Announcement

Collapse
No announcement yet.

garbha aadhaanam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • garbha aadhaanam.

    5/02/2021 No Broadcasting 16/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்பா தானத்தைப் பற்றி மேலும் விரிவாக தொடர்கிறார்.*


    *கர்ப்பாதானம் எப்பொழுது செய்யக்கூடாது அப்படி செய்தால் அதனால் விளையக்கூடிய கஷ்டங்கள் என்ன என்பதை மகாபாரதத்தில் உள்ள ஒரு சரித்திரத்தின் மூலம் நாம் பார்த்தோம். அப்படி காந்தாரி ஆனவள், கர்ப்ப காலத்தில் செய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் பஞ்ச பர்வா என்று சொல்லக்கூடிய அந்த காலத்தில் செய்ததினால், அந்த கர்ப்பமானது பிராணிகள் போல் ஆண்டமாக உருவாயிற்று என்பதைப் பார்த்தோம்.*


    *மிருகங்கள் எல்லாம், கர்ப்பம் உருவாகின்றது என்றால் ஒரு முட்டை வடிவமாக இருந்து, முட்டைக்குள் அந்த கர்ப்பம் உற்பத்தி ஆகும், ஐந்தாறு ஆக உற்பத்தியாகும் ஒன்றே ஒன்றாக ஆகாது.*
    *அதுபோல் காந்தாரிக்கு ஆகிவிட்டது. அதற்குக் காரணம் அந்தக் காலம் என்பது சரியாக இல்லாததினால் என்பதைப் பார்த்தோம். சரித்திரத்தை பார்த்துக்கொண்டு வருகின்ற வரிசையிலே வியாசர் திருதராஷ்டிரனிடம், ஒரு இரகசியத்தை சொல்லிவிட்டு போனார் என்று மகாபாரதத்தில் ஆதிபருவாவில் சொல்லப்படுகிறது.*
    *என்ன இரகசியத்தை வியாசர் சொன்னார் என்றால், இந்த கர்ப்பாதானம் ஆனது அசுப வேளையிலே செய்ததினால் மேலும் மனசு நிர்மலமாக இருக்க வேண்டும் அப்பொழுது கர்ப்பா தானத்தை செய்ய வேண்டும். மனசிலே கலக்கம் சஞ்சலம் இருக்கின்றது தம்பதிகளுக்குள் ஒரு அன்யோன்யம் ஒற்றுமை இல்லை, இது போன்ற சமயங்களில் இந்த கர்பா தானத்தை செய்யக்கூடாது. உன்னுடைய பிறப்பு அதுபோல் ஒரு தோஷமாக இருந்ததினால்தான் உனக்குப் பிறக்கும் போது கண் தெரியாமல் போய்விட்டது. அதேபோல் காந்தாரியும் மனதிலே ஏதோ கலகங்களை வைத்துக்கொண்டு, கர்ப்பாதானம் செய்ததினால், இந்தக் குழந்தைகள் எல்லாம் கடைசி காலத்தில் உனக்கு உபயோகப்படாது என்று வியாசர் சொல்லிவிட்டு கிளம்பி போனார் என்று மகாபாரதத்தில் சாந்தி பர்வாவில் பீஷ்மர் சொன்னதாக காண்பிக்கப்படுகிறது.*


    *மகாபாரதத்தின் உடைய கடைசியிலே சாந்தி பருவா என்று இருக்கிறது. பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது, உடம்பு முழுவதும் அம்பு துளைக்கப்பட்டிருக்கிறது. அப்போது அவர் உத்தராயணம்/மாஹ மாசத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றார். தரும புத்திரர்கள் உள்ளிட்ட பஞ்சபாண்டவர்கள் அவ்வப்போது வந்து அவரிடம் நல் அறிவுரைகளை கேட்டுக்கொண்டு வருகின்றனர். அப்படி சொல்லிக் கொண்டு வருகின்ற பொழுது மிகவும் வருத்தப்படும் என்றார் தருமபுத்திரர்.*


    *தன்னுடைய சகோதரர்கள் இவ்வளவு பேர்களை அடிக்கும் படியாக ஆகிவிட்டதே என்று. மேலும் திருதராட்டிரன் காந்தாரி தம்பதிகளுக்கு கடைசி காலத்தில், ஒரு சந்ததிகளும் இல்லாமல் செய்துவிட்டேனே, என்று நினைக்கின்ற பொழுது, மிகவும் துக்கமாக இருக்கிறது என்று தர்மபுத்திரர் சொல்ல, அதற்கான பதிலாக வியாசர் சொன்னதை பீஷ்மர் இங்கே ஞாபகப்படுத்தினார்.*


    *அவர்களுக்கு கர்ப்பாதானம் ஆனது செய்யப்பட வேண்டிய காலத்தில் செய்யாதினால், குழந்தைகள் கடைசி காலத்தில், உபயோகப் படாமல் போய்விட்டார்கள் என்றுமகாபாரதத்தில் சாந்தி பர்வாவில் பிஷ்மர் சொன்னதாக நாம் பார்க்கிறோம்.*


    *இந்த கர்ப்பாதானம் ஆனது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நாம் பார்க்கிறோம். இதைப்பற்றி ஆபஸ்தம்பர் சொல்கின்ற பொழுது, பகிஷ்டை ஆன நாலாவது நாளிலிருந்து 16ஆவது நாளுக்குள் இந்த கர்ப்பாதானம் ஆனது ஒரு நல்ல நாள் பார்த்து செய்யப்பட வேண்டும். நல்ல குழந்தைகள் தீர்க்கமான ஆயுசு, ஆரோக்கியம் நமக்கு கடைசி காலம் வரையில் பயன்படும் படியாக குழந்தைகள் ஏற்படும். அதனால் இந்தக் காலமானது மிகவும் முக்கியம்.*


    *அதேபோல் கூடாது என்ற சொன்ன தினங்களில், செய்யாமல், நல்ல தினம் பார்த்து, இதை செய்ய வேண்டும். பெரியவர்கள் குழந்தைகளுக்கு செய்து வைக்க வேண்டிய முக்கியமான ஒரு ஸம்ஸ்காரம். குழந்தைகளாகவே தீர்மானித்து செய்வது என்பதோ, ஆசைக்கு உட்பட்டு செய்வது என்பதோ, பகல் இரவு என்று பார்க்காமல் செய்வதோ மிக மிக தவறான ஒரு செயல். நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். சொல்லி புரிய வைக்க வேண்டும்.*


    *இந்த கர்ப்பாதானம் சரியான காலத்திலே செய்யப்படவில்லை என்றால் அந்த தம்பதிகளுக்கு உள்ளேயே அன்னோன்யம் போய்விடும் என்று மகரிஷிகள் காண்பிக்கின்றனர்.*


    *அசுப காலங்களிலே செய்யக்கூடிய கர்பா தானத்தின் பலன்கள், தம்பதிகளுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்படாது. கல்யாணம் முடிந்தவுடன் கர்ப்பாதானம் செய்தால் இந்த கோளாறுகள் எல்லாம் நாம் சந்திக்க நேரிடும். குழந்தைகளுக்கு இதை நாம் எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும். ஆகையினாலே தான் வேதம் 🙏🏾 நமக்கு ஒரு பெரிய அனுகிரகம் செய்திருக்கிறது*


    *இந்த கர்ப்பாதானம் மந்திரங்கள் எல்லாம் சொல்லி முடித்த பிறகு பாக்கிய சூக்தத்தை வேதம் 🙏🏾 காண்பிக்கிறது. நாம் எந்த ஒரு அனுஷ்கா னத்தை ஆரம்பித்தாலும் பாக்கிய சூக்தம் என்று சொல்லக்கூடிய தான இதை ஆரம்பித்த பிறகுதான் மற்றவை செய்கிறோம்.*


    *இந்த பாக்கிய சூக்தம் என்ன சொல்கின்றது என்றால், இந்த தம்பதிகளுக்குள் அன்னோன்யம் குறைந்து போய்விட்டால், மிகவும் சினேகம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பாக்கிய சூக்தத்தை வேதம் 🙏🏾 நமக்கு அனுக்கிரகம் செய்து இருக்கிறது.*


    *இதைப்பற்றி ஆபஸ்தம்பர் சொல்கின்ற பொழுது, நாம் விவாகம் செய்து வைத்திருக்கிறோம் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு அன்னோன்யம் ஏற்படவில்லை, ஏதோ சில காரணங்களினால், மனஸ்தாபம் ஏற்படுகிறது, என்றால் உடனேயே இந்த பாக்கிய சூக்தம் என்கின்ற இந்த மந்திரத்தை சொல்ல செய்து ஸ்தாலிபாகம் பண்ண வேண்டும். அல்லது அந்த மந்திரங்களையாவது அவர்களுடைய நன்மையைக் கருதி, ஜெபம் செய்ய வேண்டும். அற்புதமான மந்திரங்கள் இந்த பாக்கிய சூக்தம்.*


    *இது பிராமணத்திலேயும் வருகின்றது அதேபோல் மந்திர பிரஸ்னத்திலேயும் சொல்லப்படுகிறது இந்த பாக்கிய சூக்தம் இரண்டு இடத்திலேயும் வருகிறது.*


    *இநத மந்திரத்தினுடைய பலன்கள் என்ன என்றால் தம்பதிகளுக்கு உள்ள அன்னியோன்னியத்தை ஏற்படுத்துகிறது பலப்படுத்துகிறது. இதை வேதம் நமக்கு காண்பிக்கின்றது. இதைத்தான் ஆபஸ்தம்பரும் சொல்கிறார். மனதளவில் அவர்கள் இருவருக்கும் ஒத்துப் போகவில்லை என்றால், இந்த பாக்கிய சூக்தத்தை சொல்லி மனதளவில் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அப்படி செய்தோமானால் அவர்களுக்குள் எந்த அளவு மனஸ்தாபங்கள் இருந்தாலும் எல்லாம் சரியாய்ப் போய்விடும். சீக்கிரம் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் ஏற்படும். நல்ல சந்ததிகள் பிறக்கும் என்று ஆபஸ்தம்பர் காண்பிக்கின்றார் நமக்கு.*


    *அந்த பாக்கிய சூக்தம் என்ன சொல்கின்றது என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்*
Working...
X