Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram. contd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram. contd.

    06/12/2020*

    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில் செய்யக்கூடிய 96 ஷண்ணவதி தர்ப்பணங்களை செய்வதற்கு தவறவிட்டு விட்டால் அதற்கான பிராயச்சித்தம் அதாவது பரிகாரம் என்ன என்பதை பார்க்க இருக்கிறோம் அதைப் பற்றிய தகவலை மேலும் தொடர்கிறார்.*

    *பொதுவாக ஒரு கர்மாவை நித்தியம் என்று சொல்லி அதை தவற விட்டு விட்டால் அதற்கு சமுத்திர ஸ்நானம் தான் பிராயச்சித்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி செய்வதினால் பிதுர் காரியங்கள் எதையெல்லாம் நாம் தவற விட்டோமோ, அதாவது சிரார்த்தங்கள் சரியான காலத்திலேயே நாம் செய்ய முடியவில்லை என்றால் முதலில் செய்ய வேண்டியது சமுத்திர ஸ்நானம். அதேபோல் தர்ப்பணங்களை தவற விட்டு விட்டால் முதலில் செய்யவேண்டியது சமுத்திர ஸ்நானம்.*

    *இது பொதுவான பிராயச்சித்தமாக எல்லோருக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தையனம் செய்தவர்களாக இருந்தால், ரிக் வேதத்தில் தனித்தனியாகவே ஒவ்வொன்றுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அம்மாவாசை தர்ப்பணம் விட்டு போனால் அதற்கான மந்திரங்கள் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. இது ரிக் வேதிகள் மட்டும்தானா என்று கேட்கக்கூடாது. சாஸ்திரத்தில், ஒரு வேதத்தில் அதைப் பற்றி சொல்லவில்லை என்றால் மற்ற வேதத்தில் சொல்லி இருப்பதை எடுத்துக் கொள்ளலாம், என்பதை மகரிஷிகள் நமக்கு காண்பித்துள்ளனர்.*

    *நான்கு வேதங்களையும் அனைவரும் அத்தையனம் செய்ய வேண்டும். நான்கு வேதங்களையும் சொல்வதற்கு அனைவருக்கும் அதிகாரம் உள்ளது. தினமும் நாம் பிரம்மயஞ்யம் செய்யும்பொழுது அதனால்தான் நான்கு வேதங்களையும் நாம் சொல்கிறோம்.*

    *நான்கு வேதங்களும் அனைவருக்கும் உண்டு நாம் சொல்லக்கூடிய மந்திரங்கள் அதிலிருந்து வருகின்றன. நான்கு வேதங்களையும் நாம் அத்தையனம் செய்வதற்கான ஆயுட்காலம் இல்லாததினால் மகரிஷிகள் குறைந்தது ஒரு வேதத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.*

    *எல்லா வேதங்களையும் கற்றுக்கொள்ளவேண்டும் அல்லது இரண்டு வேதங்களையாவது அத்தையனம் செய்ய வேண்டும் அதுவும் இல்லை என்றால் ஒரு வேதத்தை ஆவது நாம் அத்தையனம் செய்ய வேண்டும். இதை மனுஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது*

    *நான்கு வேதங்களுமே நமக்கு உண்டு நான்கு வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா கர்மாக்களும் நமக்கு உண்டு. எதை எதையெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்பதை வகைப்படுத்தி செய்ய வேண்டும்.*

    *ரிக் வேதத்தில் பிராயச்சித்தங்கள் ஷண்ணவதி தர்ப்பணம் விட்டுப் போனால் சொல்லப்பட்டிருக்கிறது. அம்மாவாசை தர்ப்பணத்தை நாம் விட்டு விட்டால் அதற்கு ரிக் வேதத்திலே ஒரு மந்திரம் இருக்கிறது அதை உபவாசமிருந்து 100 தடவை ஜபிக்க வேண்டும். அப்படி சொன்னால் அந்த விட்டதினால் வரக்கூடியது பாபம் இல்லாமல் போகும். அதற்கு என்ன பலன் என்றால் செய்ய வேண்டிய கர்மாவிற்கு அதிகாரம் வருகிறது மேலும் அந்த பரிகாரங்களை செய்வதினால் வரக்கூடிய பலன். அந்தப் பலனை எப்படி பார்க்க வேண்டும் என்றால் அடுத்த தடவை செய்ய வேண்டிய அம்மாவாசை நாம் செய்வதற்கான அதிகாரத்தை நமக்கு கொடுக்கிறது இந்த பரிகாரத்தை செய்வதினால்.*

    *இந்த பரிகாரம் செய்வதினால் விட்டுப்போன காரியத்தின் பலன் நமக்கு வந்து விடும் என்று புரிந்து கொள்ளாமல் மீண்டும் அடுத்த முறை செய்வதற்கான அதிகாரம் நமக்கு வந்து சேர்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும்.*

    *நம் தாயார் தகப்பனார் கள் தவறிய உடன் ஒரு வருட காலம் நாம் செய்யக்கூடிய இந்த 16-மாசிகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதிலேயே பொதுவாக தர்ம சாஸ்திரத்தில் சொல்கின்ற பொழுது மாசாமாசம் செய்கின்ற மாசிகம் என்றும், இடைப்பட்ட காலத்தில் செய்வதற்கு ஊன மாசிகம் என்றும் பெயர் அதற்கு. ஊனம் என்றால் இடைப்பட்ட காலம் இது நாம் செய்யத் தவறி விட்டால் அதற்கு வேறு காலம் கிடையாது.*

    *ஊன மாசிகம் விட்டுப் போனால் விட்டுப் போனது தான் என்று நாம் புரிந்து கொள்வோம் ஆனால் அப்படி கிடையாது. ஆறாவது ஊன மாசிகம் என்று ஒன்று வரும். அது செய்வதற்கு விட்டுப் போனால் ஏழாவது மாசிகம் செய்வதற்கான அதிகாரம் நமக்கு கிடையாது. அதற்கு மாற்று காலம் இல்லையே இன்று இல்லாமல் அதற்கான பரிகாரத்தை செய்து அதை செய்தே ஆக வேண்டும். விட்டால் விட்டதுதான் என்று நாம் இருக்கக் கூடாது.*

    *அதாவது தாயார் தகப்பனார் களுக்கு இறந்தவுடன் அந்த ஒரு வருடத்தில் 16 மாசிகம் நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். அந்த எண்ணிக்கை குறையக் கூடாது அதனால் தான், ஏன் அதற்காக சிலகாலம் சொல்லப்பட்டிருக்கிறது என்றால் அவர்களுடைய கதியையும் அனுசரித்து தர்மசாஸ்திரம் நமக்கு சொல்லி இருக்கிறது.*

    *அந்தப் பதினாறு மாசிகங்களையும் அவர்கள் ஒவ்வொரு இடத்தில் இருக்கும்பொழுது நாம் செய்கிறோம். இந்த* ஊன மாசிகம் அவர்கள் இருக்கக்கூடிய காலத்தை நமக்கு காண்பிக்கிறது. அதனால் அவைகள் விட்டு போய் விட்டால் அதற்கான பரிகாரத்தை செய்து அதை நாம் முடிக்க வேண்டும்.*

    *ஆறாவது ஊன மாசிகம் செய்யாமல் நாம் ஏழாவது எட்டாவது மாசிகம் செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த பரிகாரங்கள் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது.*

    *அடுத்தடுத்தார் போல் செய்ய வேண்டிய கர்மாக்களை முறையாக செய்வதற்கான அதிகாரங்களை இந்த பரிகாரங்கள் நமக்கு கொடுக்கின்றன. சிராத்த தினத்தன்று, ஹௌபாசனத்தை செய்யத் தவற விட்டு விட்டேன் என்று ஒரு தாம்பாளத்தில் அட்சதையை வைத்து நாம் தானம் செய்வோம், அப்பொழுது இதுநாள் வரையில் நாம் செய்யவேண்டிய ஹௌபாசனம் செய்யாமல் விட்டதற்கான பலன் நமக்கு வந்து சேருமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால் அன்றைக்கு செய்யக்கூடிய சிராத்தம் செய்வதற்கான அதிகாரம் இந்த தானம் செய்வதினால் நமக்கு வந்து சேர்கிறது.*

    *அதுதான் அந்தப் அதிகாரத்திற்கான பலன். இப்படியாக அதை நாம் பிரித்து வகுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி அம்மாவாசை நாம் செய்ய விட்டுவிட்டால் ரிக் வேதத்திலே அந்த ஒரு மந்திரம் இருக்கிறது அதை நாம் நூறு தடவை சொல்லி அந்த பிராயச்சித்தம் செய்ய வேண்டும். அதனால் யாராவது ஒரு வாத்தியாரிடம் சென்று அதை அத்தையனம் செய்துகொண்டு அதை முடிக்க வேண்டும் அப்பொழுது அடுத்த அமாவாசை செய்வதற்கு நமக்கு அதிகாரம் வந்து சேர்கிறது. இதை தர்ம சாஸ்திரம் நமக்கு காண்பிக்கின்றது.*

    *மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X