Announcement

Collapse
No announcement yet.

kadal snaanam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • kadal snaanam.

    03-11-2020 to 19-11-2020* *No Broadcaste* *20-11-2020*
    *சமுத்திர ஸ்நானம்*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நம்முடைய கடமைகளை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வரக்கூடிய


    வரிசையில் ஷண்ணவதி தர்ப்பணம் செய்கின்ற முறைய விரிவாகப் பார்த்து அதில் நாம் செய்யாமல் விட்டால், மேலும் அதற்கான பிராயச்சித்தங்கள் என்ன என்பதை பார்த்துக் கொண்டு வருகிறோம்.*


    *இதற்கு நடுவில் சமுத்திர ஸ்நானம் என்பதைப் பற்றி சில தர்ப்பண தினங்களில் விசேஷமாக சொல்லப்பட்டு இருக்கிறது அதை பார்க்க இருக்கிறோம்.


    இதைப் பார்த்த பிறகு ஷண்ணவதி தர்ப்பணங்களை செய்ய முடியாவிடில் அதற்கான பரிகாரங்களை பார்க்கலாம்.*
    *பொதுவாக எந்த புண்ணிய நதிகளுக்கு சென்றாலும் ஸ்நானம் பானம் இவைகள் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.


    தமிழில் சொல்லும் பொழுது கங்காஸ்நானம் துங்கா பானம்.* *கங்கைக்கு போனால் ஸ்நானம் பிரதானமாக சொல்லப்பட்டிருக்கிறது.
    துங்கா நதிக்கு போனால் ஒரு உத்தரணி தீர்த்தமாவது குடிக்க வேண்டும் அங்கு ஸ்நானம் பிரதானம் இல்லை. இப்படி ஒவ்வொரு புண்ணிய நதிகளுக்கும் ஒவ்வொரு விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.


    எந்த புண்ணிய நதிகளுக்கு நாம் சென்றாலும் அங்கே ஸ்நானம் செய்ய வேண்டும் ஒரு உத்தரணி நாம் அதை சாப்பிட வேண்டும்.*
    *இப்படி வரும் பொழுது அதிலே சமுத்திரமும் சொல்லப்பட்டுள்ளது. சமுத்திரத்திற்கு போனால் அங்கே ஸ்நானம் செய்துவிட்டு ஒரு உத்தரணி அந்த தீர்த்தத்தையும் பருகலாமா என்ற கேள்வி வருகிறது.


    தர்மசாஸ்திரம் சமுத்திர ஸ்தானத்திற்கு என்று தனியாக விதிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது.* *_வேதம் இதைப் பற்றி சொல்லும்போது ஒரு கதையை சொல்லி சொல்லுகிறது.
    சமுத்திரத்தின் உடைய தண்ணீரை நாம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கடல் தண்ணீர் குடிக்க கூடியது அல்ல.
    கடல் தண்ணீரை நாம் குடித்தாலோ அல்லது குடிக்கும் படி செய்து அதை நாம் உபயோகப்படுத்தினால் தண்ணீர் சம்பந்தமான நோய் மூலம் நாம் இறக்க நேரிடும்.
    கடல் அதாவது சமுத்திர தண்ணீரை நான் உள்ளுக்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆனால் சில காலங்களில் ஸ்நானம் என்பது விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.*


    *இது விஷயமாக தர்மசாஸ்திரம் சொல்கின்ற பொழுது, அரசமரத்தை எங்கு பார்த்தாலும் நமஸ்காரம் செய்ய வேண்டும் குறைந்தபட்சம் கைகூப்பி நமஸ்கரிக்க வேண்டும்.


    அதேபோல சமுத்திரத்தை நாம் எங்கு பார்த்தாலும் நமஸ்காரம் செய்ய வேண்டும் சமுத்திர இராஜா. ஆபாம் பதிகி என்று பெயர் சமுத்திரத்திற்கு. சமுத்திரத்தை நாம் எங்கு பார்த்தாலும் கை கூப்பி நமஸ்காரம் செய்ய வேண்டும்.*
    *ஆனால் இந்த இரண்டையும் கையால் தொடக்கூடாது எப்பொழுதும் சில காலங்களை தவிர்த்து. அதாவது அரச மரத்தை வைத்து விடுவதோ அல்லது அதை பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்வது சில காலங்களில் தான் செய்யலாம்.


    அமாவாசையும் திங்கட்கிழமையும் வரக்கூடிய அமா சோமவாரத்திலும், சனிக் கிழமைகளிலும், இந்த இரண்டு தினங்களில் தான் அரச மரத்தை தொடுவதோ ப்ரதக்ஷிண நமஸ்காரம் செய்வது செய்யலாம்.*


    *அதேபோல, கடலில் நாம் ஸ்நானம் அல்லது அதைத் தொடுவது பருவகாலங்களில் தான் அதை செய்யலாம். பௌர்ணமி அம்மாவாசை இவை இரண்டுக்கும் பர்வா என்று பெயர். இந்த இரண்டு தினங்களில் தான் நாம் சமுத்திரத்தை தொடலாம் ஸ்நானம் செய்யலாம். இந்த தகவலை நமக்கு சொல்வது மகாபாரதம்.*


    *ஒரு புல்லின் நுனியால் கூட அரச மரத்தையோ சமுத்திரத்தையும் நாம் தொடக்கூடாது. ஆனால் பருவ காலத்தில் ஸ்னானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது.


    பௌர்ணமியில் அல்லது அமாவாசையில் சமுத்திர ஸ்நானம் செய்தால், ஒரு முறை ஸ்நானம் செய்யும்போது லட்சம் ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து போகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.


    மற்ற நாட்களில் சமுத்திரத்தை தொடுவதோ அதில் ஸ்நானம் செய்வதும் கூடாது.*
    *ஆனால் சேதுவில் அதாவது ராமேஸ்வரத்தில் சமுத்திர ஸ்நானம் நித்தியமாகவே என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை ஜெமினி என்கின்ற மகரிஷி சொல்கிறார். ராமேஸ்வரத்தில் ஸ்நானம் தினமுமே செய்யலாம். விதிவிலக்காக


    சொல்லப்பட்டுள்ளது. மற்ற எந்த இடத்தில் சமுத்திரத்திற்கு நாம் சென்றாலும் பவுர்ணமி அமாவாசை தினங்கள் தவிர நாம் அதை தொடவோ அதில் ஸ்னானம் செய்யவோ கூடாது.*


    *மேலும் சில புண்ணிய தினங்களில் சமுத்திர ஸ்நானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. பௌர்ணமி அமாவாசை கிரகண புண்ணிய தினங்கள் பவுர்ணமியும் பிரதம யும் சேர்ந்து வரக்கூடிய நாட்களில் கிரகணம் வரும் அமாவாசையும் பிரதமரையும் சேரக்கூடிய நாட்களில் தான் கிரகண புண்ணிய காலம் வரும்.


    சில நேரங்களில் முதல் நாள் கூட பௌர்ணமியும் அமாவாசையும் வரலாம் மறுநாள் கிரகணம் வரும். ஆகையினாலே கிரகண புண்ணிய காலத்தில் சமுத்திர ஸ்நானம் என்பது செய்யலாம்.
    கிருஷ்ண பக்ஷ சதுர்த்தசி செவ்வாய்க்கிழமை வரும் பொழுது செய்யலாம். கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி என்று இந்த மூன்றும் சேர்ந்து வருவதற்கு பெயர்.* *கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி அன்று நாம் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்வதால் ஆயிரம் ஜென்மங்களில் செய்த பாவங்கள் போய்விடுகிறது.


    அதேபோல் யுகாதி புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் விசேஷமாக சொல்லப்பட்டிருக்கிறது. ஒருவர் முறையாக யுகாதி புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் செய்தால்,


    குருக்ஷேத்திரத்தில் ஆயிரம் கோதானம் செய்தால் என்ன புண்ணியங்கள்/பலன்கள் கிடைக்குமோ, அதாவது நமக்கு மட்டுமல்ல நம்முடைய பிதுருக்கள் மற்றும் நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கும் பலன்கள் கிடைக்கும் என்று சௌர புராணம் காண்பிக்கிறது.


    இப்படியாக விசேஷமாக சமுத்திர ஸ்நானம் இந்த புண்ணிய காலங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.*


    *இந்த சமுத்ர ஸ்நானம் செய்ய வேண்டிய முறையையும் தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது அதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*


    21-11-2020* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நம்முடைய தர்மங்களின் வரிசைகளை பார்த்துக் கொண்டு வருகின்ற வகையில் சில புண்ணிய காலங்களில் சமுத்திர ஸ்நானம் பெருமைகளையும் புண்ணியங்களையும் மேலும் தொடர்கிறார்.*
Working...
X