காலம். அதில் மாற்றம் ஏதும் இல்லை.


    அது முதல் நாள் அல்லது மறுநாள் என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அதாவது முதல் மாதத்தின் கடைசி நாட்களில் வருகின்றதா அல்லது அடுத்த மாதம் முதல் தேதி அன்று தர்ப்பணம் வருகிறதா என்பதை மட்டும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். பஞ்சாங்கத்தில் மேஷ ரவி ரிஷப ரவி என்று போட்டிருப்பார்கள். குறிப்பிட்ட ஒரு நாழிகை காண்பித்து இருப்பார்கள்.


    ஆனால் இந்த விஷ்ணுபதி ஷடக்ஷிதி என்பதெல்லாம் ஒவ்வொரு மாதத்திற்கும் அந்த நாழிகைகள் மாறுபடுகின்றன. 10 16 18 என்று ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நாழிகை சொல்லப்பட்டிருக்கிறது அது எதற்காக என்றால் ஒரு விரதம் இருக்கின்றது.


    அந்த விரதத்தை அனுஷ்டிப்பதற்கு அந்த காலம் நமக்கு வேணும். அதற்காக அந்தப்பெயர் சொல்லப்பட்டிருக்கிறது. ரிஷப ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது வைகாசி மாதம். விஷ்ணுபதி என்று பெயர்.


    மிதுன ராசியில் சூரியன் பிரவேசிக்கும் போது, அந்த காலத்திற்கு ஷடசீதி என்று பெயர். கடக ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு, அதாவது ஆடி மாத பிறப்பு. அதற்கு அயனம் என்று பெயர். தக்ஷிணாயன புண்ணிய காலம் என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள்.


    சிம்ம ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு, விஷ்ணுபதி என்ற பெயர். கன்னியா ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடிய காலத்திற்கு ஷடசீதி என்ற பெயர்.


    ஐப்பசி மாதப் பிறப்பு துலா ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலம், அதற்கு விஷு என்ற பெயர். துலா விஷு என்று பஞ்சாங்கத்தில் பார்க்கலாம்.


    விருச்சிக ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு விஷ்ணுபதி என்று பெயர். மார்கழி மாத பிறப்பிற்கு அதாவது தனுர் ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு, ஷடக்ஷிதி என்று பெயர்.


    மகர ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு, அயனம் என்று பெயர். தைமாத புண்ணிய காலத்திற்கு உத்தராயணம் என்று பெயர். கும்ப ராசியில் சூரியன் பிரவேசிக்கப் கூடியதான காலத்திற்கு விஷ்ணுபதி என்ற பெயர்.


    மீன ராசியில் சூரியன் பிரவேசிக்க கூடியதான காலத்திற்கு ஷடக்ஷிதி என்று பெயர். இந்த வரிசையில் பஞ்சாங்கத்தில் காண்பித்து இருப்பார்கள். சங்கல்பத்தில் அப்போது நாம் எப்படி சொல்லிக் கொள்ள வேண்டும் என்றால், சித்திரை மாதப் புண்ணிய காலத்தில் மேஷ விஷூ புண்ணிய காலே மேஷ சங்கரமண சிராத்தம் தில தர்ப்பண ரூபேன கரிஷ்யே என்று சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும்.


    விஷ்ணுபதி புண்ணிய கால ரிஷப சங்கரமண சிராத்தே என்று சொல்லிக் கொள்ள வேண்டும். ஆனி மாத பிறப்பாக இருந்தால், ஷடக்ஷிதி புண்ணிய காலே மிதுன சங்கர மன சிராத்தம் என்று சொல்லிக்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு மாதத்திற்கும் அன்றைக்கு சொல்லப்பட்ட புண்ணிய காலத்தை சொல்லி, சங்கரமன என்றுதான் சொல்லிக் கொள்ள வேண்டும் 12 மாதத்திற்கு மே, அந்தக் காலத்தையும் தேவதையும் சேர்த்து குறிக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். #ஷடக்ஷிதி_விஷ்ணுபதி சிராத்தம் என்று சொல்லக்கூடாது.


    புண்ணிய காலத்தை தான் அது குறிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அந்தப் பெயர் எதற்காக போட்டு இருக்கிறது என்ற காரணமும் இதுதான். எப்படி மாச பிறப்பில் நாம் செய்ய வேண்டியது தர்ப்பணத்தை பார்த்தோம்.


    அடுத்ததாக தர்மசாஸ்திரம் காண்பிக்கக் கூடிய புண்ணியகாலம் மன்வாதி, இது வருடத்தில் 14 புண்ணிய காலங்கள் வருகின்றன. இந்த மன்வாதி புண்ணிய காலம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று. நாம் இப்போது செய்து கொண்டிருக்கின்ற புண்ணிய காலங்கள் எல்லாம் நமக்காகவும் நம் குடும்பத்திற்காகவும் நம் பித்ருக்களை உத்தேசித்து செய்து கொள்ளக் கூடியது.


    #ஆனால்_இந்த_மன்வாதி_புண்ணிய #காலம்_என்பது_இந்த_தேசத்திற்காக #நாம்_செய்யவேண்டும்_என்று #காண்பித்து_இருக்கிறது_தர்ம #சாஸ்திரம்_மிக_மிக_முக்கியமான_ஒரு #புண்ணிய_காலம்_அதைப்பற்றி_அடுத்த #உபன்யாசத்தில்_பார்ப்போம்.
Working...
X