Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.

    18/10/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் நம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடியதான தர்ப்பணங்களின் வரிசையை மேலும் விளக்குகிறார்.*
    *அவைகளில் சில சமயம் ஒரே நாட்களில் இரண்டு மூன்று அல்லது நான்கு புண்ணிய காலங்கள் வரும். அப்போது எவ்வளவு தர்ப்பணங்களை செய்ய வேண்டும் எதை முதலில் செய்ய வேண்டும்.*
    *அல்லது ஒரு தர்ப்பணத்தை செய்தால் போதும் என்றால் எதை செய்ய வேண்டும் என்பதை பற்றிய விஷயங்களில் நமக்கு புரிதல் வேண்டும்.*
    *நமக்கு என்ன தோன்றும் ஒரு சொம்பு ஜலம் ஒரு 10 கிராம் எள் 10 நிமிடம் செலவு ஆகப்போகிறது தனித்தனியாகவே நாம் செய்து விடலாம் என்று தோன்றும். ஆனால் நாம் நம்முடைய தர்ம சாஸ்திரத்தை தான் அடிப்படையாக வைத்துக் கொண்டு இதையெல்லாம் பார்க்க வேண்டும்.*
    *தர்ம சாஸ்திரத்தில் அப்படி சொல்லி இருந்தால் நாம் செய்யலாம் அப்படி காண்பிக்க வில்லை என்றால் செய்யக்கூடாது. அப்படி செய்தால் என்ன ஆகும் அது செய்யாததாகதான் கருதப்படும்.*
    *எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது இந்த முறையில் தான் செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரம் நம்முடைய தர்மசாஸ்திரம் தான். ஆகையினால் தர்ம சாஸ்திரத்தில் எப்படி காண்பிக்கப்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு நாம் செய்ய வேண்டும்.*
    *ஏன் இப்படி சேர்த்து செய்யவேண்டும் என்று சொன்னால், ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. ஒரு புண்ணிய காலம் என்று எடுத்துக்கொண்டால் அது ஆரம்பத்தில் இருந்து முடிகின்ற வரையில் தான் என்று நாம் எடுத்துக் கொள்வோம்.*
    *காலையில் எழுந்ததில் இருந்து நாம் தர்ப்பணம் செய்கின்ற வரை புண்ணியகாலம் என்கின்ற ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் அது அப்படி அல்ல. அன்றைய தினம் முழுவதும் ஆகத்தான் தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது புண்ணிய காலமாக.*
    *ஒரு அமாவாசை என்று எடுத்துக்கொண்டால் கூட முதல் நாள் இரவில் இருந்தே அந்த காலம் ஆரம்பித்து விடுகிறது. முதல் நாள் இரவில் இருந்தே நமக்கு நியமங்கள் ஆரம்பிக்கின்றன. முதல் நாள் இரவில் சாப்பிடக்கூடாது வஸ்துக்களை சாப்பிடக்கூடாது கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்.*
    *எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும் முடியவில்லை என்றால் ஆகாரமாக தான் சாப்பிட வேண்டும். மறுநாள் காலை ஆரம்பித்து அன்று முழுவதும் இருந்து மறுநாள் காலையில்தான் அமாவாசை புண்ணிய காலம் பூர்த்தியாகிறது.*
    *அன்றைய தினம் முழுவதும் ஆகவே புண்ணிய காலமாக தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கிறது. ஆகையினாலே தர்ப்பணம் முடிந்துவிட்டது என்றால் புண்ணிய காலம் ஆகிவிட்டது என்று கணக்கில் வராது.*
    *சிராத்தமே இப்போது நாம் எடுத்துக் கொண்டால் தாயார் தகப்பனாருக்கு உத்தேசித்து செய்யக்கூடயதான சிராத்தம், முதல் நாள் இரவில் இருந்தே ஆரம்பமாகிறது. முதல் நாள் இரவில் இருந்தே நியமமாக இருந்து மறுநாள் சிராத்த தினம் அன்று கட்டுப்பாடுடன் இருந்து, அதற்கு மறுநாள் காலை சிராத்தாங்க தர்ப்பணம் செய்தால் தான், சிராத்தம் முடிகிறது.*
    *இன்றைய நாட்களில் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை அன்றே செய்து விடுகிறோம். அது எப்படி வழக்கத்தில் வந்தது என்று தெரியவில்லை. ஏனென்றால், எக்காரணத்தைக் கொண்டும் வருடாந்திர சிராத்தம் செய்தால், மறு நாள் காலையில் தான், சிராத்தாங்க தர்ப்பணம் செய்ய வேண்டும். ஸ்ராத்த தினத்தில் சிராத்த முடிந்தவுடன் அன்றே செய்வது என்ற எந்த பிரமாணமும் தர்ம சாஸ்திரத்தில் காண்பிக்கப்படவில்லை.*
    *இன்னும் நாம் உட்புகுந்து பார்த்தோமேயானால் ஸ்ராத்தம் ஆகிவிட்டது ஆனால் சிராத்தாங்க தர்ப்பணம் ஆகவில்லை, பரேஹனி தர்ப்பணம் என்று பெயர். மறுநாள் காலையில் செய்ய வேண்டிய தர்ப்பணம் என்று அர்த்தம்.*
    *நாம் சிராத்தம் முடிந்து சாப்பிட்ட உடன் நமக்கு ஒரு தீட்டு வந்துவிட்டது என்றால் மறுநாள் காலையில் அந்த சிராத்தாங்க தர்ப்பணம் செய்யும் சமயத்தில் நமக்கு சுத்தி உண்டு தீட்டு கிடையாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*
    *தீட்டு வந்து விட்டாலும் கூட மறுநாள் காலையில் தான் அந்த சிராத்தங்க தர்ப்பணம் செய்யவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் சிராத்த தினத்தன்று செய்யவே கூடாது. எங்கே அப்படி செய்ய வேண்டும் என்றால், சில இடங்களில் அதாவது சில ஸ்ராத்தங்களில் அப்படி சொல்லப்பட்டிருக்கிறது. இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, தர்ஷ ஸ்ராத்தம் அன்ன ரூபமாக செய்கின்ற பக்ஷத்தில் அதாவது அம்மாவாசையன்று சிராத்தத்துக்கு முன்னர் சிராத்தம் தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும், பிறகு ஸ்ராத்தம் செய்ய வேண்டும்.*
    *தர்ஸம் மட்டுமல்ல அஷ்டகா சிராத்தம், சங்கரமன சிராத்தம் அதாவது மாதப் பிறப்பு, வய்தீபாதம் /* கிரகண புண்ணிய கால ஸ்ராத்தங்கள் இவைகள் எல்லாம் நாம் தில தர்ப்பணம் ஆக செய்து கொண்டு வருகிறோம்.*
    *இதை அன்ன ரூபமாக செய்யும்பொழுது, முதலில் சிராத்தாங்க தர்ப்பணம் பின்பு சிராத்தம் அப்படி செய்ய வேண்டும். பக்ஷ மஹாளயம் என்று 16 நாட்களுக்கு நாம் செய்கிறோம். இந்த 16 நாட்களும் நாம் அன்ன ரூபமாக செய்யும் பட்சத்தில் தினந்தோறும் சிராத்தம் முடிந்தவுடன் தர்ப்பணம் செய்துவிட வேண்டும்.*
    *இந்தப் 16 நாட்களும் நாம் சிராத்தத்தை அன்ன ரூபமாக செய்கின்ற பொழுது, ஸ்ராத்தம் முடிந்தவுடன் அன்றைய தினமே சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்ய வேண்டும். இதற்கான நியமம் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.*


    *நாம் நம்முடைய தாயார் தகப்பனாருக்கு செய்யக்கூடிய வருடாந்திர ஸ்ராத்தம் செய்தவுடன் மறுநாள் காலையில்தான் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காட்டுகிறது.*


    *சிராத்த தினத்தன்று நாம் செய்யக் கூடாது அப்படி செய்தாலும் அது செய்ததாக ஆகாது. மறு நாள் காலையில் தான் சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்து ஸ்ராத்தம் பூர்த்திசெய்ய வேண்டும்.*


    *தீட்டு வந்தாலும் மற்றும் கர்மாவே செய்யக் கூடிய நிலைமை வந்தாலும், அந்த ஸ்ராத்தாங்க தர்ப்பணத்திற்கு காலம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது அதாவது மறுநாள் காலையில்தான் அதை நாம் செய்ய வேண்டும் அப்போது நமக்கு சுத்தி வந்துவிடும்.*
    *அதேபோல ஹிரண்ய சிராத்தம் ஆக சில ஸ்ராத்தங்களை நாம் செய்யும் போது, ஸ்ராத்தம் முடிந்தவுடனேயே சிராத்தாங்க தர்ப்பணத்தை செய்துவிட வேண்டும்.*


    *வருடாந்திர சிராத்தத்தை ஹிரண்ய/ ஆம ரூபமாக செய்யக்கூடாது அன்ன ரூபமாக தான் செய்ய வேண்டும் ஆனால் சிராத்தாங்க தர்ப்பணத்தை மறு நாள் காலையில் தான் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*


    *ஆனால் இன்று உலகம் பூராவும் அன்றைய தினத்தில் தான் நடக்கிறது என்றால் அதை செய்பவர்கள் இடத்தில் தான் கேட்க வேண்டும், தர்ம சாஸ்திரம் சொல்வதை நாம் பார்த்துக்கொண்டு வருகிறோம், தர்ம சாஸ்திரத்தில் இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தை மறுநாள் காலையில் தான் செய்ய வேண்டும் என்பதை பார்க்க நேரிடுகிறது. இந்த சிராத்தாங்க தர்ப்பணத்தையும் சேர்த்துதான் சேர்த்து செய்வதைப் பற்றி தர்ம சாஸ்திரம் சொல்கிறது. அது என்ன என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X