Announcement

Collapse
No announcement yet.

lavana dhanam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • lavana dhanam.

    29-12-2020 லவண தானம்;-


    மார்கசீர்ஷ பெளர்ணமியான இன்று நாம் சாப்பிடும் கல் உப்பை ஏழைகளுக்கு தானம் செய்யலாம்.இன்று காலை நித்ய பூஜைகளை முடித்து விட்டு சுத்தமான உப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக்கொண்டு தெய்வ ஸன்னதியில் மார்க்க சீர்ஷ பூர்ணிமாயாம்


    ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் லவண தானம் கரிஷ்யே என்று உப்புடன் கூடிய பாத்திரத்தை கையில் எடுத்துக்கொண்டு துளசி தக்ஷிணை சேர்த்து ரஸானா மக்ரஜம் ஸ்ரேஷ்டம் லவணம் பலவர்த்தனம் தஸ்மாதஸ்ய ப்ரதானேன அத: சாந்திம் ப்ரயஸ்சமே.


    மார்க்கசீர்ஷ பூர்ணிமா மஹாபுண்ய காலே மம ஸஹ குடும்பஸ்ய ஸதா
    ஸுந்தர ரூபத்வ ஸித்தியர்த்தம் இதம் லவணம் ச பத்ரம் ஸம்ப்ரததே. என்று சொல்லி கீழே வைத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பிறகு அதை யாரோ ஒருவருக்கு கொடுத்து விடவும்.


    மேலும் பலருக்கு இன்று கல் உப்பு வாங்கி தரலாம். இதனால் தானம் செய்பவருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் அழகான தோற்றம் ஏற்படும்.
    எப்போதும் அழகு குறையாது. என்கிறது நிர்ணய ஸிந்து.










    29-12-2020 தத்தாத்ரேயர் ஜயந்தி:--


    பதிவிரதையான அனஸூயா தேவிக்கும் அத்ரி மஹரிஷிக்கும் புத்ரராக மார்கழி மாத பெளர்ணமியன்று புதன் கிழமை ம்ருகசீர்ஷ நக்ஷத்திரதன்று அவதரித்தார் தத்தாத்ரேயர்.


    இவரை நினைப்பதாலேயே பக்தர்களின் கஷ்டங்கள் தூர விலகி போகும்.
    இவரை உபாசித்தால் பூத ப்ரேத பைசாச தொல்லைகள் நீங்கும். . ஞான மார்க்கத்தில் ஈடுபாடும் தீவிர வைராக்கியமும் உண்டாகும்.
Working...
X