Announcement

Collapse
No announcement yet.

aavahanthi homam.-6.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • aavahanthi homam.-6.

    *31/12/2020 & 01/02/2021 No Broadcasting.*
    *02/01/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து ஆவஹந்தி ஹோமத்தின் பெருமைகளையும் மேலும் மந்திரங்களின் அர்த்தங்களை விரிவாக தொடர்கிறார்.*


    *அதில் இதுவரை ஆவஹந்தி ஹோமத்திற்கு அங்கமாக சொல்லப்பட்ட, ஜெபத்தின் உடைய அர்த்தங்களையும் அந்த மந்திரத்தின் பெருமைகளையும் பார்த்தோம். அடுத்ததாக ஹோமம் செய்யக்கூடிய மந்திரத்தின் பொருளை பார்க்கப் போகிறோம்.*


    *12 ஆகுதிகளாக அந்த மந்திரம் அமைந்துள்ளது. அதாவது 12 ஹோமங்கள் செய்ய வேண்டும். இந்த மந்திரங்கள் அற்புதமாக பிரார்த்திக்கின்றது. இதையெல்லாம் பிரார்த்தனை செய்கிறது என்றால், விபூதியை அதாவது ஐஸ்வர்யத்தை பிரார்த்திக்கின்றது என்று மகரிஷிகள் நமக்கு காண்பித்திருக்கிறார்கள்.*


    *ஸ்ரீஹீ என்றால் கிரகம் வீடு வாகனம் மனைவி குழந்தைகள் இவர்களுக்கெல்லாம் ஸ்ரீஹீ என்ற பெயர். லெட்சுமிஹீ என்றால் நம் வாழ்க்கைக்கு பயன் படக்கூடிய தான பணம். புஷ்டிஹீ என்றால் தேக ஆரோக்கியம். கீர்த்திஹீ என்றால் நல்லோர் உடைய சேர்க்கை/அறிவுரைகள் இந்த நான்குக்கும் தான் விபூதி என்று பெயர்.*


    *இவைகளெல்லாம் கொடுக்கக்கூடியது இந்த ஆவஹந்தி ஹோமத்தின் பலன். அந்த வஸ்துக்களில் எல்லாம் ஈஸ்வரன் வாசம் செய்கிறார். அனைத்தையுமே அதாவது அனைத்து வஸ்துக்களையும் நாம் ஈஸ்வரனாக பார்க்கவேண்டியது என்பதுதான் நம்முடைய சித்தாந்தம்.*


    *அனைத்து வகுப்புகளிலும் தேவதா அம்சம் இருக்கிறது. ஆகையினாலே தான் நாம் காலையில் எழுந்தவுடன், பூமியைப் பார்த்து நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் அதிலே தேவதைகள் இருக்கிறார்கள். ஜலத்தை பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும். தண்ணீரில் தேவதைகள் வாசம் செய்கிறார்கள்.*


    *சாதாரணமாக ஒரு இடத்திலே நான் உட்காருவதற்கு ஒரு ஆசனம் போட்டுக் கொள்கிறோம். அது பாய் துணி அல்லது பலகாய் இதை போட்டுக் கொண்டு உட்கார்ந்தாலும் அதில் தேவதை அம்சம் இருக்கிறது. ஆகையினாலே தான் ஆசனத்தை காலால் இழுத்துப் போட்டு உட்காரக்கூடாது. வெளியில் எங்கோ செல்கிறோம் அங்கு ஒரு ஆசனம் போட்டு இருக்கிறது அதை நம் காலால் இழுத்து போட்டுக்கொண்டு உட்காரக் கூடாது.*


    *அப்படி உட்கார்ந்தால் பைல்ஸ் வியாதியினால் நமக்கு கஷ்டப்பட நேரிடும். அதனால்தான் காலால் அதை இழுக்கக் கூடாது தேவதைகள் அதிலே வாசம் செய்கிறார்கள். இப்படி அனைத்து வஸ்துக்களிலும் தேவதைகளாக பார்க்கவேண்டும் என்பதுதான் நம்முடைய சித்தாந்தம்.*


    *இப்படி இந்த ஐஸ்வர்யங்களில் ஈஸ்வரனாக பிரார்த்தனை செய்கிறது இந்த மந்திரம். இந்த மந்திரத்தின் அர்த்தம், ஐஸ்வர்யா ரூபமாகவும் அக்னி ரூபமாகவும் உள்ள அந்த தேவதையை நாம் பிரார்த்திக்கின்றோம். அனைத்தையும் எனக்கே அடையும் படியாக உள்ள சக்தியை அதிகப்படுத்தக்கூடிய உள்ள என்னிடம் என்ன வஸ்துவாக இருக்கிறதோ அது பணம் காசு ஆக கூட இருக்கலாம், வீடு வாசல் ஆக இருந்தாலும் சரி, அதை ஸ்திரமாகவும் அதிகப்படுத்தும் படியாகவும் நீ செய்ய வேண்டும்.*


    *நீண்ட காலமாக என்னிடம் இருக்கக்கூடிய வஸ்து எனக்கே உள்ளதாக ஆக வேண்டும். கொஞ்சநாள் என்னிடமும் பிறகு மற்றவரிடம் போகாமல் இருக்கவேண்டும். என்னிடத்தில் நீண்டகாலம் ஸ்திரமாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும் படியாக செய்ய முடியும் உன்னால். அப்படி எனக்கு செய்ய வேண்டும்.*


    *என்கிட்ட உள்ள ஐஸ்வர்யத்தை எப்படி எல்லாம் நீ கொடுக்க வேண்டும் அப்படி என்றால் உடம்பை மறைக்க கூடியதான நல்ல வஸ்திரங்கள். பணம் நிறைய இருக்கிறது கட்டிக் கொள்வதற்கு வேஷ்டி இல்லை என்றால் புரோஜனம் இல்லை. அப்படி நாம் பார்த்திருக்கிறோம் ஒரு காலத்தில்.

    சென்னையிலே வெள்ளம் வந்தது விட்டது வெள்ளம் எல்லோர் வீட்டுக்கும் வந்து விட்டது பேங்கில் நிறைய பணம் இருக்கிறது. ஆனால் ஒரு ரூபாய் கூட நமக்கு பயன்படாமல் இருந்தது. ஒரு உணவு கிடைக்கவில்லை ஈரத் துணியை கட்டிக் கொண்டு எவ்வளவு கஷ்டப் பட்டோம்? அப்படி ஒருநாள் இருந்தது நமக்கு பணம் இருந்தும் இல்லாதது போல் தான் இருந்தோம். ஏழை பணக்காரன் எல்லோரும் சமமாக இருந்த காலம் அது.*


    *அப்படி இருக்கக் கூடாது. நினைத்த போது எனக்கு வஸ்திரங்கள் கட்டிக் கொள்ளும் படியாக இருக்க வேண்டும். நல்ல பல விதமான பசுக்களுடன் நிறைந்து நான் இருக்க வேண்டும். நான் சாப்பிடக்கூடிய பாலானது நல்ல சுத்தமான வஸ்துவாக இருக்கவேண்டும். பால் என்கின்ற நிறத்தில் அது இருக்க கூடாது. பாலை கொடுக்கக்கூடிய சக்தி பசுக்களுக்கு தான் உண்டு நாம் நினைத்தால் உற்பத்தி செய்ய முடியுமா? பண்ண முடியாது மாடுகள்

    தானே என்று பசுக்களை குறைவாக நினைக்கிறோம். மாடுகள் விஷயத்திலேயே நமக்கு அலட்சியம் ஜாஸ்தியாக இருக்கிறது ஸ்ரத்தை வரவில்லை இன்றுவரையில். அதாவது முழுமையான ஈடுபாடு நமக்கு வரவில்லை மாடு புல் வைக்கோல் அதாவது நாம் ஒதுக்கக் கூடிய வஸ்துக்களை சாப்பிட்டு, பால் என்கின்ற ஒரு உத்தமமான வஸ்துவை கொடுக்கின்றது. அதுபோல் நம்மால் ஒரு இயந்திரத்தை தயாரிக்க முடியுமா?*


    *ஒரு பக்கம் வைக்கோலை நாம் போட்டால் மறுபக்கம் பாலாக வந்து கொட்டும் எந்திரத்தை நாம் கண்டுபிடித்துவிட்டோமா? இன்னும் இல்லை அதை செய்யக்கூடிய சக்தி மாட்டுக்கு தான் உண்டு. பசுக்கு தான் அந்த சக்தி உண்டு அதனால் எனக்கு பால் இருந்தால் போதும் என்று நினைக்காமல், சுத்தமான பசுக்களும் எனக்கு வேணும்.*


    *எப்போதும் நல்ல ஆரோக்கியமான உணவு/தண்ணீர் எனக்கு எப்போதும் கிடைக்க வேண்டும். அப்படி நீ செய்ய வேண்டும். மேலும் இந்த ஐஸ்வர்யங்களை முதலில் சொன்னது போல வீடு வாகனம் மனைவி குழந்தைகள் உலகத்திற்கு புழங்கக்கூடிய பணத்தையும் தேக ஆரோக்கியத்தையும் நல்லோர் உடைய சேர்க்கையையும் தொடர்ந்து நீ எனக்கு கொடுக்க வேண்டும்.*


    *எப்படிப்பட்ட ஐஸ்வர்யம் என்றால் நல்ல பூமி நல்ல குழந்தைகள் நல்ல ஐஸ்வரியம் இவைகளோடு கூட பசுக்களோடு கூட இவ்வளவு ஐஸ்வரியங்களையும் எனக்கு கொடுத்து அதை என்னிடத்திலே ஸ்திரமாக இருக்கும் படி நீ செய்ய வேண்டும் என்று அந்த ஆகுதியை சொல்லி ஸ்வாஹாஹா.*


    *இது முதல் மந்திரத்தினுடைய அர்த்தம். இரண்டாவது மந்திரத்தினுடைய அர்த்தத்தை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X