Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram.contd. kadal snaanam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram.contd. kadal snaanam.

    *அதாவதுகடலுக்கு சென்று ஸ்நானம்செய்வது அதனுடைய முறையையும்தர்மசாஸ்திரம் நமக்குகாட்டுகிறது.பொதுவாகவேஎந்த ஒரு நதிக்கும் நாம்சென்று ஸ்நானம் செய்யும்போதுஅதற்கான ஒரு



    முறைசொல்லப்பட்டிருக்கிறது.தர்மசாஸ்திரத்தில் நமக்கு ஒருமுறை வழி சொல்லப்பட்டுஇருக்கிறது என்றால் அதற்குநிறைய காரணங்கள் உண்டு.*



    *முதலில்தேக ஆரோக்கியம் நமக்குகிடைக்கின்றது.அதுதான்திர்ஷ்டம் பலம்.தேகஆரோக்கியத்திற்கு,இரண்டுவிதமான பலன்கள் நமக்குகிடைக்கின்றன.
    ஒன்றுதிர்ஷ்டம் மற்றொன்று அதிர்ஷ்டம்.கண்ணினால்பார்க்கக் கூடியதான பலனுக்குதிர்ஷ்டம் என்று பெயர்.அனுபவித்துதெரிந்து கொள்ளக்கூடியபலனுக்கு அதிர்ஷ்டம் என்றுபெயர்.*



    *திர்ஷ்டம்அதனுடைய பலன் என்ன என்றால்,தேகஆரோக்கியம் நமக்கு கிடைக்கிறது.இதுவிஷயமாக தர்மசாஸ்திரம்சொல்லும்பொழுது எங்கு நாம்ஒரு நதிக்கு ஸ்னானம் செய்யபோகிறோமோ அங்கு அது எப்படிஇருக்க வேண்டும் என்றுகாண்பிக்கிறது.*






    *அதாவதுவியாசர் இதைப் பற்றி சொல்லும்பொழுது,ஒருநதியிலே நாம் நானும் செய்யப்போகிறோம்என்றால் அந்த நதியில் தண்ணீர்ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.ஆறுகளில்ஓடக்கூடிய தண்ணீர் எப்பொழுதும்கெட்டுப்போகாது.



    நாம்ஒரு குடத்திலோ அல்லது ஒருபாத்திரத்தில் தண்ணீரை நாம்பிடித்து வைத்தால் ஒரு நாள்தான் அது சுத்தமாக இருக்கும்.மறுநாள்அதில் ஒரு வழவழப்புத் தன்மைவந்துவிடும்.கெட்டுப்போய்விடும்.



    ஆனால்நதியில் வேகமாக ஓடிக்கொண்டுஇருப்பதினால் அது சுத்தமாகஇருக்கும்.ஈஸ்வரஷிஷ்டி அப்படியாக உள்ளது.ஒருநதியில் தண்ணீர் தேங்கிஇருந்தது என்றால் அங்கேஸ்நானம் செய்யக்கூடாது.



    தடுக்கப்பட்டுஇருந்தால் ஸ்நானம் செய்யக்கூடாது.போகின்றதண்ணீர் திரும்பவும் சுற்றிவருகிறது என்றால் அங்கேஸ்நானம் செய்யக்கூடாது.இவைஎல்லாம் தர்ம சாஸ்திரம்சொல்கிறது.*






    *அதனால்தான்பழைய நாட்களில் நம் முன்னோர்கள்தண்ணீரை சேமிப்பதற்கு,சிலவழிகளைக் கண்டுபிடித்துகையாண்டிருக்கிறார்கள்.



    எந்தநதியும் அவர்கள் தடுக்கமாட்டார்கள்.நம்முன்னோர்கள் நதியை தடுத்துஅணை கட்ட வேண்டும் என்றுநினைத்து இருந்தால் எவ்வளவோஅணைகள் கட்டி இருக்கலாம்.அதனால்நதிக்கு குறுக்கே எந்த அணையும்அவர்கள் கட்டவில்லை.*






    *பெரியநதிகளில் இருந்து கிளை நதியாகவெட்டி அங்கங்கே குளங்கள்,ஏரிகள்,நீர்நிலைகளை சேமிக்கிறார்கள்.ஒருநதியில் ஓட கூடிய தண்ணீரைதடுக்கக்கூடாது.அந்தநதியின் உடைய வேகம் குறைந்துபோய்விடும்.
    நம்முடையதேசத்தில் எல்லா நதிகளும்சம தளத்தில் தான் போகிறது.மேற்குதூக்கியும் கிழக்கே தணிந்துபோகவில்லை.*



    *ஏதோசில இடங்களில் மலைகளிலிருந்துகீழே இறங்குவதால் அல்லதுமேட்டிலிருந்து பள்ளத்திற்குஇறங்குவது இருக்கலாம்.தண்ணீர்ஓடிக்கொண்டே இருந்தால்தான்



    கடைசிவரையிலும்அந்த தண்ணீர் பாயும்.நம்முடையமுன்னோர்கள் அதனால்தான் எந்தநதியின் குறுக்கே அணைகளைக்கட்ட வில்லை காரணம் நபியுடையவேகத்தை குறைக்கக் கூடாது.*






    *வேகத்தைகுறைத்தால் தண்ணீர் சீராகபாயாது.ஆகையினால்நம் முன்னோர்கள் அனைத்துநதிகளின் பக்கத்திலும்குளங்கள் ஏரிகளை வெட்டினார்கள்.அந்தநதியில் செல்லக்கூடிய தண்ணீரைகுளங்களிலும் ஏரிகளிலும்தான் சேமித்தார்கள்.*



    *அதனால்நதிகள் கெட்டுப்போகாமல்கடைசிவரையிலும் பாய்ந்தது.நாம்என்ன நினைக்கிறோம் என்றால்அப்பொழுது சூழல் நன்றாகஇருந்தது மழை நிறைய பெய்ததுஅதனால் நன்றாக ஓடிக்கொண்டிருந்ததுஅளவுக்கு அதிகமாக மழை இருந்ததனால்.



    ஆனால்இப்போது மழை குறைந்து போய்விட்டதுஎன்று நாம் நினைக்கிறோம்ஆனால் பெரிய அளவில் மழை ஒன்றும்குறைந்து போகவில்லை.நாம்நதியின் குறுக்கே அணைகள்கற்றுக் கொ



    ள்வோம்என்று இடைஞ்சல் செய்து ஊற்றுத்தண்ணீர் எல்லாம் குறைந்துபோய்விட்டது.நதிகளிலேஊற்றுத் தண்ணீர் என்றும்உண்டு.*






    *கோடைகாலங்களில் அங்கங்கே தண்ணீர்ஊற்று மூலமாக வந்து கொண்டிருக்கும்.ஜீவநதிகள்என்று பெயர்.வருஷம்முழுவதும் தண்ணீர் ஓடிக்கொண்டேஇருக்கும் அதற்கு ஜீவநதிகள்என்ற பெயர்.



    அதனால்தான் நம் முன்னோர்கள் எந்தநதிக்கு குறுக்கே ஒரு தடுப்பணையைகட்டாமல் இருந்தார்கள்.மாறாகஏரி குளங்களில் தண்ணீரைசேமித்தார்கள்.*



    *எப்பொழுதுஆற்றிலே தண்ணீர் வந்தாலும்அந்த குளங்களும் ஏரிகளும்நிரம்பும்.அதிலிருந்துநாம் உபயோகப்படுத்துவதுஎன்கின்ற வழக்கம் தான்முன்னோர்கள் இடத்தில் இருந்தது.தர்மசாஸ்திரமும் அதைத்தான்சொல்கிறது.*



    *ஆகையினாலேநிற்கக்கூடிய தண்ணீரில் நாம்ஸ்நானம் செய்யக்கூடாது.ஏனென்றால்அங்கே நம்முடைய உயிரைப் பறிக்ககூடிய சக்திகள் நிறைய இருக்கும்.



    தண்ணீர்தேங்கி தானே இருக்கிறது என்றுஇறங்கினால் நம்மை உள்ளேஇழுத்து விடும்.ஓடக்கூடியதான தண்ணீர் நம்மை தள்ளிவிடுமே தவிர உள்ளே இழுக்காது.
    இதையெல்லாம்மனதில் வைத்துக் கொண்டுதான்தர்மசாஸ்திரம் இந்த அளவுக்குகட்டுப்பாடுகளை சொல்கிறது.*






    *தண்ணீர்போய் திரும்ப அங்கேயே வருகிறதுஎன்றால் இங்கேயும் நாம்குளிக்கக்கூடாது அது விஷம்கலந்த தண்ணீராக இருக்க வாய்ப்புஉள்ளது.நம்முடையஉடம்பிற்கு அது ஆரோக்கியத்தைகொடுக்காது.*






    *நதிகளுக்குசென்று நாம் ஸ்நானம் செய்தால்,அவஹாகஸ்நானம்,அதாவதுநன்றாக மூழ்கி குளிக்க வேண்டும்என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.யார்யார் எப்படி எப்படி ஸ்னானம்செய்யவேண்டும் என்பதையும்காண்பிக்கிறது.*
    *கிரகஸ்தர்கள்கல்யாணம் செய்து கொண்டவர்கள்நதிகளுக்கு சென்றால் நன்றாகமூழ்கி ஸ்நானம் செய்ய வேண்டும்.மற்றவர்கள்நதியிலே உட்காரக்கூடியஇடத்தில் உட்கார்ந்து கொண்டுஅந்த தண்ணியை எடுத்து விட்டுக்கொள்ள வேண்டும்.



    இப்படித்தான்செய்ய வேண்டும்.ஆனால்கடலுக்கு சென்றால்,எக்காரணத்தைக்கொண்டும்,அவஹாகஸ்நானம் யாருக்குமே கிடையாதுகூடாது.



    சமுத்திரத்திற்குசென்று ஸ்நானம் செய்யக்கூடாது.சமுத்திரத்திற்குசென்றால் உட்காரக்கூடியஇடத்தில் உட்கார்ந்து கொண்டுஅந்த தண்ணீரை எடுத்து மேலேவிட்டுக் கொண்டுதான் ஸ்நானம்செய்ய வேண்டும்.



    மேலும்யார் யாரெல்லாம் சமுத்திரஸ்நானம் செய்யலாம் யார்செய்யக்கூடாது என்பதையும்தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றதுஅடுத்த உபன்யாசத்தில் அதைபற்றி பார்ப்போம்.*






    *22-11-2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சமுத்திர ஸ்நானம் பற்றி சில புண்ணிய காலங்களில் செய்வதை மேலும் தொடர்கிறார்.*
    *சமுத்திர ஸ்நானம் சில புண்ணிய காலங்களில் செய்யும் பொழுது நிறைய புண்ணியங்களையும் மனநிம்மதியும் சமுத்திரத்தை பார்த்தாலே நமக்கு கிடைக்கிறது.*



    *மனக்கலக்கம் மனசிலே குழப்பங்கள் அமைதியின்மை இருந்தால் நம் முன்னோர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசனம் செய்து விட்டு வர வேண்டும் என்று சொல்வார்கள்.*



    *அங்கே என்ன சமுத்திர தீர்த்தம் சுப்ரமணிய சுவாமியை பார்த்துவிட்டு அந்த சமுத்திரத்தை நாம் தரிசனம் செய்தாலே மனக் கலக்கங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்.*



    *அதனால்தான் சமுத்திரம் எங்கு இருந்தாலும் அங்கு சென்று பார்த்து சற்று அமர்ந்து விட்டு வந்தாலே நமக்கு மன அமைதியை நிம்மதியை கொடுக்கும் சமுத்திர தரிசனம்.*



    *நம்முடைய தர்ம சாஸ்திரம் சமுத்திர ஸ்நானம் என்பதை சில புண்ணிய காலங்களில் வகுத்துக் கொடுத்திருக்கிறது. அந்த சமுத்திர ஸ்நானம் யார் யாரெல்லாம் செய்யக் கூடாது என்றும் சொல்கிறது.*



    *சிலபேர்கள் சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவளுடைய கணவன் செய்யக்கூடாது எந்தப் புண்ணிய காலமாக இருந்தாலும் கூட. தூர யாத்திரை (காசி யாத்திரை) அதாவது நீண்ட பயணம் மனைவி கர்ப்பிணியாக இருக்கும் பொழுது செய்யக்கூடாது. வபனம் செய்து கொள்ளக் கூடாது அந்த நேரங்களில்.*



    *அடுத்ததாக, சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது மேலும் இறந்தவர்களுடைய உடலை தூக்கிச் செல்லக்கூடாது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது இந்த மாதிரியான கட்டுப்பாடுகள் சொல்லப்பட்டுள்ளது.*



    *பரத்வாஜ மகரிஷி சொல்லும் போது மனைவி கர்ப்பமாக இருக்கும் போது வபனம் கூடாது. சமுத்திர ஸ்நானம் செய்யக்கூடாது செய்தால் என்ன என்றால் அவனுக்கு பிறக்கக்கூடிய குழந்தை அவனுக்காக இல்லாமல் போய்விடும்.



    ஓரளவு வளர்ந்த பிறகு அந்த குழந்தை எங்கேயாவது ஒரு தூரதேசம் சென்று நமக்கும் அவனுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடும். அல்லது அந்த குழந்தை வேறு எங்காவது போய்விடும் அடுத்த தலைமுறையே நமக்கு இல்லாமல் போய்விடும் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கின்றது.*



    *மற்றவர்கள் இந்த புண்ணிய காலங்களில் கட்டாயம் சமுத்திர ஸ்நானம் செய்யவேண்டும் எப்படி செய்யவேண்டும் என்றால், தர்மசாஸ்திரம் காண்பிக்கின்றது கையிலே நாம் ஜலம் எடுத்துக்கொண்டு போக வேண்டும். ஏனென்றால் ஸ்நானம் செய்வதற்கு முன்பு ஆசமனம் செய்து சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.*



    *ஆசமனம் செய்வதற்கு சமுத்திர ஜலத்தை நாம் உபயோகப்படுத்தக் கூடாது. வாசனைப் பொருட்கள் கலந்த ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது. சமுத்திரம் ஜலத்தினால் ஆசமனம் செய்யக்கூடாது. நிறம் மாறி இருக்கக்கூடிய தண்ணீரினால் ஆசமனம் செய்யக்கூடாது. இதை எல்லாம் தர்மசாஸ்திரம் காண்பித்துள்ளது.*



    *பொதுவாக முதலில் எந்த நதிகளுக்கு சென்றாலும் முதலில் ஒரு தடவை மூழ்கி ஸ்நானம் செய்து விடவேண்டும். பிறகு ஆசமனம் செய்து சங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும்.*



    *சமுத்திர ஸ்நானத்திற்க்கு போகும் பொழுது முதலில் வீட்டிலேயோ அல்லது நாம் எங்கு தங்கி இருக்கிறோமோ அந்த இடத்தில் ஸ்நானம் முதலில் செய்து விட்டு பிறகு போக வேண்டும். காலையில் எழுந்தவுடன் முதலில் சமுத்திர ஸ்நானம் என்பது கூடாது.



    முதலில் வேறு தண்ணீரில் நாம் குளித்துவிட வேண்டும் பிறகு சமுத்திரக் கரைக்கு சென்று ஸ்நானம் செய்ய வேண்டும். ஆசமனம் செய்வதற்கு கையிலே தண்ணீர் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.*



    *ஆசமனம் சங்கல்பம் செய்த பிறகு தண்ணீரை இரண்டு கைகளினாலும் அள்ளி அள்ளி விட்டுக் கொள்ள வேண்டும். சமுத்திரத்தில் மூழ்கி குளிக்க கூடாது அதனால் கையில் பித்தளை சொம்பு எடுத்துக்கொண்டு போய் அதன்மூலமாக எடுத்துக்கொண்டு நாம்



    தலையில் விட்டுக்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. சமுத்திரம் குளம் ஏரி இவைகளுக்கு செல்லும் பொழுது எந்த திசையில் நின்று நாம் ஸ்நானம் செய்ய வேண்டும் என்றால், சூரியன் எந்த திசையில் இருக்கிறாரோ அந்த திக்கை பார்த்து அமர்ந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.



    கிரகண புண்ணிய காலமாக இருக்கின்ற சமயத்திலே இரவிலே சந்திரன் எந்த திசையில் இருக்கிறாரோ அந்த திசையில் பார்த்து உட்கார்ந்து ஸ்நானம் செய்ய வேண்டும்.*



    *அப்படி ஸ்நானம் செய்த பிறகு ஸ்நானாங்க தர்ப்பணம் உண்டு. தர்ப்பணம் செய்வதற்கு அந்த சமுத்திர தண்ணீரை உபயோகப்படுத்தலாம் ஏனென்றால் நாம் குடிக்கக்கூடாது என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது தவிர, ஆனால் ஆசமனம் செய்வதற்கு நாம் தண்ணீர் எடுத்துக் கொண்டு போக வேண்டும்.



    அதனால் சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தி ஸ்நானாங்க தர்ப்பணங்களை செய்யலாம். பிறகு வாசோதகம் சிகோதகம் என்று உண்டு. தலையில் முடியில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற தண்ணீர் மூலமாக செய்வது அதை கரையிலே வந்து செய்ய வேண்டும். நாம் பிழிய கூடிய தண்ணீர் வேஷ்டியில் இருந்தோ அல்லது தலையிலிருந்தோ சமுத்திரத்தின் உள்ளே விடக்கூடாது.*



    *ஸ்னானம் செய்து விட்டு கரைக்கு வந்து விட வேண்டும். இங்கு தான் ஸ்நானாங்க தர்ப்பணம் செய்து வேஷ்டியை பிழிந்து கட்டிக்கொள்ள வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் நமக்கு சொல்கிறது. இந்த முறையிலேயே சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்*



    *பிறகு நாம் பித்ருக்களை உத்தேசித்து செய்யக்கூடிய தர்ப்பணங்கள், பிரம்மயஞ்கியம் இவைகளெல்லாம் சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தி செய்யக்கூடாது இதற்காக நாம் தனியாக எடுத்துக் கொண்டு போன ஜலத்தை வைத்து தான் உபயோகப்படுத்த வேண்டும்.
    அதனால் தீர்த்த ஸ்ராத்தம் நாம் கரையிலே செய்யும் பொழுது வேறு தண்ணீர்தான் வைத்துக்கொள்ள**வேண்டுமை தவிர சமுத்திர ஜலத்தை உபயோகப்படுத்தக் கூடாது.*
    *மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X