Announcement

Collapse
No announcement yet.

96 tharpana vivaram. contd.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 96 tharpana vivaram. contd.

    contd
    12/12/2020**முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஷண்ணவதி தர்ப்பணம் நாம் ஏதாவது ஒன்றை செய்ய முடியாது போனால் அதற்கான பரிகாரமாக மந்திர ஜெபங்கள் செய்வதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.*


    *அமாவாசை அன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் விட்டுப் போனால் அதற்காக ஜெபிக்க வேண்டிய மந்திரங்களை பார்த்தோம்.*
    *அடுத்ததாக யுகாதி புண்ணிய காலத்தை பார்ப்போம். வருடத்தில் நான்கு முறை வரக்கூடிய இந்த புண்ணிய காலத்தில் நாம் செய்யாமல் விட்டு விட்டால், ரிக் வேதத்தில் ஒரு மந்திரம் இருக்கிறது நயசத்தியாவா என்று, அதை நூறு தடவை நாம் ஜெபிக்க வேண்டும் அப்படி செய்தால் இந்த யுகாதி விட்டு போனதாக ஆகாது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது.*


    *அடுத்ததாக மன்வாதி புண்ய காலம். இதை நாம் செய்யத் தவறி விட்டோமே ஆனால், தும்புவஹா என்று ஒரு மந்திரம் ரிக் வேதத்தில் இருக்கிறது. சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த இடத்திலேயே நின்று கொண்டு நூறு தடவை இந்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த மன்வாதி புண்ய காலம் செய்ததாக ஆகிறது என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கிறது. இதே மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் செய்ய வேண்டும். மார்கழி தை மாசி பங்குனி இந்த நான்கு மாதங்களில் வரும் சப்தமி அஷ்டமி நவமியில் செய்ய வேண்டியது.*


    *இது மிகவும் முக்கியம் திஸ்ரோஷ்டஹாவை பற்றி சொல்லும் பொழுது, தாயார் தகப்பனார்களுக்கு கர்மா செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வருடத்தில் வேறு எந்த சிராத்தமும் நாம் செய்யக்கூடாது. இந்த ஷண்ணவதியும் நாம் தர்ப்பணம் ஆகத்தான் செய்ய வேண்டும் ஷகிரன் மாஹாளயம் கூட அந்த வருடம் கிடையாது.

    ஆனால் இந்த திஸ்ரோஷ்டஹா புண்ணிய காலம் மட்டும் அவசியம் செய்ய வேண்டும் விட்டே போகாது. அவசியம் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தும்புவஹா மந்திரம் தான் திஸ்ரோஷ்டகாவை விட்டுவிட்டாலும் சமுத்திர ஸ்நானம் செய்துவிட்டு அந்த ஜலத்திலே நின்றுகொண்டு 100 தடவை ஜபிக்க வேண்டும்.*


    *அதேபோல மாஹாளயம் விட்டு போய்விட்டால், ஷகிரன் மாஹாளய சிராத்தம் விட்டு போய்விட்டால் அதற்கான துரோஅஸ்வஸ்யா என்று ஒரு ரிங் மந்திரம் இருக்கிறது ரிக் வேதத்தில். அந்த மந்திரத்தை தினமும் பத்து தடவை இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்து ஜெபித்து கொண்டு வரவேண்டும். அப்படி செய்தோமே ஆனால் அந்த வருடம் நாம் செய்ய வேண்டிய ஷகிரன் மாஹாளயம்*
    *சிராத்தம் செய்யாததினால் வரக்கூடிய பாவம் போகிறது, பித்ரு சாபம் வராமல் இருக்கும்.*


    *மஹாளய பக்ஷத்தில் இரண்டு விதமாக நாம் செய்கிறோம். ஒன்று பக்ஷ மஹாளயம் 16 நாட்களுக்கு தர்ப்பணமாக செய்வது, மற்றொன்று ஷகிரன் மஹாளயம். இந்த ஷகிரன் மஹாளயம் விட்டுப் போனால் இந்த மந்திரம் ஜெபிக்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது.*
    *இந்த மாதிரியான ரிங் மந்திரங்கள் ரிக் வேதத்தில் இருப்பதினால் நாம் ரிக் வேதம் தெரிந்தவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நமக்கு செய்ய முடியவில்லை என்றால் சமுத்திர ஸ்நானம் தான் செய்ய வேண்டும். அதே புண்ணியகாலம் திரும்பவும் வருவதற்குள் நாம் மகா சங்கல்பம் என்று ஒன்று செய்து கொண்டு சமுத்திர ஸ்நானம் செய்ய வேண்டும்.*


    *அப்படி நாம் இந்த மகா சங்கல்பத்தை செய்யாவிடில் அடுத்த அதே புண்ணியகாலம் செய்வதற்கு நமக்கு அதிகாரம் இல்லை. அப்படி செய்யாவிடில் அது ஒரு குறைபாடாகவே இருக்கும். அதாவது நமக்கு ஒரு கால் இல்லை என்றால் எப்படி இருக்கும் அதே போல். அதாவது ஊனமாக இருக்கும்.*


    *அதனால் நாம் மகா சங்கல்பம் செய்து கொண்டு அதற்கான பரிகாரங்களை செய்து விட்டு நாம் மேற்கொண்டு கர்மாக்களைச் செய்ய வேண்டும்.*


    *மூன்று புண்ணிய காலங்களுக்கு இந்த ரிங் மந்திரங்கள் பரிகாரமாக சொல்லப்படவில்லை. அதாவது சங்கரமணம் (மாதப்பிறப்பு) வைதிருதி வ்தீபாதம். பராசர ஸ்மிருதி லே இதற்குப் பரிகாரமாக சஹஸ்ர காயத்ரி சொல்லப்பட்டிருக்கிறது. 1008 காயத்ரி மந்திரத்தை கண்டிப்பாக நாம் செய்ய வேண்டும் இந்த மூன்று புண்ணிய காலங்களும் விட்டு போனால். அதனால் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் மிக மிக முக்கியம் கட்டாயம் செய்ய வேண்டும்.*


    *இவ்வளவு நாட்களாக செய்யவில்லையே என்றால் அதனால் தப்பில்லை, 1, 2 தர்ப்பணம் ஆக பழக்கத்திற்கு கொண்டுவந்துவிடலாம் 15 நிமிட நேரம் தான் அந்த தர்ப்பணம். இவைகளை எல்லாம் விடாமல் நாம் செய்து வந்தோமே ஆனால் பித்ரு சாபங்கள் வராது. தில ஹோமம் எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் வராது. க்ஷேத்திரங்களுக்கு எல்லாம் போய் நாம் செய்யவேண்டிய கர்மாக்கள் நிர்பந்தங்கள் எல்லாம் வராது. இப்படி சுலபமாக தான் நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.*


    *மகரிஷிகளும் சுலபமாகத் தான் இந்த பரிகாரங்களை நமக்கு சொல்லி இருக்கிறார்கள். இந்த ஷண்ணவதி அனைத்தையும் சிராத்தம் ஆகத்தான் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தால், எவ்வளவு சிரமம் நமக்கு. அப்படி இல்லாமல் தர்ப்பணம் ஆக செய்யலாம் என்று வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள் மிகப் பெரிய உபகாரம்.*


    *இந்த ஷண்ணவதியை அவசியம் தர்ப்பணமாக செய்ய வேண்டும். சிராத்தமாக இருக்கின்றன பிரயோகம் தெரிந்து கொள்ள வேண்டும். அது எல்லாம் நாம் தெரிந்து கொண்டு எழுதி வைத்துக்கொண்டு குறித்துக்கொண்டு தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்து 1, 2, செய்துவிட்டு பிறகு விட்டுவிடுவது என்பது கூடாது. இப்படி மெதுவாக நாம் தர்ப்பணம் ஆக செய்ய 1, 2 ஆரம்பித்து பிறகு இந்த 96 ஆராயும் நாம் செய்வதற்கு பிதுருக்கள் நமக்கு ஆசிர்வதிப்பார்கள். மிகவும் முக்கியமானதாக மனதில் நினைத்து செய்ய வேண்டும். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X