Announcement

Collapse
No announcement yet.

bhagya suktham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • bhagya suktham

    20/02/2021*
    *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி விரிவாக இதுவரை பார்த்தோம் அதில் மேலும் தொடர்கிறார்.*


    *இந்த கர்ப்பாதான மந்திரங்களை சொன்னபிறகு வேதமானது, போர் மந்திர பாகத்தை நமக்கு அனுக்கிரகம் செய்து உள்ளது பாக்ய சூக்தம் என்பது தான் அது. இது ஒரு அற்புதமான மந்திரம்.*


    *இந்த பாக்கிய சூக்த்தை வேதம் நமக்கு ஒரு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒருவருக்கொருவர் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிய நேர்ந்தாலும் அவர்களுடைய ஒற்றுமைக்காகவும் நுண்ணியமாக இருப்பதற்காகவும் வேதம் இந்த மந்திரத்தை நமக்கு காண்பித்துள்ளது.*
    *மேலும் நமக்கு நல்ல வாரிசுகளையும் சந்ததிகளையும் அடைவதற்காகவும் செய்யக்கூடிய தான ஒரு யாகத்தில் உபயோகிக்க முடியும் படியான இந்த மந்திரத்தை நமக்கு காண்பிக்கிறது.*


    *அதில் இதுவரை இரண்டு மந்திரங்களை விரிவாக நாம் பார்த்தோம். இந்த மூன்றாவது மந்திரத்தில், ஏ பஹா, எங்களுக்கு நீ எப்பொழுதும் துணையாக இருக்க வேண்டும், நாங்கள் அனைவரும் சேர்ந்து செய்யக்கூடியதான இந்த அனுஷ்டானங்களை முழுமையாக எங்களுக்கு நடத்திக் கொடுத்து இந்த அனுஷ்டானங்களினால் நாங்கள் அடைய வேண்டிய பலன்களையும் கொடுத்து எங்களை காப்பாற்ற / மேன்மை அடையச் செய்ய வேண்டும்.*


    *பஹன் ஆன நீ எப்படிப்பட்டவன்? எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக முடிக்கும் கெட்டிக்காரன். பஹஹா என்றால் கால தேவதையான சூரியனையும் குறிக்கும் நாம் கையில் வைத்துக் கொண்டு இருக்கும் ஐஸ்வர்யங்களும் அதான் பெயர். நல்ல எண்ணங்களை கொடுத்து நல்ல காரியங்களில் ஈடுபட செய்யக்கூடிய நம் அருகிலேயே இருக்கக்கூடிய தானே தெய்வத்திற்கும் பஹஹா என்று பெயர்.*


    *அப்படி இருக்கக்கூடியது ஆன தெய்வத்தை தான் இந்த மந்திரங்கள் பிரார்த்திக்கின்றன. எந்த ஒரு காரியத்தையும் முழுமையாக செய்து முடிப்பவன் நீ. அப்படித்தானே சூரியனைப் பார்த்தால் சரியான நேரத்தில் உதித்து சரியான நேரத்தில் மறைகின்றது. நாம் பஞ்சாங்கத்தில் பார்த்தோமேயானால் உதயம் அஸ்தமனம் போட்டிருக்கிறது. நாம் போடுவதில் கூட சற்று முன்பின் இருக்கலாம் ஆனால் சூரியனுடைய கதியில் மாறுதலே இருக்காது.*


    *காற்று கூட முன்பின் அடிக்கலாம். மழைகூட முன்பின் பெய்யும். பூமியில் போட்ட தானியங்கள் கூட முளைப்பதில் தாமதமாகலாம். ஆனால் சூரிய உதய அஸ்தமன த்தில் மாறுபாடு நாம் பார்க்க இயலாது. ஏனென்றால் அந்த காரியத்தில் முழுமையாக ஈடுபட கூடியவர் இந்த பஹன் ஆன சூரியன்.*


    *அப்படிப்பட்ட ஏ பஹா நீ எங்களுக்கு நாங்கள் செய்யக்கூடிய தான பலனை முழுமையாக கொடுக்க வேண்டும். மேலும் நீ எப்படிப்பட்டவன் தெரியுமா, சத்தியத்தையே தனமாக உடையவன். தேவதைகளுக்கு எல்லாம் கையில் உள்ள ஐஸ்வர்யம் எது சத்தியம். உண்மை பேசுவது/நினைப்பது/வாழ்வது இதுதான் ஐஸ்வர்யம்.*
    *நம்முடைய வாழ்வும் அது போல் தான் இருக்க வேண்டும். உண்மையே நினைக்கவேண்டும் சத்தியத்தோடு வாழ வேண்டும். சத்தியத்தை தான் செய்ய வேண்டும். அதுதான் தேவதைகளுக்கு மிகவும் பிடிக்கும். தேவதைகள் உடைய குணமும் அதுதான். பொய்/புரட்டு சொல்பவர்களை தெய்வங்கள் காப்பாற்றாது. உண்மையாக வாழ வேண்டும்.*


    *அப்படி உண்மையையே தனமாக உள்ள ஏ பஹா எங்களை காப்பாற்ற வேண்டும். மேலும், எங்களை உயர்ந்தவர்களாக இருக்கும்படி நீ செய்ய வேண்டும். எப்படி, நாங்கள் உயர்ந்த ஸ்தானத்தில் இருக்க வேண்டும். நாங்கள் எந்த விஷயத்திலும் குறைபாட்டுடன் இருக்கக்கூடாது. சௌக்கியமாக நாங்கள் மன நிம்மதியோடு ஒற்றுமையோடு வாழ வேண்டும். அப்படி எங்களை நீ வாழ வைக்க வேண்டும். எப்படி நல்ல பசுக்கள் எங்களுக்கு எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும்.*


    *அப்படி பசுக்கள் மூலமாகவும் குதிரை பூட்டிய சாரட் வண்டி எங்களிடம் இருக்க வேண்டும். ஐஸ்வர்யங்கள் நிறைய உள்ளவர் தான் இப்படி வைத்துக் கொள்ள முடியும். குதிரை வண்டி வைத்துக் கொண்டு இருக்கின்றார் என்றால் பணக்காரர் ஐஸ்வர்யம் உள்ளவர் என்று அர்த்தம். அப்படி நாங்கள் பசுக்கள் மூலமும் குதிரைகள் மூலமாக சௌக்கியமாக இருக்க வேண்டும்.*


    *மேலும் நல்ல சந்ததிகள் எங்களுக்கு ஏற்பட வேண்டும். நல்ல குழந்தைகள்/ வாரிசுகளை நாங்கள் அடைய வேண்டும். அந்தக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளை அடைய வேண்டும்.*


    *எனக்கு பையன் பெண் பிறக்க வேண்டும். அதன் பிறகு பேரன் பிறக்க வேண்டும் தௌஹித்திரன் பிறக்க வேண்டும். இப்படி தலைமுறை தலைமுறையாக எங்களை வாழும் படியாக செய்ய வேண்டும். முக்கியமாக, எப்பொழுதும் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எங்களுக்குள் மனஸ்தாபம்/மன கசப்பு ஏற்படக் கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவேண்டும். எங்கள் சமூகத்தோடு சேர்ந்து நாங்கள் வாழ வேண்டும்.*


    *அப்படி சமூகமாக ஒற்றுமையோடு, ஒருவருடைய காரியத்திற்கு இன்னொருவர் உதவி புரிந்து, அப்படி ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையோடு கூட வாழனும் நாங்கள். சௌக்கியமாக நாங்கள் வாழ வேண்டும். அதற்கான அனுக்கிரகத்தை, நீ செய்ய வேண்டும். இப்படி இந்த மூன்றாவது மந்திரம் பிரார்த்திக்கின்றது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*
Working...
X