Announcement

Collapse
No announcement yet.

aavahanthi homam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aavahanthi homam.

    *21/12/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் உடைய பெருமைகளையும் சிறப்புகளையும் மேலும் தொடர்கிறார்.*


    *துரிதமாக பலனைக் கொடுக்கக்கூடிய தான் ஆவஹந்தி ஹோமம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஒரு கணபதி ஹோமம்/நவக்கிரக ஹோமம் செய்கிறோம், இதற்கு என்று ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு மந்திரத்தை இவ்வளவு முறை சொல்லி செய்ய வேண்டியது. 108 அல்லது 1008 என்று சொல்லி செய்கிறோம் அதற்கு சமஸ்கிருதத்தில் ஆவர்த்தி என்று பெயர்.*


    *ஒரு குறிப்பிட்ட அளவு அந்த மந்திரங்களை சொன்னால்தான் நமக்கு வேண்டிய பலன் பெறமுடியும், அதனால் ஜெபமோ ஹோமமோ நாம் செய்ய வேண்டி இருக்கிறது, அந்த அளவுக்கு நமக்கு இடையூறுகள் இருக்கின்றன.*


    *ஆனால் இந்த ஆவஹந்தி ஹோமம் எப்படி என்றால் அதர்வண மந்திரம் என்று பெயர். ஒரு தடவை சொன்னால் கூறும் பலனை கொடுத்துவிடும். அதனால் தான், ஒரு குறிப்பிட்ட ஆவர்த்தி சொல்லப்படவில்லை. பொதுவாகவே வேத மந்திரங்களில் அதுபோல் உள்ள மந்திரங்கள் யாகத்தில் மட்டும்தான் உள்ளது. அக்னி ஹோத்ரம் செய்பவர்கள் செய்ய வேண்டிய ஒரு யாகமுமோ அல்லது ஷ்டியோ செய்தால் அங்கே நிறைய தேவதைகளை ஆவாகனம் செய்ய வேண்டி வரும். அப்போது அத்தனை தேவைகளுக்கும் ஒரு ஒரு முறைதான் ஆகுதிகள் கொடுக்கப்படும்.*


    *108/1008 ஆவர்த்தி என்று சோம யாகங்களில் கிடையாது. ரிக் யஜுர் சாம வேத மந்திரங்களைச் சொல்லி அந்த ஆகுதியை நாம் கொடுத்துவிட்டால், பூர்ணமான பலனை அந்த தேவதை அனுகிரகம் செய்துவிடும். அந்த அளவுக்கு பெருமையை அந்த மந்திரம் செய்யும்.*


    *இதுதான் வேத மந்திரத்திற்கு உள்ள பெருமை. மந்திரம் என்றால் என்ன இதைப்பற்றிய ஜெமினி மகரிஷி சொல்லும்போது, அதாவது நமக்கு நிறைய கர்மாக்களை கட்டாயம் செய்தே ஆகவேண்டும் என்று கடமையாக கட்டாயம் சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு விகிதம் என்று பெயர். அதற்கான சம்பந்தத்தை நமக்கு காட்டுவதுதான் மந்திரம்.*
    *இதை அநேக விதமாக சாஸ்திரங்களில் பிரித்திருக்கிறார்கள். எந்தெந்த மந்திரங்களை எங்கெங்கே நாம் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் சாஸ்திரங்கள் காண்பிக்கின்றன. அதிலே இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் முக்கியமாக உபநிஷத்துக்களில் காண்பிக்கப்பட்டிருக்கிறது.*


    *நான் முன்னரே பார்த்தோம், இந்த ஆவஹந்தி ஹோமம் இரண்டு விதமாக செய்யப்படும் என்று. வைதீக முறையாகவும் மற்றும் ஸ்ரீவித்யா உபாசக மந்திரங்களை அடிப்படையாக*


    *கொண்டு முறையாகவும். அதிலே முதலில் இந்த ஸ்ரீவித்யா உபாசக விதான செய்யும் முறை பார்க்கும் பொழுது, அது தனக்காக என்று தான் செய்து கொள்ள முடியும். மற்றவருக்காக செய்ய முடியாது என்பதை அந்த கிரந்தங்களை பார்க்கும் போது தெரிய வருகிறது.*
    *பகவத் பாதர் ஆதிசங்கரர் பிரபஞ்ச சார சங்கர சங்கரஹா என்று ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். அதிலே இந்த ஆவஹந்தி ஹோமம் செய்யும் முறையை விரிவாக காண்பித்திருக்கிறார்.*


    *அதிலேயே சொல்லும்பொழுது நித்திய கர்மாவோடு சேர்த்து செய்யும் முறையாக காண்பித்திருக்கிறார்கள் இந்த ஆவஹந்தி ஹோமத்தை. ஸ்ரீவித்யா விதானத்திற்க்கும் அடிப்படை வேதம்தான். வேதத்தில் இருந்து அட்சரங்களை மந்திரங்களை நியாசம் செய்துகொண்டு, அதை ஜெபம் செய்வதாக அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இதற்குத்தான் ஸ்ரீவித்யா விதானம் என்ற பெயர்.*


    *இந்த ஆவஹந்தி ஹோமத்தை ஸ்ரீவித்யா விதானமாக பார்க்கும்பொழுது, எப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்றால், கூஷ்மாண்ட ஹோமம் என்று ஆரம்பிக்கிறது. நைமித்திகம் ஆன கர்மா என்று பெயர். நமக்குத் தெரியாமல் செய்த அநேக விதமான தோஷங்கள் பாவங்கள் போவதற்காக செய்து கொள்ளக்கூடியது கூஷ்மாண்ட ஹோமம் என்பது.*


    *மிகவும் முக்கியமான ஒரு அனுஷ்டானம். கூஷ்மாண்ட ஹோமம் என்கின்ற ஒரு தலைப்பிலேயே தனியாக அதை பார்ப்போம். அதுபோலத்தான் இந்த ஆவஹந்தி ஹோமம் ஸ்ரீ வித்தையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கிரகஸ்தனுக்கும் ஷட் கர்மா தினே தினே இன்று ஆறு கர்மாக்களை கட்டாயம் செய்தாக வேண்டும் தினமும் என்று தர்ம சாஸ்திரம் சொல்லி இருக்கிறது.*


    *ஏனென்றால், தெரியாமலேயே ஐந்து விதமான பாபங்களை ஒவ்வொரு கிரகஸ்தனும் செய்கிறான். இந்த நாட்களில் பிரம்மச்சாரி சன்னியாசி கூட இந்த ஐந்து விதமான பாபங்களை செய்ய நேரிடுகிறது. அதாவது சமையல், சமையல் செய்யும் பொழுது நமக்குத் தெரியாமல் ஐந்து விதமான பாவங்கள் ஏற்படுகின்றன. கிரகஸ்தனுக்குதான் சமையல் என்பது நித்தியமாக சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மசாரிகள் சன்னியாசிகள் தனக்குத் தானே

    சமைத்துக் கொள்ளக் கூடாது என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது எப்போதுமே. அடிக்கடி நான் சொல்வது வழக்கம், எப்படி தாயார் தகப்பனாரை காப்பாற்ற முடியாதவர்கள், ஒரு விருத்தாஸ்மரத்தில் கொண்டுவந்து விடுகிறார்களோ, அதேபோல தாயார் தகப்பனார் இல்லாத குழந்தைகள், அவர்களை வைத்து காப்பாற்றக்கூடிய இடம், என்கின்ற இடங்கள் இருப்பதுபோல், பிரம்மச்சாரிகளுக்கு தினமும் சமைத்து கொடுப்பது என்று ஒன்று இருக்க வேண்டும்.*


    *மிகப்பெரிய தருமமும் அது. அதேபோல சந்நியாசிகளுக்கு பிக்ஷ்சை போடுவது என்று அங்கங்கே ஏற்பாடு செய்ய வேண்டும். #ஏனென்றால் #பிரம்மச்சாரிகள்_தானே_சமைத்து #சாப்பிட்டால்_மகா_பாதகமாக #சொல்லப்பட்டிருக்கிறது_அதேபோல #சந்நியாசிகள்_சமைத்தால்_அவர்கள் #ஏற்றுக்_கொண்ட_சன்னியாசி #செல்லுபடியாகாது என்று அந்த அளவுக்கு முக்கியத்துவமாக சொல்லப்பட்டிருக்கிறது சமைக்கக் கூடாது என்று.*


    *கிரகஸ்தனுக்குதான் அந்தக் கடமை சொல்லப்பட்டு இருக்கிறது. அதனால் குடும்பஸ்தன் தினமும் சமைத்து பிரம்மச்சாரி களுக்கும் சந்நியாசிகளுக்கும் போட்டுவிட்டு தான் சாப்பிட வேண்டும் என்பது தரமம். அதற்கு முன்னர் வைஸ்வதேவம் என்கின்ற ஒரு தர்மம் இருக்கிறது. அதை ஒவ்வொரு குடும்பஸ்தனும் கட்டாயம் பண்ணவேண்டும் தினமும். இந்த அனுஷ்டானம் எதற்காக என்றால் சமையல் செய்யும்போது ஐந்து விதமான பாவங்களை நாம் செய்ய தெரியாமல் செய்ய நேரிடுகிறது.*


    *சமையல் செய்கின்ற பொழுது, பாபம் அதாவது ஜீவராசிகள் இந்த உலகத்தில் வந்து பிறக்கின்ற போது ஐந்து விதமான விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வந்து தான் இங்கே பிறக்கிறார்கள் அவ்வளவு ஜீவராசிகளும். எந்த வழியாக அவர்கள் வருகிறார்கள் என்றால், தானியங்கள், தண்ணீர்,

    உஷ்ணம், வழியாக அவர்கள் இந்த உலகத்தில் வந்து பிறக்கிறார்கள். அதை எல்லாம் நாம் சமையலில் உபயோகம் செய்கிறோம். இதுதான் பாபம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது போவதற்காக செய்யக்கூடிய தான் வைஸ்வதேவம் என்கின்ற ஒரு அனுஷ்டானம். மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X