Announcement

Collapse
No announcement yet.

aavahanthi homam.-5

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aavahanthi homam.-5

    26 & 27/12/2020 No Broadcaste*
    *28/12/2020*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமம் அதனுடைய பெருமைகளையும் அதனுடைய முக்கியத்துவத்தையும் மேலும் தொடர்கிறார்.*


    *இரண்டு பாகங்களாக இந்த ஆவஹந்தி ஹோமம் இருக்கிறது என்பதை முதலில் பார்த்தோம். பூஜை ஜெபம் ஒரு பாகமாகவும் ஹோமம் மற்றொரு பாகமாகவும் இருப்பதைப் பார்த்தோம்.*
    *இந்த ஆவஹந்தி ஹோமத்திற்கு நிறைய பலன்கள் சொல்லப்பட்டு இருந்தாலும் முக்கியமாக ஐந்து பலன்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.*


    *மந்திரங்கள் இந்த ஐந்து பலன்களையும் விரிவாக பிரார்த்திக்கிறது. ஐந்து காமனைகளுக்காக இந்த ஹோமம் செய்யப்பட வேண்டும் என்று வேதம் நமக்கு காண்பிக்கின்றது. அதாவது முதலில் மேதா காமாய. ஞாபகசக்தியை அதிகப்படுத்துவது வேத வித்தையை நமக்கு சொல்வது இதை ஆவஹந்தி ஹோமம் நமக்கு காண்பிக்கிறது. நாம் படிக்க வேண்டிய படிப்பு அதுதான் வித்யா. வேதத்திற்கு தான் வித்தியா என்று பெயர்.*


    *லௌகீதமாக நாம் என்ன படித்தாலும் அதை படிப்பு என்று சொல்வதில்லை. நம்முடைய குழந்தைகளையே பையன் என்ன பண்ணுகிறான் என்றால் BA/M.Com/MCA/B.Tech பண்ணுகிறான் என்றுதானே சொல்கிறோம். படித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்வதில்லையே. MBBS பண்ணுகிறான்* என்று தான்


    *சொல்கிறோமே ஒழிய படித்துக் கொண்டிருக்கிறான் என்று நாம் சொல்வதில்லை. தர்மசாஸ்திரம் வேதத்தை தான் வித்யா என்று சொல்லியிருக்கிறது.*
    *காயத்ரி முதல் கொண்டு அனைத்து வேத மந்திரங்களும் சிந்திக்கின்றது இந்த ஆவஹந்தி ஹோமத்தின் மூலம். ஞாபக சக்தியை அதிகப்படுத்துகிறது ஜாஸ்தியாக உள்ளவர்கள், அல்லது மன அழுத்தம்/கவலை ஜாஸ்தியாக உள்ளவர்களுக்கு இந்த ஆவஹந்தி ஹோமம் ஒரு அருமருந்து.*


    *இரண்டாவது தன காமாய ஐஸ்வர்யம் நிறைய வரும். தனம் என்றால் வரவு செலவுக்கு யோக்கியதை ஆக உள்ளது தனம் என்று பொருள். தனம் என்றால் பணம் மட்டும் பொருளல்ல அது வெள்ளை பணமாக இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கைக்கு அது பயன்படும் வேண்டும். அதற்குத்தான் தனம் என்று பெயர்.*


    *பணம் நமக்கு பற்றாக்குறையாக இருக்கிறது நிறைய தேவைப்படுகிறது, இதற்காகவும் இந்த ஆவஹந்தி ஹோமம் சொல்லப்பட்டிருக்கிறது. மூன்றாவதாக வாக் சித்தியை கொடுக்கிறது.*


    *வாக் சித்தி என்றால் வாக்கிலிருந்து நல்ல வார்த்தைகள் தான் வரவேண்டும். வார்த்தைகள் தடித்து வரக்கூடாது. அதையும் இந்த ஹோமம் நமக்கு கொடுக்கிறது. மிகவும் கோபப்படக் கூடிய வார்த்தைகள் யாரிடம் பேசினாலும் வரக்கூடாது. கேட்போருக்கு இனிமையாக இல்லாவிட்டாலும்கூட அவர்களுடைய கோபத்தை ஏற்படுத்தும் படியாக இருக்க கூடாது நாம் பேசக்கூடிய வார்த்தைகள்.*


    *நான்காவது பலன் நம்முடைய உடம்பில் 175 பாகங்கள் இருக்கின்றன. அதாவது அங்கங்கள். அவைகள் அனைத்தும் நன்றாக ஆரோக்கியமாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் முக்கியமானது.*


    *பொதுவாக தேக ஆரோக்கியம் என்று நாம் சொல்கிறோம். இருதயம் முதற்கொண்டு எல்லா பாகங்களும் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் மிகவும் பயனுள்ளதாக நமக்கு அமைகிறது. இருதயம் தான் நம்முடைய உடம்பில் உள்ள அனைத்து அங்கங்களுக்கும் இரத்தத்தை அனுப்புகிறது. 175 அங்கங்களுக்கும் அனுப்பிக் கொண்டே இருக்கின்றது. இருதயத்திலிருந்து ஆரம்பித்து எல்லா அங்கங்களும் நன்றாக செயல்படுவதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் வழி செய்கிறது. அதாவது அந்த மந்திரங்களில் அப்படி வர்ணிக்கப்படுகின்றன*


    *ஐந்தாவது முக்கியமான பலன் நம்முடைய சமூக தாரோடு நம்மை சேர்கிறது. ஒரு பத்து பேர் சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்வது என்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது இந்த நாட்களில். ஏனென்றால் 10 பேருக்கும் 10 விதமான அபிப்பிராயங்கள்/எண்ணங்கள்/பேச்சுகள் இதனால் சிதறிப் போய் விடுகின்றன. ஒரு சமூகமாக பத்து பேர் சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது என்பது இல்லாமல் போய்விட்டது. சொந்த அண்ணன் தம்பிகளே சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது என்பது இல்லாமல் போய்விட்டது.*


    *இந்த நாட்களில் கணவன் மனைவிகள் சேர்ந்து இருப்பது ரொம்ப ஒற்றுமை என்று சொல்லுமளவுக்கு வந்துவிட்டது. அப்படி இருக்கக்கூடாது சிதறிபோகாமல் இருக்க வேண்டும். அனைவரும் சேர்ந்து காரியங்களை செய்ய வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒரு குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். நம் சமூகத்தோடு சேர்ந்து இருப்பது என்பது கட்டாயம் வேண்டும்.*


    *அது இல்லையென்றால் மனநிம்மதி நமக்கு சுத்தமாக போய்விடும். நாம் வாழ்ந்தும் வாழாது அதுபோல் சிதறிப் போய்விடும். அப்படி இந்த மந்திரங்கள் வருணிக்கின்றன நம் சமூகத்தோடு சேர்ந்து வாழ வேண்டும். இந்த ஆவஹந்தி ஹோமத்தின் உடைய மந்திரங்கள் மிக அற்புதமாக காண்பிக்கின்றன. ஆகையினாலே தான் மஹாபெரியவா கட்டாயம் வலியுறுத்தி நாம் எல்லோரும் இந்த ஐந்து பலன்களும் அவசியம் பெற வேண்டும் என்பதற்காக சொல்லியிருக்கிறார்.*


    *இந்நாட்களில் நம் சமூகத்துக்கு இந்த ஐந்து பலன்களும் தேவைப்படுகிறது. பணம் காசு நிறைய தேவைப்படுகின்றது அதை சேர்ப்பதற்கு குறுக்கு வழியில் போகலாமா என்று தோன்றுகிறது. இதேபோல் ஞாபகசக்தி சுத்தம்மாக குறைந்து போய்விட்டது. ஒரு கணக்குப் போட வேண்டுமென்றால் கூட சட்டென்று கால்குலேட்டர் அல்லது மொபைல் போன் எடுத்து விடுகிறோம். சட்டென்று யோசனை செய்து ஒரு எண்ணை நம்மால் சொல்ல முடியவில்லை ஞாபக சக்தி குறைந்து போய் விட்டது.*


    *மூன்றாவதாக வாக்கு மிகவும் தடிமனாக இருக்கிறது. ஒரு விவேகம் தெரியாமல் எதைப் பேச வேண்டும் எதைப் பேசக்கூடாது என்று தெரியாமல் போய்விட்டது. வார்த்தைகள் படிப்பதினால் மன உளைச்சல் உண்டாகிறது. மனஸ்தாபங்கள் ஏற்படுகின்றன. யாரிடம் என்ன பேசவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். நம்மை விட வயதில் பெரியவர்கள் குடும்பத்தாரிடம் மற்றும் நம்மை விட சிறியவர்கள் இடம் எப்படி பேச வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.*


    *இந்த நாட்களில் இவை அனைத்துமே சொல்லிக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் . நான்காவதாக தேக ஆரோக்கியத்திற்கு சொல்லவே வேண்டாம். தேக ஆரோக்கியம் நன்றாக தேவைப்படுகிறது மேலும் இவை அனைத்திற்கும் மேலாக, நம்முடைய சமூகத்தார் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்றால் பாரததேசம் முழுவதும் சிதறி இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அனைவரும் சேர்ந்து ஒரு காரியத்தை செய்வது அல்லது அடிக்கடி பார்த்துக் கொள்வது இல்லாமல் போய்விட்டது. இந்த ஐந்து பலன்களும் நமக்கு தேவைப்படுகின்றது என்பதை மனதில் வைத்துக் கொண்டுதான் மகாபெரியவர் இந்த ஆவஹந்தி ஹோமத்தை நாம் கட்டாயம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லியிருக்கிறார்.*


    *இது ஒவ்வொரு பாடசாலையிலும், ரொம்ப நாளாகவே செய்துகொண்டு வருகிறார்கள் அதான் வழக்கம் புதிதாக பாடசாலை ஒன்றை ஆரம்பித்தால் அதற்கு நிறைய வித்தியாதர்கள் வர வேண்டும். அந்த வாத்தியார் அந்த பையனுக்கு சொல்லிக் கொடுக்கிற படிப்பானது நன்றாக வரவேண்டும். இதற்கு இந்த ஆவஹந்தி ஹோமம் கட்டாயம் செய்ய வேண்டும். புது பாடசாலை ஆரம்பித்தால் இந்த ஹோமத்தை தினமும் செய்ய சொல்வார்கள்.

    அதை செய்வதன் மூலம் தானாகவே படிப்பதற்கு மாணவர்கள் வருவார்கள். அந்தப் படிப்பு நன்றாக பயன்படும். அந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நோக்கம் நிறைவேறும். இவை ரொம்ப நாளாக நடைமுறையில் இருக்கின்றன பாடசாலை ஆரம்பித்து அதில் செய்து கொண்டு வருவது.*
    *அந்த மந்திரம் என்னுடைய அர்த்தங்கள் மிகவும் அற்புதமானவை என்னவென்று அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X